Contact us at: sooddram@gmail.com

 

என் மனவலையிலிருந்து……

யதீந்திரா போன்றவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்

(சாகரன்)

‘……சம்பந்தன் ஐயா கூட தன்னுடைய நாடாளுமன்ற உரையில் (ஆங்கிலத்தில்) விடுதலைப் புலிகளின் போட்டுத் தள்ளும் பட்டியிலில் தான் இருந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அப்படிப்பட்ட ஐயாவையே பின்னர் பிரபாகரன் தனது அரசியல் காய்நகர்த்தலுக்குள் உள்வாங்கிக் கொண்டார். நான் கிளிநொச்சியில் சில அரசியல் கலந்துரையாடல்களின் பங்குகொண்ட சந்தர்ப்பங்களில் அங்கிருந்த சில மூத்த போராளிகள், ஐயாவை “ஆள் பெறுமதியானவர் தான்”, என்று சொல்லியதை கேட்டிருக்கிறேன். ஏன் பிரபாகரன் மிகவும் பலம் குன்றியிருந்தவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும்?.........’ - யதீந்திரா,

இவர் கருத்தில் பல முரண் நகையிருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேலெழுந்தவாரியாக பார்த்தால் ‘கூட்டமைப்பு’ அல்லது பல கட்சிகளின் ‘இணைப்பு’ ஏன் ‘ஐக்கியம்’ என்று கூட்டமைப்பினரால் கூறப்படுவது போல் தோன்றும். முதலில் இதற்கு வெளியில் கூட பல ‘பலம்’ வாய்ந்த கட்சிகள், அமைப்புக்கள் இருக்கின்றன. இவற்றை உள்வாங்க, இணைத்துக் கொள்ள  தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் எப்போதும் தயாராக இருக்கவில்லை.

மற்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்  தமிழரசுக் கட்சியின் ஏகபோகமே நிலவுகின்றது. இன்னும் சிறப்பாக ஆயுதம் கையில் இல்லாத பிரபாகரனாகவே சம்மந்தர் செயற்படுகின்றார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பலரும் பயத்தின் காரணமாக வெளியில் சொல்லாமல் தவிர்த்து வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ‘ஐக்கிய முன்னணி’ என்பதற்கான எந்த அடிப்படைகளையும், தார்பரியங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை. மற்றது இதில் இணைந்திருக்கும் ஏனையவர்கள் இதனை விட்டால் பதவி கிடைக்காது என்பதற்காக தொங்கிக்கொண்டு நிற்பவர்களே ஒழிய கொள்கையை விட இவர்கள் கொள்ளைக்காக அரசியலில் ஈடுபடுபவர்கள். சாராம்சத்தில் தேர்தல் என்றும், பதவி என்றும் ஒன்று இல்லாவிட்டால் இவர்கள் சாக்கில் கட்டிய உருளைக் கிழங்கு போல் அவிழ்த்து விட்டதும் தனித் தனியாக போய்விடுவார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருப்பது தமிழ் இனப் பற்று அல்ல தமிழ் தேசிய வெறி. தமிழ்த் தேசியம் என்ற அடையாளம், தமிழ்த் தேசியத்தின்பால் பற்று உறுதி என்பவை வேறு தமிழ் இன வெறி என்பது வேறு. செந்தமிழர் இயக்கத்தின் வி.பொன்னம்பலம் செந்தமிழர் இயக்கத்திலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் கலந்தபோது கூறிய நியாயங்களை ஒத்ததாகவே யதீந்திராவின் கருத்துக்கள் இருக்கின்றனர். சகல தரப்பினரையும் அணைத்து, இணைத்து உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்தி செயற்படுதல் என்பது தமிழ் காங்கிரஸில் இருந்து இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரைக்கும் ஒரேமாதிரியான அணுகு முறையை, செயற்பாட்டையே கொண்டிருக்கின்றது. இங்கு ஏகபோகம் என்ற கருத்தியல் செயற்பாடே முன்னிலை பெற்றிருக்கின்றது.

இதுவே பிரபாகரன் புலிகளைத் தவிர ஏனையவர்களை இல்லாமல் செய்ய முயற்சித்ததன் அரசியல் காரணம். வட்டுக் கோட்டைத் தீர்மானத்திலிருந்து (இதற்கு முன்பும் கூறலாம்)இன்று வரை இதுதான் ‘கடைசி பஸ்’ என்று மக்களை நம்பவைத்து வாக்குகள் பெற்று பின்பு தேர்தலில் வென்ற பின்பு மக்களுக்கு வேட்டு வைத்ததைத் தவிர வேறு எதையும் இந்தத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற வழித் தோன்றல்கள் செய்யவிலலை என்பதை யதீந்தரா போன்றவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர் அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கின்றனரோ தெரியவில்லை. வி. பொன்னம்பலம் தமிழர் விடுதலைக் கூட்டணியில் கற்ற பாடத்தை தேர்தலின் பின்பு யதீந்திரா கற்கப் போகின்றார் என்பதே என்பார்வை.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் தலைநகரத்தை, மகாண சபையை திருகோணமலையில் நிறுவிய தைரியமான தீர்க்கதரிசனமான நகர்வைத் தவிர வேறு எதனையும் திருகோணமலையில் எங்கள் பிரநிதித்துவத்தை, இனப் பரம்பலை தக்கவைக்க சிறந்த முடிவை இராமநாதன் காலத்திலிருந்து இன்று வரை யாரும் முன்னெடுக்கவில்லை என்பதே என்பார்வை. இதனை வைத்துக் கொண்டு நான் ஈபிஆர்எல்எவ் காரன் என்று குழுவாதத்திற்குள் என்னை மூழ்கடித்து உண்மைகளை பார்க்கத் தவறினால்  தமிழ் மக்கள் இனி யாழ்பாணத்திலும் மெல்லச் சாவதை யாராலும் தடுக்க, தவிர்க்க முடியாது. இது எற்கனவே திருமலையிலும் மட்டக்களப்பிலும் உலர்ந்து உதிரத் தொடங்கி ஒரு தசாப்பத்திற்கு மேலோகிவிட்டது. அம்பாறையைப் பற்றி பேசவே தேவையில்லை. பேரினவாத அரசு இதனையே செய்ய முற்படும் இதனைத் தடுத்து நிறுத்துவதில் நாம் தவறி விட்டோம். தோடர்ந்தும் தவற விடுகின்றோம்.

பிரபாகரன் பலமான நிலையில் இருந்து கொண்டு ஏன் சம்மந்தரை அழைத்தார் என்பதற்கூடாக சம்மந்தர் ‘பலமாக’ இருந்தார் என்பதை நிறுவ முற்படுதல் அல்லது சம்மந்தர் ‘சாணக்கியர்’ என்று கூற முற்படுவதை போன்ற நகைச்சுவையான காரணம் ஏதும் இருப்பதாக பார்க்க முடியவில்லை. இதே மாதிரியான அணுகு முறையை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்த பாராளுமன்றத் தேர்தலில் பிரபாகரன் பாலகுமாரின் ஈரோஸ் ஊடாக செய்தது எல்லாம் தான் புக முடியாத இடத்தில் தனது கையாளாக உளவு பார்க்க ஒருவர் தேவை என்பதற்காவே வேறு எந்த வகையிலும் அல்ல. இந்த வகையை ஒத்ததே பிரபாகரனால் படைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதயம் ஆகும்.

தமிழ்செல்வனுக்கு முன்பு மாதம் மாதம் சம்மந்தர் தொடக்கம் சுரேஷ் வரைக்கும் கை கட்டி வாய் பொத்தி ஏன் எல்லாவற்றையும் பொத்தியிருந்ததே இவர்கள் செய்தது. வாய் திறந்தால் நான் கூறத் தேவையில் சம்மந்தரிடம் அல்லது சுரேஷ் இடம் கேட்டுப்பாருங்கள் என்ன நடந்திருக்கும் என்று. எனவே யதீந்திரா விடயங்களை அலசி ஆய்ந்து பார்க்கும் பக்குவம் உள்ள உங்களுக்கும் வி. பொன்னம்பலத்தின் நிலை ஏற்பட்டு நொந்து கூனிக் குறுகி எதிர்காலத்தில் நிற்பதை முன்கூட்டியே அறியத் தருவதற்காகவே இதனை எழுதுகின்றேன் இதனை. மற்றயப்படி நான் மிகவும் சாதாரணமானவும் அறிமுகங்கள் ஏதும் அற்ற பிரபல்யம் அற்றவன். ஆனால் தீர்க்க தரிசனம் உள்வன். மகாத்மா காந்தி கூறிய முது மொழிளைவிட சிறந்து முதுமொழிகளை கூறியவர்கள் பலர் பிணம் தாக்கும் சுடலையில் வேலை செய்தவர்களாக இருக்கலாம். இந்த ‘அடையாளம்’ அற்றவர்களின் வார்த்தைகள் உலக மொழியாக வராமல் போயிருக்கலாம்;. ஆனாhல் வாய்மைகள், தீர்க்க தரிசனங்கள் அவை அவையாகவே இருந்துவிட்டு போயிருக்கின்றன. என் வார்த்தைகளும் அப்படி இருந்துவிட்டுத்தான் போகட்டுமே!

(சாகரன்) (ஆகஸ்ட் 14, 2015)

(இக்கட்டுரையில் யதீந்திரா என்ற பெயர் குறியீட்டு அடிப்படையில் என்னால் கையாளப்பட்டது)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com