Contact us at: sooddram@gmail.com

 

TNA ன் தேர்தல் விஞ்ஞாபனம் –சொன்னதும், சொல்லாததும்

(அபிமன்யு)

TNA விஞ்ஞாபனத்‌தில் சொல்லப்பட்ட விடயங்களில் வெற்று சொல்லாடல்களும் வெறும் வீராப்பும் தான் உள்ளது ஆனால்   சொல்லப்படாத விடயங்களே TNA யின் உண்மையான அரசியலாக இருக்கின்றது. TNA சொல்லாமல் சொல்லும் நடைமுறை பற்றி குத்‌தலாக சில கேள்விகளை எழுப்புகிறார் அபிமன்யு,  தொடர்ந்து வாசியுங்கள் முடிவெடுக்க வேண்டியது வாக்காளர்களே

 சொன்னது

2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு (TNA) பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர் அந்த அரசியல் ஆணைக்கு அமையக் கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு தேவையான ஒரு முதற் படியாக தற்போது வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது.

சொல்லாதது

குறிப்பாக அந்த ஆணை என்ன? அதன் பட்டியல் என்ன?

அத் தேர்தலிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக TNA வேட்பாளர்களையே தேர்ந்தெடுத்திருந்தும் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் 2013ம் ஆண்டு இற்றை வரையிலான காலப்பகுதியில் தமிழ் மக்கள் பெற்ற நலன்களின் பட்டியல் என்ன?

அத் தேர்தலில் வடக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வது பற்றி எது வித ஆணையுமில்லை!

மாறாக வடக்கு-கிழக்கு இணைப்பில்லாதபோது வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை என்பதல்லவா 2010 காலகட்டத்தில் TNA யின் நிலைப்பாடு?

அதுவல்லவா அத்தேர்தலில் தமிழ்மக்கள் TNAக்கு அளித்த ஆணை? ? ?

என்று யாராவது கேட்பார்களானால், அவற்றிற்கான பதில்களை நாம் கூற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இக் கேள்விகளைக் கேட்பவர்கள்

தமிழர்களின் ஒற்றுமைக்கு விரோதமானவர்கள்.

சர்வதேச சமூகம் எமக்குத் தரும் ஆதரவுக்கு எதிரானவர்கள்.

சிங்கள அரசாங்கத்தின் கைக்கூலிகள்.   

சொன்னது

1948ம் இலங்கை சுதந்திரம் பெற்ற முதல் தொடக்கம் இன்று வரை நடைபெற்ற சம்பவங்கள், இலங்கை-இந்திய ஒப்பந்தம்,  ஒஸ்லோ அறிக்கை உட்பட முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள், பல்வேறு பேச்சுவார்த்தைகள், தீர்வாலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றி விலாவாரியாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.

சொல்லாதது

இவை அனைத்தும் தமிழ் மக்கள் அனைவருக்கும் ஏற்கனவே நன்றாகத் தெரிந்த சரித்திரச் சம்பவங்கள்தான்.

எனினும் இதற்குப் பல பக்கங்கள் நாம் ஒதுக்கவேண்டிய காரணம், காலங்காலமாக இவற்றைச் சொல்லியே நாம் தேர்தல்களில் வெல்வதுதான் எமது வெற்றியின் சூட்சுமங்கள்.

அதனையே தமிழ் மக்களும் விரும்புகிறார்கள்.

இத் தேர்தலிலும், அதே சூட்சுமத்தைத் தொடருவது அவசியமாகிறது. அடுத்துவரும் தேர்தல்களிலும் இவற்றையே நினைவுறுத்துவோம்.

மேலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் அமுல்படுத்தாமையில் எமது பங்கு,

நாம் நிராகரித்த அதே இலங்கை- இந்திய ஒப்பந்த்த்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட 13வது அரசியல் திருத்தத்தின் அடிப்படையில் 26 வருடங்களுக்குப் பின்னர் பல்லாயிரம் மக்களின் உயிர் உடமைகள் இழப்புகள், இடப் பெயர்வுகளுக்குப் பின்னர், இணைப்பு துண்டிக்கப்பட்டு வடமாகாணசபைத்  தேர்தலில் வெல்ல வாய்ப்புக் கேட்கும் பரிதாபம்,

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஏறத்தாழ ஒரு சமஷ்டி ஆட்சியமைப்புக்கு இணையான அரசியல்யாப்பு சீர்திருத்ததிற்கான முன்மொழிவுகளுக்கு ஆதரவளிக்காது அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது யுஎன்பியுடன் சேர்ந்து நிராகரித்தமை,

ஆயுத வன்முறைகளினால், கோழைத்தனமான படுகொலைகளால்  தமிழ்மக்கள்மேல் கோலோச்சிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஏகபோக பிரதிநிதிக் கோரிக்கைக்கு முண்டு கொடுத்து, ஒஸ்லோ அறிக்கை மற்றும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஆகியவை சிதைந்தமையில் எமது பங்கு—

-இவற்றைச் சுட்டிகாட்டுவதோ, சீர்தூக்கி நடுநிலைமையுடன்  சுயவிசாரணை செய்வதோ, அதற்காக மனம் வருந்தி மானசீகமாக மன்னிப்புக் கோருவதோ தமிழர்களின் பாரம்பரியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவதோடு, அனாவசிய வேலை  என்பதையும்  வலியுறுத்த விரும்புகிறோம்.

தமிழ் மக்களின் தோல்விகள், இழப்புகள், இன்னல்கள்,  அழிவுகள், அனைத்திற்கும் சிங்களவர்களே காரணிகள் என்பதனால்,

தன்மானத் தமிழ் மக்கள் எதுவித கேட்டுக் கேள்விகளுமின்றி எம்மையே நிச்சயமாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை என்றென்றும் எமக்கு உண்டு.

 

சொன்னது

1987 இல் இருந்து இப் போராட்டத்தை தொடரும் ஒரே ஆயுத இயக்கமாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றது

சொல்லாதது

அந்தத் தோற்றுவாய்க்குக் காரணம் புலிகள் இயக்கம் ஆயுதபலத்தால், வன்முறைக் கலாச்சாரங்களால், ஏனைய இயக்கப்போராளிகளை, ஆதரவாளர்களை, அரசியல்வாதிகளை, சமூகச்செயற்பாட்டாளர்களை, ஊடகவியலாளர்களை, புத்திஜீவிகளை, கல்விமான்களை சித்திரவதைகளுக்குள்ளாக்கியதும் கொன்று குவித்த்தும் என்பதை இங்கு உங்களுக்கு நினைவுகூருவதும் அவசியமில்லை எனக் கருதுகிறோம்.

ஏனெனில் எம்மில் பலரும் அதில் பங்குதாரர்களாகவும், அவற்றிற்கு ஆதரவாளர்களாகவும் இருந்துள்ளோம். புலிகளின் தலைமைத்துவத்திற்கு நாம் அடிபணியாதிருந்தால் நாம் தமிழர்களின் நலனுக்காகப் பாடுபட  முடிந்திருக்காது.

மேலும், எமது உயிர் போனால், நாம் தேர்தல்களில் எப்படி நிற்பது? எப்படி வெல்வது? எப்படித் TNAயின் அடுத்த தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது? எப்படி சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகப் போராடி தமிழர்களைப் பாதுகாப்பது? என்ற கேள்விகள் எம்மைப் பேசவிடாது தடுத்தன!.

சொன்னது

30 வருட பகைமையும் யுத்தமும் தமிழ் பேசும் வடக்குக் கிழக்குப் பகுதியை பேரழிவுக்கு உள்ளாக்கியது, தமிழ் மக்களைக் கதியற்றவர்களாக்கியது, பாதுகாப்புத் தேடி ஏனைய நாடுகளுக்கு தப்பிச் செல்ல வைத்த்து, நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்தது, கொல்லப்பட்டது, அவயவங்களை இழந்தும் கடுமையான காயங்களுக்குள்ளாகியும் உள அழுத்தங்களுக்கும் ஒழுங்கீனங்களுக்கும் உள்ளாகியது, வீடற்றவர்களாக்கியது, தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டது ஆகிய பல சொல்லொணா அவலங்கள் நடந்தேறிவிட்டன.

சொல்லாதது

நாம் புள்ளி விபரங்களுடன் கூறும் இத்தைகைய அவலங்களையும் எம்மால் தடுத்து நிறுத்துவதற்கு வக்கில்லாதவர்களாக—ஆனால் தொடர்ந்தும் பெரும்பான்மையான தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக—பாராளுமன்றத்தில் வலம் வந்தோம், வருகின்றோம், உங்கள் ஆதரவுடன் தொடர்ந்தும் வலம் வருவோம்

இந்த அவலங்கள் ஏற்படுவது நிச்சயம் எனக் கூறிவந்தவர்களை தமிழினத் துரோகிகள் என வரையறுத்தபோது, நாமும் தமிழினத் துரோகிகளாக விரும்பாது இருந்தமை,

தமிழர்களின் நாடி பிடித்து எமது அரசியல் நகர்வுகளை  மேற்கொண்டமை—அவை தமிழர்களின் நீண்ட கால நலனுக்கு விரோதமானவை எனினும்–எமது சாமர்த்தியங்களுக்குச் சான்றாகும்.

சொன்னது

தமிழ் மக்கள் ஒரு தனிச் சிறப்பு மிக்க தேசியம்”, “தனிச் சிறப்புமிக்கதொரு மக்கள் கூட்டம்”, “சுய நிர்ணய உரிமை”, “உள்ளக சுய நிர்ணய உரிமை”, “சமாதான சகவாழ்வு”, “இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு அரசிடம் இல்லை”, “யதேச்சாதிகார அரசிற்கு விடுக்கும் ஒரு அடிப்படை ஜனநாயக சவாலில்தான் எமது அரசியல் சித்தாந்தம் வேரூன்றி நிற்கின்றது”, “தமிழ் மக்களின் தேவைகளிலும் வேணவாக்களிலுமே எமது நீதிக்கும் சமத்துவத்திற்குமான அரசியல் நிகழ்ச்சித் திட்டம் வேரூன்றி இருக்கிறது”–ஆகியவை த.தே.கூ கருதுகின்ற கோட்பாடுகளாகும்

சொல்லாதது

இவ்வார்த்தைகள் நாம் மேடைகளில் முழங்குவதற்கு வசதியான சொற்பதங்களாகும். மற்றும்படி அவற்றின் வரைவிலக்கணம் பற்றி எங்களுக்குத் தெரியாது.

அதனால்தான்,You tube வானொலி ஒன்றில் வடக்கு மாகாணத் தேர்தலில் எமது முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் உயர்நீதிபதி விக்னேஸ்வரனுடனான சமீபத்திய நேர்காணலில், இவை சம்பந்தமான அவரது நிலைப்பாடு பற்றி கேட்கப்பட்டபோது “எனக்குத் தெரியாது” என்று நேரடியாகவே தெரிவித்தார்.

பல அரசியல் தத்துவங்களை உள்ளடங்கிய  இந்த சொற்பதங்கள் சாதாரண  மக்களுக்கு விளங்காது.

எமது விஞ்ஞாபனத்தில் வரும் இந்த வரிகளை ஏதோ TNAக்கு மிகந்த அரசியல் ஞானம் உண்டென்று மனதில் கொண்டு, அவற்றை  விலக்கிப் படிப்பது தமிழர்களின் உயரிய பண்பு என சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்கள் வரித்துக் கொள்ளும்.

மேலும், இத்தகைய வரிகள் பலவற்றை இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் பல தமிழ்மக்களுக்கு மிகுந்த உவப்பை அளிக்கும் என்பதால்,  பல தேர்தல்களில் நாம் பெற்ற மிகுந்த அனுபவம், மிகுந்த ஆராய்ச்சி, மற்றும் மிகுந்த சிந்தனையின் பின்னர் இவற்றை உள்ளடக்கியிருக்கிறோம்.

நீங்கள் எந்த அர்த்தத்தில் இவற்றைக் கொள்கிறீர்களோ அதே அர்த்த்த்தை நாமும் கொள்கிறோம் என்பதற்கு உத்தரவாதம் வழங்குகிறோம்.

என்றாலும் ஒன்றை மட்டும் வலியுறுத்திக் கூற விழைகிறோம்- இவற்றின் அடிப்படையிலேயே ஒரு அரசியல் தீர்வை சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தந்தாக வேண்டும் என்பதில் நாம் அசைக்க முடியாத பற்றுறுதியுடன் இருக்கிறோம்.

சொன்னது

வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள், காணி, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூக பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள், எமது மக்களின் தற்போதைய உடனடி கவலைகளைத் தீர்த்து வைத்தல், ஐநா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்தல், இராணுவப் பிரசன்னம், உயர் பாதுகாப்பு வலயங்கள், 1983 இல் நிலவிய யுத்தத்திற்கு முந்திய சூழ்நிலை மீண்டும் ஏற்படுத்துதல், மீள்குடியேற்றம், வீடுகள் வழங்கப்படல், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விடுதலை, நட்டஈடு வழங்கப்படல், வேலை வாய்ப்பை உருவாக்குதல், யுத்தம் விட்டுச் சென்றுள்ள விதவைகள், உயர் பாதுகாப்பு வலயங்கள், மீள் குடியேற்றம், காணிகள் அபகரிப்பு, தொழில் இன்மை இவையே தமிழ்மக்களின் பிரச்னைகள், கவலைகள், தேவைகளாகும்.

–இவையே ததேகூ வின் முன்னுரிமைகளாக அமையும்.

சொல்லாதது

என்னென்ன தமிழ்மக்களின் பிரச்னைகள், கவலைகள், தேவைகள் என்று ஒவ்வொரு தேர்தல்களிலும் பட்டியல் போடுவதும், அனைத்துத் தேர்தல்களில் பெரும்பான்மையாகப் பிரதிநிதித்துவம் பெற்று தமிழ்மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவதுமே எமது முன்னுரிமைகளாக அமையும்.

அவற்றை எப்படி அடைவோம் என்பதைத் தெளிவாக்குவதோ, அவற்றிற்கான எமது செயற்பாடுகளைப் பட்டியல் இடுவதோ எமது முன்னுரிமைகள் அல்ல.

மேலும், எமது முயற்சிகளையும் செயற்பாடுகளையும் நாம் பகிரங்கப்படுத்த முடியாது. எமது பிரச்னைகளை, கவலைகளை எப்படிச் சிங்கள அரசாங்கங்கள் தீர்க்கப் போகின்றன, நாம் வேண்டுவதை எப்படிச் சிங்கள அரசாங்கங்கள் தரப் போகின்றன என்பதை அவர்களே சொல்ல வேண்டும். அவற்றைத் தமிழர்கள் பெறும்வரை தமிழ்மக்கள் எமக்கு வாக்களிக்க வேண்டும்.

 

சொன்னது

நாட்டை விட்டு தப்பியோடிய தமிழர்கள் தமது வீடுகளுக்கு திரும்பி வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்பதோடு, அவர்கள் திரும்பி வருவதற்கு உகந்ததோர் சூழ்நிலை உருவாக்கப்படவும் வேண்டும்.

சொல்லாதது

அவர்களில் மிகப் பெரும்பான்மையோரோ, அவர்களது சந்த்தியினரோ திரும்பவும் இலங்கை வந்து நிரந்தரமாகத் தங்கப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனாலும, அனைத்துத் தமிழரையும் வெறும் வார்த்தைகளால் திருப்திப்படுத்துவதே எமது விஞ்ஞாபனத்தின் சாராம்சமும் குறிக்கோளும் எனபதால், இதனையும் இந்த விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவது அவசியமாகிறது.

சொன்னது

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியமை பற்றிய இலங்கை அரசாங்கத்துக்கும் தஈவிபு களுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படல் வேண்டும்.

சொல்லாதது

இந்த வரிகளில் வரும் “தஈவிபு களுக்கும்” என்ற வார்த்தைகளை விரும்பாதோர்— குறிப்பாகப் புலம்பெயர்ந்தோர்– அதனை ஒரு அச்சுப் பிழையாகக் கருதி அவற்றை விலக்கி விஞ்ஞாபனத்தை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

சொன்னது

வடக்குக் கிழக்கின் அபிவிருத்திக்கான விரிவானதொரு நிகழ்சித் திட்டம் இலங்கை அரசாங்கத்தினதும் புலம் பெயர்ந்த தமிழர்களதும் சர்வதேச சமூகத்தினதும் முனைப்பான ஆதரவுடன் மேற்கொள்ளப்படும்.

சொல்லாதது

இந்த விஞ்ஞாபனம் வடக்குத் தேர்தல் சம்பந்தமானது, கிழக்கில் நாம் ஆட்சியில் இல்லாத நிலையில் அம்மாகாணம் பற்றிய பிரஸ்தாபம் சம்பந்மில்லாதது என்று இந்த விஞ்ஞாபனத்தை ஆழ்ந்து படிப்பவர்கள் சிலர் நினைத்தால் –அப்படிப் படிப்பவர்கள் அநேகர் இருக்கமாட்டாகள்தான் என்பதுதான் எமது நம்பிக்கையெனினும்– கிழக்கிலும் அரசாங்கம் அமைக்கும் எமது உரிமையை வலியுறுத்தவே நாம் கிழக்கு என்பதையும் உள்ளடக்கியுள்ளோம்.

மேலும், இலங்கை அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாடு காணாமல் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு எப்படிக் கிடைக்கும் என்று கேட்பவர்களுக்கு நாம் கூற விரும்புவது என்னவென்றால், நிதி, பணம், எமது ஊதியம், சம்பளம், வாகனம், தனிப்பட்ட முறையில் பின்கதவால் நாம் பெறும் உதவிகள், சலுகைகள் அனைத்தும் நாம் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன்தான் பெறமுடியும் என்பது எமது நடைமுறை அனுபவம் என்பதையும், இது விளங்காதவர்கள் கேட்கும் விசர்க் கேள்வி என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

சொன்னது

கண்ணியத்துடனும் சுய மரியாதையுடனும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் சமத்துவமான பிரசைகளாக ஏனைய மக்களுடன் தொடர்ந்து சமாதான சகவாழ்வு வாழவே விரும்புகிறோம்.

சொல்லாதது

சிங்கள அரசாங்கம் எங்களுக்கு ஒன்றையுமே என்றுமே தராது, மறுபடியும் ஆயுதப் போராட்டம் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் வரலாம், தனித்தமிழ் ஈழக் கோரிக்கையை நாம் கைவிடவில்லை என அவ்ப்போது நாம் பேசுவதெல்லாம் ஏனைய மக்களுடன் தொடர்ந்து சமாதான சகவாழ்வு வாழவே விரும்புகிறோம் என்ற எமது வேணவாவை சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவே என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

சொன்னது

தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகள் திருப்தியற்றவையாக அமைந்துள்ளன.இந்தக் கண்ணோட்டத்தில்தான் நாங்கள் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலை நோக்குகின்றோம்.

சொல்லாதது

அரசியல் அமைப்பு முறைமையை மாற்றி அமைப்பதற்கு மூன்றில் இரண்டு பங்கு வேண்டும், அதனை எப்படிப் பெறப் போகிறீர்கள் என்று யாராவது கேட்பார்களானால் அதற்குப் பகிரங்கமாகப் பதிலளிக்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம் என்று மட்டும் எம்மால் இப்பொழுது இயம்ப முடியும்.

இப்படிக் கேட்க முனைபவர்கள், சிங்கள அரசாங்கத்தின் கைக்கூலிகள் ஒட்டுப்படையினர் என்பதையும் இங்கு கூறி வைக்க விரும்புகிறோம்.

வடக்குமாகாணசபைத் தேர்தலில் பெரும்பான்மையாக நாம் தேர்ந்தெடுக்கபபடும் போது, தமிழர்களின் ஒற்றுமையையின் வீச்சையும் வீரியத்தையும் கண்டு சிங்கள மக்கள் அஞ்சி, எமக்குத் திருப்தியற்ற இந்த அரசியலமைப்பை மாற்றுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதையும் மேலதிகமாக இங்கு உங்களுக்கு கூறி வைக்க விரும்புகிறோம்.

சொன்னது

ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான எமது காத்திரபூர்வமான அரசியல் பேச்சு வார்த்தைகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.

இம் மாகாணத்தில் நிலவும் நீண்ட கால முதலீடு மற்றும் உதவி பிரச்சனைகளை தீர்த்துவைக்க ததேகூ இலங்கை அரசுடனும் சர்வதேச சமூகத்துடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் இணைந்து செயற்படும்.

சொல்லாதது

பேச்சு வார்த்தைகளை நாம் தொடர்ந்து முன்னடுப்பதற்கு, மற்றைய தரப்பினரான  இலங்கை அரசாங்கம், பெரும்பான்மை மக்களான சிங்கள மக்கள், இதர  முஸலிம் சமூகம் ஆகியவைமீது வசைகள் பாடியும், நல்லுறவை வளர்க்காமலும், இணக்கப்பாட்டை ஏற்படுத்தாலும் எப்படி பேச்சு வாரத்தைகளை முன்னெடுப்பது?  இன்றைய யதாரத்தத்தில் நாம் வேண்டும் அரசியல் தீர்வு குறிப்பாக என்ன என்பதைத் தெட்டத் தெளிவாகவும், பகிங்கிரமாகவும், தெரிவிக்காமலும, தேசியம், சுயநிர்ணய உரிமை, ஈழம் என்று மற்றைய தரப்பினருக்குப் பூச்சாண்ட்டி காட்டிக் கொண்டும் பேச்சுவார்த்தைகளை எப்படி முன்னெடுக்க முடியும்?

என்ற ஐயப்பாடுகள் கொண்டவர்கள், எமது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குபவர்கள் சிங்கள மக்களின் சிநேகிதர்கள், அவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்குத் துணை போகிறவர்கள், தமிழினத் துரோகிகள் என்பதை மட்டும் தமிழ் மக்கள் எப்பொழுதும் மறந்திடாது நினைவில் வைத்திருக்க வேண்டும்.

மேலும், பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என நாம் குறிப்பிடுவது, மகிந்த ராஜபக்ச அரசுடனும், அமைச்சர்கள், அதிகாரிகளுடனும் நாம் தனிப்பட்ட முறையில் சொந்த வாழ்க்கை சம்பந்தமான சலுகைகள் பற்றி சந்தித்துப் பேசுவதையும் குறிப்பிடுகிறோம். அதனை நாம் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருப்பதால் தேர்தலில் அமோகமாக நாம் வென்றால், இத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு தமிழர்களால் தரப்பட்ட ஆணை எனக் கொள்வோம்.

சொன்னது

வடக்கு கிழக்குப் பகுதிகள் மூன்று தசாப்த கால ஆயுத மோதலினால் நொந்து போயுள்ளது.

சொல்லாதது

எனினும் அரசியல் தீர்வைச் சிங்களம் தராவிட்டால் ஆயதப் போராடம் தவிர்க்க முடியாது என்றும் வீறாப்பு வசனங்களைப் பேசியும், உசுப்பேத்தியும் அரசியலைத் தொடர்ந்து நடாத்துவோம்.

சொன்னது

படையினரின் ஒழுக்கமற்ற நடத்தை, வேண்டுமென்றே குடிமக்களை குறி வைத்துத் தாக்கியமை மற்றும் கண்ணி வெடிகளை புதைத்தமை மட்டுமன்றி, பட்டினி, பலவந்தமாக குடியகலச் செய்தமை மற்றும் வடக்கு கிழக்கின் பொருளாதார மற்றம் நிர்வாகக் கட்டமைப்புக்களின் சீரழிவினால் ஏற்பட்ட அரசாங்க சேவைகளின் வீழ்ச்சி ஆகியவற்றினாலும் மனித இழப்புகள் ஏற்பட்டன.

சொல்லாதது

படையினர் என்பதுடன் “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தினர்” என்ற வார்த்தைகளையும் சேர்த்து வாசிக்கவும்.

சொன்னது

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்சியையும் நலச் செழிப்பையும் பெற்றுக் கொள்வதில் புலம்பெயர் தமிழர்கள் ஒரு முக்கிய அம்சமாகும். எனவே, அபிவிருத்தித் துறையில் மட்டுமன்றி, நீதியானதும் நடைமுறைச் சாத்தியமானதும் நீடித்து நிலைக்கக்கூடியதுமான ஓர் அரசியல் தீர்வை காண்பதற்கான எமது தாகத்திலும் அவர்களது பெறுமதி மிக்க உதவியையும் நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொள்வோம்.

சொல்லாதது

இப்படியான வார்த்தைகளின் மூலம் புலம்பெயர்நத தமிழ் மக்களைக் குஷிப்படுதிக் கொண்டு வருவோம். அவ்வப்போது அவர்களிடம் பணஉதவிகள் பெற்று வருவோம்.

சொன்னது

இலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்களுக்குமான நீதியும் நிரந்தர சமாதானத்தின் மூலம் அடையப்பெறும் உண்மையான நல்லிணக்கமும் சர்வதேச அனுசரணையின் கீழேயே அடையப் பெறலாம் என்ற உறுதியான கருத்தை ததேகூ கொண்டுள்ளது.

சொல்லாதது

தேர்தல்களில் நாம் வெல்வதைத் தவிர, இப்பொழுது தமிழ் மக்களின்  பிரச்னைகளை சர்வதேச சமூகத்திற்குக் கையளித்து விட்டோம். அதனால், தமிழ்மக்களின் பல்வேறு பிரச்னைகளின் தீர்வுகளுக்காக  TNA உள்ளூரில் என்ன காத்திரமானதும், தீர்க்கமானதுமான நடவடிக்கைகள் எடுக்கிறது என்பதை யாரும் கேட்கப்படாது.

சரவதேச அரசுகள் தங்கள் பூகோள அரசியல் பொருளாதார பாதுகாப்பு நலன்களை முன்னெடுப்பதற்கு மகிந்த ராஜபக்சா அரசின் சீனா, இரான், பாகிஸ்தான் சார்பு நிலை தடையாக இருந்து. அதனால் அவர்களுக்கு ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் தற்போது இருக்கும் பலவீன நிலையில் மாற்று ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்ற முடிவினால், இப்பொழுது சர்வதேச அரசாங்கங்கள்  மகிந்த ராஜபக்ச ஆட்சியைப் பேணிக்கொண்டே தமது நிகழ்ச்சி நிரல்களை முன்னடுக்கலாம் என்ற முடிவால் தமிழ்மக்களின் பிரச்னைகள் ஒரு பகடைக்காயாக மட்டுமே பாவிக்கப்படுகின்றன. இது எங்களுக்குத் தெரியும். எமது அரசியல் வங்குரோத்துத்தனத்தையும், கையாலாகத்தனத்தையும் சுயநலன்களையும் மறைக்க சர்வதேச சமூகத்தின் தற்போதைய வகிபாகம் எமக்குத் தீர்வுகளைப் பெற்றுத் தரும் என்ற மாயையை ஏற்படுத்தி, எமது அரசியலை நடாத்துவது எமக்கு அவசியமாகிறது. அத்துடன் தமிழ்மக்களின் தொடரும் கனவுகளைக் கலைக்க விரும்பாத நல்லவர்கள் நாம் என்பதையும் நினைவுறுத்த விரும்பகிறோம்.

சொன்னது

ஒரு மக்கள் கூட்டமென்ற வகையில் எமக்கேயுரிய தனித்துவத்தை பேணுகின்ற அதேவேளை, எமது மக்களின் வாழ்க்கை மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும். ஒரு மக்கள் கூட்டமென்ற வகையில் எமது அரசியல் உரிமைகளையும் நாம் மீட்டெடுக்க வேண்டும். எனவே, இலங்கைத் தமிழரசு கட்சி என்ற பெயரின் கீழ் அதன் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து இத் தேர்தலில் தமது உறுதியை எடுத்துக்காட்ட தைரியத்துடன் எழுந்து நிற்குமாறு தமிழ் பேசும் மக்களிடம் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

சொல்லாதது

புண்களைக் காட்டிப் பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பவர்கள்போல்தான் நாமும். எமக்கு அளிக்கும் உங்களது வாக்குகள் தமிழர்களின் இந்த அவலங்கள் அனைத்தும் தீராதிருக்கவும், மேலும் அதிகரிக்கவும் உதவும்.

அவற்றையே நாம் எல்லாத் தேர்தல்களிலும் முன்வைக்க, தமிழ்மக்கள் தைரியத்துடன் (வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்களிக்க இடவசதிகள் இல்லாமையினால்) எழுந்து நின்று எமக்கு வாக்களித்து வெல்ல வைப்பார்கள், எமது பிழைப்பு தடையில்லாது  தொடரும் என்பது எமது திட நம்பிக்கை!.–இதனை இந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலும் நிரூபிக்கும்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com