Contact us at: sooddram@gmail.com

 

நாடக ஹீரோ முதல்வர் விக்கினேஸ்வன் அயோக்கியர் - நாடுகடந்த கவிஞர் காசி.ஆனந்தன்

தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கின்ற யோக்கியதை எவனுக்கும் கிடையாது. நேற்று கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தழைவிட்ட (முதல்வர்) விக்னேஸ்வரனுக்கு நிச்சயம் கிடையாதுஎன்று போட்டு தாக்கியிருக்கிறார், விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகரும், தமிழகத்தில் நீண்ட காலமாக வசிப்பவருமான கவிஞர் காசி.ஆனந்தன். இலங்கையில் வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றதே தவறு என்ற கருத்தை முன்வைத்துள்ள காசி.ஆனந்தன், “இந்த தேர்தல் மகிந்த அரசிற்கு பெரிதும் உதவி புரிந்திருக்கின்றது. மகிந்தவின் அரசு ஒரு நேர்மையான அரசு, தேர்தல் நடத்தி, ஜனநாயகத்தை மதிக்கிற அரசு, ஆகவே அந்த ஜனநாயவாதியான மகிந்த போற்றுதலுக்கு உரியவர் என்று காட்டுகின்ற நாடகத்திற்கு இந்த மாகாணசபை பயன்பட்டிருக்கின்றதுஎன்கிறார்.
தமிழர் பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்என்று கோரிக்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மட்டும் இருந்தல்ல, பல உலக நாடுகளிடமும் இருந்துதான் வந்தன. திரு. ஆனந்தனின் இந்த சாடலைக் கேட்டவுடன், “அடாடாஇந்த நாடகம் நடக்கும் விஷயத்தை உலக நாடுகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து, எச்சரிக்கை செய்திருக்கலாமேஎன்ற அங்கலாய்ப்பு ஏற்படுகிறது அல்லவா?
கவிஞரின் பார்வையில்நாடகம்என்று தோன்றும் தேர்தலில், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்கினேஸ்வரன் யார்? நாடக ஹீரோவா?
சரி. காசி.ஆனந்தனின் சென்னை பார்வையில், இலங்கையில் மக்கள் முன் சென்று வாக்கு கேட்டு ஜெயித்த விக்கினேஸ்வரன் எப்படி தெரிகிறார்?
இதோ, அவரே கூறுகிறார், தெரிந்து கொள்ளுங்கள்: “விக்னேஸ்வரன் போன்றவர்கள் சமஸ்டிதான் எங்கள் கொள்கை என்று சொல்கிறார்கள். அந்த சமஸ்டிக்காக வடக்கு மாகாண மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை விக்னேஸ்வரன் புரிந்து கொள்ளவேண்டும்என்கிறார்.
அடேங்கப்பா.. இலங்கைக்கு வெளியே நீண்டகாலம் வசித்தாலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் எதற்காக வாக்களிக்கவில்லை என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறாரே.. அங்கேதான் நிற்கிறார் மக்கள் மனம் புரிந்த கவிஞர்.
இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களால் அமோக வெற்றி பெற வைக்கப்பட்ட முதல்வர் விக்கினேஸ்வரன் பற்றி, வேறு என்ன சொல்கிறார், சென்னையில் வசிக்கும் கவிஞர் காசி.ஆனந்தன்?
வெற்றிக் களிப்பில் விக்னேஸ்வரன் போன்றவர்கள் பேசுகின்ற பேச்சு அயோக்கியத் தனமான பேச்சு. ‘நாங்கள் தமிழீழத்தை கைவிட்டு விட்டோம்என்று அவர் சொல்கின்றார். அவர் எந்த தமிழீழத்தை கைவிட்டோம் என்று சொல்கின்றார்? 1976-ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா தீர்மானம் இயற்றி நிறைவேற்றிய அதே தமிழீழ தீர்மானத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார்.
அந்த தமிழீழ தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விட்டு, பொது தேர்தலில் வாக்களித்து, அதை வெற்றிபெற செய்தார்களே; அந்த தமிழிழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கிறார்என்கிறார்.
அட, அப்பிடி போடுங்க கவிஞரே அருவாளை


1976-ம் ஆண்டு, “தமிழீழம் வேண்டும் என்றால் எமக்கு வாக்களியுங்கள்என்று தேர்தலில் நின்றபோது விழுந்த வாக்குகள் தமிழீழத்தை ஆதரித்து விழுந்த வாக்குகளாம். 2003-ம் ஆண்டு, “சமஸ்டி வேண்டும் என்றால் எமக்கு வாக்களியுங்கள்என்று வெளிப்படையாக கூறி தேர்தலில் நின்றபோது ஜெயித்த வாக்குகள், சமஸ்டியை ஆதரித்து விழுந்த வாக்குகள் இல்லையாம்.
சூப்பர் லாஜிக் கவிஞரே.
அத்துடன் விட்டாரா கவிஞர்? விக்கினேஸ்வரனுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனையும் போட்டு துவைத்து எடுத்திருக்கிறார். ஏதாவது ஒரு மேடையில் விக்னேஸ்வரன், என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்ல முடியுமா? விக்னேஸ்வரனோ சம்மந்தனோ துணிச்சலான ஒரு மேடையில் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்லமுடியுமா? என்று கேள்விக் கணையை, வேள்விக்கு வந்த ஆட்டுக்கு விடுவதுபோல வீசியிருக்கிறார்.
ஏதாவது ஒரு மேடையில்என்று நீங்கள் குறிப்பிடுவது, இலங்கைக்கு வெளியே, (சென்னை போல) ஒரு பாதுகாப்பான மேடைதானே கவிஞரே?
அதை விடுங்கள், “என்னுடைய தாயகம் தமிழீழம்என்று சம்பந்தனும், விக்கினேஸ்வரனும் சொல்ல வேண்டும் என்று ஏன் சவால் விடுகிறீர்கள் கவிஞரே? அவர்கள்தான் மிகத் தெளிவாக, “என்னுடைய தாயகம், ஒன்றுபட்ட ஸ்ரீலங்காஎன்று சொல்லி விட்டார்களே.
அதை ரகசியமாகவும் சொல்லவில்லை. பகிரங்கமாக மேடையில் சொல்லி வருகிறார்களேதேர்தலுக்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்களே
அப்படியிருந்தும் இந்த தேர்தலில், விக்கினேஸ்வரன் (காசி.ஆனந்தனின் கூற்றுப்படி அயோக்கியர்) ஜெயிக்காமல் இருந்திருக்க என்ன செய்திருக்கலாம்?
1) அயோக்கியர்கள் அற்ற அணி ஒன்றை தேர்தலில் களம் இறக்கி, மக்கள் வாக்களிக்கிறார்களா என்று பார்த்திருக்கலாம். (கடந்த நாடாளுமன்ற தேர்தலில், குதிரை கஜேந்திரன் அணிக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்த பின்னரும் தைரியமாக)
2) தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், ஸ்ரீலங்கா தேசியக் கொடியை பகிரங்கமாக மேடையில் பிடித்து ஆட்டியபோதே, அவரையும், அவரது கட்சியையும் அதரிப்பதை நிறுத்தி, புதிய அணியை உருவாக்கியிருக்கலாம்.
3) எந்த மேடையிலும்என்னுடைய தாயகம் தமிழீழம்என்று கூறக்கூடிய காசி.ஆனந்தனை, சொந்த மண்ணில் மேடையமைத்து ஏற்றி விட்டு, முழங்கி வாக்கு கேட்க வைத்திருக்கலாம்.
அப்படியில்லாமல், எப்போதோ ஈழ கொள்கையை குழி தோண்டி புதைத்துவிட்டதாக வெளிப்படையாக அறிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் கையில் ஏந்தியபடி, அவர்கள் ஜெயித்தபின், ‘ஐயகோ அயோக்கியர்கள்என அலறுகிறீர்களேஇதை, தமிழில் என்ன வார்த்தையில் குறிப்பிடுவார்கள் தெரியுமா கவிஞரே?
தும்பை விட்டு வாலைப் பிடிப்பது
இலங்கை வடக்கு மாகாண தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் விக்கினேஸ்வரன் பற்றி மேலும் குறிப்பிட்ட வீரக் கவிஞர், “தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கின்ற யோக்கியதை எவனுக்கும் கிடையாது. நேற்று கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தழைவிட்ட (முதல்வர்) விக்னேஸ்வரனுக்கு நிச்சயம் கிடையாதுஎன்று கூறியிருக்கிறார்.
அண்ணேஇதையே விக்கினேஸ்வரன், ‘திருப்பிப் போட்டால்எப்படி இருக்கும் தெரியுமா? 
நேற்று இலங்கையில் முளைத்து, இன்று தமிழகத்தில் தழைவிட்ட காசி.ஆனந்தனுக்கு….”

(Viruvirupu)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com