Contact us at: sooddram@gmail.com

 

ஆபத்தான ஆழ்கடலூடாக முடிவின்றி தொடரும் சட்டவிரோத புலம்பெயர்வு

அண்மைக் காலமாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் அதில் பெரும்பாலானவை சட்டவிரோதமாக வெளிநாடுக ளுக்குச் செல்லும் இலங்கையர் பற்றியதாகவே உள்ளன. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சட்டவிரோதமாக சிறு படகுகள் மூலமாக இவர்கள் பயணிப்பதையும் நடுக்கடல் பகுதியில் வைத்து கடற்படை யினரிடம் சிக்குவதையும் அறியமுடிகிறது. இன்னும் சில சம்பவங்க ளாக பயண ஆரம்பத்தின்போதே கரையோரங்களில் வைத்து இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படுகிறார்கள். ஆட்கடத்தல் காரர்கள் தமக்கிடையேயான தொழில் போட்டி காரணமாக காட்டிக் கொடுப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், இன்னும் சில கடத்தல்காரர் பயணிப்போரிடம் முன்கூட்டியே முழுப்பணத்தையும் பெற்றபின் தாமே பொலிஸாருக்குத் தகவலை வழங்கி இவர்களைப் பிடித்துக் கொடுத்து இலாபமீட்டியும் வருகின்றனர். ஆபத்தான ஆழ்கடல் பயணம் என நன்கு தெரிந்திருந்தும் இலட்சக்கணக்கான பணத்தை ஆட்கடத்தல்காரரிடம் கொடுத்து இவர்கள் பொருள்தேடும் எண்ணத்தில் இவ்வாறு உயிரைத் துச்சமெனக் கருதி துணிந்து செல்கின்றனர்.

உள்ளூரில் நல்ல தொழிலில் உள்ள பலர் கூட தாம் இதுவரை உழைத்த பணத்தை முதலீடாக வைத்து வெளிநாட்டுக்கு கள்ளமாகச் சென்று பிடிபட்டுள்ளமையைக் கூட அறியமுடிகிறது. இந்த வெளி நாட்டு மோகம் காரணமாக பல இளைஞர், யுவதிகள் மட்டுமல்லாது குடும்பப் பெண்கள், கைக்குழந்தைகளும் இன்று பொலிஸாரிடம் அகப்பட்டு அவஸ்தைகளை அனுபவித்து வருகின்றனர்.

முன்னொரு காலத்தில் யுத்தம் இடம்பெற்றபோது இவ்வாறு சென்றதில் ஏதோ நியாயம் இருந்தது. அக்காலத்தில் பல வெளிநாடுகளும் இவ்வாறு செல்வோருக்கு அடைக்கலம் கொடுத்து உதவிகளும் புரிந்தன. ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. இங்கு அமைதி திரும்பியுள்ளதால் வெளிநாடுகள் இலங்கை அகதிகளை ஏற்பதில்லை. அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப் படுகிறது. இது தெரிந்திருந்தும் பணத்தைச் செலவு செய்து, உயிருக்கு உத்தரவாதமில்லாத பயணத்தைப் பலரும் தொடருவது தேவையற்ற தொரு விடயமாகவே கருத வேண்டும்.

சட்டவிரோத குடியேற்றக்காரர்களால் ஏற்படுகின்ற பிரச்சினையை உலகின் பல்வேறு நாடுகளும் எதிர்கொண்டு வருகின்றன. பொருளா தார முன்னேற்றமடைந்த நாடுகளைப் பொறுத்தவரை இவ்விவகார மானது பொதுவான பிரச்சினையாகிறது. அவுஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சுவிற்சர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களினால் சிக்கலை எதிர்கொள்கின்றன. அந்நாடுகளின் குடிவரவுச் சட்டத்துக்கு எதிரான இச்செயலினால் அந்நாட்டு அரசாங்கங்கள் அரசியல் ரீதியிலும் வீணான சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. ஆசிய நாடுகளில் இருந்தே கூடுதலான சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் வாய்ப்பான நாடுகளை நோக்கிப் படையெடுக்கிறார்கள். இவ்வாறு இடம்பெயருகின்ற குடியேற்றக்காரர்களில் இலங்கையர்களும் கணிசமான தொகையினராக உள்ளனர். சட்டவிரோத குடியேற்ற வாசிகளென்ற விவகாரத்தில் இலங்கையர்களே குறிப்பிடும்படியாக உள்ளனர்.

இவர்களில் ஆப்கானிஸ்தான், இந்தியா, நேபாளம், மாலைதீவு போன்ற நாடுகளைச் சேர்ந்தோரும் அடங்குகின்றனர். சட்டவிரோத மாக வெளிநாடுகளுக்குச் செல்வோரில் இலங்கையர்களும் பெருமளவில் அடங்குவதால் இவ் விடயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

இலங்கையில் யுத்தம் தொடங்கிய காலப் பகுதியில் புலம்பெயர் தலும் ஆரம்பமானது. வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலிருந்து தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் ஆரம்ப காலத்தில் சட்டரீதியாகவே புலம்பெயர்ந்தனர். சட்டரீதியான குடியேற்றம் தீவிரமடைந்ததைய டுத்து அந்நாடுகள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கின.

இதன் பின்னரே சட்டவிரோத புலம்பெயர்வு தலைதூக்கியது. கடவுச் சீட்டில் ஆள்மாறாட்டம், மோசடிகளைக் கையாண்டு ஏராளமான விமான நிலையங்களைக் கடந்து பல்லாயிரம் பேர் எங்கெல்லாமோ உள்ள நாடுகளைச் சென்றடைந்தனர். யுத்தத்தைக் காரணமாகக் கொண்டு இடம்பெற்று வந்த குடிபெயர்வானது காலப் போக்கில் திசைமாறத் தொடங்கியது. சட்டவிரோத குடியேற்றக் காரர்கள் இறுதியில் முற்றுமுழுதாக பொருளாதார அகதிகளாகப் போனார்கள்.

நீண்ட காலம் தொடர்ந்த யுத்தம் காரணமாக படிப்படியாக ஏற்பட்ட நிலைமை இதுவாகும். இலங்கையில் யுத்தம் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் முடிவின்றித் தொடரும் புலம்பெயர்வின் அடிப்படை நோக்கம் பொருளாதாரத் தேடல்தான் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இலங்கையிலிருந்து படகுகள் மூலம் ஏராளமானோர் இவ்விதம் சட்டவிரோமாகப் பயணத்தைத் தொடங்குகின்றனர். இவர்களில் எல்லோருமே தாங்கள் எதிர்பார்க்கும் நாட்டைச் சென்றடைவதில்லையென்பதுதான் பரிதாப மான விஷயம். பெருந்தொகையானோர் இன்று வரை நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

படகு நடுக்கடலில் கவிழ்ந்ததனால் ஆழ்கடலுக்குப் பலியாகிப் போனோரும் ஏராளம். குழந்தைகள் கூட இத்தகைய பரிதாப நிலைமைக்கு உள்ளாகின்றார்கள். சட்டவிரோத புலம்பெயர்வு இரு நாடுகளுக்குமே சிக்கலைத் தோற்றுவிக்கிறது. சட்டவிரோத குடியேற்றவாசிகளில் பலர் தாங்கள் புகலிடம் கோரும் நாடுகளில் வீணான வன்முறைகளுக்குக் காரணமாகின்றனர். அந்நாடுகளின் சட்டதிட்டங்களை மீறுகின்றனர். குடிவரவுச் சட்டத்தை சரிவர நடைமுறைப்படுத்த முடியாமல் அந்நாடுகள் திண்டாடுகின்றன.

அதேசமயம் இலங்கையானது தனது நாட்டுப் பிரஜைகளினால் மற்றொரு நாட்டுக்கு தொடர்ச்சியாக சிக்கல் ஏற்படுவதை அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது. சட்டவிரோத குடியேற்றக்காரர் கள் அந்நாடுகளின் குடிவரவுச் சட்டத்தை மட்டுமன்றி தங்களது நாட்டின் குடியகல்வுச் சட்டத்தையும் மீறுகின்றனரென்பதே உண்மை. நீண்ட காலம் தொடருகின்ற சட்டவிரோத செயல் தடுத்து நிறுத்தப்படுவதே பொருத்தமான நடவடிக்கையாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com