Contact us at: sooddram@gmail.com

 

கிழக்கிலங்கையின் புதிய முதல்வர் முன்பாகவுள்ள பாரிய பொறுப்புகள்

கிழக்கிலங்கையின் புதிய முதல்வராக நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட் டுள்ளார். அந்த மாகாணத்தின் தேர்தல் அறிவிப்பு வெளியாகிய காலப்பகுதியிலிருந்தே அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியே மக்களது மனதில் இருந்து வந்தது. அதற்கு இப்போது விடை காணப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களது வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் நடத்திய கபட நாடகங்களுக்கு முகங்கொடுத்த மக்கள் சில அரசியல் கட்சிக ளால் தாம் ஏமாற்றப் பட்டதைக் கூட இப்போது நன்கு உணர்ந்திருப்பார்கள். தேர்தல் மேடைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நிச்சயம் ஆட் சியமைக்கும் எனவும் அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரே முதல்வராவார் எனவும் பலரால் ஆரூடம் கூறப்பட்டது. அதே போன்று சுதந்திரக் கூட்ட மைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்துவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் இன்று அங்கே ஆட்சிபீடமேறியிருக்கின்றது. கிழக்கிலங்கை வாழ் மூவின மக்களும் இதனை முழு மனதுடன் வரவேற்றுள்ளனர்.

முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் மஜீத் அவர்களது நியமனம் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்வைக் கொடுத்துள்ளது. அப்துல் மஜீத் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்பதுடன் மட்டுமல்லாது நாட்டிலுள்ள மாகாணங்களில் இதுவரை காலத்திலும் நியமனம் பெற்ற முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் எனும் பெருமையையும் அவர் தனதாக்கிக் கொண்டுள்ளமையே அதற்குக் காரணமாகும்.

முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் மஜீத் ஒரு பழுத்த அரசியல்வாதி. அதிலும் மூவின மக்களாலும் நேசிக்கப்படும் ஒருவர். தனது தந்தையாருடன் இணைந்து சிறு வயது முதலே அரசியலில் ஆர்வம் காட்டி தந்தையாரைப் போலவே மக்கள் சேவைக்கு முதலிடம் கொடுத்து வருபவர். தனது முப்பத்தோராவது வயதிலே தந்தையாரை விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன் றதன் பின்னர் தனது அசியல் பணிகளை தீவிரமாக முடுக்கிவிட்டவர். அன்றுமுதல் திருகோணமலை மாவட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்றுவரு வதுடன் அதற்கேற்றாற்போல் மக்கள் சேவையையும் ஆற்றி வருகின்றார். மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மஜீத் தனக்குக் கிடைத்த அமைச்சுப் பதவிகள் மூலமாக முழு நாட்டுக்குமே சேவைகளைச் செய்து வந்துள்ளார். அத்தகைய அரசியல் அனுபவமும், சேவை நோக்கமும் கொண்ட ஒருவருக்கு ஜனாதிபதி முதலமைச்சர் பதவியை வழங்கியிருப்பது அவருக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே கருத வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பினும் இப்போது அவர் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் முதலமைச்சராக உள்ளார். கிழக்கிலங்கையைப் பொறுத்தவரையில் அங்கு இம்மூன்று மாவட்டங்களிலும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என மூவின மக்களும் சமாந்தரமாக வாழ்கின்றனர். இந்த மக்கள் அனைவருக்குமே மஜீத் தான் முதலமைச்சர். தான் பதவியேற்றதன் பின்னர் அவர் கருத்துத் தெரிவித்தபோதும் இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டியி ருந்தார். அத்துடன் கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்ப தான் இன, மத, மொழி பேதம் பாராது பாடுபட்டுழைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அவரது முதலாவது மக்கள் சந்திப்பிலேயே அவர் சகல மக்களது மனங்களையும் கவரும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் அவர் எதிர்காலத்தில் மேற் கொள்ளவிருக்கும் பணிகளில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முதல்வர் மஜீத்தினது தலைமையில் நம்பிக்கை வைத்து அவருக்குத் தமது ஒத்துழைப்பை வழங்கித் தமது மாகாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அம்மக்களில் பெரும்பாலானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தாலும் தமிழ்க் கூட்டமைப்பின் சாணக்கியமற்ற தலைமைத்துவத்தினால் எதிர்க்கட்சி யிலேயே இருக்க வேண்டியேற்பட்டுள்ளது.

பதினொரு ஆசனங்களை அவர்கள் பெற்றிருந்தாலும் எதிர்க்கட்சியிலிருந்து பெரிதாக எதனையுமே சாதித்துவிட முடியாது. வெளிநாடுகளுக்கு தமிழ் மக்கள் தம்முடனேயே உள்ளதாக காட்டுவதிலேயே அவர்களது அரசியல் உள்ளது. ஆனால் இம்முறை அவர்களால் அதனையும் செய்ய முடியாது. காரணம் கணி சமான தமிழ் மக்கள் அரசாங்கக் கட்சிக்குத் தமது வாக்குகளை அளித்துள்ளார்கள்.

முதலமைச்சரது மக்கள் சேவைக்கும், மாகாணத்தின் அபிவிருத்திக்கும் பக்கபலமாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகிய கட்சிகளின் மாகாணசபை உறுப்பினர்களும் தோளோடுதோள் நின்று பணியாற்ற வுள்ளனர். மத்திய அர சாங்கத்தின் உதவி களைப் பெற்று மாகா ணத்தின் அபிவிருத்தி யைச் செவ்வனே செய்ய திறமைமிக்க அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்தே கடந்த ஆட்சிக் காலத்தில் அதிகம் பேசப்பட்டது. முதலமைச்சர் ஆளுமையுடன் அதிகாரம் கொண்ட வராகவும் இருந்தால் இவ்விடயங்கள் குறித்து மாகாண மக்களது கருத்தறிந்து மத்திய அரசிற்கு இவ்விடயத்தில் சிபார்சுகளைச் செய்ய முடியும். அத் துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இதுவரை முழுமையான நிவாரணம் கிடைக்காத மக்கள் பலர் கிழக்கில் இன்னமும் உள்ளனர். பல கிராமங்கள் மின்சார வசதிகளற்றுக் காணப்படு கின்றன. குடிநீருக்கு பல மைல் தூரம் செல்லும் கிராம மக்கள் இன்றும் உள்ளனர். பாதை திருத்தப்படாத நகரங்கள், வைத்தி யசாலை வசதியில்லாத கிராமங்கள் என்ப னவும் இல்லாமலில்லை.

இவற்றுக்கு முதலமைச்சர் மஜீத்தின் காலத்தில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே கிழக்கு மாகாண மக்களது அவாவாக உள்ளது. அதனை அவர் புரிந்து செயற்ப டுவார் என்ற நம்பிக்கையும் அம்மக்களிடையே காணப்படுகிறது.

மக்களது இவ்விரு எதிர்பார்ப் புக்களையும் நிறைவேற்றி வைப்பதே புதிய முதலமைச்சர் முன்பாகவுள்ள பாரிய பொறுப் பாகவுள்ளது. நிலைமையை உணர்ந்து தமிழ்க் கூட்ட மைப்பின் பிரதிநிதிகளும் முதலமைச்ச ருக்குத் தமது ஆதரவை வழங்கி தமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய முன்வர வேண்டும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com