Contact us at: sooddram@gmail.com

 

புலிகளும் முதலில் இழந்தது கிழக்கைத்தான், தமிழ்க் கூட்டமைப்புக்கும் அந்நிலை வருமா?

சொந்த வாழ்வு செழிக்க அரசிடம் தஞ்சம்; பொது மக்கள் தேவைக்கு மட்டும் கபட எதிர்ப்பு அரசியல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகளின் பிரகாரம் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதளவும் கருத்திற்கொள்ளாது தமது பிடிவாதமான ஒன்றுக்குமே உதவாத தமிழ்த் தேசியக் கொள்கையைக் காரணம் காட்டி மீண்டுமொரு தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதாக அவர்களுக்கு வாக்களித்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் காலத்தில் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கிலங்கை மக்களுக்கு மாகாண ஆட்சியை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி வாக்கு வேட்டையாடினர். ஆனால் கிழக்கில் இன்று தமக்குச் செல்வாக்கு முன்னொரு காலம் போலில்லை என்பதை நன்கறிந்திருந்தும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களைப் பகடைக்காய்களாக்கி இன்று தமிழ்க் கூட்டமைப்பு அம்மக்களை ஏமாற்றியுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கை விடுவதும், ஆர்ப்பாட்டம் செய்வதையுமே தொழிலாகக் கொண்டிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பு தமது தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றி இப்போது துளியளவும் சிந்திப்பது கிடையாது. எதிர்ப்பு அரசியல் நடத்தினால் வெளிநாடுகள் வந்து தமக்கு தனிநாட்டைப் பெற்றுத்தந்து விடுமெனவும், அந்நாட்டிற்கு சம்பந்தன் ஜனாதிபதியாக வரலாம் என்பதுவுமே அவர்களது பகற் கனவாக உள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுத ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பலமாக இருந்தபோதும் இத்தகையதொரு மன நிலையிலேயே தமிழ் மக்களை வைத்திருந்தது. ஆனால் இறுதியில் நடந்தது என்ன? முள்ளிவாய்க்காலில் அவர்கள் மடிய அவர்களை நம்பியிருந்த தமிழ் மக்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். அன்று அம்மக்களது அவலக் குரல் ஆகாயத்தைப் பிளக்கையில் எந்தவொரு சர்வதேசமும் திரும்பிப் பார்க்கவில்லை. புலிகளுக்கு தீனி போட்ட உலக நாடுகள் அப்புலிகள் இறந்து மடியும்வரை வாயே திறக்கவில்லை.

இந்த கசப்பான ஆனால் உண்மையான உண்மைகளை நன்கு தெரிந்திருந்தும் தமிழ்க் கூட்டமைப்பு இன்னமும் புலிகளின் அதே பாணியில் சர்வதேசத்தை நம்பியிருப்பது போன்ற முட்டாள்தனம் வேறெதுவுமாக இருக்க முடியாது. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களைப் பணயம் வைத்து தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் அரசியல் நடத்தி வருவது இப்போது பல சந்தர்ப்பங்களில் வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

குறிப்பாக கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வர்த்தகர்கள். அவர்கள் தமது வர்த்தகத்தை விருத்தி செய்வதற்காக அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணி அமைச்சர்கள் சிலரைத் தனிப்பட்ட முறையில் கைகளுக்குள் போட்டுக்கொண்டு தமது காரியத்தைச் சாதித்து வருகின்றனர். இவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் உயர் படிப்புக்களை அரசாங்கத்தின் புலமைப்பரிசில் பெற்றுப் பயின்று வருகின்றனர். தமது உறவினர்களுக்கு அரசாங்கத்தின் துணையுடன் விசாக்களைப் பெற்று வருகின்றனர். ஊரிலுள்ள தமதும் தமது நெருங்கிய உறவினர்களினதும் வீடுகளை அரச செலவில் திருத்தி மின்சார வசதிகளையும் பெற்று அரச நிறுவனங்களுக்கே வாடகைக்கு விட்டுச் சம்பாதித்தும் வருகின்றனர். ஆனால் இதை அரசாங்கம் தானாக முன்வந்து தமிழ் மக்களுக்குச் செய்யும்போது எமக்கு அபிவிருத்தி தேவையில்லை, அரசியல் தீர்வே தேவை என்று பொய்யாகக் குரல் கொடுக்கின்றனர். ஏன் இந்தக் கபட எண்ணம். உங்கள் வீடுகள் திருத்தப்பட வேண்டும். உங்கள் வீட்டுக்கு வரும் பாதைகள் புனரமைக்கப்பட வேண்டும். உங்கள் வீட்டுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் இதையே தமிழ் மக்களுக்கு அரசாங்கம் வழங்கினால் குற்றம்.

இந்த நிலை மாற வேண்டும். முன்னொரு காலத்தில் தமிழனுக்குப் பிடிவாதம் இருந்தது அதில் நியாயமும் இருந்தது. பலமும் இருந்தது. இன்று யாரை நம்பி எதை நம்பி சண்டித்தனம் காட்டுவது. உங்களுக்கு ஊதுகுழலாக இருக்கும் சில தமிழ்ப் பத்திரிகைகள் கையை விரித்தால் உங்கள் பாடு அதோகதிதான். அவ்வாறு உண்மையை விழித்த உங்களுக்கு புத்திமதி கூறிய ஒரு வார இதழின் பத்திரிகை ஆசிரியருக்கு ஆப்புவைத்த கதை இப்போது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். துதி பாடினால் மட்டுமே வரவேற்பு. உள்ளதைச் சொல்லி அறிவுரை கூறினால் வெளியேற்றும்வரை ஒற்றைக் காலில் நிற்பது. தமிழ்க் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இனி இவ்வாறான சில்லறை விடயங்களைக் கைவிட வேண்டும். உங்களைப் போலவே ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் அவனது இருப்பிடம், வாழ்வாதாரம் என்று பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்த்து வைப்பது உங்களது கடமை. தலைவர் எப்போது இறப்பார், பதவி எப்போது கிடைக்கும் என்பதற்காக அறிக்கை விட்டு அந்தஸ்த்தைத் தேடக் கூடாது.

கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ்க் கூட்டமைப்பை நிராகரித்துள்ளமை தெட்டத் தெளிவாகியுள்ளது. ஆட்சியமைக்க முடியாத நீங்கள் அரசாங்கத்துடன் சாணக்கியமாகப் பேசி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கலாம். அதன் மூலம் மாகாணத்தின் அபிவிருத்தியை மேற்கொண்டிருக்கலாம். பதினொரு ஆசனங்களைக் கைப்பற்றி யிருப்பினும் அதற்குக் காரணமான தமிழ் மக்களுக்கு அதனால் என்ன பிரயோசனம் வரப்போகின்றது? இதைவைத்து வெளிநாடுகளுக்கு இனியும் உங்களது பலத்தைக் காட்டுவதனால் எந்தவிதமான பிர யோசனமும் கிடைக்கப் போவதில்லை.

உங்களுடன் மேடைகளிலும், ஆர்ப்பாட்டங்களிலும் தமிழ்த் தேசியம் பேசும் மனோ கணேசன் சப்ரகமுவ மாகாணத்தில் சாணக்கியமாகச் செயற்பட்டுள்ளார். தனது சமூகப் பிரதிநிதி ஒருவர் அச்சபையில் மேலதிகமாக வர அவர் காரணமாக இருந்துள்ளார். அவர் ஒரு முழு நேர அரச எதிர்ப்பாளர். அரசை எப்படியெல்லாம் எதிர்த்து அறிக்கைவிடலாம் என்பதற்காக அலைந்து திரிந்து கரு தேடுபவர். நித்திரையில்கூட அரசாங்கத்தை ஏசுபவர். அத்தகைய ஒருவர் சாணக்கியமாகச் செயற்பட்டதை ஏன் தமிழ்க் கூட்டமைப்பு முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடாது?

எனவே இனியும் தமிழ்க் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்ற முனையக் கூடாது. 1977 ஆம் ஆண்டிலிருந்து எதிர்ப்பு அரசியலை நடத்தி வந்தமையால் இன்றுவரை தமிழ்ச் சமூகம் கண்ட பலன் என்ன? தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி ஆயுதங்களைத் தூக்க வைத்து அவர்கள் போராடிய காலத்தில் நீங்கள் வெளிநாடுகளில் தஞ்சமிருந்துவிட்டு இன்று அவர்கள் அழிந்ததும் அரசியல் நடத்த வந்துள்ளார்கள்.

கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சியின் எந்தவொரு உயர்பீட அங்கத்தவரது குடும்பமாவது போராளியாகி குடும்பத்தில் இருந்துள்ளதா? அல்லது மாவீரர் குடும்ப அந்தஸ்து பெற்றதா? அல்லது கைதிகள் குடும்பத்தில் இணைந்துள்ளதா, அல்லது காணாமற் போனோர் பட்டியலிலுள்ள குடும்பத்தில் உள்ளதா? எதுவுமே இல்லை. பின்னர் ஏன் இந்தப் போலி அரசியல். அரசுடன் இணையுமாறு தமிழ் மக்கள் கேட்கவில்லை. சாணக்கியமாகப் பேசி காரியத்தைச் சாதிக்குமாறே மக்கள் கேட்கிறார்கள். இதய சுத்தியுடன் உண்மையாக அரசுடன் பேசுவதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதற்கு மக்களுக்கு நீங்கள் விரைவான பதிலை வழங்கா விட்டால் கிழக்கு மாகாணத்தை இழந்தது போலவே வடக்கையும் தமிழ்க் கூட்டமைப்பு இழக்க நேரிடும். யுத்தத்தில் விடுதலைப் புலிகளும் முதலில் கிழக்கையே இழந்தனர். பின்னர்தான் வடக்கையும் இழந்தனர். அந்த நிலை வருவதை தமிழ்க் கூட்டமைப்பு தவிர்க்க வேண்டுமாயின் உண்மையான பேச்சுவாத்தையில் ஈடுபட்டு தீர்வினைக் கண்டு இனியாவது தமிழ் மக்களை நிம்மதியாக வாழ வைப்பதே. இல்லையேல் அரசியலுக்கு முடிச்சுப் போட்டுவிட்டு ஏதாவது பெறுமதியான பரிசுகளைப் பெற்றுக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறி அரச செலவில் மேலைத்தேய நாடுகளில் ஆங்கிலம் பேசி சொகுசாக வாழும் உங்கள் உறவுகளுடன் இணைந்து கொள்ளுங்கள். அரசாங்கம் தமிழ் மக்களை நன்கு பார்த்துக்கொள்ளும்.

(க.சிவராசா)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com