Contact us at: sooddram@gmail.com

 

ஏன் இந்தப் படுதோல்வி?

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 2005இல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், தேர்தல் ரீதியாகவும், அரசியல் ரீதியாக சந்தித்துள்ள மிகப்பெரிய தோல்வி இது. இப்படியொரு தோல்வி அரசாங்கத்துக்கு ஏற்படும் என்றோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தளவு பெரிய இமாலய வெற்றி கிடைக்கும் என்றோ எவரும் நினைத்திருக்கவில்லை. காரணம், வடக்கில் அரசாங்கத்தின் அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களால், அரசியல் ரீதியாக மக்கள் கவரப்படக் கூடும் என்ற கருத்து பரவலாக இருந்து வந்ததால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தளவு பெரிய வெற்றியை எவராலும் கணிக்க முடியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூட இதனை எதிர்பார்க்கவில்லை. அவர்கள், 30 ஆசனங்களை வென்றால், தமது குரலை உலகம் காது கொடுத்துக் கேட்கும் என்று பிரசாரங்களை செய்திருந்தனரே தவிர, எவரும் 30 ஆசனங்களை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவிக்கவில்லை.

 தேர்தல் காலத்தில் தொடர்ச்சியாக இருந்து வந்த இராணுவத் தலையீடுகள், அச்சமான சூழல், அரசாங்கத்தின் பிரசாரங்கள், அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் என்று பல்வேறு காரணங்களால், இந்தத் தேர்தலில் தாம் கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும் என்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் உறுதியாக நம்பினார்கள். அதனால், பிரசாரங்களில் கடுமையாக உழைக்க அவர்கள் தவறவில்லை. கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் அலை வீசியது என்று கூறமுடியாவிட்டாலும், கணிசமானவர்கள் கலந்து கொண்டனர். அதை வைத்துக் கூட வாக்களிப்பு எப்படியிருக்கும் என்று சரிவரக் கணிக்க முடியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்ற கருத்து பரவலாகவே இருந்தாலும், ஆளும்கட்சி கடும் போட்டியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாக்காளர்கள் மெளனமாக செய்த புரட்சி, கூட்டமைப்பை வெற்றியின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. சில ஆங்கில ஊடகங்கள் இதனை ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுனாமி என்று குறிப்பிட்டிருந்தன. தேர்தல்களில் சில கட்சிகளுக்கு ஆதரவாக அலை வீசுவதுண்டு. இது அதற்கும் அப்பால், பேரலையாக எழுந்ததால் தான், சுனாமி என்று குறிப்பிடப்பட்டது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில், இந்தளவுக்கு ஆசனங்களைப் பெறுவதும், வாக்குகளைக் கவர்வதும் அசாதாரணமான விடயங்கள். இலங்கைத் தேர்தல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான பதிவாக எப்போதும் பேசப்படும். இந்த வெற்றி எவ்வாறு சாத்தியமானது, கோடி கோடியாக கொட்டியும் ஏன் அரசாங்கம் தோற்றுப்போனதுஇந்தக் கேள்விகளுக்கு இப்போதும் பலர் விடைதேடிக் கொண்டிருக்கின்றனர்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து, அரசாங்கம் பெரும் மனக்கோட்டை கட்டியிருந்தது என்பதே உண்மை. அதனால் தான், அங்கு தனக்கான ஒரு வலுவான தளம் கட்டியெழுப்பப்படும் வரைக்கும் காத்திருந்தது. போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பின்னரும், வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததற்கு அதுவே காரணம். அபிவிருத்தித் திட்டங்களின் மூலமும், வேலைவாய்ப்புகள், சலுகைகள் மூலமும், அரசாங்கம் தனக்கானதொரு தளத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டு தான், இந்தத் தேர்தலில் மல்லுக்கட்டியது.

அதனால் தான், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், கிளிநொச்சிக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வடக்கிலுள்ள மக்களின் மனநிலையை தாம் சரியாக அறிந்து வைத்துள்ளதாகவும், குமார் பொன்னம்பலத்தை தோற்கடித்து விட்டு, ஹெக்டர் கொப்பேகடுவவை வெற்றிபெற வைத்தவர்கள் அவர்கள் என்று தப்பும் தவறுமான உதாரணத்தை காட்டியிருந்தார்.

தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக, ஊடக ஆசிரியர்களை சந்தித்த போது, வடக்கு மாகாணத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தனக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். வடக்கில் நடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டிருந்த மக்களைப் பார்த்து, அவர் மட்டுமல்ல, அரசதரப்பிலுள்ள எல்லோருமே புல்லரித்துப் போயினர். அதனால் தான், வடக்கில், தமக்குச் சாதகமான அலையே வீசுவதாக அரசதரப்பு அமைச்சர்கள் பலரும், கொழும்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி கூறிக் கொண்டிருந்தனர்.

ஆனால், அபிவிருத்தித் திட்டங்களும், அரசாங்கத்தின் கூட்டங்களில் கூடும் கூட்டமும், வாக்காளர்களின் முடிவுகளைத் தீர்மானிக்காது என்ற உண்மை, தேர்தலின் பின்னர் தான் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. வடக்கைப் பற்றியதமிழ் மக்களைப் பற்றிய அரசாங்கத்தின் எல்லாக் கணிப்புகளுமே தவறாகத் தான் முடிந்துள்ளது என்பது முக்கியமானது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், பிரபாகரனுடன் அவரது ஈழக்கனவும் செத்துப் போய் விட்டதாக மார்தட்டிக் கொண்டதும் இதே அரசாங்கம் தான். பின்னர், சில மாதங்களிலேயே, இன்னமும் நாட்டைப் பிரிக்க பலர் சதி செய்கிறார்கள் என்றும், ஈழக் கோரிக்கை சாகவில்லை என்றும் சான்றிதழ் கொடுத்ததும் இதே அரசாங்கம் தான். வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை முன்வைத்த போது நாட்டைப் பிரிக்க சதி செய்வதாக ஓலமிட்டதும் இதே அரசாங்கம் தான்.

போரை, போருக்கான அடிப்படைகளை, போருக்கு வலுச்சேர்த்த காரணங்களை அரசாங்கம் சரியாக கணித்திருந்தால், இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்காது. முப்பதாண்டு காலப் போரின் எல்லாக் காயங்களுமே, அபிவிருத்தி மாயைக்குள் அடக்கமாகி விடும் என்று போட்டதே முதலாவது தப்புக்கணக்கு. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன, அவர்களின் விருப்பங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முனையாமல், தான் வரைந்து வைத்த ஒரு வட்டத்துக்குள் அவர்களை இழுத்து வரலாம் என்று கருதியது அடுத்த தவறு.

இப்படியே பல தப்புக்கணக்குகளைப் போட்டுக் கொண்ட அரசாங்கம், வடக்கிலுள்ள தமிழர்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு, தம்மையே ஆதரிப்பார்கள் என்று கருதியது தான் உச்சக்கட்ட தவறு. அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, சலுகைகள் என்று எல்லாவற்றுக்கும் அப்பாலும், வடக்கிலுள்ள தமிழர்கள் தமக்கு அபிலாசைகள் உள்ளன என்பதை வெளிப்படுத்தக் காத்திருந்தார்கள். அதற்கான வாய்ப்பாக மாகாணசபைத் தேர்தலை அவர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர். அரசதரப்பில் போட்டியிட்ட கட்சிகள், வேட்பாளர்கள் பலரால், இப்படியொரு தோல்வியை நம்பவே முடியவில்லை. ஏனென்றால், அவர்களின் எதிர்பார்ப்பு மிகையானதாக இருந்தது.

நியாயமான தேர்தலை நடத்துவதாக உலகத்துக்கு வாக்குறுதி கொடுத்திருந்த அரசாங்கத்தினால், சர்வதேச கண்காணிப்பாளர்களின் கவனம் வடக்கின் மீது குவிந்திருந்த காரணத்தினால், இது மோசடியான வெற்றி என்று கூறமுடியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட இறுதிநேர முயற்சிகள் பல, அருவருக்கத்தக்கவையாகவும், மலினத்தனமானவையாகவும் இருந்தன.

ஆனால், அவையெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு இன்னும் வலுச்சேர்க்க உதவியிருப்பதாகவே தெரிகிறது. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இமாலய வெற்றிக்கு, அரசாங்கமே பல வழிகளில் துணைபோயுள்ளது. ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தமிழர் பிரச்சினைக்கு இது தான் தீர்வு என்றோ, பிரச்சினை குறித்து தமிழர்களின் பிரதிநிதிகளுடன் பேசுவோம் என்றோ அரசாங்கம் வாக்குறுதியை கொடுக்கவில்லை. அரசாங்கம் பேசியதெல்லாமே அபிவிருத்தி, நிதியுதவி பற்றித் தான்.

 ஆனால் தமிழர்கள் தமது அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதையே எதிர்பார்த்தனர். அதனால் தான், உரிமைகள் தொடர்பாக எந்த வாக்குறுதியையும் வழக்கத் தயாராக இல்லாத அரசாங்கத்தை அவர்கள் ஆதரிக்க மறுத்துள்ளனர். இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் அறிக்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், அரசாங்கத்துக்கு இன்னமும் நெருக்கடியை ஏற்படுத்தப் போகிறது. ஏனென்றால், அதனை தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான ஆணையாக உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

 தமிழ்மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக அரசாங்கம் மீளச் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இது ஒரு முக்கியமானதும் யதார்த்தமானதுமான கருத்து. தமிழர் பிரச்சினை தொடர்பான கொள்கைகளை அரசாங்கம் மாற்றிக் கொள்ள வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளது என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. அரசாங்கம் சாதகமான மாற்றத்துக்குத் தயாராக இருக்குமேயானால், அதுவே நிலையான அமைதிக்கான அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

- கே.சஞ்சயன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com