Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்ஈழ விடுதலைப் புலிகளின் அழிவிற்கு புலிகளே காரணம்                           

-சாகரன்

யாழ்பாணத்திற்கான தரை வழிப்பாதை திறக்கப்பட்டுள்ளது. இது யாழ்பாணத்திற்கும் இலங்கையின் ஏனைய பாகங்களுக்குமான பொருளாதார, கலாச்சார, தொழில் ரீதியான தொடர்புகளை வலுப்படுத்த உதவும், குறிப்பாக சாதாரண பொது மக்கள் தமது அன்றாட தேவைகளுக்கு இலங்கையின் எப்பகுதிக்கும் இலகுவாகவும் வேகமாகவும் குறைந்த பணம், நேர செலவுடன் சென்று வர உதவும்.

 எவ்வளவு வேகமாக இப்பாதை பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படுகின்றதோ அவ்வளவு வேகமாக திறக்கப்பட வேண்டும். கால் நூற்றாண்டு காலமாக மக்கள் அனுபவித்து வந்த துன்பங்களின் ஒருபகுதி இப்பாதையின் பொது மக்கள் பாவனை மூலம் தீர்ந்து போகும் என்பது வெள்ளிடைமலை. யாழ்பாண விவசாயப் பொருட்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கான நிலமைகள் யாழ்பாண விவசாய உழைப்பாளிகளின் உழைப்பிற்கு வரப்பிரசாதமாக அமையும். இதே போல் கடற்தொழிலாளர்களின் வாழ்வும் வளம் பெறும்.

 இதே போல் வன்னியின் விளைபொருள்களின் யாழ் வருகையும், தென்னிலங்கையின் விளைபொருட்களின் வருகைகளும் நாட்டில் நிலவிவரும்(குறிப்பாக தமிழ் பிரதேசங்களில்) உணவுப்பொருட்களின்  தட்டுப்பாட்டை குறைத்து. வாழ்க்கை செலவையும் குறைத்து பொது மக்களின் வாழ்வை இலகுவாக்கும், மகிழ்ச்சியாக்கும். மேலும் மக்களுக்கு தேவையான மருந்து, ஏனைய அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டையும் குறைக்கும். மக்களுக்கான இயல்பு வாழ்கையை ஏற்படுத்தும்.

இவ் நிலமைகளை ஏற்படுத்த யாவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவார்கள் என நம்புகின்றோம். நிலமைகள் எவ்வாறு மாற்றம் அடைந்தாலும் ஏ9 பாதையின் மூடு விழா தவிர்க்கப்பட வேண்டும்.இதற்கு சகல தரப்பினரும் எதிர்காலத்தில் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும். செயற்படுவார்கள் என்று நம்புகின்றோம்.

யாழ்பாணத்தில் இரவு 7 மணிக்கு மெயில் றெயினில் போடும் கடிதங்கள் அடுத்த நாள் காலையில் இலங்கையின் எப்பகுதிக்கும் செல்லும் நிலமைகள் ஏற்படும். ஏற்படவேண்டும். காலையில் புகைவண்டியில் ஏறி மாலையில் இலங்கை எப்பகுதியில் இருந்தும் எப்பகுதிக்கும் சென்று வரும் நிலமைகள் ஏற்படவேண்டும். இயல்பு நிலமைகள் ஏற்படுவது என்னது தமிழ் மக்களின் பிரச்சனையை முழுமையாக தீர்த்து விடும் என்பதில்லை. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்பதற்கு இது ஒரு ஆரம்ப கட்டமாக அமையும். 25 வருட மோசமான போர் சூழலால் ஏற்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட மோசமான தேவையற்ற இடஞ்சல்களை நீக்க உதவும். இதுவே எம்மக்களுக்கு உடனடித் தேவை.

இன்றய தினம் தினகரன் பத்திரிகையில் பல்வேறு தரப்பினரும் கூறியிருக்கும் கருத்துக்கள் இதனையே கட்டியம் காட்டி நிற்கின்றது. ஆனந்தசங்கரி, சிறிதரன், சித்தாத்தன் போன்ற மக்கள் நலன் விரும்பும் தலைவர்களும், நீர்வை பொன்னையன் போன்ற எழுத்தாளர்களும், சிவஸ்ரீ பாலரவிசங்கரக் குருக்கள் போன்ற மதத் தலைவர்களும், குமாரராஜன் போன்ற முகாமைத்துவ உத்தியோகத்தர்களும், மோகன் சண்முகம் போன்ற பொது மக்களின் கருத்துகள் இவற்றிற்கு சான்று பகற்கின்றன.

நாம் மக்களை நேசிக்கின்றவர்களாக இருப்போமாகின் மேற் கூறியவற்றை நிலை நிறுத்துவதற்காக செயல்படவேண்டும். குறைந்த பட்சம் இயல்பு நிலமைகளை குழப்பாமல் இருந்தாலே போதும்.

இதன் தொடர்ச்சியாக இலங்கையில் உள்ள மக்கள் யாவரும் சம உரிமை பெற்று வாழும் நிலமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை மக்களை விட பிரத்தியேகமான பிரச்சனைகள் உள்ளன என உணரப்பட்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இறுதித் தீர்வு மூலம் இலங்கையில் யாரும் இரண்டாம்தர பிரஜைகள் என்ற நிலையை இல்லாது ஒழிக்க வேண்டும். இதற்கு சமஷ்டியா, மாகாண சபையா, மாநில சுய ஆட்சியா அல்லது வேறு ஒரு வடிவமா? என்பதை எங்கள் நாட்டு சூழலுக்கு ஏற்ப இதய சுத்தியுடனும் சகல தரப்பும் இணைந்து செயற்பட்டு பேசி தீர்வு காணவேண்டும். இது ஒரு இரு நாட்களில் சாத்தியம் இல்லை ஆனால் இவ் இலக்கை நோக்கி பயணிக்கப்பட வேண்டும்.

நோர்வே அனுசரணையுடன் ரணில்-பிரபா இடையே ஏற்பட்ட சமாதான ஒப்பந்தகாலத்தில் எ9 வீதி திறந்தே இருந்தது. பொது மக்கள் பாவித்து வந்தார்கள். ஓமந்தையிலும், முகமாலையிலும் பொருட்களும் பொது மக்களும் இறக்கி ஏற்றப்பட்டு வந்தன. இறக்கும் போதும் ஏற்றும் போதும் பொருட்களுக்கும் பொதுமக்களுக்கும் வரி அறவிடப்பட்டது விடுதலை வேண்டி? நின்றவர்களாலேயே மிகத் தாராளமாக அறவிடப்பட்டன. அறவிடப்பட்ட பணம் தினம் சாக்கு மூட்டைகளில் அடைந்து எடுத்து செல்லப்பட்டன. யாரும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க முடியாது. கேட்டவர்கள் வதை முகாங்களுக்குள் அடைக்கப்பட்டார்கள், சுடப்பட்டு துரோகிகள் ஆக்கப்பட்டார்கள்.

வெளிநாட்டில் இருந்து தாம் பிறந்து தவழ்ந்து ஓடி ஆடித்திரிந்து வாழ்ந்து வளர்ந்த மண்ணை பார்க்கச் சென்றவர்களுக்கு அவர்கள் வாழ்ந்த வெளிநாட்டிலும் ஏ9 வீதியிலும் இரட்டை வரி அறவிடல்கள் சிரித்துக் கொண்டே செலுத்திவிட்டு தமது தாய் மண்ணை தரிசித்துவிட்டு வந்தனர். சிலர் இதனை பகிரங்கமாகவும் பலர் மிக இரகசியமாகவும் விமர்சித்தனர். சிலர் நியாயப்படுத்தினர். ஆனால் வரி அறவிட்டவர்கள் இது எதனையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இவர்கள் எதனைத்தான், எப்போதுதான் காதில் வாங்கிகொண்டார்கள். தாங்கள் எப்போதும் இப்படியே இருக்கக்கூடிய நிலமையே இருந்து வரப்போகின்றது என்று எதேச்சாரமாக செயல்பட்டனர். நிலமைகள் மாறும் என்றோ ஒரு நாள் மக்களால் நாம் விரட்டி அடிக்கப்படுவோம் மக்களை அடக்கிய எமது துப்பாக்கிகளை மக்களே முறித்தெறிவார்கள் அல்லது முறித்தெறிய உதவுவார்கள் என்று இந்த மனித குல விரோதிகள் எண்ணியது இல்லை. எண்ணுவதும் இல்லை எண்ணப்போவதும் இல்லை.

எத்தனை கொலைகள் செய்தார்கள் எவரைப் பேச விட்டார்கள் எவரை செயல்பட விட்டார்கள். எதனை சரியாக செய்தார்கள். இவர்களுக்கு எத்தனை வாய்ப்புகள் எதனையாவது குறைந்த பட்டசமாவது சரியாக பயன்படுத்தினார்களா? பயன்படுத்த முற்பட்டார்களா? இந்தியாவும். சர்வதேசமும் உங்களுக்கான ஏக போகத்தையும் இராஜதந்திர அந்தஸ்தை தந்தார்கள் அல்லவா? எதையாவது சரியாக கையாண்டீர்களா? மாறாக மாற்று கருத்துகளுக்கு துப்பாக்கி வேட்டு வழங்கி கொலை வெறிபிடித்து அலைந்தீர்கள் அல்லவா?

சுனாமி என்றும், புனர்வாழ்வு என்றும், அவசர நிதி என்றும், தேசியத்தலைவரின் விசேட வேண்டுகோள் என்றும் புலம்பெயர் மக்கள் வாரி வழங்கியதை என்ன செய்தீர்கள்? ஊரில் இடம் பெயர்ந்த மக்களுக்கு ஒரு குடிசையேனும் கட்டி கொடுத்தீர்களா? ஒரு வேளை கஞ்சியேனும் ஊத்தினீர்களா? மக்கள் மந்தைகள் போல் வீதிகளில் நடந்து அலைந்த போதும் மரங்களின் மீது படுத்துறங்கிய போதும் நீங்கள் சொகுசு வாகனங்களிலும் குளிர் ஊட்டப்பட்ட அறைகளிலும் சொகுசு கண்டீர்கள்.

உங்கள் பிள்ளைகளை காண வெளிநாட்டு பயணங்களும், உங்களுக்கு மட்டும் சிகிச்சை, பொருட்கள் வாங்குதல் என்று ராஜதந்திர கடவுச்சீட்டுடன் திரிந்தீர்கள் உங்கள் குழந்தைகளின் நல்வாழ்வை மட்டும் உறுதிப்படுத்தும் வெளிநாட்டு படிப்புகளுக்கு மட்டும்  உங்கள் குழந்தைகளை அனுப்பின்னீர்கள். யாரும் கேட்டால் அப்படி இல்லை என்றீர்கள். தடயங்களுடன் நிருபித்தால் தவறு என்ன? புத்திசாலிகளுக்குதான் வெளிநாட்டு படிப்பு என்றீர்கள். உங்கள் பிள்ளைகள் மட்டும்தான் புத்திசாலிகளா? வாய்ப்பு இருந்தால் வசதி இல்லாதவன் பிள்ளையும் புத்திசாலித்தனத்தை நீருபிப்பான். வசதி வாயப்;பு இல்லாதவன் சண்டையில் பலியிட உங்கள் பிள்ளைகள் மட்டும் வெளிநாட்டு படிப்பிற்கு அனுப்பினீர்கள்.

இன்றை ஏ9 பாதையின் இழப்பிற்கு வேறு யாரும் காரணம் இல்லை நீங்களே காரணம். உங்கள் அமைப்பின் முதல் தலைவர் செட்டியை கல்வியங்காட்டில் வைத்து தற்போதைய தலைவர் கொன்ற போதே இதற்கான அத்திவாரத்தை போட நீங்கள்  ஆரம்பித்து விட்டீர்கள். இதன் பின்பு சுந்தரம் என்று ஆரம்பித்து அமின், றேகன் என்று தொடர்ந்து சிறிசபாரத்தினம் பத்மநாபா அமிர்தலிங்கம் என்று தடயங்கள் பதித்து ராஜீகாந்தி என்று வெளிநாட்டுத் தலைவர்கள் என்று யாரையும் விடவில்லை. இதன் பின்பு பிரேமதாச என்ற உங்கள் (இந்திய படைக்காலத்து)மீட்போனை? விட்டா வைத்தீர்கள்? புத்திஜீவிகள் அதிபர் ஆனந்தராஜ, விரிவுரையாளர் ராஜினி, நீலன், கேதீஸ்வரன் என்று தொடர்ந்தது உங்கள் துப்பாக்கி கைங்கரியங்கள் இன்றைய நிலமை உங்களுக்கு ஏற்பட பெரிதும் உதவின.

இது மட்டுமா ஆண்டாண்டு காலமாக எங்களுடன் ஒருமித்து வாழ்ந்த முஸ்லீம் சகோதரர்களை ஒரு இரவில் அடித்து விரட்டியும், தொழுகையின் போது துப்பாக்கியால் மரண சாதனம் எழுதி சாதனை புரிந்ததாக தம்பட்டம் அடித்தும், 1985 ம் ஆண்டு அனுராதபுரத்தில் உறக்கத்தில் இருந்த சிங்களப் பொது மக்களுக்கு துப்பாக்கியால் எல்லாளனைக் காட்டி மகிழ்ந்தும் சர்வ தேசத்திடம் நீங்கள் யார் என்பதை சாட்சியப்படுத்தினீர்களே! இதற்கெல்லாம் இன்று அனுபவிக்கின்றீர்கள்!! தெய்வம் நின்று கொல்லும் என்பது இது தானோ?

நீங்கள் திருந்துவீர்கள் என்ற நம்பிக்கை என்றும் எமக்கு ஏற்பட்டதும் இல்லை ஏற்படப்போவதும் இல்லை. அதே போல் உங்கள் அழிவிற்கான ஆரம்பம் எப்போதே ஆரம்பித்து விட்டாலும். இன்று உங்களுக்கு சேடம் இழுக்கும் நிலமை ஏற்பட்டு விட்டது. வெகு விரைவில் புலிப் பாசிசத்திற்கு சங்குதான்.

(சாகரன்) (Saakaran)

தை 09, 2009

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com