Contact us at: sooddram@gmail.com

 

ஐக்கிய நாடுகள் சபையில் இரு முக்கிய ந்திப்புகள்

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. கடந்த வாரம் இந்த உலக மகா சபையில் அங்கத்துவ நாடுகளின் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டு விடயங்கள் இங்கு முக்கிய இடத்தினை வகித்தன. சிரியாவின் இரு வருட கால யுத்தமும் இஸ்லாமிய குடியரசான ஈரானின் அணுவிவகாரமுமே மேற்படி இரண்டு முக்கிய விடயங்களாகும். சர்வதேச விவகாரங்களில் அக்கறை செலுத்துபவர்கள் அமெரிக்க ஈரானிய ஜனாதிபதிகளின் நேரடி சந்திப்பு நடைபெறும் என நம்பினர். இப்படியான சந்திப்புக்கு ஈரானின் புதிய ஜனாதிபதி பல கடிதங்களை அமெரிக்க ஜனாதிபதிக்கு பல தடவை எழுதி அத்திவாரமிட்டார். பதில் கடிதங்களையும் அமெரிக்க தலைவர் அனுப்பியதாக நம்பப்படுகின்றது. எப்படியும் பொதுக்கூட்டத்தில் முதல் நாளிலேயே இரண்டு நாட்டு தலைவர்களும் பேசினர். ஆனால் நேருக்கு நேர் தனிப்பட்ட ரீதியில் இரண்டு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலே பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை.

எனவே பேச்சுவார்த்தைகளை இடம்பெறச் செய்ய மீண்டும் இரு தலைவர்களும் கடிதங்களை எழுதலாம். சில நேரம் பல வருடங்கள் அல்லது பல மாதங்கள் கடிதங்களை எழுதுவார்கள் எனவும் சில செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.

தமது உரையில் ஈரானிய ஜனாதிபதி ஹஸ்ஸான் ரூஹானி அணுவிவகாரம் தொடர்பாக பேசினார். ஈரானிய ஜனாதிபதியின் உரையினை ஜீரணிக்க முடியாத இஸ்ரவேலிய பிரதமர் பென்ஜமீன் நெதன்யாஹுவும் அவரது உதவியாளர்களும் வெளிநடப்பு செய்தனர். சபையினை விட்டு வெளிச்சென்றனர். தொடர்ந்தும் ஈரான் யூரேனியத்தினை அணு ஆயுத தயாரிப்புக்காக வளப்படுத்தி வருவதாக இஸ்ரவேல் பூரணமாக நம்புகிறது.

ஈரான் பிராந்தியத்திற்கும் உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடிய பயங்கரமான அணு ஆயுதத்தினையோ குண்டையோ உருவாக்காது என்று பேசிய ரூஹானி இப்படியான முயற்சிகள் ஈரான் நடைமுறைப்படுத்திவரும் இஸ்லாமிய கொள்கைகளுக்கு மாறானது எனவும் தெளிவாக கூறினார்.

கொள்கையளவில் பேசிய ஈரானிய ஜனாதிபதி செயலில் எப்படி இருப்பார் என்பது சந்தேகம். இதுவரைக்கும் இந்த விடயத்தில் ஈரான் அடைந்துள்ள அபிவிருத்திகள் சமாதான நோக்கத்திற்காக என கூறப்படும் இலக்கினை பல வருடங்களுக்கு முன்னர் அடைந்தது. தற்போது திட்டவட்டமாக அணுவாயுத தயாரிப்பினை நோக்கியே ஈரானிய அரசு செல்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

2006 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அணுவிடயம் தொடர்பாக சாதகமான முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டு ஈரான் பேச்சுவார்தைகளை இன்று வரை நடத்தி வருகின்றது. இதே நேரம் தனது அணு விவகாரம் தொடர்ந்தும் முன் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதிலும் அது அதிக அக்கறை கொண்டுள்ளது.

மூன்று மாதத்திற்கும் ஆறு மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்திற்குள் இந்த அணுவிவகாரத்திற்கான முடிவு காணப்பட வேண்டும் என ஈரான் கூறுகின்றது. இந்த முடிவினை அமெரிக்க ஜனாதிபதியும் ஆமோதித்துள்ளார்.

இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் கூறுகின்றன. அமெரிக்க ராஜாங்க காரியதரிசி ஜோன் கேரியும், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாட் ஸாரிபூம் ஐக்கிய நாடுகளின் சந்திப்பை தொடர்ந்தும் முன் எடுத்துச் செல்லும் என கூறியுள்ளனர்.

சிரியா நாட்டில் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்து வருகின்ற யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வாதப்பிரதிவாதங்கள் இங்கு நடந்தன. தற்போது முடிவு வரக் கூடிய நிலையில் அரச எதிர்தரப்புக்களுக்கிடையே மோதல்கள் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இரசாயன ஆயுத கிடங்குகளையும் அவற்றை தயாரிக்கும் இடங்களை பார்வையிடவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எதிராக சிரியா நாட்டு அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் கொடூரமான முறையில் இரசாயன ஆயுதங்களை உபயோகித்தது ஊர்ஜிதப்படுத்தப்பட்ட நிலையில் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் அங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணுவிவகாரம் போன்று சிரியா விடயம் குறித்தும் பல நாடுகளில் உயர் மட்ட அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு கவுன்ஸிலின் அங்கத்தவர்களான ரஷ்யாவும் சீனாவும் சிரியாவின் யுத்தத்திற்கு முடிவு காண்பதில் தடையாகவுள்ளன. இதற்கு ஆதரவாக ஈரானும் லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லாஹ் இயக்கமும் உள்ளன.

இதுவரைக்கும் சிரியா விவகாரத்தில் அமெரிக்க ரஷ்ய தலைவர்கள் எடுத்த நடவடிக்கைகளின் முடிவுகள் தனக்கு பாதகமாக அமையக்கூடும் என ஜனாதிபதி பஷார் அல் அஸாத் உணர்ந்துள்ளார். ஏனைய அரபு நாடுகளான ஈராக், லிபியா எகிப்து ஆகியவற்றிற்கு ஏற்பட்ட கதி தனக்கும் ஏற்படக் கூடும் என இவர் பயப்படுகின்றார். எனவே கிளர்ச்சியாளர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளையும் மோதல்களையும் இறுதிக் கட்டத்தில் உண்டாக்கி விட்டு இவர் ஐக்கிய நாடுகள் சபையி னையும் தர்மசங்கடத்துக்குள்ளாக்கியுள்ளார். எனவே இந்த விடயத்திலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் உலக மகா சபையின் சந்திப்பு முடிவடையும் என கூறப்படுகின்றது.

ஈரான் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார். சிரியா விடயத்தில் இவர்கள் இருவரும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். கிளர்ச்சிக்காரர்களை ஆதரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி சிரியா நாட்டு இராணுவத்தின் நடவடிக்கைகளை எதிர்கின்றனர். இதேநேரம் ஈரான் அரசாங்கம் சிரியாவின் தலைவர் பஷார் அஸாத் அவர்களின் ஆதரவாளனாக வுள்ளது.

(பஸ்லி எம். அவபு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com