Contact us at: sooddram@gmail.com

 

ஆரோக்கிய வாழ்வுக்கு மூலிகை உணவுகள்

அகத்தி

தாவரவியற் பெயர் - Sesbania grandiflora

(செஸ்பானியா கிராண்டிஃபுளோரா)

குடும்பம்: Papilionaceae

சிங்களப் பெயர்: கத்துருமுருங்க

சமஸ்கிருதப் பெயர : அகஸ்திய

அகத்தியில் சாதாரண அகத்தி, சிற்றகத்தி, செவ்வகத்தி என்ற பேதங்களுண்டு. பெரும்பாலும் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது. வீடுகளில் வளர்ப்பது அரிது. அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்என்று ஒரு பழமொழியுள்ளது. வீடுகளில் அகத்தியை வளர்க்கக் கூடாது என்பது பற்றியே இப்பழமொழி ஏற்பட்டுள்ளது. அகத்திக்காய், விதை என்பவற்றில் சபோனினி (Saponini) என்னும் நச்சுப் பொருள் உள்ளது. எனவே, வீட்டில் வளர்த்தால் குழந்தைகள் இதன் விதைகளைத் தெரியாமல் சாப்பிட்டு விடக்கூடுமல்லவா? அதனால்தான் அகத்தியை வீட்டில் வளர்ப்பதில்லை என்று ஏற்படுத்தியிருக்கிறார்கள் போலும்,

அகத்தி சிறு மரவகுப்புக்குரியது. இலைகள் கூட்டிலைகள், ஒரு கூட்டிலையில் சோடி சோடியாக 20-30 சோடி சிற்றிலைகள் காணப்படும். இவ்விலைகளையே அகத்திக் கீரை என அழைப்பர். மார்கழி, தையில் பூக்கும். பூக்கள் வெண்மை நிறம். (சிவப்பு நிறப் பூக்களையுடையது செவ்வகத்தி எனப்படும்) அகத்தியிலை, பூ என்பன உணவாக உட்கொள்ளத் தக்கன.

100 கிராம் அகத்தி இலையில் 8.4 கிராம் புரதச் சத்து, 1.4 கிராம் கொழுப்புச் சத்து, 11.8 கிராம் காபோவைதரேற்று, 1130 மி.கி.கல்சியம், 80 மி.கி.பொஸ்பரஸ், 3.9 மி.கி இரும்புச் சத்து, 5400 மை.கி.கரோற்றின், 210 மை.கி.தயமின், 90 மைகி.இரையோபிளேவின், 169 மி.கி.விற்றமின் சி என்பன உள்ளன.

இதன் போசாக்குச் சத்துக் கருதியே ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தமது உபவாசத்தை முடித்துக் கொள்ளும்போது அவர்களின் உணவில் அகத்திக்கீரை கட்டாயம் இடம்பெறவேண்டும் என்று எமது முன்னோர்கள் விதித்து வைத்தனர் போலும்.

அகத்தியிலையானது மலச்சிக்கல், இரத்தச் சோகை, குடற்புண், வாய் அவியல் அல்லது வாய்ப்புண், நாச்சுவையின்மை என்பவற்றைப் போக்கவல்லது. உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

அகத்தியிலை பேதிக்காமல் விலை பூவே பிஞ்சு மிகத்தினஞ் சமைத்தேயுண்டால் வெறிப் பயித்தியங்களோடு திகைத்திடுங் கிறுகிறுப்புத் தீர்த்திடுங் குளிர்ச்சியுண்டாம். பகுத்திடா விதன் பழுப்பான சியஞ்செய் பயித்தியம் போம்

என்று அகத்தியின் இலை, பூ முதலியவற்றின் குணங்களைப் பதார்த்த குணிசிந்தாமணி எடுத்துக்கூறியுள்ளது. அகத்தியிலையை இலைக்கஞ்சியாக, பாற்சொதியாக, வறையாகச் சமைத்துண் ணலாம்.

அகத்தியிலை இலைக்கஞ்சி

தேவையான பொருட்கள்

அரிசி : 100 கிராம் (1/2 சுண்டு)

பயற : 25 கிராம் (1 மேசைக்கரண்டி)

அகத்தியில : 1 பிடி

தேங்காய்: பாதி

நற்சீரகம : 1/2 தேக்கரண்டி

மிளக : 4, 5

உப்ப : தேவையான அளவு

தயாரிக்கும் முறை:

பச்சையரிசி அல்லது புழுங்கலரிசியைப் பாவிக்கலாம். அரிசி குறுணலாக இருப்பது நல்லது. அரிசியை நன்கு சுத்தம் செய்து. கழுவிக் கல்லரித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பானையில் நீர்விட்டு, கொதிக்க வைத்து, நீர் நன்கு கொதித்ததும் அரிசியைப் போட்டு நன்கு வேகவிடவும். பயறு அல்லது பயற்றம் பருப்பைச் சேர்ப்பதாயின் அதனையும் சுத்தம் செய்து அரிசியுடன் போட்டு நன்கு வேக வைக்கவும்.

பயறு சேர்ப்பதாயின் அதனை முளைகட்ட வைத்துச் சேர்ப்பதே நல்லது. முளைகொண்ட பயற்றில் விற்றமின் கி,ரி என்பன அதிகளவில் இருக்கும். பயற்றை முதல்நாள் காலையில் நீரில் ஊறவிட்டு, மாலையில் வடித்து, ஒரு ஈரத்துணியில் முடிந்து வைத்தால் மறு நாட் காலையில் முளை வந்திருக்கும். முளைகட்டிய பயற்றை அரிசி ஓரளவு வெற்றி பின்னர் சேர்த்துக்கொள்வது நல்லது.

அகத்தியிலையைச் சுத்தம் செய்து உருவி எடுத்துக்கொள்ளவும். தேவையானால் ஒன்றுக்கிரண்டாகக் குறுணலாக வெட்டிக்கொள்ளவும். அரிசி ஓரளவு வெந்துவரும் போது அகத்தியிலையையும் சேர்த்து வேகவிடவும்.

தேங்காய்ப் பாதியைத் துருவிப் பிழிந்து பாலெடுத்து வைத்துக்கொள்ளவும். அரிசி, பருப்பு, அகத்தியிலை என்பன நன்கு வெந்ததும் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கொதிக்க விடவும். அத்துடன் மிளகு, சீரகத்தைப் பொடித்துப் போட்டு தேவையான அளவு உப்பையும் போட்டு, இரண்டு கொதி கொதித்ததும் இறக்கிக்கொள்ளவும். இக்கஞ்சியை இளஞ்சூடாக இருக்கும்போதே பருகுவது நல்லது. தேவையானால் பனங்கட்டி அல்லது வெல்லம் சேர்த்தும் இக்கஞ்சியைப் பருகலாம். குழந்தைகள், கர்ப்பிணிகள், வயோதிபருக்கும் இது ஒரு போசாக்குள்ள கஞ்சியாக அமையும்.

அகத்தியிலைப் பாற்சொதி

தேவையான பொருட்கள்:

அகத்தியிலை: 1 கைப்பிடியளவு

தேங்காய்: பாதி

வெங்காயம்: தேவையான அளவு

பச்சைமிளகாய :4, 5

தேசிக்காய்: 1

உப்ப : தேவையான அளவு

செய்முறை:

அகத்தியிலையைச் சுத்தம் செய்து உருவி எடுத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவி பிழிந்து பாலெடுத்துக்கொள்ளவும். வெங்காயம், மிளகாயைக் குறுணலாக நறுக்கிக்கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து தாச்சியிலிட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொதிக்க வைக்கவும். அகத்தியிலை நன்கு வெந்ததும் இறக்கிக் கொள்ளவும். நன்கு ஆறியதும் தேசிப்புளியைப் பிழிந்துவிட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும். சோறு அல்லது இடியப்பம், பிட்டு போன்ற உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம். முக்கியமாக வாய்ப்புண், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இரு சிறந்த மூலிகை உணவு. வாய்ப்புண் உள்ளவர்களுக்குப் பாற் சொதி தயாரிக்கும்போது பச்சைமிளகாய் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாகவே ஒருவரின் உணவில் உப்பு, காரம் என்பவற்றை எவ்வளவு குறைவாகச் சேர்த்துக்கொள்கிறாரோ அவ்வளவிற்கு அவரின் ஆரோக்கியமும், ஆயுளும் அதிகரிக்கும்.

சே. சிவசண்முகராஜா M.D(S)

சித்த மருத்துவ கலாநிதி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com