Contact us at: sooddram@gmail.com

 

என் மனவலையிலிருந்து....

நிஜ வரலாற்றைப் பதிவு செய்வோம்

(சாகரன்)

ஈழ விடுதலைப் போராட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. மிதவாதத் தலமைகள் தமிழ் காங்கிரசில் இருந்து ஆரம்பித்து இவர்கள் வழி சரி இல்லை என்று புறப்பட்ட தமிழரசுக் கட்சியும் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி சுகபோக வாழ்வை தமதாக்கி கொள்ளும் வழியில் தம்மை சுருக்கிக் கொண்டனர். இளைஞர் அணியினரைத் திருப்திப்படுத்தும் கோஷங்களையும்இ சிறிய சாத்வீக போராட்டங்களையும் நடத்தினர். மறுபுறத்தில் கொழும்பு வாழ்க்கைஇ தமது பிள்ளைகளின் எதிர்கால நலன்களின் அடிப்படையில் பிள்ளைகளை இலங்கை அரசின் ஆதரவுடன் வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களின் வாழ்கையை வழப்படுத்தியது என்று மட்டும் காலத்தை ஓட்டினர். தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசுக்கு எதிராக எமது உரிமைகளை வென்றெடுப்போம் என்று மட்டும் பேசிக்கொண்டு மாறி மாறி இலங்கையில் ஆட்சிப்பீடத்திலிருந்த அரசுகளுடன் கொழும்பில் 'நல்ல' கள்ள உறவில் இருந்ததையே எமது மிதவாதத் தலமைகள் கொண்டிருந்தனர். இன்றும் அப்படியே.

1970 களில் இளைஞர்களின் எழுச்சியை தமது பாராளுமன்ற கதிரைகளுக்கு உரமாக்க உருவாக்கப்பட்டதுதான் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இதனைத் தொடர்ந்த வட்டுக்கோட்டை தீர்மானமும் ஆகும். ஆனால் இளைஞர்களை இது நீண்ட காலத்திற்கு திருப்திப்படுத்த உதவவில்லை. உருவானது இளைஞர்களைப் பெரும் பகுதியாக கொண்ட ஆயுதம் ஏந்திய விடுதலை அமைப்புக்கள். 5 பெரிய அமைப்புகளும் பல சிறிய அமைப்புக்குகளும் தம் அளவில் போராட்டங்களை நடாத்தி வந்தன. இலங்கை அரசு திணறித்தான் போய்விட்டது. இவர்களை தனியாக்கி அழித்தொழிக்க முயற்சித்தது. அப்போது பாதுகாப்பு அமைச்சராக ஜே.ஆர் அரசியல் இருந்த லலித் அத்துலத் முதலி அடிக்கடி பாராளுமன்றத்திலும், வெளியிலும் கூறுவார் ஈழ விடுதலை இயக்கங்களுடையே உள்ள ஒற்றுமையை குலைப்பேன், அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்துவேன்,  இதனூடாக ஈழ விடுதலை அமைப்புக்களை தனிமைப் படுத்துவேன், தொடர்ந்து இவர்களை பலவீனப்படுத்துவேன், பின்பு இவர்களை அழித்தொழிப்பேன் என்று. இவற்றை இன்றும் நீங்கள் இலங்கை பாராளுமன்றக் பதிவுகளில் பார்க்கலாம்.

இதனை அத்துலத் முதலியின் இந்த சூழுரைக்கு செயல்வடிவத்தை கொடுத்தவர்கள் புலிகளே. இறுதியில் புலிகளை வென்ற? பெருமை என்னவோ மகிந்த தட்டிச் சென்றது என்பது புதிய வரலாறு. தமிழ் ஆயுத அமைப்புக்களில் புலிகள் செயற்படுத்திய மாற்று அமைப்புக்களை ஆயுத ரீதியில் அழித்தொழிக்க முற்பட்டமை இலங்கை பேரினவாத அரசு எதிர்பார்திருந்த வேலைத்திட்டத்தை இலகுவாக்கியது. இந்த விடுதலைப் போராட்டத்தில் தமிழர் தரப்பு இழந்ததே அதிகம். ஏதோ கிடைத்தது மகாண சபை மட்டுமே. இதனை ஆரம்ப புள்ளியாக கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகரும் சாணக்கிய அணுகு முறையை பத்மநாபா தலமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். மேற்கொண்டது.

ஈபிஆர் எல்எவ் தலமையில் அமைந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை இல்லாது ஒழிக்க தமிழர் தரப்பில் புலிகளை மாகாண சபைக்கெதிரான ஆயுத செயற்பாட்டிற்காவும்இ டக்ளஸ் ஐ ஈபிஆர்எல்எவ் தனது அமைப்பிலிருந்து நீக்கிய பின்பு தமிழ் நாட்டுச் சிறையிலிருந்து மீட்டு அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த பாவித்ததும் அன்றைய வரலாறு. அன்றைய கால கட்டத்தில் எல்லாம் டக்ளஸ் பிரேமதாசாவை 'அவர் ....அவர்... ' என்று பவ்வியமாக அழைப்பதும் அவர் தமிழர்களின் பிரச்சைனையைத் தீர்பார் என்று பட்டி தொட்டியெல்லாம் சொல்லித்திரிந்த வரலாற்றையும் மறைக்க முயலக் கூடாது. டக்ளஸின் இந்த 'அவர்.... அவர்.....' என்ற கனம் பண்ணும் செயற்பாட்டிற்கே பிற்காலத்தில் இவருக்கு அமைச்சர் பதவிகள் கிடைத்ததை அவர்கள் கூட மறுதலிக்க முடியாது. பின்பு தொண்டமான்போல் ஆட்சி மாற காட்சி மாறி புதிய அரசில் மீண்டும் மீண்டும் அமைச்சராக வலம் வருவது என்பது நாம் காணும் தற்போதைய காட்சிகள்.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை  இல்லாமல் செய்ததில் புலிகள், பிரேமதாச அரசு, இவற்றிற்கு அனுசரணயாக கலைஞர் கருணாநிதி செயற்பட்டதே வரலாறு. இந்திய இராணுவத்துடனான வலிந்த யுத்தம் ஒன்றை அமெரிக்க சார்பு ஐ.தே. கட்சி விரும்பியது போல் புலிகள் நிறைவேற்றி விட்டனர். அன்றை ரஷ்ய சார்பு காங்கிரஸ் அரசை பழிவாங்க மேற்குலகம் கையாண்ட கருவி வி.பி.சிங் போன்ற திடீர் பிரதமர். இதன் பின்பு எல்லாம் புலிகள் என்ற நிலையில் இன்னும் வீச்சாக மேற்குலகம் விரும்பியதை செயற்படுத்தினர். சோசலிசம் என்ற வாடையை இல்லாமல் செய்யும் மேற்குலகத்தின் செயற் திட்டம் இங்கு முன்னிலைப் படுத்தப்படவிட்டாலும் இதுவே அவர்களின் முதன்மையான உள் செயற்பாடாக இருந்தது.

காற்று புகமுடியாத இடத்தில் எல்லாம் நாம் புகுவோம் என்ற மமதையில் தண்ணீரை தடுத்து நெருப்புடன் தண்ணீருக்கு அருகில் இருந்தும் நெருப்பை அணைக்க முடியாமல் இறுதியில் சரணடைந்து அழிந்து போனதே புலிகளின் வரலாறு. புலிகளின் செயற்பாடுகளே 1990 களுக்கு பிறகு பலருக்கு வரலாறாக தெரிந்திருக்கின்றது. இதற்கு ஊடகங்களின் கடந்த கால வரலாற்று மறைப்பும் ஒரு காரணம் என்றாலும்இ 1990 இற்கு பிந்தைய இளைஞர்களின் வயதுப் பரிணாமும் இன்னொரு காரணம். எனவே முடிந்தளவிற்கு கடந்த கால வரலாற்றுப் பதிவுகளை நாம் பதிவு செய்யவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம். மேலும் நாம் ஏன் எமது விடுதலைப் போராட்டத்தில் தோற்றுப் போனோம் என்பதை ஒரு மீள்வாசிப்பின் மூலம் கற்க வேண்டிய நிலையிலும் உள்ளோம். இவற்றிற்காக நாம் கடந்த கால நிஜ வரலாற்றுப் பதிவுகளை செய்துதான் ஆகவேண்டும். இதில் யாரையும் குற்றம் காணுதல் என்பது இரண்டாம் பட்சமானதே. பலர் எண்ணுவதைப் போல் இது புலிகளை குறை கூறுவதற்காக மட்டும் செய்யப்படுவது அல்ல
(Saakaran) Aug 01, 2015

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com