Contact us at: sooddram@gmail.com

 

ஐ.ம.சு.கூ.வுடன் சேர்வதை தவிர மு.காவுக்கு இருந்த தெரிவு என்ன?

                                                                             
கிழக்கு மாகாண சபை நிர்வாகம் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்ட முறை, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மு.கா. கொள்கையற்ற முறையில் செயற்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் குற்றஞ்சாட்டி வருகின்றன. உண்மைதான், கொள்கை எப்படிப் போனாலும் மு.காவின. நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே பலருக்கு விளங்கிக் கொள்ள முடியாதவையாகவே அமைந்தன. அவை தர்க்க ரீதியாக அமையவில்லை என்றே கூற வேண்டும். மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கும்போதே அவரது கட்சி கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக ஐ.ம.சு. கூட்டணியோடல்லாமல் தனித்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது. இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் இது தர்க்க ரீதியாக கிரகித்துக் கொள்ள பலரால் முடியாது போய்விட்டது.

விமல் வீரவன்ஸவும் அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கும் போதே அவரது தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் திருகோணமலை மாவட்டத்தில் தனியாக போட்டியிட்டது. ஆயினும் அரசாங்கத்தில அமைச்சு பதவியை வைத்துக் கொண்டே அரசாங்கத்திற்கு எதிராக போட்டியிடுவதில் உள்ள முரண்பாட்டுத்தன்மை முஸ்லிம் காங்கிரஸிடமே தெளிவாக தெரியலாயின. மு.கா.வின் முடிவு கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுக்கு முக்கியமானதாக அமைவதே அதற்குக் காரணமாகும்.

கிழக்கு மாகாண சபை தேர்தலின் போதும் அதன் நிர்வாகத்தை நிறுவும் போதும் மு.கா. கொள்கையற்ற முறையில் செயற்பட்டது என்பதை ஏற்கத் தான் வேண்டும். ஆனால் இந்த விடயத்தில் கொள்கைப் பொறுப்போடு எந்தக் கட்சி செயற்பட்டது என்பதும் கேள்விக்குறியே. ஏனெனில் இவ்விடயத்தில் சகல கட்சகளும்; தத்தமது பலத்தை வளர்த்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டே செயற்பட்டது அல்லது வாதங்களை முன்வைத்தது.

இங்கு பலர் புறக்கணிக்கும் விடயம் ஒன்று இருக்கிறது. பல சிறிய கட்சிகளைப் போலவே மு.கா.வும் ஆளும் கட்சியின் பணயக் கைதியாக இருக்கிறது என்பதே அந்த விடயமாகும். கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை ஸ்தாபிப்பதிலும் இந்த விடயமே முக்கிய காரணியாக செயற்பட்டது. எனவே கிழக்கு மாகாணம் தொடர்பாக தற்போது கிடைத்திருக்கும் முடிவைத் தவிர வேறெந்த முடிவுக்கும் இடம் இருக்கவேயில்லை.

தமது கட்சி ஐ.ம.சு.கூட்டணியின் பணயக்கைதி என்பதை அமைச்சர் ஹக்கீம் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். எனவேதான், தனியாக போட்டியிட்ட போதிலும் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை நிறுவுவதற்காக தமது கட்சி ஐ.ம.சு.கூட்டணியோடு கூட்டு சேரும் என ஹக்கீம் வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் பகிரங்கமாக கூறியிருந்தார். தனியாக போட்டியிட்டது மு.கா.வினால் இப்போதைக்கு தனித்து செயற்பட முடியும் என்பதற்காகவல்ல. எதிர்கால தேசிய மட்டத் தேர்தல்களின் போது தேவைப்படும் பேரம் பேசும் சக்தியை வளர்த்துக் கொள்ளவும் அதனை உலகுக்குக் காட்டவுமே இந்தத் தேர்தல் மு.கா.வுக்கு உதவியது.

நாம் இதற்கு முன்னர் பல முறை கூறியதைப் போல் மு.கா. இம்முறை கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை நிறுவுவதில் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து நிர்வாகத்தை அமைத்து இருந்தால் சிலவேளை அது ஐ.ம.சு.கூட்டணியின் சரிவின் ஆரம்பமாகவும் அமைந்திருக்கலாம். தொடர்ந்து தேர்தல்களில் வெற்றிபெற்று வரும் ஐ.ம.சு.கூட்டணி கிழக்கு மாகாண தேர்தல் தோல்வியால் பெரும் பின்னடைவை அடைவதே அதற்குக் காரணமாகும்.

சிலர் அது 1993 ஆம் ஆண்டு தென் மாகாண சபைத் தேர்தல் முடிவு ஐ.க்கிய தேசிய கட்சியின் சரிவின் ஆரம்பமாக அமைந்ததைப் போலாகிவிடும் என்றும் கூறுகின்றனர். அரசாங்கத்திற்கும் அவ்வாறானதோர் அச்சம் இருக்கிறது. எனவே தான் அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தட்டிக்கழித்துக் கொண்டு வருகிறது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மூலம் அரசாங்கத்தின் முன்னேற்றத்தை தடுத்து, அதன் சரிவிற்கான முதற் படியை அமைத்திடும் வாய்ப்பை மு.கா. தவறவிட்டது என்றே எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. எனவே மு.கா. மீதான எதிர்க்கட்சிகளின் கோபத்தை புரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம் காங்கிரஸானது குர்ஆனை கைவிட்டு விட்டு மஹிந்த சிந்தனையை கையிலெடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். மு.கா அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள் அளித்த வாக்கைப் பெற்றுக் கொண்டு அம் மக்களை காட்டிக் கொடுத்துவிட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியிருந்தது. மு.கா ஆடு மாடுகளைப் போல் விலைக் கோரப்பட்டு விலைப் போகிறது என்பதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் கருத்தாகிறது.

ஆனால், தேர்தல் காலத்தில் மு.கா.வை கடுமையாக சாடிய அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் கட்சிகள் வாய் திறக்காமல் இருப்பதே புத்திசாளித்தனம் என மௌனமாக இருக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தில் குர்ஆனை சம்பந்தப்படுத்திக் கொள்வது முறையல்ல. ஏனெனில் மு.கா. ஐ.தே.க. மற்றும் த.தே.கூ.வுடனும் சேர்ந்து மாகாண சபை நிர்வாகத்தை அமைத்தாலும் அதுவும் குர்ஆனின் ஆலோசனையாக அமையப் போவதில்லை. த.தே.கூ. கூறுவதும் நூறுவீதம் சரியான வாதம் அல்ல. தேர்தல் காலத்தில் மு.கா. ஆரசாங்கத்தை விமர்சித்தமை உண்மை தான். ஆனால் மக்கள் அரசாங்கத்தில் சேர வேண்டாம் என்றா மு.காவிற்கு வாக்களித்தார்கள்? தேர்தலின் பின்னர் தமது கட்சி ஆளும் கட்சியுடன் சேர்ந்து கொள்ளும் என மு.கா. தலைவர் பகிரங்கமாக கூறியிருந்த நிலையில் மக்கள் அளித்த வாக்கு தூய அரச எதிர்ப்பு வாக்கு என்று முடிவு செய்யலாமா? 

வழமையாக தேர்தல் காலத்தில் பேரம் பேசும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு எதிராக குரல் எழுப்பும் சிங்கள தேசியவாத கட்சிகளும் குழுக்களும்  ஏனோ தெரியவில்லை, இம் முறை வாய்திறக்கவில்லை. எதைக் கொடுத்தாவது அரசாங்கம் மு.கா.வை வளைத்துக் கொள்ளாவிட்டால் மு.கா. த.தே.கூட்டமைப்புடன் ஆட்சி அமைக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள் போலும். எனவே சிறுபான்மைக் கட்சிகளுக்கு வளைந்து கொடுக்க வேண்டாம் என்ற அவர்களது பழைய பல்லவி இம்முறை கேட்கவில்லை.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மட்டும் தமிழ், முஸ்லிம் கட்சிகளை புறக்கணித்துவிட்டு மாகாண ஆட்சியை நிறுவ வேண்டும் என்றும் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நியமிப்பதாயின் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது த.தே.கூ. அல்லது மு.கா.வின் ஆதரவில்லாமல் ஆளும் கட்சிக்கு எவ்வகையிலும் ஆட்சி அமைக்க முடியாது என்பதை அவருக்கு விளங்கவில்லை போலும். அதேவேளை மு.கா.வின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காகவே அரசாங்கம் முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்க முன்வந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அவ்வாறு இருக்க முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நியமிப்பதாயின் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறும் போது அது மு.கா.வின் கோரிக்கையை ஏற்றதாகிவிடும் என்றும் அவருக்கு விளங்கவில்லை போலும்.

கடந்த வாரங்களில் நாம் கூறியதைப் போல் மு.கா. அரசாங்கத்திலிருந்து பிரிந்தால் அக் கட்சித் தலைவர்களின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகள் எழும். அரசாங்கம் பணத்தை அள்ளி வீசி மு.கா. உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அல்லது அவர்களை மிரட்டி அரசாங்கத்தில் சேர வைத்து மு.கா.வை உடைக்கும். இது மு.கா. தலைமைக்கு தெரியும்.

எனவே மு.கா. எவ்வகையிலும் ஆளும் கட்சியுடன் சேரவே இருந்தது. ஆனால், தேர்தலின் போது தமக்கு கிடைத்த பலத்தை பாவித்து பேரம் பேசுவதற்காகவே த.தே.கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போவதைப் போலவும் காட்டிக் கொண்டது. மு.கா பிரிந்து போகாது என்று அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் தெரியும். ஆனால், ஹக்கீம் ஒரு முறை எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு போனவர். மறுபுறத்தில் அரசாங்கத்திலுள்ள ஏனைய இரண்டு முஸ்லிம் கட்சிகளுக்கு அரசாங்கத்திற்குள் இருக்கும் வரவேற்பும் மதிப்பும் மு.கா.விற்கு இல்லை.

ஆகவே மு.கா. சிலவேளை போய்விடுமோ என்ற சிறியதொரு பயமும் அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் இருந்தது. இந்த நிலையில் கூட்டு சேர்வதற்கான மு.காவின் கோரிக்கைகளை எடுத்த எடுப்பில் உதறித் தள்ள முடியாத நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

மு.கா. கிழக்கு மாகாண காணிப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை முன்வைத்திருந்தால் அது அரசாங்கத்திற்கு கஷ்டமானதாக அமைந்து இருக்கும். ஆனால், கிழக்கு மாகாண முலமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றே மு.கா. தலைவர் கேட்டிருந்தார். த.தே.கூ. இந்த கோரிக்கையை ஏற்று இருந்ததால் அரசாங்கத்தால் அக்கோரிக்கையை முற்றாக புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

முதலமைச்சர் பதவியை மு.கா.விற்கு வழங்குவதை அரசாங்கத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகள் விரும்ப மாட்டா. அப்பதவிவை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு வழந்குவதை விரும்பினாலும் அக் கட்சிகள் அதனை மு.கா.விற்கு வழங்குவதை விரும்பமாட்டா.  அக் கட்சிகள் மு.கா.வை விட அரசாங்கத்திற்கு விசுவாசமான கட்சிகளும் கூட. எனவே முதலமைச்சர் பதவியை மு.கா.விற்கு வழங்குவதும் அரசாங்கத்திற்கு சங்கடமான நிலையை உருவாக்கும்.

அதேபோல் முதலமைச்சர் பதவியை அரசாங்கத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்குவதை மு.கா.வும் விரும்ப மாட்டா. அக் கட்சியும் அப் பதவிவை சந்திரகாந்தனுக்கு வழந்குவதை விரும்பினாலும் அரசாங்கத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்குவதை விரும்பாது. ஏனெனில் அவ்வாறு வழங்கினால் அது கிழக்கு மாகாணத்தில் மு.கா.வின் இருப்பையே பாதிக்கும்.

அரசாங்கத்திற்கு மு.கா. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பக்கம் சாராமல் தம் பக்கம் சார்ந்த நிலையில் வைத்துக் கொள்ளவும் வேண்டும், அதற்காக முதலமைச்சர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்கவும் வேண்டும், அப்பதவியை மு.கா.விற்கு வழங்குவதை அரசாங்கத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகள் விரும்புவதும் இல்லை, அக்கட்சிகளுக்கு வழங்குவதை மு.கா. விரும்புவதும் இல்லை.

இந்தக் காரணிகளின் ஒட்டுமொத்த விளைவாகவே இலங்கையின் மாகாண சபை வரலாற்றில் முதலாவது முஸ்லிம்  முதலமைச்சர் பதவி திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரரான நஜீப் ஏ. மஜீத்தை சென்றடைந்தது. இது தற்போதைக்கு எல்லோரையும் சமாதானப்படுத்தும் தீர்வாக அமைந்து இருக்கிறது.

இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் தமது கட்சிக்கு முதலமைச்சர் பதவியை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் மு.கா. கூறுகிறது. ஆனால் அது நடந்தால்தான் உண்மை.

முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமிக்க முடிந்திருந்தால் அரசாங்கம் அதனையே விரும்பியிருக்கும். ஏனெனில் தமிழ் முதலமைச்சர் ஒருவர் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் நல்ல காட்சிப் பொருளாகிவிடுவார். ஆனால் ஆளும் கட்சியில் உள்ள ஒரே தமிழ் உறுப்பினரை முதலமைச்சாரக நியமிப்பது முறையல்ல என்று அரசாங்கம் நினைத்திருக்கலாம்.

அதேவேளை மு.கா.வும் த.தே.கூ.வும் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நியமிக்க அரசாங்கத்தை நிர்ப்பந்தித்துவிட்டன.

(ஐயூப்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com