Contact us at: sooddram@gmail.com

 

விக்னேஸ்வரன் ஜனாதிபதியை சந்திப்பது பிரச்சினையை தீர்க்க நல்ல அறிகுறியாகும்

நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்கள் ஆகக்குறைந்த வன்முறைகளுடன் மிகவும் அமைதி யான முறையில் நடைபெற்றது. தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த மைக்காக நாம் முதலில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

தேசத் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் தன்னிகரற்ற தலைவர் என்பதை ஊர்ஜிதம் செய்யக்கூடிய வகையில் தேர்தல்கள் வெற்றிகரமாக முடிவடைந்தன. ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மத்திய மாகாணத்திலும், வடமேல் மாகாணத்திலும் வெற்றிவாகை சூடியதன் மூலம் ஐக்கியத் தேசியக்கட்சியும், ஜே.வி.பி.யும் இந்தத் தடவை தேர்தலிலும் வழமையாக நடைபெறுவதைப் போன்று மக்களால் ஓரங்கட்டப்பட்டன.

ஜனாதிபதி அவர்கள் தான் ஒரு கனவான் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் இந்த தேர்தல் பிரசாரத்தின் போது ஐக்கியத் தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தனிப்பட்ட வகையிலோ, கட்சியின் தலைவர் என்ற முறையிலோ எந்தவொரு கூட்டத்திலும் கண்டிக்காமல் அரசாங்கத்தின் சாதனைகளை பற்றியே மக்களுக்கு எடுத்துரைத்தார்.

ரணில் விக்கிரமசிங்கவோ அரசாங்கத்தின் குற்றங்குறைகளை எடுத்துக்காட்டு வதில் கவனம் செலுத்தினாரே ஒழிய, மக்கள் பிரச்சினைக்கு தனது கட்சி வெற்றிபெற்றால் என்ன செய்யும் என்பதை சொல்லத் தவறிவிட்டார். இதுவும் அவரது கட்சியின் தோல்விக்கு இன்னுமொரு காரணமாகும்.

வடமாகாணத்தில் அரசாங்கம் அமைதியான முறையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நாட்டில் வடமாகாணசபைத் தேர்தல் நடை பெறுமா என்று சிந்திக்க முடியாத அளவுக்கு வடமாகாணம் யுத்தத்தினால் சீர்குலைந்து போயிருந்தது.

2009ம் ஆண்டு மே மாதத்தில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பின்னர் வடமாகாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் ஏககாலத்தில் கண்ணிவெடிகளை அகற்றுதல், உட்கட்டமைப்பு வசதிகளை செய்தல், அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பலதரப் பட்ட நற்பணிகளை அரசாங்கம் வெற்றிகரமாக நாலாண்டுகளுக்குள் நடத்தியத னால் இன்று வடமாகாணம் வளம்பொருந்திய ஒரு பிரதேசமாக மாறியிருக்கிறது.

சுமார் 30 ஆண்டுகாலம் வாக்குரிமை அளிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்த வடமாகாண மக்களுக்கு மனித உரிமை சாசனத்தில் முதலிடம் பெறும் வாக்குரிமையை பயன்படுத்தும் வாய்ப்பையும் ஜனா திபதி அவர்கள் இந்தத் தேர்தலின் போது பெற்றுக் கொடுத்தார்.

வடமாகாணசபைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது இன்றைய அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியென்று அரசியல் விமர்சகர்கள் பாராட்டுத் தெரிவிக்கிறார்கள்.

இராணுவத்தினர் மூலம் தேர்தலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும், மக்கள் அச்ச மின்றி வாக்களிக்க இடமிருக்காது என்றெல்லாம் தேர்தலுக்கு முன்னர் போலிப் பிரசாரங்கள் செய்யப்பட்ட போதிலும், தேர்தலன்று மக்கள் சுதந்திரப் பறவைகளாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தார்கள். இதனால்தான் வடமாகாணத்தில் 68 சதவீதமான வாக்குகள் பதிவாகின.

இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக போட்டியிட்டு 132,255 விருப்பு வாக்குகளுடன் வெற்றியீட்டி, முதலமைச்சர் பதவியை பொறுப் பேற்கவிருக்கும் திரு. சீ.வி.விக்னேஸ்வரன் ஒரு கல்விமான். அவர் சட்ட த்திற்கும் நீதிக்கும் முதலிடம் அளிக்கும் ஒரு நீதியரசர் என்ற முறையில், தனது பிரதேச மக்களின் நல்வாழ்வுக்கான நல்ல முடிவுகளை எடுத்து அரசாங்கம் கடந்த நான்காண்டுகளாக மேற்கொண்டு வந்த வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தை சிறப்பான முறையில் நடைமுறைப்படு த்துவார் என்று நம்புகிறோம்.

ஜனாதிபதி அவர்களை நான் சந்தித்து பேசத்தயாராக இருக்கிறேன் என்று திரு.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கும் கருத்து உண்மையிலேயே பாராட் டப்பட வேண்டியதாகும். எதிர்ப்பு அரசியலை நடத்தாமல் இணக்கப்பாட்டு அரசியலின் மூலமே நல்லெண்ணத்தை வலுப்படுத்தி, வடபகுதியின் வளர்ச்சிக்கு உதவ முடியுமென்ற திரு.விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டின் காரணமாகவே ஜனாதிபதியை சந்தித்து பேசவிரும்புவதாக கூறியிருக்கிறார் என்று அரசியல் அவதானிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வடமாகாண மக்களின் தீர்ப்புக்கு நாம் மதிப்பளிக்கிறோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப் பாளருமான திரு. பசில் ராஜபக்ஷவும் அறிவித்திருக்கிறார். புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் தேர்தலை இலக்காக வைத்து மேற் கொள்ளப்பட்ட வேலைத்திட்டமல்ல. அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற் பாடுகளின் ஒரு பகுதியாகவே வடக்கின் வசந்தத்தை நடைமுறைப்படுத்தி னோம் என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

நம்நாட்டுப் பிரச்சினைகளை இனிமேல் வடமாகாணசபைக்கு தெரிவு செய்யப் பட்ட முதலமைச்சரும் அவரது கட்சியும் ஜனாதிபதி அவர்களுடன் பேசி சுமுகமான தீர்வுகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியும், பொருளாதார முன்னேற்றமும் இனங்களிடையே நல்லி ணக்கப்பாடும் வலுப்பெறும் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி, வைகோ போன்ற இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தூபமிட்டு, தமிழ்நாட்டில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் வேடதாரிகளை நம்பி வடமாகாணத்தின் தமிழரசுக்கட்சித் தலைவர்கள் மீண்டும் ஏமாந்து போகலாகாது.

அவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைத் தமிழர்களுக்கு எவ்வித உதவிகளையும் மனதார செய்யமாட்டார்கள். அவர்கள் எப்போதும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை வைத்துக் கொண்டு அரசியல் இலாபமீட்டும் முயற்சிகளிலேயே ஈடுபடுகிறார்கள் என்பதை நம்நாட்டு தமிழ்த் தலைவர்கள் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com