Contact us at: sooddram@gmail.com

 

மீண்டுமொரு முறை உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட வடபுலத்து தமிழர்கள்

நடந்து முடிந்த மூன்று மாகாண சபைத் தேர்தல் களிலும் வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வடபுலத்துத் தமிழ் மக்கள் மீண்டுமொரு தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களது உணர்ச்சிமிகு வீரவசனப் பேச்சுக்களுக்கு இரையாகி அடிமைப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதைத் தெளிவாகக் காட்டு கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் வெளியி டப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் எவ்வகையிலும் நடைமுறைக்குச் சாத்தியப்படாத, இலங்கை அரசிய லமைப்புச் சட்டக் கட்டுக்கோப்புக்களுக்கு முரணான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவை வெறுமனே தேர்தலில் வெற்றி கொள்ள மக்களை ஏமாற்றுவதற் காகவெனத் தயாரிக்கப்பட்டதாக அமைந்திருந்த நிலை யிலும் வடக்கு வாழ் தமிழர்கள் நம்பி ஏமாந்திருக்கிறார்கள்.

முன்னர் புலிகள் தமது விமானப் படை, தரைப்படை, கடற்படை எனப் போலியான இராணுவ பலத்தைக் காட்டி தமிழ் மக்களை ஏமாற்றியது போலவே வடபுலத்துத் தமிழ் மக்கள் முன்பாக தேர்தல் மேடைகளில் வீரவசனங்களைப் பேசி, விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தமிழ்க் கூட்ட மைப்பின் தலைவர்களும் இம்முறை தமிழ் மக்களை ஏமாற் றியுள்ளனர்.

யுத்தம் முடிவிற்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி, பாராளுமன்ற, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் எனச் சகல தேர்தல்களிலும் தமிழ்க் கூட்டமைப்பினர், சர்வதேசத்தி னூடாக இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தமக்கு ஆணை யைத் தருமாறே மக்களைக் கோரி வந்துள்ளனர்.

கடந்து வந்த நான்கு தேர்தல்களிலும் மக்களும் அவர் களது கோரிக்கைக்குச் செவிமடுத்து வாக்களித்து வந்துள்ள போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண அவர் களால் இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. அப்படி யிருந்தும் வடபுல மக்கள் இத்துடன் நான்காவது தடவை யாகவும் தம்மை வைத்து அரசியல் நடத்தும் தமிழ்க் கூட்டமைப்பினரை நம்பி ஏமாந்துள்ளனர். இந்த உண்மை இன்னும் ஆறு மாத காலத்திற்குள் அல்லது ஒரு வருடத் திற்குள் நிச்சயம் மக்களுக்கு வெளிப்படையாகவே தெரியவரும்.

தமிழ்த் தேசியம் எனும் பொய்யான உணர்வினை மக்க ளுக்கு ஊட்டி அதில் எவ்விதமான அக்கறையும் கொள் ளாது அடுத்த தேர்தலில் வெற்றிபெற புதிய புதிய வியூகங் களுடன் காத்திருக்கும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் களது மாயை வலைக்குள் இன்னமும் தமிழ் மக்கள் கட்டுண்டு கிடக்கும் பரிதாப நிலையினையே இப்போது நாம் வடக்கு கிழக்கில் காண்கின்றோம். இன்னும் எத்தனை காலத்திற்குத்தாள் இவ்வாறு மக்களை இந்தத் தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றப் போகிறார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் வடபுலத்துத் தமிழ் மக்கள் தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களால் ஏமாற்றப்படுவது நன்கு தெரிந்திருந்தும் தொடர்ந்தும் ஏமாறி வருவதன் மர்மம் புரியாத புதிராகவே உள்ளது.

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட் டியிட்ட தமிழ்க் கூட்டமைப்பினர் தமிழர் பிரச்சினையை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல தமக்குப் பலம் சேர்க்கும் வகையில் ஆணை வழங்குமாறு பகிரங்கமாகவே கோரி யிருந்தனர். மக்களும் வாக்களித்து அவர்களை வெற்றிபெற வைத்தனர்.

முடிவில் என்ன நடந்தது? அதன் தலைவர்கள் மாறி மாறி அமெரிக்கா, கனடா, இந்தியா என்று சென்று அங்குள்ள தமது குடும்ப உறவுகளைச் சந்தித்து குசலம் விசாரித்து, கூடிக்குலாவி வந்ததுதான் மிச்சம். இதற்காகவா மக்கள் ஆணை வழங்கியிருந்தார்கள்? அந்தப் பாராளு மன்றத் தேர்தல் நடைபெற்று நான்கு வருடங்களாகிவிட்டது. அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் இவர்கள் இதனையே தெரிவிப்பர், மக்களும் வாக்களிப்பர் என்பதாகவே நிலைமை உள்ளதை அவதானிக்க முடிகிறது.

அதேபோன்று அடுத்ததாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது தமது பகுதிகளைத் தாமே அபிவிருத்தி செய்யக் கிடைத்த அரிய சந்தர்ப்பம் என்று கூறி ஆணை வழங்குமாறு கேட்டார்கள். மக்களும் சரி வாக்களித்துப் பார்ப்போம் என வாக்களித்தார்கள். என்ன நடந்தது? எதுவுமே நடைபெறவில்லை. ஒரு சிறு குறுக்குப் பாதையைப் புனரமைக்கவோ, பாடசாலை ஒன் றைத் திருத்தவோ அல்லது ஒரு சிறு அரசாங்க கட்ட டத்தையோ கட்டவோ அவர்களால் முடியவில்லை. மாறாக பல பிரதேச சபைகளில் ஐந்து ரூபா பற்றுச் சீட்டு வழங் கும் பிரதேச சபைக்கான துவிச்சக்கர வண்டில் பாது காக்கும் நிலையத்தின் குத்தகையை தமது உறவு முறைக் காரர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்காக வருடாவருடம் தமது கட்சி உறுப்பினர்களுக்கிடையே முரண்பட்டுக் கொண்டு நிற்கிறார்கள். அதிலும் சாதிப்பாகு பாடு பார்த்து பிரிவினையைத் தோற்றுவிக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மாகாண சபை தேர்தலில் நிறை வேற்றவே முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி அவர்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இதற்காக இம்முறை தமிழ்க் கூட்டமைப்பினர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித் துள்ளனர்.

அவர் ஒரு திறமையான சட்டத்தரணி, உயர் நீதிமன்ற முன் னாள் நீதியரசர். சட்டங்கள் பலவும் தெரிந்தவர். நியாயமான தீர்ப்புக்களை வழங்கியவர். ஆனாலும் அவரும் கூட்டமைப் பினருக்கு ஏற்றாற் போல் பிரசாரப் பணிகளை கூட்டமைப்பின ரது பாணியிலேயே செய்து வெற்றியும் கண்டு அரசியல்வாதி யாகிவிட்டார். இவர்களால் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உறுதி மொழிகளை இப்போது இவர்கள் எவ்வாறு நிறைவேற் றப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வடக்கில் உணர்ச்சிகரமான வீரவசனப் பேச்சுக்களுக்கு மக் கள் இன்னமும் செவிசாய்ப்பதனை நம்ப முடியாதுள்ளது. புலி களின் வீழ்ச்சியுடன் வடக்கு கிழக்கு மக்கள் விழித்திருப் பார்கள் என நினைத்திருந்தால் அவர்கள் இன்னமும் வெறும் கைகளால் முழம் போடுபவர்களையே நம்பிக்கொண்டிருக்கி றார்கள். அரசாங்கம் வடக்கு கிழக்கில் துரித கதியில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதை அப்பகுதி மக் கள் வரவேற்று இதுவரை காலமும் தாம் பட்ட துன்பங்களை மறந்திருக்கையில் தமிழ்க் கூட்டமைப்பினர் மீண்டும் அம்மக் களிடையே வீரவசனங்களைப் பேசி உணர்ச்சி அரசியலை நடத்த முயல்வது ஆரோக்கியமானதல்ல.

தமிழ்க் கூட்டமைப்பினர் தமது வெற்றியை தவறான பொய் ப்பிரசாரங்கள் மூலமான வழிமுறையில் ஈட்டியிருந்தாலும் அரசாங்கம் அவர்களைத் தம்முடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்திருப்பதானது அரசாங்கத்தின் பெரு ந்தன்மையைக் காட்டுகிறது. தமது வெற்றி இறுமாப்பில் தமிழ் மக்களுக்கு மீண்டுமொரு தடவை துரோகம் இழைக்காது இன ப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ்க் கூட்டமைப்பு இம்முறையாவது முன்வர வேண்டும்.

கனடா, அமெரிக்கா, இந்தியா, தென்னாபிரிக்கா அல்லது எந்த வொரு வெளிநாட்டிற்குச் சென்றாலும் இலங்கை அரசா ங்கத்துடன் பேசியே தீர்வினைக் காண வேண்டும் என்பதனை தமிழ்க் கூட்டமைப்பு மறந்துவிடக் கூடாது. அதனால் இனியா வது பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தம்மையும் இணைத் துச் செயற்படுவதுடன் அரசாங்கத்துடன் இதயசுத்தியுடன் பேசி இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் காண வேண்டும். இல்லையேல் மக்களை ஏமாற்றிப் பெற்றுக் கொண்ட மற்று மொரு ஆணை மீண்டுமொரு தடவை அவர்களுக்கு ஏமாற்ற த்தையே தருவதாக அமைந்து விடும். அதற்குப் பின்னரும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாறுவார்கள் அல்லது ஏமாற்ற லாம் என்பது பகற்கனவாகி விடும். எனவே சிந்தித்துச் செயற் பட முன்வருமாறு தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக் கின்றோம்.  

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com