Contact us at: sooddram@gmail.com

 

முகமாலை கண்ணி வெடியும் மாவட்ட அமைச்சர் கண்ணி வெடியும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

மூன்று மாகாண சபைகளுக்காக கடந்த 21 ஆம் திகதி தேர்தல்கள் நடைபெற்று இரண்டு நாட்களில் முகமாலையில் வெடித்த நிலக் கண்ணி வெடியும் தேர்தல் முடிவடைந்து ஐந்து நாட்களில் காணியானது மத்திய அரசாங்கத்திகுரிய பொறுப்பு என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அரசாங்கம் மாவட்ட அமைச்சர்களை நியமிக்கப் போவதாக தேர்தலுக்கு மறுநாள் வெளியான செய்தியும் வடமாகாண சபையின் எதிர்க்காலத்தை கோடிட்டுக் காட்டுவதைப் போலாக அமைந்திருக்கின்றன. முகமாலை கண்ணி வெடி வட மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராகப் போகும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அவரது முன்னுரிமை பட்டியலை மீளாய்வு செய்வதற்காக விடுத்த அழைப்பைப் போன்றதாகும். அதேவேளை நீதிமன்றத் தீர்ப்பும் மாகாண அமைச்சர் நியமனத்திற்கான முயற்சியும் அவர் எவ்வளவு பெரும் சவால்களை எதிர்நோக்கப் போகிறார் என்பதை முன் கூட்டியே அறிவித்தலைப் போலாகும்.

நடைபெற்ற மூன்று மாகாண சபைத் தேர்தல்களில் வட மாகாண சபைக்கான தேர்தல் மட்டுமே சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஐ.நா. சபையும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, பிரிட்டன் போன்ற பல பிரதான நாடுகளும் வட மாகாண சபைத் தேர்தலைப் பற்றி வெளியிட்டு இருந்த அறிக்கைகள் இதனை எடுத்துக் காட்டுகின்றன. அது ஒருவகையில் வரப் போகும் சவால்களுக்கு மத்தியில் வட மாகாண புதிய முதலமைச்சருக்கு ஆறுதலாகவும் அமைந்திருக்கலாம்.

தேர்தல் முடிவுகள் தத்தமது கொள்கைகளை நிறைவேற்ற மக்கள் அளித்த ஆணை என்றே அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூறுகின்றன. ஆனால் மக்கள் கொள்கைகளுக்காக மட்டும் வாக்களிப்பதில்லை என்பதே எமது வாதமாகும். இது கொள்கைகளுக்காக அளிக்கப்பட்ட வாக்காக இருந்தால் தாம் தனித் தமிழ் நாட்டைக் கோரவில்லை, ஐக்கிய இலங்கைக்குள் கூடுதல் அதிகாரத்தையே கோருகிறோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியதையும் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றே அர்த்தமாகிறது. அதாவது வட மாகாண மக்கள் இந்தத் தேர்தல் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் நிராகரித்துள்ளார்கள் என்றும் சிலர் வாதிடலாம்.

அதேவேளை மக்கள் கொள்கைகளுக்காக வாக்களித்துள்ளார்கள் என்றால் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் வழங்கிய தீர்ப்பை அரசாங்கமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அம் மக்களை தம் பக்கம் தள்ளியதற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொது பல சேனா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கும் நன்றி செலுத்த வேண்டும். அங்கும் முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதாக கூற முடியாது. அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகி போட்டியிட்டு இருந்தால் அனேகமாக அம் மக்கள் மு.கா.விற்கே வாக்களித்து இருப்பார்கள்.

முஸ்லிம் விரோத அலையொன்று நாட்டில் வீசிக் கொண்டிருக்கையிலும் சில பலம் வாய்ந்தவர்கள் அதன் பின்புலத்தில் இருப்பதாக தெரிய இருக்கையிலும் மன்னார் முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். அதையும் அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரித்து அளிக்கப்பட்ட வாக்காக ஏற்றுக் கொள்ள முடியாது. அங்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஒரு மத குருவுக்கும் இடையிலான பனிப்போரின் விளைவாகவே அதை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மக்கள் எவரை வெல்லச் செய்ய வேண்டும் என்பதை விட எவரை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்பதை யோசித்தே தேர்தல்களில் வாக்களிக்கிறார்கள் என சில காலங்களுக்கு முன்னர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பீட்டர் கேனமன் ஒரு முறை கூறியிருந்ததை இது நினைவூட்டுகிறது. இது மறுப்புவாக்கு (negative vote) ) என சில இந்திய அரசியல் ஆய்வாளர்களும் கூறியிருந்தனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சுமார் 80 வீதவாக்குகளும் ஆசனங்களும் கிடைத்திருக்காது. இணைந்த மாகாணங்களில் இருந்து கூட்டமைப்புக்கு மூன்றில் இரண்டு வாக்குகளையோ ஆசனங்களையோ பெற முடியுமா என்பது சந்தேகமே.

அதேவேளை கிழக்கில் போர் முடிவடைந்த உடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியதைப் போல் அரசாங்கம் வடக்கில் போர் முடிவடைந்த உடன் 2009 ஆம் ஆண்டு அல்லது 2010 ஆம் ஆண்டு வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருந்தாலும் தமிழ் கூட்டமைப்புக்கு வடக்கிலிருந்து இந்தளவு வாக்குகளோ ஆசனங்களோ கிடைத்திருக்காது.

வடக்கில் அரசாங்கத்திற்கு வாக்குகளை ஈர்த்துக் கொடுக்கும் பொறியாக இயங்கும் ஈ.பி.டி.பி.யின் கோட்டையான ஊர்காற்துறையிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போதும் இந்த மாகாண சபைத் தேர்தலின் போதும் பெற்ற வாக்குகளை ஒப்பிடும் போது அது தெளிவாக தெரிகிறது. 2010ஆம் ஆண்டு ஐ.ம.சு.கூ. அத் தொகுதியிலிருந்து 71.99 வீத வாக்குகளை பெற்ற போதிலும் இம்முறை அது 31.48 வீத வாக்குகளையே பெற்றுள்ளது. பொதுவாக வட மாகாணம் முழுவதிலும் இந்த மாற்றம் இடம் பெற்றுள்ளது.
நிலக் கண்ணி வெடிகளை அகற்றியில்லாததால் வடக்கில் தேர்தலை நடத்த முடியாது என அப்போது அரசாங்கம் கூறியது. ஆனால் அதே அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் அப் பிரதேசங்கள் நடத்தியது. உண்மையிலேயே ஆளும் கட்சி தோல்வியடையும் என்ற பயத்தினாலேயே அப்போது அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை. பின்னர் மாகாண சபைகளை ஒழிப்பதற்கான அரசாங்கத்திலுள்ள சில தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி போன்றவற்றின் விளைவாக தேர்தல் தொடர்பான வட பகுதி மக்களின் ஆர்வம் மட்டுமன்றி அவர்களின் அரச எதிர்ப்பு உணர்வும் அதிகரித்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தென் பகுதி அரசியல்வாதிகள் 'தமிழீழம் வரப் போகுது, தமிழீழம் வரப் போகுது'  என்று எழுப்பிய கூச்சலும் தமிழ் கூட்டமைப்புக்கு சாதகமாகியது. வேட்பு மனுத் தாக்கல் செய்த போது ஒரு சிலர் மட்டுமே அறிந்திருந்த புலிகளின் முன்னால் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரனுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டங்கள் போன்றவை அவரை முன்னணிக்குத் தள்ளியது. அவரது வீட்டின் மீதான தாக்குதல் அவருக்கு மேலும் பிரபல்யத்தை தேடிக் கொடுத்தது. அவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் விருப்பவாக்குகளில் இரண்டாம் இடத்திற்கு வர அது உதவியது.

முகமாலையில் வெடித்த கண்ணி வெடி வட பகுதி மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பது இப்போதைக்கு முக்கியமா அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற அவர்களது அரசியல் பிரச்சினைகள் முக்கியமா என்பதை தீர்மானிக்குமாறு வற்புறுத்துகிறது. அதாவது அது வட மாகாண சபையின் முன்னுரிமைகள் எவை என்பதை தீர்மானிக்குமாறு வற்புறுத்துகிறது. அதனை விக்னேஸ்வரன் உணர்ந்து இருக்கிறார் என்பது அவர் டைம்ஸ் ஒப் இந்டியா பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்று மூலம் தெரிகிறது. விதவைகள், அநாதைகள் மற்றும் ஊனமற்றோரே எமது முன்னுரிமையாக இருக்கிறன என அவர் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆனால் அரசாங்கத்திற்கு அதிகார பரவலாக்கலின் அர்த்தம் விளங்காமை வட மாகாண சபைக்கு பெரும் பிரச்சினையாக அமையலாம். பிரிவினையை கோரிய தமிழ் மக்களுக்கு அவர்களது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு போதிய அதிகாரங்களை வழங்கி அவர்களின் பிரிவினை போக்கை தடுப்பதே அதிகார பரவலாக்கலின் நோக்கமாகும். அதாவது அதிகார பரவலாக்கலின் கீழ் சிறுபான்மை நிர்வாகமே தமிழர் பிரதேசங்களில் உருவாகும். உருவாக வேண்டும். வட பகுதி மக்கள் தேசிய அரசியல் கட்சிகளை தழுவுவதாக இருந்தால் அதற்கு காலம் எடுக்கும். ஆனால் வட பகுதியிலும் இப்போதே ஐ.ம.சு.கூட்டணியின் அட்சியே அமைய வேண்டும் என அரச தலைவர்கள் விரும்புகிறார்கள்.

அதற்கு வாய்ப்பு இல்லாததால் இப்போது அவர்கள் வேறு விதமாக வட பகுதி நிர்வாகத்தில் தலையிட முயற்சிப்பதையே மாவட்ட அமைச்சர்களை நியமிப்பதற்கான முயற்சி மூலம் தெரிகிறது. மாவட்ட அமைச்சர் பதவிகள் இலங்கைக்கு புதியவையல்ல. 1980களில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மாவட்ட அமைச்சர்களை நியமித்து இருந்தார். அரசாங்கம் மாவட்ட அமைச்சர்களை பாவித்து மாகாண சபைகளுக்குரிய அபிவிருத்தி போன்ற பணிகளை மேற்கொள்ள முயற்சிக்கக் கூடும். இது மாட்ட அமைச்சருக்கம் முதலமைச்சருக்கும் இடையே நிர்வாக மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினைகளை தோற்றுவிக்கலாம். நிர்வாக ரீதியில் அது ஒரு கண்ணி வெடி போன்றதாகவும் அமையலாம்
காணி தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் புதிதாக எதுவும் இல்லை.
அரசியல் அமைப்பின் இறுதியில் உள்ள இணைப்பு IIஇல் (Appendix II) இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. காணியானது தொடர்ந்தும் அரசின் பொறப்பாக இருப்பதோடு மத்திய அரசாங்கம் ஒரு மாகாணத்திலுள்ள காணியொன்றை குறிப்பிட்டதோர் பணிக்காக பெற்றுக் கொள்வதாக இருந்தால் மாகாண சபையோடு கலந்துரையாடி அதனை பெற்றுக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபையின் தேவைக்காக காணிகளை பெற்றுக் கொள்வதாயின் மத்திய அரசாங்கம் அதற்கான காணிகளை வழங்கும். மாகாணத்திற்குள் ஒரு பிரஜைக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ காணி வழங்குவதாயின் மாகாண சபையின் ஆலோசனையின் படி ஜனாதிபதியே அதனை வழங்குவார் என அரசியமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசாங்கம் மாகாண சபைகளோடு கலந்துரையாடாமல் மாகாணங்களில் உள்ள காணிகளை அரச தேவைகளுக்காக பெற்றுக் கொள்ள முடியாது. காணி விடயங்கள் சம்பந்தமாக அரசாங்கம் ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் அது தான் காணி தொடர்பான கொள்கைகளை வகுக்கும். மாகாண சபைகளுக்குரிய காணி அதிகாரம் இவ்வளவு தான்.

ஆனால் காணி என்பது அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கான அதிகார பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருப்பதால் காணிகளை மாகாண சபைகளுக்கு சொந்தத்தில் எழுதி கொடுத்ததைப் போல் கடந்த காலங்களில் தென் பகுதி அரசியல்வாதிகள் பிரசாரம் செய்தனர். தமிழ் அரசியல்வாதிகளும் அதே கருத்து தொணிக்கும் வகையில் நடந்து கொண்டனர். இப்போதாவது இந்த காணி அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவதை தென் பகுதி அரசியல்வாதிகள் எதிர்க்காமல் இருக்க வேண்டும்.

மாகாண சபைகளுக்குரிய பொலிஸ் அதிகாரமும் இது போன்றதாகும். அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண பொலிஸ் பிரிவொன்றை நிறுவினாலும் அதுவும் சகல பொலிஸ் அதிகாரங்களும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும். இதுவும் ஒரு உணர்வுசார் பிரச்சினையே தவர வேறொன்றும் அல்ல.

இவற்றுக்கு மத்தியில் தான் வட மாகாண முதலமைச்சர் கடமையாற்ற வேண்டியிருக்கிறது. அவர் தமது முன்னுரிமைகளை சரியாக கண்டறிந்து பொறுமையோடு செயற்பட வேண்டியிருக்கிறது.  ஏனெனில் மாகாண சபைகளை கலைத்துவிடும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருக்கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com