Contact us at: sooddram@gmail.com

 

ஊவாவில் வாழ்வா சாவா

தொகுதிவாரி தேர்தல் முறை நடைமுறையில் இருந்த காலத்தில், பொதுவாக இந்நாட்டின் பெரும்பாலான மக்கள், தேர்தல்களின் போது நடந்து கொண்டதைப் போல் தான் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் இப்போதும் தேர்தல்களின் போது நடந்து கொள்கிறார்கள். 1978ஆம் ஆண்டு விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இந்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் அப்போதைய எதிர்க்கட்சியையே ஆதரித்தனர். எனவே, அக் காலத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அரசாங்கம் மாறியது. விகிதாசார தேர்தல் முறையோடு நாட்டில் அந்த நிலைமை மாறினாலும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இன்னமும் அதே வழமையை பின்பற்றி வருகிறார்கள்.

1978ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொதுத் தேர்தலுக்குப் பதிலாக நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக 1982ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு, 1988, 1994, 1999, 2005, 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் 1989, 2000, 2001, 2004 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் அப்போதைய ஆளும் கட்சியை எதிர்த்தே வாக்களித்துள்ளனர்.

பதவிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய தவறியதன் விளைவாகவே பதவிக்கு வரும் ஒவ்வொரு கட்சியையும் மக்கள் எதிர்க்கிறார்கள். ஆனால், பல்வேறு விதமான தேர்தல் திருகுதாளங்கள் மூலம் வடக்கு, கிழக்குக்கு வெளியே இந்த நிலைமையை மாற்ற ஆளும் கட்சிகளுக்கு விகிதாசார தேர்தல் முறை உதவியிருக்கிறது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் மட்டும் அவர்களின் அந்தப் பருப்பு வேகவில்லை என்றே தெரிகிறது.

வடக்கு, கிழக்கில் அரச எதிர்ப்பு உணர்வு எந்தளவுக்கு என்றால் போர் முடிவடைந்த உடன் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது போர் காலத்தில் படைகளுக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையே, வடக்கு, கிழக்கு மக்கள் ஆதரித்தார்கள்.

இப்போதும் தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் என்ற மனப்பான்மையே வடக்கு, கிழக்கில் காணப்படுகிறது. அப் பகுதி மக்கள் இன்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பார்க்கிலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நெருக்கமாகவே இருகின்றார்கள். 

மலையகத்தின் வாக்காளர்கள் இதற்கு மாற்றமான முறையையே கையாள்கிறார்கள். அதற்குக் காரணம் மலையகத் தலைவர்கள் பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்துடனும் ஒட்டிக் கொண்டு இருப்பதே. இதனால் மலையக மக்கள் அனேகமாக ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆளும் கட்சியையே ஆதரித்துள்ளனர்.

தொழிற்சங்கங்கள் என்ற அடிப்படையில் சிந்திக்காது மக்கள் தனித்தனியாக முடிவெடுக்கும் நிலை மலையகத்திலும் இருந்தால் அம் மக்களும் வரப் போகும் தேர்தல்களின் போது ஆளும் கட்சியை ஆதரிப்பார்களா என்பது சந்தேகமே.

முஸ்லிம் மக்கள், கடந்த காலங்களில் ஒரு சமூகமாக குறிப்பிட்டதோர் பிரதான கட்சியை சார்ந்திருக்கவில்லை. அவர்கள் பிரிந்து ஐ.தே.க. தலைமையிலான அரசியல் கூட்டுக்களையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டுக்களையும் ஆதரித்து வந்துள்ளனர்.

ஆனால், இம்முறை நிலைமை மாறியிருப்பதாகவே தெரிகிறது. அதாவது மிகச் சிலரைத் தவிர முஸ்லிம்கள் ஆளும் கட்சியை விரும்பவில்லை என்பதே உண்மை.

குறிப்பாக அண்மையில் நடைபெற்ற மத்திய, தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களின் பெறுபேறுகள் அதனையே சுட்டிக் காட்டுகின்றன. கடந்த ஓரிரு வருடங்களில் நாட்டில் பரவிய முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரங்கள் மற்றும் நடவடிக்கைகளின் போது அரசாங்கம் நடந்து கொண்ட விதமே இதற்குக் காரணமாகும்.

ஆனால் ஆட்சியாளர்கள் அதனை புரிந்து கொண்டுள்ளதாக தெரியவில்லை. எனவே தான், முஸ்லிம்கள் ஐ.மசு.முவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த உடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேல் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசியிடம் கேட்டிருந்தார்.  

பொதுவாக சிறுபான்மை மக்கள் இன்று ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால், அவ்வாறு ஆட்சி மாற்றம் இடம்பெற வாய்ப்புக்கள் இருக்கின்றனவா என்பதும் ஆட்சி மாறினாலும் அவர்கள் எதிர்ப்பார்க்கும் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்பதும் பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஆட்சி மாறுமா என்ற சந்தேகம் எழுவதற்கு பிரதான காரணம் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருக்கும் தலைமைத்துவப் போட்டியே. அந்தப் போட்டி சிலவேளைகளில் சில நகைப்புக்குரிய நிலைமைகளையும் உருவாக்குகிறது.

உதாரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தமது தேர்தல் மேடைகளில் பேசவுள்ளார் என அண்மையில் ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறியிருந்தார். அதனை சில பத்திரிகைகள் தமது முன்பக்கத்திலேயே பிரசுரித்திருந்தன.

சஜித் பிரேமதாச ஐ.தே.க.வின் தலைவர்களில ஒருவர். அவர் ஐ.தே.க. தேர்தல் மேடைகளில் பேசுவது செய்தியா? சாதாரண நிலைமைகளின் கீழ் அது செய்தி அல்ல தான். ஆனால்;, ஐ.தே.க. உட்பூசல் எந்தளவுக்கு என்றால் கட்சித் தலைவர்களே அதையும் செய்தியாக கருதுகிறார்கள்.

ஏனெனில், கடந்த காலத்தில் சஜித் பிரேமதாச கட்சியின் பல முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. 2012ஆம் ஆண்டு ஐ.தே.க. தமது மே தினக் கொண்டாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்திய போது பிரேமதாச அதில் கலந்து கொள்ளாது, அன்றே தமது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்காக ஞாபகார்த்த கூட்டமொன்றை கொழும்பில் நடத்தினார். எனவே இப்போது, அவர்; ஐ.தே.க. தேர்தல் மேடைகளில் பேசுவதும் செய்தியாகிவிட்டது.

ஐ.தே.க. தலைவர்கள் தெரிந்திருந்தும் புறக்கணித்து வரும் ஒரு உண்மை என்வென்றால், அவர்கள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டு இருந்தாலும் அரசாங்கம் தேர்தல்களை ஒத்திப் போடப் போவதில்லை என்பதே.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் வெற்றி பெறுவதை விட உட்கட்சித் தேர்தல்களில் வெற்றுபெறுவதே ஐ.தே.க. தலைவர்களின் நோக்கமாக இருக்கிறது போலும். வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால் ஆளும் கட்சியொன்றில் இரண்டாம் நிலையிலாவது இருப்பதை விட எதிர்க்கட்சியில் தலைவராக இருப்பதே மேல் என்று ஐ.தே.க. தலைவர்கள் சிலர் நினைக்கின்றார்கள்.

எனவே, ஹம்பாந்தோட்டையில் தமது கட்சி தோல்வியடைய வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கவின் பிரிவு விரும்புவதோடு, நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் தமது கட்சி தோல்வியடைய வேண்டும் என சஜித்தின் பிரிவு விரும்புவதாக சிலர் நகைச்சுவையாக கூறுகிறார்கள்.

நகைச்சுவையாக கூறிய போதிலும் இதில் ஓரளவுக்கு உண்மை இல்லாமலும் இல்லை. இந்த நிலைமையின் இறுதி விளைவு என்னவென்றால் முழுக் கட்சியே நீண்ட காலமாக தேர்தல்களில் தோல்வியடைந்து வருவதே. இது தற்போதைய நிலையில் சிறுபான்மை மக்களின் விருப்பத்துக்;கு மாறாக அமைந்துள்ளது. அதேவேளை, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பலம் வாய்ந்த எதிர்க் கட்சியொன்று நாட்டுக்கு அவசியமாக இருப்பதால் அதையாவது பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் இருக்கிறது.

ஒரு வகையில் ஐ.தே.க. தேர்தல்களில் தோல்வியடைவதற்கு உட்கட்சிப் பூசல்கள் மட்டுமே காரணமல்ல, மாறாக தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியடைந்து வந்ததன் விளைவே உட்கட்சிப் பூசல்கள் என்றும் கூறலாம். உண்மையிலேயே கட்சித் தலைமையின் பலவீனம் கொள்கை என்பனவற்றை விட தற்போதைய விகிதாசார தேர்தல் முறையும் நிறைவேற்று ஜனாதிபதி முறையுமே ஐ.தே.க.வின் தொடர்ச்சியான தோல்விக்குக் காரணமாகும். தொகுதிவாரி தேர்தல் முறை இருந்தால் எந்தவொரு கட்சிக்கும் தொடர்ச்சியாக 17,18 வருடங்கள் பதவியில் இருக்க முடியாமல் போயிருக்கும்.

கட்சிகளின் கொள்கைகளுக்காக மக்கள் அக் கட்சிகளுக்கு வாக்களிப்பதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வெற்றி பெறக்கூடும் என்று தாம் நினைக்கும் கட்சிக்கே வாக்களிக்கிறார்கள். மாவட்ட வாரியாக தேர்தல் நடைபெறும் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் ஆளும் கட்சிகளுக்கே இந்த வெற்றித் தோற்றத்தை உருவாக்கிக் காட்ட முடிகிறது. ஏனெனில், அவற்றுக்கு அரச வளங்களையும் அரச அதிகாரங்களையும் இதற்காக பாவிக்க முடியும்.

ஒரே கட்சி தொடர்;ச்சியாக நீண்ட காலமாக பதவியில் இருப்பதால் பொதுவாக நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை விட சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகமாகும். ஏனெனில், சிறுபான்மை மக்களை மதியாத கட்சியொன்றின் தலைமையில் அரசாங்கமொன்று அமைந்தால் அந்தக் கட்சியின் ஆட்சியும் நீண்ட காலமாக நிலைத்திருக்கும்.   

இந்தப் பின்னணியில் தான் எதிர்வரும் 20ஆம் திகதி ஊவா மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாகாண சபைத் தேர்தல் பிரதான இரு கட்சிகளுக்கும் மாகாண சபைத் தேர்தலொன்றை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் இறுதி மாகாண சபைத் தேர்தல் இதுவாகும்.

இந்தத் தேர்தலில் ஐ.தே.க வெற்றி பெற்றால் அல்லது மாகாண சபையில் பலமான எதிர்க் கட்சியாக தெரிவு செய்யப்பட்டால் அது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஆளும் ஐ.ம.சு.மு வை வெகுவாக பாதிக்கும். குறிப்பாக ஊவாவில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமையிலான வேட்பாளர் குழுவொன்று தோல்வியடைவதானது ஐ.ம.சு.மு.வுக்கு பலத்த அடியாக அமைந்துவிடும்.

ஏனெனில், ஐ.ம.சு.மு.வின் ஜனரஞ்சகத்தன்மை சரிந்துள்ளதையும் ஐ.தே.க.வின் ஜனரஞ்சகத்தன்மை அதிகரித்துள்ளதையும் அது எடுத்துக் காட்டும். ஐ.தே.க. பதவிக்கு வரப் போகிறது என்றதோர் தோற்றம் உருவாகினால் பெரும்பாலான மக்கள் எதிர்வரும் நாடளாவிய ரீதியிலான தேர்தல்களின் போது அக் கட்சியையே ஆதரிப்பார்கள். கட்சிக் கொள்கைகள் இதில் முக்கியமாவதில்லை. இது தான் வாக்காளர் சுபாவம்.

வாக்காளர்களின் இந்த சுபாவத்தின் காரணமாகவே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை கட்டம் கட்டமாக நடத்துகிறது. அதன் மூலம் முழு அரச பலத்தை பாவித்து ஒரு மாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு அதன் தாக்கத்தால் அடுத்த மாகாண சபையைக் கைப்பற்றி இவ்வாறு தொடர்ச்சியாக மாகாண சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி பின்னர் அவற்றின் தாக்கத்தால் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் வெற்றி பெறுவதே அரசாங்கத்தின் உத்தியாகும். ஐ.தே.க. பதவியில் இருக்கும் போதும் இது நடைபெற்றது.

அரச பலத்தைப் பாவிப்பதற்குப் புறம்பாக ஆளும் கட்சி ஊவாவில் வன்முறையையும் வெகுவாக பாவிக்கிறது. அத்தோடு சிறுபான்மை மக்கள் அதிகமாகவுள்ள பதுளை மாவட்டத்தில் இருந்து மூன்று ஆசனங்கள் குறைக்கப்பட்டு பெரும்பான்மை மக்கள் அதிகமாகவுள்ள மொனராகலை மாவட்டத்துக்கான ஆசனங்களின் எண்ணிக்கை மூன்றால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் ஆதரவை இழந்துள்ள நிலையில் ஆளும் கட்சிக்கு இது பெரும் உதவியாக அமைந்துள்ளது.

விகிதாசார தேர்தல் முறை ஆளும் கட்சிகளுக்கு சாதகமாக இருந்த போதிலும் அதனை அக் கட்சிகள் தமக்கு சாதகமாக பாவிப்பதிலும் ஓர் எல்லை இருக்கிறது என்பதை கடந்த தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலிகளின் போது காணக்கூடியதாக இருந்தது. அவ்விரண்டு மாகாணங்களிலும் ஆளும் கூட்டணி இம்முறை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அந்த மாகாண சபைகளுக்hன முன்னைய தேர்தல்களின் போது அக் கூட்டணி பெற்ற வாக்குகளை விட ஒரு இலட்சம் வாக்குகள் வீதம் குறைந்திருந்தது.

இந்த சரிவு சிலவேளை ஏனைய மாகாணங்களிலும் ஏற்பட்டு இருந்தால் அது ஆளும் கட்சியின் எதிர்க்காலத்தை பாதிக்கும்.
எனவே, ஊவா மாகாண சபைக்கான தேர்தல் ஒரு வகையில் ஆளும் கட்சிக்கு வாழ்வா சாவா போராட்டமாக அமைந்திருக்கிறது போலும்.

(எம்.எஸ்.எம். ஐயூப்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com