Contact us at: sooddram@gmail.com

 

யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்களின் இழப்புகளும் அவற்றை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகளும்

5. பழுக்க வைக்கும் முறைகள்

பொதுவாக புகையூட்டலின் மூலமே வாழைப்பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றன. முன்னைய காலங்களில் நிலத்தின் கீழ் அமைக்கப்படும் கிடங்குகளில் வாழைக் குலைகள் அடுக்கப்பட்டு புகையூட்டப்பட்டு வந்தன. ஆயினும் தற்போது பழுக்க வைத்தலுக்காகப் கீழ் காட்டப்பட்டுள்ள பல்வேறு பழுக்க வைக்கும் முறைகள் விவசாயிகளாலும் சந்தை வியாபாரிகளாலும் உபயோகிக்கப்படுகின்றன.

அ. புகையூட்டும் பெட்டிகளில் பழுக்க வைத்தல்

இங்கு வாழைக் குலைகள் பழுக்க வைக்கும் பெட்டிகளில் அடுக்கப்பட்டு ஊதுபத்திக் குச்சியின் புகையூட்டப்பட்டபின் பெட்டி மூடி வைக்கப்படுகின்றது. இம்முறை மூலம் குலைகள் 36 – 40 மணித்தியாலங்களில் பழுக்க வைக்கப்படுகின்றன. மருதனார்மடம், சுன்னாகம், திருநெல்வேலி, நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, கொடிகாமம், சங்கானை சந்தைகளில் இம்முறை மூலம் வாழைக்குலைகள் பழுக்க வைக்கப்படுகின்றன.

ஆ. சீமெந்துத் தரையில் பழுக்க வைத்தல்

இங்கு சீமெந்து தரையில் வாழைக்குலைகள் அடுக்கப்பட்டு ஊது பத்திக் குச்சியின் புகையூட்டப்பட்டபின் குலைகள் படங்கால் மூடி வைக்கப்படுகின்றன. இம்முறை மூலம் குலைகள் 36 – 40 மணித்தியாலங்களில் பழுக்க வைக்கப்படுகின்றன. சுன்னாகம் சாவகச்சேரி சந்தைகளில் இம்முறை மூலம் வாழைக் குலைகள் பழுக்க வைக்கப்படுகின்றன.

இ. பரல்களில் புகையூட்டி பழுக்க வைத்தல்

சில்லறை விற்பனை மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் பரல்களில் வாழைக் குலைகள், வாழைச் சீப்புக்கள் அடுக்கப்பட்டு ஊதுபத்திக் குச்சியின் புகையூட்டப்பட்டபின் பரல் மூடிவைக்கப்படுகின்றது. மருதனார்மடம், சுன்னாகம், திருநெல்வேலி, நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, மந்திகை, சாவகச்சேரி, கொடிகாமம், சங்கானை சந்தைகளில் இம்முறை மூலம் வாழைக் குலைகள் பழுக்க வைக்கப்படுகின்றன.

ஈ. பழுத்த பழங்களை உபயோகித்து பரல்களில் பழுக்க வைத்தல்

பரல்களில் முற்றிய பழங்களுடன் பழுத்த பழங்களும் வைக்கப்பட்டபின் பரல்கள் ஒரு நாளைக்கு இறுக்கமாக மூடி வைக்கப்படுகின்றன. இம்முறை மூலம் பழுக்க வைக்கப்படும் போது பழுத்த பழங்களில் இருந்து வெளிவிடப்படும் எதிலீன் வாயு மூலம் முற்றிய பழங்களின் பழுத்தல் செயன்முறை தூண்டப்படுகின்றது. இம்முறை பழுக்க வைத்தலுக்கு உகந்த முறையாகும்.

உ. அறையில் வாழைக்குலைகளைப் பழுக்க வைத்தல்

இங்கு வாழைப்பழங்கள் பழுக்க வைப்பதற்கென தனியான அறையொன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வறையினில் 100 வாழைக்குலைகளை அடுக்கப்படுகின்றது. இக்குலைகளைப் பின் துணியொன்றால் மூடிய பின் அறையின் கதவு மூடப்பட்டு கதவிடுக்குகள் சாணம் கொண்டு இறுக்கமாக பூசப்படுகின்றது. அடிப்பாகத்தில் துளையிடப்பட்ட மண்பானையொன்றில் வாழைச் சருகுகள் இடப்பட்டு அறையின் துளையிடப்பட்ட மேற்பகுதியில் வைக்கப்படுகின்றது.

பானையின் துவாரத்தினூடு எரியூட்டப்பட்ட கயிற்றினை செலுத்தி பானையிலுள்ள வாழைச் சருகுகள் புகையூட்டப்படுகின்றன. அறையினு உள்ள புகையின் அளவு அறையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியினூடு அவதானிக்கப்படுகின்றது. மாலை 3.00 மணிக்கு இவ்வாறு புகையூட்டப்படும் வாழைக்குலைகள் அடுத்தநாள் காலை 9.00 மணிக்கு அறையிலிருந்து வெளியே எடுக்கப்படுகின்றன.

ஊ. இரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தல்

அத்துடன் விரைவாகப் பழுக்க வைப்பதற்காக அளவுக்கதிகமாக பாவிக்கப்படும் இரசாயனங்கள், சிபார்சு செய்யாத நச்சு இரசாயனங்களையும் பாவிப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே பழ உற்பத்தியாளர்கள் மற்றும் பழ வியாபாரிகள் சுகாதாரக் கேடற்ற, தரத்தைப் பாதிக்காத முறையை பழுக்க வைத்தலுக்கு உபயோகித்தல் மூலம் தரமான பழங்களை சந்தைப்படுத்தல் வேண்டும்.

வியாபாரிகள் எதிரல் இரசாயனத்தை தமது தேவைக்கேற்ற செறிவுகளில் தயாரித்து கைத்தெளிகருவி மூலம் பழங்கள் மீது நேரடியாக விசிறுகின்றனர். சிலர் இரசாயனத்தை பழங்கள் மீது பூசியும் பழுக்க வைக்கின்றனர்.

இக்காரணங்களுள் தவறான பழுக்க வைக்கும் முறைகள் பழங்களின் தரத்தை குறைப்பதுடன் நுகர்வோரின் ஆரோக்கியத்திலும் பெரிதும் தீங்கிழைக்கின்றது.

பழங்கள் பழுக்கும் போது எதிலீன் வாயு வெளிவிடப்படுகின்றது. இவ்வாயுவே பழங்களின் இழையங்களைத் தூண்டி பழங்களில் பெளதீக, இரசாயன மற்றும் உடற்தொழிலியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இதன் விளைவாகவே விரும்பத்தக்க சுவை மணம் கொண்ட பழங்கள் உருவாகின்றன. பழுக்க வைத்தல் செயன் முறையை நடைபெற உதவுகின்றது.

புகையூட்டல் செயன்முறையின் போதும் எதிலீன் வாயு உற்பத்தி செய்யப்பட்ட போதும் எதிலீன் வாயுவுடன் நச்சுத்தன்மையான பல வாயுக்களும் உற்பத்தியாக்கப்படுகின்றன. இப்பழங்களை தொடர்ச்சியாக உண்ணும் நுகர்வோர் இவ்வாயுக்களின் செறிவால் எதிர்காலத்தில் பக்கவிளைவுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

எனவே விவசாயத் திணைக்களத்தால் சிபார்சு செய்யப்பட்டுள்ள கீழ் காட்டப்பட்டுள்ள முறையை உபயோகிப்பதன் மூலம் இயற்கை முறையில் பழுத்தலுக்கு ஒப்பான வகையில் பழங்கள் பழுக்க வைத்து தரமான பழங்களை சந்தைப்படுத்த முடியும்.

விவசாயத்திணைக்களத்தால் சிபார்சு செய்யப்பட்ட பழுக்க வைத்தல் முறை

தேவையான இரசாயனங்கள்

* ஐதான எதபோன் கரைசல் 1 மீ. லீ. எதபோன்/ 1 லீற்றர் நீர்

எதபோன் இரசாயனத்தினை வெவ்வேறு இரசாயனப் பெயரில் சந்தையில் பெற்றுக்கொள்ள முடியும். எதபோன் இரசாயனத்தில் 1 மீ. லீ. இனை அளந்தெடுத்து 1 லீற்றர் நீரில் அதனை கலந்து சூரிய ஒளி உட்புகாத கறுப்புப் போத்தல் அல்லது பொருத்தமான பாத்திரத்தில் சேமித்தல் வேண்டும். உபயோகிக்கும் கொள்கலனின் கொள்ளவிற்கு ஏற்றவாறு திரீல் கரைசலைத் தயாரித்தல் வேண்டும்.

* சுண்ணாம்புக் கரைசல் 100 கிராம் / 1 லீற்றல் நீர்

100 கிராம் சுண்ணாம்பை 1 லீற்றர் நீரில் கரைத்து அதனை போத்தல் அல்லது பொருத்தமான பாத்திரத்தில் சேமித்தல் வேண்டும். உபயோகிக்கும் கொள்கலனின் கொள்ளவிற்கு ஏற்றவாறு சுண்ணாம்பு கரைசல் கரைசலைத் தயாரித்தல் வேண்டும்.

பரிகரணப் படிமுறைகள்

* பழுக்க வைக்க உபயோகிக்கும் கொள்கலனின் கொள்ளளவை கணித்தல் வேண்டும் (‘V’ கன அடி)

* நன்கு முற்றிய பழங்களைக் கொள்கலனில் 2/3 பகுதியில் அடுக்குதல் வேண்டும். அடுக்கும் போது கொள்கலனின் 1/3 பகுதி வாயுக்களின் ஓட்டத்திற்காக வெறுமையாக விடப்படல் வேண்டும்.

* தேவையான இரசாயனத்தின் அளவைக் கணித்தல் வேண்டும்.

ஒரு கன அடிக்க : 3 - 4 மி. லீ.

‘V’ கன அடிக்க : V (3 - 4) மி. லீ.

* எதபோன் கரைசலைக் கொள்கலனில் வைத்தல் வேண்டும்

* அதேயளவு சுண்ணாம்புக் கரைசலை எதிரல் கரைசலினுள் ஊற்றி கலக்குதல் வேண்டும்

* கொள்கலனை உடனடியாக மூடி விடுதல் வேண்டும்.

* கொள்கலனின் வெப்பநிலை அண்ணளவாக (18) சாரீரப்பதன் அண்ணளவாக (18) இருப்பின் எதீலின் வெளியேற்றம் உத்தமமாக இருக்கும்

* கொள்கலனை 24 மணித்தியாலம் மூடியபடி விடுதல் வேண்டும்

* பழுத்தல் செயன்முறையின் போது வெளியேற்றப்படும் காபனீரொட்சையிட் வாயு, மீதமாகவுள்ள எதிலீன், வெப்பம் என்பவற்றை வெளியேற்றுவதற்காக கொள்கலனைத் திறந்து காற்றோட்டமாக்கல் வேண்டும்

* பரிகரிக்கப்பட்ட பழங்கள் வெளியே எடுத்து 2 நாட்களில் இயற்கையாகப் பழுத்த பழங்களை ஒத்ததாகப் பழுக்கும்.

எதபோன் கரைசலில் சுண்ணாம்புக் கரைசலைச் சேர்க்கும் போது வெளிவிடப்படும் எதிலீன் வாயு பழங்களின் இழையங்களைத் தூண்டி பழுக்க வைத்தல் செயன்முறை நடைபெற உதவுகின்றது. இதன்போது தீங்கற்ற வாயுக்கள் உற்பத்தியாக்கப்படமாட்டாது. அத்துடன் பெறப்படும் பழங்களும் சுவை மிக்கதாகவும் தரமானதாகவும் இருக்கும். இம்முறையை உபயோகிப்பதற்கான உற்பத்திச் செலவு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதாகும்.

எனவே பழ உற்பத்தியாளர்களே பழ வியாபாரிகளே தங்களையும் தங்கள் சந்ததியின் ஆரோக்கியத்தினைக் கருத்திற் கொண்டு மேற்குறித்த முறையை உபயோகித்து சுகாதாரக்கேடற்ற, சுவை மிக்கதாகவும் தரமானதாகவும் பழங்களை உற்பத்தி செய்யுங்கள் சர்வதேச சந்தை வரை சந்தை வாய்ப்பைப் பெற்றிடுங்கள்.’

பழ மரங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் அறுவடையின் பின்னான முகாமைத்துவம் தொடர்பான மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் தங்கள் பகுதி விவசாயப் போதனாசிரியருடன் தொடர்பு கொண்டு பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com