Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையிலிருந்து செல்வோரை தாக்குவதால் தமிழகத்துக்கு பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பு

தமிழக தினசரி தினமலர் கண்டனம்

இலங்கையில் இருந்து தமிழகம் வருபவர்கள் மீது, தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருவதால், இலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இலங்கையில் இருந்து சிங்கள மக்கள் மட்டுமல்லாமல், தமிழர்களும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலால் தமிழர்களும் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இலங்கையிலிருந்து அரசாங்க முக்கியஸ்தர்கள் தமிழகம் வருவதற்கு சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சுற்றுலா வருபவர்களையும், விளையாட்டு வீரர்களையும் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.

கடந்த வாரம் திருச்சி, கலை காவேரி நுண்கலைக் கல்லூரி கலாசார விழாவுக்கு வந்த இலங்கை மாணவர்களை திருப்பி அனுப்பும்படி, நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சில நாட்களுக்கு முன் சென்னை வந்த இலங்கை கால்பந்தாட்ட வீரர்களை, திருப்பியனுப்புமாறு உத்தரவிட்ட தமிழக முதல்வர் நேரு விளையாட்டு மைதான பொறுப்பாளர் தோமசை இடைநிறுத்தம் செய்தார்.

இலங்கையிலிருந்து கடந்த 2 ஆம் திகதி வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்த இலங்கையர்களை தமிழ் அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.

திருச்சி விமான நிலையத்துக்கு வந்த போது, ஒரு கும்பலால் அவர்கள் தாக்கப்பட்டனர். 'தமிழகத்தில் சிங்கள மக்களுக்கு சாதகமான சூழல் இல்லாததால் யாரும் செல்ல வேண்டாம்' என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கை நாட்டினருக்கு எதிரான தாக்குதலும், போராட்டங்களும் தொடர்ந்து நடப்பதால், இலங்கையிலிருந்து, தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.

இலங்கையிலிருந்து திருச்சிக்கு ஜனவரி மாதம் வந்த பயணிகளின் எண்ணிக்கை, 4,094 ஜுலை மாதம் இந்த எண்ணிக்கை 2,347 ஆக குறைந்துள்ளது. இந்தியாவிலிருந்து கலாசார ரீதியாகவும், விளையாடவும் இலங்கைக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் செல்கின்றனர். தாக்குதல் நிலை நீடித்தால், இலங்கையில் இருந்து தமிழகம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்.

இவ்வாறு குறைந்தால் பாதிக்கப்படுவது தமிழகம்தான். தமிழகத்தில் இருந்து ஜவுளி, நகைகள் போன்ற ஏராளமான பொருட்களை இலங்கை மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பிரபலமான கடைகளில் இலங்கை மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். முக்கிய நகரங்களுக்கு இலங்கை பயணிகளும் வந்து செல்கின்றனர். இதனால் அந்த ஊர்களில் ஏராளமானோருக்கு வருமானம் கிடைக்கிறது. சுற்றுலாப் பயணிகளை தடுத்தால், அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்ப் பற்று, தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போன்ற ரீதியில் தமிழ் அமைப்புகளை சேர்ந்த சிலர், மனித உரிமைக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவதை நாகை மாவட்ட மீனவர்கள் கண்டித்துள்ளனர்.

அம்மீனவர்கள் கூறியதாவத :-

எந்தவித அரசு பொறுப்புகளும் இல்லாத அப்பாவி சிங்கள மக்கள், தங்களின் புனித பயணத்திற்காக தமிழகம் வரும்போது, மனிதாபிமானமற்ற முறையில், அவர்களை தாக்கும் செயல் தமிழக மீனவர்களுக்கு மேலும் சிக்கலை உருவாக்கும் இலங்கையில் 30 சதவீத சிங்களவர்கள் கலாசார ரீதியாக தமிழர்களுடன் குடும்ப ரீதியான உறவு கொண்டுள்ளனர். வேளாங்கண்ணிக்கு யாத்திரையாக வந்தவர்களில் தமிழர்களும் உண்டு. ஏன் இவர்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்த மீனவ கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த சிங்கள மீனவர்கள், தமிழக மீனவர்களுக்கும், எங்களுக்கும் எவ்வித மோதலும் இல்லை.

இதுபோன்ற செயல்களால் தமிழக மீனவர்களுக்கு தொடர் தொல்லை தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

'வர்த்தகம், சுற்றுலாவிற்காக தமிழகம் செல்ல வேண்டாம்' என இலங்கை அரசு அறிவித்துள்ளதால், தமிழகத்தில் ஜவுளி, உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இலங்கையில் இருந்து தமிழகம் வரும் பொதுமக்கள், இங்கு சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதுடன், அதிகளவில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதியான தி. நகருக்கு தினசரி பலர் வந்து துணிகளை வாங்கிச் செல்கின்றனர். சுற்றுலாவுக்காக வருபவர்கள் தவிர, துணி வர்த்தகர்கள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர்.

இது குறித்து தி. நகரைச் சேர்ந்த ஜவுளி வர்த்தகர் கூறும்போது, 'தினசரி இலங்கையில் இருந்து ஆயிரக் கணக்கானவர்கள் வந்துசெல்கின்றனர். ஊர்களுக்கு செல்லும் போது சேலைகள், குழந்தைகளுக்கான துணிகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். தற்போது இலங்கை அரசின் இந்த அறிவிப்பால், அவர்கள் வருவது நிற்கும் பட்சத்தில் 10 சதவீதம் அளவிற்கு மேல் வர்த்தக இழப்பு ஏற்படும்' என்றார்.

இது தவிர இலங்கையைச் சேர்ந்த ஜவுளி வர்த்தகர்கள், ஜவுளி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், நேரடியாக கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

வர்த்தகர்கள் வருகை நின்றால், 150 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தக இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஜவுளிக்கு அடுத்தபடியாக உணவுப் பொருட்கள் வர்த்தகமும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போதுள்ள சூழலில் உணவுப்பொருட்கள் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கலாம். இதனால் சர்க்கரை நிறுவனங்கள், அவர்களை நம்பியுள்ள விவசாயிகளுக்கு வர்த்தக வாய்ப்பு குறையும் நிலை உள்ளது.

மேலும், தமிழகம் வழியாக இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து வரும் உணவுப் பொருட்களும் வர்த்தக வாய்ப்பினை இழப்பதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், இலங்கையை பொறுத்த மட்டில், அங்கு இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழக துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள் தான் அதிகளவில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

அசோக் லேலண்ட் லாரிகள், பஸ்கள் மற்றும் ஹ¥ண்டய், மாருதி கார்கள், டி. வி. எஸ். உள்ளிட்ட நிறுவனங்களின் வாகனங்கள் அதிகளவில் அங்கு பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கை அரசின் அறிவிப்பால், தமிழகம் வழியாக நடக்கும் இந்த வர்த்தகங்கள் 190 கோடி ரூபாய் அளவிற்கு குறையும் என்று கூறப்படுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்பதால், சிறு வர்த்தகர்களும் பாதிக்கப்பட உள்ளனர். வர்த்தக இழப்பு என்பது கடைக்கோடி தொழிலாளர்கள் வரை பாதிக்கும் சூழல் உள்ளது.

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை விட ஐந்து மடங்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com