Contact us at: sooddram@gmail.com

 

அக்கரை சென்றால் மகிழ்ச்சி கைதுசெய்யப்பட்டால் கூச்சல்

போர் முடிந்த காலம் தொட்டு இன்று வரை மேலை நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கேட்கும் நோக்கத்தோடு சட்டவிரோதமாகப் படகுகளில் செல்லும் இலங்கையர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. கடந்த சில வாரங்களில் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளால் நடுக்கடலில் பிடிபட்ட படகுகளின் எண்ணிக்கையே திகைக்க வைக்கின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் வெகுவாக கவலைப்பட தொடங்கியுள்ளன. அது போன்றே இந்தியாவில், தமிழ் நாட்டில் அரசு முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் திருட்டுத்தனமாக மேலை நாடுகள் செல்ல முயலும் போது பிற மாநிலங்களில் கைது செய்யப்பட் டுள்ளனர்.

ஆனால் இது குறித்து இலங்கையில் உள்ள தமிழ் சமூகமும், அவர்களுக்காக கவலைப்படும் தமிழினம் சார்ந்த சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைமைகளும் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் குழுக்களும் சொல்வதும், செய்வதும் என்ன? ஒன்றுமே இல்லை! அவர்கள் அனைவரையும் பொறுத்தவரையில் பிரச்சினை என்று வந்து விட்டாலே அது அரசுடனும் மற்றும் சிங்கள அரசியல் தலைமைகளுடனும் மட்டுமே எனும் நிலையே காணப்படுகிறது. அந்த பிரச்சினைகளின் ஆழம் தமிழ் மக்களை பாதிக்கும். ஆனால் அதன் அழுத்தம் தங்களது விருப்பத்திற்கு ஏற்பவே அவர்களுக்கு ஓர் அரசியல் கருவியாக பயன்படும். இது தான் நிதர்சனமான உண்மை.

போர் முடிந்த இந்த காலகட்டத்தில், உயிருக்கும் உடமைக்கும் பயந்து, வெளிநாடுகளில் உயிர் பிச்சை கேட்டு, தஞ்சம் புக வேண்டிய அவல நிலையில் இலங்கை தமிழ் சமுதாயம் தற்போது இல்லை. வெளிநாடுகளுக்கு திருட்டுத்தனமாக செல்ல விரும்பி மாட்டிக் கொண்ட தமிழர்களிடையே அரசினால் விரும்பப்படாத தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எவருமோ இருந்ததாக செய்திகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால், போர் முடிந்த சமயத்தில் கனடா நாட்டு கடற்படையினரால் நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டவர்களில் மட்டுமே சில விடுதலை புலிகள் இயக்க போராளிகள் இருந்ததாக செய்திகள் தெரிவித்தன. அதற்கு பின்னர், அத்தகைய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது தங்கள் நாடுகளுக்கு திருட்டுத்தனமாக செல்ல முயற்சி செய்து மாட்டிக்கொண்டுள்ள தமிழர்கள் அனைவருமே வேலைவாய்ப்பு கருதியே வருவதாக அந்த அரசாங்கம் கருதுகின்றது. பொருளாதார அகதிகள்என்று முத்திரை குத்தப்படும் அவர்களுக்கு புகுந்த இடத்தில் மட்டும் என்ன உரிமையோ, மரியாதையோ கிடைத்து விடப் போகிறது? இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை இல்லை என்று கூறும் அவர்களது தலைமைகள், போகிற நாடுகளில் மட்டும் அவர்களுக்கு அத்தகைய உரிமைகள் கிடைத்துவிடாது என்று கூற மறுக்கின்றன.

உண்மையிலேயே அவர்கள் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே மேலைநாடுகளுக்கு செல்ல முயல்கிறார்கள் என்றால், ஏன் தமிழ் நாட்டு முகாம்களில் உள்ள அகதிகள் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்? ஓட்டை விழுந்த படகுகளில், அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும், நடுக்கடலில் தங்களது உயிருக்கு என்ன பாதுகாப்பு என்று எல்லாம் அவர்கள் ஆலோசித்து இருந்தால், அவர்களுக்கு இந்திய முகாம்களில் வாழ்க்கையின் அருமை புரிந்திருக்கும். இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதை தேடி அவர்களே செல்லும் போது, அவர்கள் எப்படி மேலை நாடுகளில் அரசியல் தஞ்சம் குறித்து பேச முடியும்?

போர் முடிந்த காலகட்டத்தில் உள்நாட்டு அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்த அப்பாவி தமிழ் மக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறி விமானம் மூலம் மேல்நாடுகள் சென்றதாக செய்திகள் அவ்வப்போது வெளியாகின. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. என்றாலும், போர் இறப்புகள் மற்றும் புலம்பெயர்தல் ஆகிய காரணங்களால் இலட்சோப இலட்சம் தமிழர்கள் தற்போது நாட்டின் மக்கள் தொகையில் இல்லை. இதனால், இலங்கையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் வரும் தசாப்தங்களில் வெகுவாக குறையும். அத்தகைய சூழ்நிலையில் தற்போது, மேலைநாடுகளுக்கு நூற்றுக் கணக்கில் செல்ல முயற்சிக்கும் தமிழர்களின் முயற்சி, தொடர்ந்தால், அதன் பிறகு, உரிமை குறித்தும் தனிநாடு குறித்தும் யார் பேசுவார்கள்? யாருக்காக பேச வேண்டும்.?

கள்ளமாகப் படகுகளில் செல்ல, இரண்டு இலட்சம் ரூபா முற்பணமாகவும் இறங்கியதும் ஆறு இலட்சம் ரூபாவும் செலவு செய்யத் தயாராய் இருக்கும் இந்த நபர்கள், அதனையே முதலீடாக வைத்து தங்களது ஊர்களிலேயே தெருவோர கடைகளையோ வேறு சிறு முதலீடுகளையோ செய்யலாம். அவர்களில் ஒரு சிலராவது ஒன்று சேர்ந்து அத்தகைய கூட்டு முயற்சிகளில் ஈடுபடலாம். அவர்களது உரிமைகள் குறித்து வாய்கிழிய பேசும் புலம்பெயர்ந்த தமிழ் தலைமைகள் அவர்களுக்கு சிறுதொழில் முயற்சிகள் குறித்து அறிவுரைகள் கூறலாம். தொழிற் கூடங்கள் கட்டும் அவர்களது முயற்சிகளில் முதலீடு செய்யலாம்.

அது போன்றே, உள்நாட்டில் தமிழர் உரிமை குறித்து குரல் எழுப்பும் அரசியல்வாதிகளும், சமூக அமைப்புகளும் கூட அவர்களது சட்டவிரோத, ஆபத்துக்கள் பல நிறைந்த படகுப் பயண முயற்சிக்கு எதிராக அறிவுரை கூறலாம். மாறாக, அவர்கள் வெளிநாடுகளில் மாட்டிக் கொண்டாலோ அல்லது நடுக்கடலில் தத்தளித்தாலோ மட்டுமே அவர்கள் அது குறித்து குரல் எழுப்புவார்களேயானால், அது தமிழர்கள் உயிருக்கு விலை பேசும் கீழ்த்தர அரசியலாகவே இருக்கும்.

இந்த நிலைமை மாறவேண்டும். ஆனால், மாறுமா?

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com