Contact us at: sooddram@gmail.com

 

ஒற்றுமையை வெளியுலகுக்கு உணர்த்திய சப்ரகமுவ மாகாண தமிழ் மக்கள்

சப்ரகமுவ மாகாண தமிழ் வாக்காளர்கள் தமது வாக்குகளை பிரதான கட்சிகளுக்கே தொடர்ந்து வழங்கிவந்தனர். இதனால் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரு மாவட்டங்களிலிருந்தும் பல வருடங்களாக மாகாணசபைக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ தமிழ் உறுப்பினர்கள் தெரிவாகவில்லை. அதற்கு முன்னர் சப்ரகமுவ மாகாணசபைக்கு போனஸ் ஆசனத்தின் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஏ.எம்.டி.இராஜன் அதன் பின் தேர்தல்களின் மூலம் திரு கணபதி இராமச்சந்திரன், பின்னர் அமரர் ஏ.எம்.டி.இராஜன் ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்து வந்தனர். இவர்களுடைய காலத்தில் இரத்தினபுரி மாவட்ட மக்களுக்காக பாரிய அளவு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மலையக அரசியல் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டிருந்த அதிகார போராட்டம் காரணமாக 2008 இல் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாக பிரிந்து சேவல் மற்றும் மண்வெட்டி சின்னங்களில் போட்டியிட்டமையினாலும் மனோ கணேசனுடைய ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய கட்சியில் தனது வேட்பாளரை நிறுத்தியிருந்தமையினாலும் தமிழ் மக்க ளுடைய வாக்குகள் சிதறடிக்கப்பட்டதுடன் இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் பாரிய பின்னடைவை எதிர்நோக்க வேண்டிய பரிதாபகரமான நிலை ஏற்பட்டது.

இதேவேளை புத்திஜீவிகளின் ஒன்றிணைப்பினால் ஏற்படுத்தப்பட்டிருந்த சபரகமுவ மாகாண சிவில் அமைப்பு, சமயத்தலைவர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள் எனும் அனைத்து தரப்பினரும் பிரதான மலையக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கோரி வந்தனர்.

மலையகத்தின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி சாந்தினி தேவி சந்திரசேகரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் தனிச் சின்னமாகிய சேவல் சின்னத்தில் வாக்குக் கேட்பதற்கு எவ்வித உடன்படிக்கைகளையும் முன்வைக்காது நிபந்தனைகள் அற்ற விதத்தில் ஒன்றிணைந்தமையானது அவர்களுடைய தூரநோக்கினை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைவர் மனோகணேசன் ஆகிய இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து சேவல் சின்னத்திற்கு வாக்குச் சேகரிக்க இரத்தினபுரி மாவட்டத்திற்கு சமூகம் தந்திருந்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.

இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுளை (4490), நிவித்திகலை (2779), பலாங்கொடை (2239), இறக்குவானை (226), இரத்தினபுரி (2212), எஹெலியகொட (1087), கொலன்ன (1199), கலவான (689) என இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கு வாக்கு கிடைத்திருந்தன. இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் கூடுதலான வீதம் வாக்களிப்பில் கலந்துகொண்டு தமது வாக்குகளை வழங்கினர்.

வாக்காளர்கள் இ.தொ.காங்கிரஸிற்கு மாவட்டத்தில் கூடுதலான வாக்குகளை (4490) வழங்கினார்கள். இத்தொகுதியில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் விகிதம் 5.99 ஆக உள்ளது. நிவித்திகலை தொகுதியில் இ.தொ.காவுக்கு மாவட்டத்தில் இரண்டாவது அதிகமான வாக்குகள் (2779) கிடைத்துள்ளது. இங்கு நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் விகிதம் 5.49 அதாவது மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இவற்றை நோக்கும்போது தமிழ் மக்களின் வாக்குகளுக்கும், நிராகரிக்கப்படுகின்ற வாக்குகளுக்கும் இடையே ஒரு தொடர்பு காணப்படுகின்றது. வாக்குப்பதிவில் நம்மவர்களின் தெளிவின்மை இங்கு நன்கு தெளிவாகின்றது.

கடந்த காலங்களில் பிரதான கட்சிகளுடன் இணைந்திருந்த பல அதிபர்கள், ஆசிரியர்கள் சேவல் சின்னத்தின் வெற்றிக்காக உழைத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

மலையக மக்கள் முன்னணியில் தனி வேட்பாளராக கூட்டணியில் களமிறங்கிய ஸ்ரீரங்கன் மாசிலாமணி மாவட்ட முழுவதிலுமுள்ள ம.ம.மு.ஆதரவாளர்களை சந்திப்பதில் ஈடுபட்டிருந்தார். அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சிகயில் களமிறங்கிய போதும் தாம் தேர்தலில் வாபஸ் பெறுவதாக அறிவித்து ஒதுங்கி இருந்த ஜே.பி.ஜெயராம் அவர்களின் செயல் குறித்து இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் பெருமிதமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது. பல பெருந்தோட்டங்களில் வாக்களிக்க மக்கள் தயங்கிய போதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறந்த முறையில் இருந்தமையினால் அச்சம் நீங்கி இருந்தது.

அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் இனிமேல் சப்ரகமுவவிற்கு கூடுதலாகக் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலிருந்து தெரிவாகி உள்ள கணபதி இராமச்சந்திரன், அண்ணாமலை பாஸ்கரன் ஆகிய இருவருக்கும் பாரிய பொறுப்புக்கள் உண்டு.

பெருந்தோட்டப் பகுதிகளில் சுகாதார, குடிநீர், வீட்டு வசதி, பாதைகள் அபிவிருத்தி, முன்பள்ளிகளை அமைத்தல், இளைஞர்களுக்கான சுயதொழில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல், தோட்டப்பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்துக்களை ஏற்படுத்தல் என பல்வேறு அபிவிருத்திப்பணிகளை துரிதகதியில் ஏற்படுத்த வேண்டி உள்ளன.

விசேடமாக அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மிகக் கூடுதலாக தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. கிடைத்துள்ள பிரதிநிதித்துவத்தினை பாதுகாத்துக்கொண்டு எதிர்காலத்தில் மிக கூடுதலான பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பாகுபாடற்ற விதத்தில் மாவட்டத்தின் முழுவதற்கும் தேவை கருதி சேவை செய்ய தெரிவான உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com