Contact us at: sooddram@gmail.com

 

ஒபாமா முடி சூட்டத் தயார்! பிரபாகரன் ஏற்கத் தயாரா?

-சாகரன்

அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா ஜனவரி 20, 2009 அன்று பதவிப் பிரமாணம் செய்தார். முதன் முதலாக இன்று உலகின் ஒரே ஒரு வல்லரசாக விளங்கும் அமெரிக்காவிற்கு, கறுப்பினத்து தலைவர் ஒருவர் அமெரிக்காவின் அதியுயர் பதவிக்கு வந்துள்ளார். உலகில் உள்ள யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளாராக கிலாரி கிளிங்ரனை எதிர்த்து போட்டியிட்டு எவரும் எதிர்பார்காத வகையிலும் ஒபாமா வெற்றி பெற்றார். இவ் வெற்றியை உலக மக்கள் மட்டுமல்ல அமெரிக்க மக்களே எதிர்பார்க்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனநாயகக்கட்சி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட வெற்றியே அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா வருவதற்கு பெரிதும் காரணம் என்றால் மிகையாகாது. இவ்வெற்றியை அடைவதற்கு ஜனநாயகக் கட்சியில் அங்கம் வகிக்கும் ஆளும் வர்க்கம் வழங்கிய அங்கீகாரமே காரணம் ஆகும். இவ் ஆளும் வர்க்;கம் கிலாரி கிளிங்ரனை விட ஒபாமாவை ஜனாதிபதித் தேர்வில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெறுவதற்கு சரியான தேர்வு என தீர்மானித்தே செயல்பட்டனர்.

இதன் மறு பக்கத்தில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியின்றி என்று கூறுமளவிற்கு மிக இலகுவாக மைகெய்ன் தெரிவு செய்யப்பட்டார். இவர் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யும் கால கட்டங்களில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ஒரு புஷ் குடும்ப உறுப்பினர் போலவே செயல்படுவேன் என வெளிக்காட்டிக் கொண்டார். மீண்டும் தமது வியாபாரங்களுக்கு இடைஞ்சலாக காணப்படும் நாடுகள், நாட்டுத் தலைவர்கள், தனி நபர்கள் மீதான கோபத்திற்காக ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளின் மீது புஷ் குடும்பம் ஏற்படுத்தியது போன்ற ஆக்கிரமிப்பு யுத்தம் செய்வேன் என்றே பல இடங்களில் கோடிட்டு காட்டினார். இவரின் இப் போக்கையும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினுள் இருக்கும் மிதவாதிகள் விரும்பவில்லை.

இதற்கான முக்கிய காரணம் இவ் அமெரிக்க ஆளும் வர்க்கம் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற யுத்தங்களுக்கு முன்பு தங்களுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி உலகின் எம் மூலைக்கும் விரும்பிய நேரத்தில் விரும்பிய வகையில் உல்லாசப் பயணம் மேற்கொண்டு வருவதற்கான நிலமைகள் இருந்தன. ஆனால் புஷ் குடும்ப போர் நடவடிக்கைகள் இவை எல்லாவற்றையும் சுத்தமாக ஒழித்து விட்டது. கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில்தான் இவர்கள் அமெரிக்காவிற்கு(ஏன் அமெரிக்காவிற்குள்ளும்) வெளியே செல்லக்கூடிய நிலமை ஏற்பட்டது. பாதுகாப்பை உசாதீனம் செய்தால் வெளிநாடுகளில் இருந்து வீடு திரும்புவது கஷ்டம். பின்;லேடன் வகையறாக்கள் இதில் கில்லாடிகள் யாரை எவ்விடத்தில் எந்நேரம் எப்படி மடக்க வேண்டும் என புனிதப் போரின் செயல் முறையால் நடைறைப்படுத்தி முடிக்;கும் திறன் கொணடவர்கள்.

அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு கிடைத்த இவ் இடைஞ்சல் அவர்களை பெரிதும் எரிச்சல் ஊட்டியது. அவர்கள் தாங்கள் அமெரிக்காவிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஓர் சிறைக் கைதிகள் போல் நடமாடுகின்றோம் என்ற உணர்வு அலைக்குள் தள்ளப்பட்டனர். எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படியே இருக்க முடியும். எனவே புஷ் குடும்ப அரசியல் போன்ற நிலமை இனி வேண்டாம். அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் 'சண்டியர்களை' இதில் தாம் முன்பு எதிர் பார்த்ததை போல் மிக இலகுவில் சில வருடங்களில் அடக்கி ஒழிக்க முடியவில்லை, அடக்கி ஒழிக்கவும் முடியாது. இதில் அந் நாட்டு மக்களும் சம்மந்தப்பட்டு இருக்கின்றனர். (கவனிக்க இவ் ஆளும் வர்க்கம் ஆரம்பத்தில் அமெரிக்காவின் சண்டித்தனத்திற்கு எண்ணை ஊத்தி ஆதரவு அளித்தவர்கள்). இப்படியே புஷ் குடும்ப அரசியல் தொடர்ந்தால உலகம் சுற்றி உலகைச் சுற்றும் உல்லாசம் கிடைக்காமல் போய்விடும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இதற்கான ஓர் வேலையை ஆரம்பித்தே ஆக வேண்டும் எனத் தீர்மானித்தனர்.

இவற்றின் வெளிப்பாடுதான் புஷ் குடும்ப ஆட்சியை ஓழிக்க புறப்பட்ட செயற்பாடு. இதில் அவர்களுக்கு கிடைத்த புத்திசாலி 'ஆடு' ஒபாமா. மற்றபடி அமெரிக்க ஆளும் வர்க்கம் திருந்தி விட்டது என யாரும் கனவு கண்டால் அது பொரிமாத்தோண்டி கதையாகத்தான் முடியும். அல்லது கறுப்பு இனத்தவர்களை சம உரிமையுடன் ஏற்கும் வெள்ளை இன மக்களின் மனங்களில் எற்பட்ட மாற்றமும் அல்ல.

இவ் வெற்றி ஒபாமா என்ற தனி மனிதனின் புத்திசாலித்தனமான (தனது பதவி ஏற்பின்போதும் ஒபாமா தனது புத்திசாதுர்யத்தை, நேர்த்தியான செயற்பாட்டை பிரதம நீதி அரசரின் பிழையான உறுதி மொழி வாசிப்பின் போது பிழையை திருத்தி வாசிக்க வைத்ததன் மூலம் காட்டிக் கொண்டார்) செயற்பாட்டில் அமெரிக்க மக்கள் வைத்த தனிப்பட்ட நம்பிக்கiயினால் ஏற்பட்ட வெற்றி மட்டுமல்ல அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் விருப்பிற்கும், உடனடித் தேவைக்கும் தேவைப்பட்ட வெற்றியும் கூடவாகும்.

உலகத்தின் பொலிஸ்காரனாக அமெரிக்கா தொடர்ந்தும் செயல்பட விரும்புவதை ஒபாமா தனது பதவி ஏற்பு வைபவத்தில் குறிபிட்டதை பாருங்கள்

'...பெரிய நகரங்களிலிருந்து சிறிய ஊர்கள் வரை, உலகின் எல்லாப் பகுதியிலிருந்தும் இந்தப் பதவியேற்பு விழாவைப் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் அரசுகளுக்கும் ஒரு விடயத்தைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழ விரும்பும் ஒவ்வொரு ஆடவருக்கும் மகளிருக்கும் குழந்தைக்கும் நாட்டுக்கும் அமெரிக்கா நல்ல நண்பனாக இருக்கும். இதற்காக உலக அரங்கில் அனைத்து நாடுகளுக்கும் தலைமைப் பொறுப்பு ஏற்க அமெரிக்கா தயார்.....'

அவரின் பேச்சை மீண்டும் ஒரு முறை வாசிக்கவும் இதில் உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறி இருந்தால் நாம் வேறுவிதமாக பார்க்க வேண்டி இருக்கும் மாறாக அனைத்து நாடுகளுக்கும் தலைமைப் பொறுப்பபை ஏற்கத் தயார் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க பொலிஸ்காரத்தனத்தை கவனிக்க. இணைந்து செயற்படுவது என்பது வேறு தலைமை பொறுப்பை தானே கொடுப்பேன் எனப் பொலிஸ்காரத்தனமாக நடக்க முயல்வது என்பது எதேச்சாகாரம்

உலகத்தின் பொலிஸ்காரனாக அமெரிக்கா மீணடும் மீண்டும் செயல்படவே விரும்புகின்றது. உலகில் உள்ள வளங்களும், வாய்ப்புக்;கள் தமக்கே முதன்மையாக படைக்கப்பட வேண்டும் எஞ்சும் எச்சில்கள்தான் ஏனையவருக்கு சொந்தம் என்ற அமெரிக்க ஏகபோக சிந்தனையில் மாற்றம் நிகழ்ந்து விட்டது என்று யாரும் பகற் கனவு கண்டால் அது தவறான முடிவு என வெகு சீக்கிரத்தில் உணர்வீர்கள்.

போர்களினால் வெறுப்படைந்த உலக நாடுகள் போர்கள் அற்ற ஓர் சூழலை விரும்புகின்றன. இதற்காக அமெரிக்காவுடனான பேச்சுக்களில் 'அ'  கூட ஆரம்பிக்க முடியாத நிலமை புஷ் ஆட்சி காலத்தில் உலக நாடுகளுக்கு இருந்தது. இதனால் ரொம்பவும் விரக்தி அடைந்திருந்தனர் உலக நாட்டுத் தலைவர்கள். இவர்களும் புஷ் மாதிரி(ஆழனநட) ஆட்சியை வெறுத்தே இருந்தனர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று பயந்தே இருந்தனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்நிலமை ஆரம்பித்து புஷ் ஆட்சிக்காலத்தில் வேப்ப மரத்தின் உச்சிக்கு சென்று விட்டது என்றால் மிகையாகாது.

எனவே இவர்களும் அமெரிக்காவில் ஒரு மாற்றத்தை விரும்பினர். அதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் செயல்பட்டனர். இவ்வாறாக அமெரிக்காவிற்கு உள்ளேயும், வெளியேயும்; நிகழ்ந்த பிரச்சாரங்கள்; ஒபாமாவின் வெற்றியை உறுதி செய்தது மட்டுமல்லாமல் அவருக்கு பெரு வெற்றியையும் தேடித்தந்தது.

ஆனால் அமெரிக்க ஆளும் வர்க்கத்திடமும், ஏனைய முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கத்திடமோ ஏற்கனவே இருந்த வளர்முக நாடுகளின் வளர்ச்சிகளை கட்டுப்படுத்தல், மட்டுப்படுத்தல் சோசலிசம் என்பது வேண்டத்தகாத ஒன்று, ஏழை நாடுகள் தொடர்ந்தும் ஏழை நாடுகளாகவே இருக்க வேண்டும், பலம் குறைந்த நாடுகளின் வளங்களில் ஒரு பகுதியை எங்களுக்கு கப்பமாக செலுத்த வேண்டும் என்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை.

ஒபாமா தனது பதவி ஏற்பு வைபவத்தில் கம்யூனிசத்தையும் பற்றி கூறிய கருத்தை பாருங்கள். வெகு நேர்த்தி?யாக பாசிசத்தையும் கம்யூனிசத்தையும் ஒரே தட்டில் போட்டு சந்தோசப்படுவதை பாருங்கள் 

'...நமக்கு முந்தைய தலைமுறையினர் பாசிசத்தையும் கம்யூனிசத்தையும் ஏவுகணைகள், இராணுவ டாங்கிகளால் மட்டும் அல்ல பிற நாடுகளுடனான வலுவான கூட்டணிகளாலும் தங்களுடைய உறுதியான சித்தாந்தங்களாலும்தான் வெற்றி கொண்டார்கள்......'

எனவே ஒபாமாவின் தலமையின் கீழும் அமெரிக்கா ளுயஅந ழடன அமெரிக்கா ஆகத்தான் இருக்கப் போகின்றது. இஸ்ரேலின் நண்பன், இஸ்ரேல் 'ஏதும்' செய்தால் அந்த 'ஏதும்' எப்போதும் சரி. பாலஸ்தீனமும் ஏனைய அதன் ஆதரவு நாடுகளும் எப்போதும் தவறே செய்கின்றன. பாகிஸ்தான் குண்டை இந்தியாவில் எப்பகுதியில் வெடித்தாலும் கண்டும் காணாமல் இருப்பது அல்லது தனக்கும் இந்தியாவிற்கும் உள்ள நட்பை? பாவித்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் நெற்றிக்கண்ணை திறக்காமல் பார்த்துக் கொள்வது. மத்திய, தெற்கு அமெரிக்க நாடுகளில் உள்ள சோசலிச நாடுகளில் குழப்பங்களை விளைவிப்பது அல்லது அந்த நாட்டு மக்கள் தலைவர்களை கொலை செய்வது. முன்னாள் சோசலிச ஐரோப்பிய நாடுகள், ரஷ்சியாவின் மீண்டும் எழுந்த வரும் முயற்சிக்களுக்கு ஆப்பு வைப்பது. இந்தியா, சீனாவின் அமிர்தமான வளர்சிக்கு இடஞ்சல் கொடுப்பது போன்ற செயற்பாடுகளை தொடரத்தான் போகின்றது.

ஓபாமாவின் செயற்பாட்டடைத் தீர்மானிக்க போகின்றவர்கள் அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தினரே. ஓபாமா என்ற தனி நபர் அல்ல. ஒபாமா என்ற தனி மனிதரிடம் இருக்கும் நற்குணங்களை அமெரிக்க ஜனாதிபதிக்கு இருக்கும் 'வீற்ரோ' அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு எதிராக செயல்படுத்தி சாதாரண பொது மக்களுக்கு ஏதும் நன்மை செய்ய புறப்பட்டால் மாட்டின் லூதர் கிங்கிற்கு ஏற்பட்ட நிலமையே ஏற்படும்.

எனவே அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முதுகு எலும்பு உடைத்து நொருக்கப்படும்வரை தனி மனிதன் ஒபாமாவால் ஏதும் பெரிய மாற்றங்களை செய்ய முடியாது. ஆனால் சில விடயங்களில் ஒரு நெகிழ்வான அணுகு முறையை நாம் காணக்கூடியதாக இருக்கும். இது பொதுவாக அமெரிக்க ஜனநாயக்கட்சி ஆட்சியில் காணப்படுவதுண்டு.

ஒபாமா தனது பதவி ஏற்பு வைபவத்தில் அமெரிக்க பொருளாதாரம் (தரகு சந்தை அல்லது கடதாசிப் பொருளாதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளதை பாருங்கள்.

'.....செல்வத்தை உருவாக்கும் சக்தியும் அதை விரிவுபடுத்தும் சுதந்திரமும் நமக்கு இருக்கிறது என்றாலும் சந்தையைக் கட்டுப்படுத்த ஆள் இல்லாவிட்டால் அது ஒரு நாள் கட்டுமீறி விடும் என்பதையே இப்போதைய நெருக்கடி நமக்கு உணர்த்துகிறது...'

அமெரிக்க ஆளும் வர்க்கத்ததை மீறி சந்தைப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த தனி மனிதன் ஒபாமாவால் முடியமா?

மேலும் அமெரிக்க பொருளாதாரம் என்றும் இல்லாதவாறு அதலபாதாளத்தில் விழுந்துள்ளது. இதற்கு பல காரணங்களைக் கூறினாலும்

1. தேவையற்ற யுத்தத்தினால் ஏற்பட்ட செலவினங்கள், அழிவுகள்

2. உற்பத்தி சார்ந்த பொருளாதாரமாக இல்லாமல் பணம் ஈட்டும் தரகுச் சந்;தை சார்ந்த பொருளாதாரமாக அமெரிக்க பொருளாதாரம் பெரிதும் மாறி இருந்தமை.

(இதன் அர்த்தம் அமெரிக்கா உற்பத்தியில் ஈடுபடவில்லை என்பது அல்ல, தரகு சந்தை அல்லது கடதாசிப் பொருளாதாரம் என்று இதனைக் கூறலாம்)

போன்றவை பெரிதும் காரணமாக அமைகின்றன.

இதன் வெளிப்பாடுதான் உலகப் பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் அமெரிக்க போன்ற நாடுகளில் பூச்சியத்துக்கு கீழே குறைவாக இருக்கும் என பொருளாதார வல்லுனர்களால் எதிர்வு கூறப்படும் அதே வேளை இதற்கு மாறாக இந்தியா, சீனா போன்ற உற்பத்தி சார்ந்த பொருளாதார வளர்ச்சி நாடுகளின் இவ்வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சி பூச்சியத்திற்கு மேலே வளரும் நிலையிலேயே இருக்கப்போகின்றது என போருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

எனவே அமெரிக்கா தனது பொருளாதாரக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். அதாவது தமது பொருளாதாரத்தை உற்பத்தி சார்ந்த நேரடியாக உழைப்பில் ஈடுபட்டு பொருள் ஈட்டும் பொருளாதாரமாக மாற்ற வேண்டும். பதிலாக யாரும் உற்பத்தி செய்யும் பொருட்களில் தரகு செய்து பொருள் ஈட்ட மேலும் மேலும் முனைந்தால் இதுதான் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியின் திறவு கோலாக அமையும். உற்பத்தியில் நேரடியாக ஈடுபடாமல் தரகு வேலை மூலம் பெரும் பொருள் ஈட்டிய அமெரிக்க ஆளும் வர்க்கம் தன்னை இலகுவில் மாற்றிக் கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது. டார்வினின் கூர்ப்பு தத்துவம் சரியாயின் மாற்றிக் கொள்ள வேண்டும் அன்றேல் டைனசோருக்கு ஏற்பட்ட நிலமையே ஏற்படும்.

இலங்கைப் பிரச்சனையில் அமெரிக்காவின் செயற்பாடு எப்படி இருக்கும். வழமை போல் இப்பிரச்சனையை இந்தியாவினூடாகவே கையாள முனையும். சோவியத் யூனியன் இன்று இருந்தாலும் இதுதான் நிலமையாக இருக்கும். இதனை நாங்கள் யாபேரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவுடன் நாம் நட்பு கொள்ளாவிடினும் பகை கொள்ளாமல் இருத்தல் நலம். இந்து சமுத்திரப்பிராந்தியதில் உள்ள சிறிய நாடுகளின் விவகாரங்களை உலக நாடுகள், அப்பிரதேசத்திலுள்ள (ஏன் உலகெங்கிலும் உள்ள) மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கூடாகவே அணுக முயலும். இந்தியாவைத்தவிர வேறு எந்த மேற்குலகு நாடுகளும் இலங்கைப்பிரச்சனையில் நேரடியாக தலையீடு செய்தால் அது இந்தியாவின் அணுகு முறையை விட மேலும் சிக்கலான நிலமைகளையே இலங்கையில் ஏற்படுத்த வாய்ப்புக்கள் அதிகம்.

தனிப்பட்ட முறையில் இலங்கைத் தமிழர் தரப்பை எடுத்துக் கொண்டால் மற்றய எந்த விடுதலை அமைப்புக்களையும் விட புலிகளையே அமெரிக்கா விரும்பும். காரணம் ஏனைய எல்லா அமைப்புக்களும் தம்மை ஏதோ ஒரு வகையில் சிவப்புக்கள் என்று இனங்காட்டிக் கொண்டவை. அமெரிக்காவின் முதல் எதிரி சிவப்பு பின்புதான் பின்லாடன் எல்லாhம். தனக்கு அடங்கி கப்பம் கட்டும் தெருச்சண்டியனாக இருந்தவரைக்கும் அமெரிக்காவின் உற்ற நண்பன், விருந்தினர் சதாம் குசைன். இதே போல் புலிகளும், புலிகளும் இருந்த வரைக்கும் எல்லாம் சுமூகமாகத்தான் போய்கொண்டு இருந்தது. புலிகள் வாய்பை சரியாக தொடர்ந்து பயன் படுத்தவில்லை(எப்பதான் எதில்தான் பயன் படுத்தினார்கள்). இன்னும் காலம் கடந்து விடவில்லை என்றே ஊர்க்குருவி கூறுகின்றது. ஆனால் ஒன்று அப்படி காலம் கனிந்து வந்தால் புலிகளுக்கான விருந்தை அமெரிக்கா இந்தியாவின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டும்;தான் வழங்கும். புலிகள் தயாரா?

நீங்கள் தயார் என்றால்? ஒபாமா தயார்! இல்லையேல் இன்னொரு சிவப்புத்துணி போர்க்காத கந்தசாமியையோ அல்லது சுப்பிரமணியத்தையோ உங்களுக்குள்ளேயோ அல்லது வெளியேயோ ஒபாமா இந்தியா அனுசரணை இருந்தால் மட்டும்தான் தேடிப்பிடிப்பார். (பிரபாகரன் ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்படாவிட்டால் தலைவருக்குதான் முடி சூட்டு விழா. என்ன செய்ய அந்த துன்பியல் நிகழ்வு நடந்து விட்டதே! கூடவே உலகின் 4 வது மிகப்பெரிய இராணுவத்தை அடித்து விரட்டிய வீராப்பு பேச்சுக்கள் அவ்வப்போது கூறி புளகாங்கிதம் அடைகின்றீர்கள்.) உங்களுக்குதான் அவசரம். அமெரிக்காவிற்கு ஒன்றும் அவசரம் இல்லை. இலங்கையில் என்ன எண்ணை கிணறா ஊற்றெடுக்கின்றது. திருகோணமலையில் வெறும் சுடு நீரும், தண்ணீர்ஊற்று கிராமத்து குளத்தில் தண்ணீரும்தான் ஊற்றெடுத்து பாய்கின்றது. தளம் அமைக்க பாகிஸ்தான் இன்று வரை மறுப்பும் தெரிவிக்கவில்லைதானே! இலங்கையை விட அமெரிக்காவிற்கு புஷ் ஆரம்பித்து வைத்த ஆப்பிழுத்த குரங்கு சமாச்சாரம் நிறைய ஈராக், ஆப்கானிஸ்தானில் உள்ளதே!

பிரபா - ரணில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட பின்பு சித்திரை 10, 2002 இல் கிளிநொச்சியில் புலிகளினால் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் மகா நாட்டில் பிரபாகரன் தோன்றினார். பத்திரிகையாளர்களின் கேள்விகள் எல்லாவற்றிற்கும் தான் சுயமாக பதிலளிக்காது பாலசிங்கத்தின் முகத்தை திரும்பி பார்த்ததன் மூலம் தேசியத்தலைவர் ஒரு 'வெத்து' தோட்டா என்பதை உலகிற்கு பறைசாற்றினார். இதன் மூலமும் தனக்கு முடியேற்கும் தகமை இல்லை என்பதை உலகிற்கு எடுத்து இயம்பினார்.

இதே போல் நோர்வேயின் அனுசரணையுடன் உலகெங்கும் சென்று இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு நீங்கள் பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வை காணுவதில் விருப்பமற்றவர்கள், ஆயுதம் மட்டும் ஏந்தும் விருப்புடைய மன நோயாளிகள், நம்பத்தகுந்த பெயர் வழிகள் அல்ல என்பதை சர்வதேச சமூகத்திடம் உங்களை நீங்களே துயில் உரிந்து காட்டினீர்கள். இப்போது சர்வ தேசம் உங்களை நம்பத்தயாராக இல்லை. இதனால் உங்களில் ஒருவர் முடியை ஏற்கும் தகுதியையும் இழந்துள்ளீர்கள். இதன் பலாபலன்களைத்தான் இப்போது அறுவடை செய்கின்றீர்கள். ம்.....பார்ப்போம்.

(சாகரன்) (Saakaran)

தை 24, 200

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com