Contact us at: sooddram@gmail.com

 

வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன்

அடுத்து ஆடப் போகிறார், ஓங்கி அடித்து!!

இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அக் கூட்டணியின் பிரதான வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன், வடக்கு மாகாணத்தின் முதல்வராக போகிறார். அடுத்து என்ன? இனித்தான் இருக்கிறது திருவிழா! தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மக்களுக்கு காட்டிய அரசியல்வாதிகளில் இருந்து விக்னேஸ்வரன் வித்தியாசமாக இருப்பது, கூட்டமைப்பு இதுவரை செய்துவந்த அரசியலில் இருந்து வேறுபட்டு இருக்கப்போகிறது. அதை இதுவரை காலமும் தமிழ் தேசிய அரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. சகித்துக்கொள்வது நல்லது. தேர்தலில் ஜெயித்து 24 மணி நேரம் முடிவதற்கு முன்னரே விக்னேஸ்வரன், “இலங்கை அரசுடன் இணக்கமாக முறையில் செயல்பட்டு ஆட்சி செய்வோம்என்றார்.

தமிழ் தேசிய அரசியலில் இது கெட்ட வார்த்தை!

போதும் போதாதற்கு, இலங்கை அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷே, “வடக்கில் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அரசு தயாராக இருக்கின்றதுஎன்று தெரிவித்தார். “இலங்கை அரசுடன் இணக்கமாக செயல்பட்டு ஆட்சி செய்வோம்என்பதுதான், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதையும்கூட. டக்ளஸ் தேவானந்தா கூறியதற்கு காச்மூச் என்று கூச்சலிட்டவர்களின் காதுகளில், இப்போது வந்து பாய்ந்திருக்கிறது, விக்கினேஸ்வரனின்இணக்க அரசியல்ஸ்டேட்மென்ட். விக்கினேஸ்வரனின்இணக்க அரசியல்பாணியை, இதுவரை காலமும் தமிழ் தேசிய அரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால் சகித்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், சகித்துக் கொள்வது நல்லது.

யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு ஜெயித்துள்ள விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் பிறந்தவரல்ல. கொழும்பு ஹல்ஸ்ட்ரோஃப்பில் பிறந்தவர். தனது வாழ்வின் முதல் 9 ஆண்டுகளையும், சிங்கள பகுதியான குருணாகலவில் வசித்தவர். அதன்பின், வசித்தது, மற்றொரு சிங்கள நகரமான அனுராதபுர. கல்வி கற்றது, கொழும்பு ராயல் கல்லூரி. தேர்தலுக்கு முன்புவரை கொழும்புவில் முழுமையான சிங்கள வி.ஐ.பி.களுடனும், அரசியல் தலைவர்களுடனும் மிங்கிள் பண்ணி வாழ்ந்தவர். 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளை யுத்தத்தில் அழித்ததற்காக இலங்கை அரசு நடத்திய வெற்றி விழா கொண்டாட்டங்களில் அரசு வி.ஐ.பி.களுடன் கலந்து கொண்டவர், விக்கினேஸ்வரன்.

புலிகளை அழித்ததை வெற்றி விழாவாக கொண்டாடுகிறார்களேஎன தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வெளிநாட்டு தமிழர்களின் மேடைகளில் கண்கள் சிவக்க முழங்கிக் கொண்டிருந்த நேரத்தில், விக்கினேஸ்வரன் அரசியலுக்கே வரவில்லை. அப்போதுகண் சிவந்ததமிழ் எம்.பி.க்கள் இப்போது விக்கினேஸ்வரனுக்குமண் சிவக்கசிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதில் பிசி. இதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. இதையெல்லாம், இதுவரை காலமும் தமிழ் தேசிய அரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், சகித்துக்கொள்வது நல்லது.

கடந்த ஆண்டு, “இலங்கை கல்லூரி ஒன்றின் கால்பந்து டீம் வீரர்களுக்கு தமிழகத்தில் விளையாட அனுமதி இல்லை. அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும்என்று உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவர்களுக்கு விளையாட அனுமதி அளித்த நேரு விளையாட்டரங்க அதிகாரியை சஸ்பெண்ட் செய்தார். அதற்கு, என்ன காரணமாம்? இலங்கை கல்லூரி கால்பந்து டீம் வீரர்கள் துப்பாக்கி எடுத்து தமிழர்களை சுட்டுக் கொன்றார்களா? அல்லது தமிழக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா? இல்லை! இலங்கையின் சிங்கள பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இருந்து வந்த கால்பந்து அணியாம் அது! ஆமா சார்.. புரட்சித் தலைவி புறமுதுகோட வைத்த இலங்கை மாணவர் கால்பந்து அணி, எந்தக் கல்லூரியை சேர்ந்த அணி என்பது எத்தனை பேருக்கு தெரியும்? கொழும்பு ராயல் கல்லூரி! நாசமாப் போச்சு! விக்கினேஸ்வரன் கல்வி பயின்ற, அதே ராயல் கல்லூரி!”

மிழகத்துக்கு புனித யாத்திரை வந்த சிங்களர்களை, சீறும் சிங்கங்களாய் களத்தில் நின்று சிதறடித்து, பெண்கள், குழந்தைகள் உட்பட ஓட ஓட விரட்டி, தமிழர் தன்மானம் காத்து சரித்திரத்தில் பெயர்பெற்றார்கள், சீமான் படையணி, வைகோ படையணி உட்பட இன ஆர்வலர்கள். சிதறியோடிய சிங்கள பெண்களும் குழந்தைகளும் யார்? இலங்கை யுத்தத்தில் துப்பாக்கி துடைத்தார்களா? தோட்டா நிரப்பினார்களா? அல்லது அங்கு போர் புரிந்த சிங்கள ராணுவ வீரர்களுக்கு மஞ்சள் அரைத்து பணி புரிந்தார்களா? இல்லையாம்! அவர்கள் சிங்களர்களாம்! அதனாலேயே விரட்டி அடிக்கப்பட்டார்களாம்!

விக்கினேஸ்வரனின் இரு மகன்களும் திருமணம் செய்திருப்பது, இரு சிங்கள பெண்களை. ஒரு மருமகள், இலங்கை அரசின் தற்போதைய அமைச்சர், வாசுதேவ நாணயக்காரவின் மகள். மற்றைய மருமகள், முன்னாள் எம்.பி. கேசரலால் குணசேகரவின் சகோதரர் மகள். இருவரும் பாரம்பரிய சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள். ஆமாண்ணே.. இலங்கை தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனின் இரு மருமகள்களும் தமிழகம் வந்தால், என்னாகும்? இதையெல்லாம், இதுவரை சிங்களர்களுக்கு எதிராக தமிழகத்தில் வாள்வீசி பழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், சகித்துக்கொள்வது நல்லது.

வடக்கு மாகாண தேர்தல் முடிவு பற்றி, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே என்ன சொல்கிறார்? “வடக்கில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். வடக்கில் முதலமைச்சராக விக்னேஸ்வரன் வருவது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம், என்னதான் தமிழராக இருந்தாலும் அவர், தென் பகுதியில் சிங்களர்களுடன் ஒன்றாக, ஒரே குடும்பமாக வாழ்ந்து வருபவர். வடக்கு மாகாணத்தை ஆட்சி செய்ய போகிற அவர், எனது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் கேசரலால் குணசேகர ஆகியோரின் உறவினர். ஒரு விதத்தில், எனக்கும் அவர் தூரத்துச் சொந்தம்என்கிறார், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே. என்ன சோதனை இது சரவணா? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே வீட்டில் விருந்துண்ண சென்றாலே, ‘ஒட்டுக்குழுஎன்று முழங்கும் தமிழ் தேசிய அரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால், இந்தகூட்டுக் குடும்பத்தைசகித்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், சகித்துக்கொள்வது நல்லது.

இலங்கையில், 1970களில் இருந்து நடந்த தமிழ் தேசிய அரசியல், விக்கினேஸ்வரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், வரவேற்கத்தக்க மாற்றத்தை சந்தித்துள்ளது. இலங்கை அரசுடன் விரோதப் போக்கை வளர்த்துக்கொண்டு அரசியல் செய்து, ஓட்டு பெறுவதே 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த அரசியல் ட்ரென்ட். விக்கினேஸ்வரன் அப்படிப்பட்ட அரசியல் செய்பவர் அல்ல என்று நாம் இப்போது சொன்னால், நீங்கள் நம்ப தயங்கலாம். ஆனால், அதைத்தான் விரைவில் காணப் போகிறீர்கள்.எதை எடுத்தாலும் இலங்கை அரசுடன் மோதிக் கொள்வது ட்ரென்ட்டில் இருந்து முதல் தடவையாக விலகி அரசியல் செய்யும் ஒருவர், வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் ஆவது, வரவேற்கத்தக்க மாற்றம்.

தமது எண்ணங்களை பேட்டிகளில் வெளிப்படையாக சொல்லும் நபராக உள்ளார் முதல்வர் விக்கினேஸ்வரன். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும்என்று வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள கூடாது என்று கூறும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு அது கசப்பாக இருக்கும்.

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சனை, ஒரு குடும்பத்தின் கணவருக்கும் மனைவிக்குமான பிரச்சனை போன்றது, அதில் பக்கத்து வீட்டார் தலையிடக்கூடாது, நாங்கள் அடித்துக்கொள்வோம், பிறகு கூடிக்கொள்வோம்என்றும் கூறினார் விக்னேஸ்வரன்.(இதே கூற்றைத்தான் தேசியத் தலைவர் பிரபாகரனும் பிரேமதாஸாவுடன் உறவு கொண்டபோது கூறினார் என்பது மேலதிக் தகவல்)

அந்த கூற்று பெரிதாக விமர்சிக்கப்படவே, அதற்கு விளக்கம் கொடுத்த விக்கினேஸ்வரன், “தமிழ்சிங்கள பிரச்சினையை கணவன்மனைவி உறவு என்று நான் சொல்லவில்லை. மாறாக தமிழீழம் தொடர்பாக தமிழகத்தில் இருந்து எழும் குரல்கள், ‘மணவிலக்குசெய்யும்படி நிர்ப்பந்திக்கின்றன என்றுதான் வர்ணித்தேன்என்றார்.

ஆகா.. நம்ம எதிர்ப்பு கண்டு பயந்து, கவிழ்ந்து விட்டார் விக்கினேஸ்வரன்என குதூகலித்தார்கள் சிலர்.

விக்னேஸ்வரன் யாரு? இலங்கையின் திறமைசாலி வக்கீல்களில் ஒருவர். தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர்கள் எட்டடி பாய்ந்தால், அவர் பதினாறு அடி பாய மாட்டாரா? இவர்களுக்கு புரியாமலேயே அவர் பாய்ந்தே விட்டார் என்பதே சிறப்பு.

தமிழ்சிங்கள பிரச்சினை கணவன்மனைவி உறவு என்று சொல்லவில்லைஎன்றவர், “மணவிலக்குக்கு நிர்ப்பந்திக்கிறார்கள்என்றுதான் சொன்னேன் என்றாரே..

அந்த வார்த்தை ஜாலம் எத்தனை பேருக்கு புரிந்தது?

மணவிலக்குபெற வேண்டும் என்றால், இரு தரப்பும் எப்படி இருக்க வேண்டும்? ஆமாங்க.. கணவன்மனைவியாகஇருந்தால்தான், ‘மணவிலக்குபெற முடியும். இப்படி சொன்னாலும், அப்படிச் சொன்னாலும், ஒன்றுதான்.

அதை புரியாமல் குதூகலித்தவர்களை என்ன செய்வது?

சரியான நபர்தான், உரிய நேரத்தில் பதவிக்கு வந்திருக்கிறார். பதவிக்கு வரும் முன்னரே ஆட்டத்தை தொடங்கியவர், பதவியில் அமர்ந்தபின், அடித்து ஆடுவார்பொறுத்திருந்து பாருங்கள். அடிக்கும் அடியில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே பலருக்கு, ரத்த அழுத்தம் எகிறப் போகிறது!

(விறுவிறுப்பு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com