Contact us at: sooddram@gmail.com

 

சம உரிமையுடன் வாழ
சகல சமூகங்களின் உரிமைகளையும் மதிப்போம்
(சாகரன்)

செய்தி:
அம்பாறை, கல்முனை நகரிலுள்ள பொதுச்சந்தை வீதிக்கு எம்.எஸ். காரியப்பரின் பெயரை அனுமதியின்றி சூட்டியதாக குற்றஞ்சாட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் அவ்வீதியின் நினைவுப்படிகம் சில தினங்களுக்கு முன்பு இடித்து தரை மட்டமாக்கியுள்ளனர். கல்முனை தனியார் பஸ் நிலையத்திலிருந்து சாத்தான்கேணி மைதானம் வழியாக பொதுச் சந்தைக்கு செல்லும் வீதிக்கு கல்முனை மாநகர சபையினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான முதலியார் எம். எஸ்.காரியப்பர் வீதி என பெயரிட்டு நினைவுப்படிகமும் நிர்மானிக்கப்பட்டது. இந்த நினைவுப்படிகத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கவிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாநகரசபை கட்டளைச் சட்டத்தை மீறி இரவோடு இரவாக குறித்த வீதிக்கு இந்த பெயரிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, மாநகர சபை மேயருக்கு எதிராக கல்முனை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதேசவாசிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்பாட்டத்தின் பின்னரே குறித்த வீதியின் நினைவுப்படிகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இச் செய்தி படிக்கும் போது ஒரு விடயம் அறியக் கூடியதாக இருக்கின்றது. மாநகர சபையின் முடிவிற்கு முரணான இச் செயற்பாடு ரணில் விக்கிரசிங்கவின் கரங்கள் இருப்பாக அறிய முடிகின்றது. யூ.என்.பி இவ்வகையான பிரித்தாளும் செயற்பாடுகளில் மிகவும் திறமையானவர்கள் தன்னால் திறந்து வைக்கப்படவுள்ள வீதிப் படிப்பகம் பற்றி ரணிலுக்கு தெரியாது என்று யாரும் விவாதிக்க முடியாது.

இரவோடு இரவாக வீதியின் பெயரை மாற்றியது அரசியல் நாகரீகம் அற்ற செயல். இதன் மறுவழமாக பட்டப்பகலில் தேர்தல் வெற்றிக்காக மடத்தலை கையில் எடுத்து பெயர் பலகையை இடித்ததும் அரசியல் நாகரீகம் அற்ற செயல். இருதரப்பினரையும் சட்டத்தை நிலை நாட்டும் கிழக்கு மாகதாண சபையினர் கைது செய்து விசாரணைக்கு உள்படுத்தி தண்டனை வழங்க வேண்டும். இது சிறுபான்மை சமூகங்களிடையே மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் செயலை ஊக்கிவிக்கும் செயலாக இருப்பதினால் இவற்றில் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுக்கும் இடமின்றி செய்தே ஆக வேண்டும். கிழக்கு மாகாண சபையும் இதில் நேரடியாக தலையிட்டு இனங்களிடையேயான ஐக்கியத்தை வலுப்படும் செயற்பாடாக இதனைக் கையாள வேண்டும்.

இலங்கைப் பேரினவாதம் சிறுபான்மையினரை பிரித்தாளும் கொள்கையினூடாக பலவீனப்படுத்த இவர்களின் உரிமைகளை வழங்குவதில் பின்னடித்து வருகின்றனர். முதலில் மலையக மக்களின் குடியுரிமை பறிகப்பட்ட போது செல்வநாயகம் குழுவினர் இதற்கு ஆதரவாக செயற்பட்டனர். 1900 முற்பகுதிகளில் நடைபெற்ற சிங்கள் முஸ்லீம் கலவரத்திற்கு பிரித்தானியா சென்று சிங்களக் காடையரின் வீடலையைப் பெற்றுக் கொடுத்து கொழும்பு வீதியில் பல்லக்கில் பயணம் வந்து இராமநாதன் முதலில் முஸ்லீம் சகோதர சிறுபான்மையினரிடம் இருந்து ஏனைய வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அந்நியப்பட வாய்புக்கள் எற்படுத்தினார் இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல் புலிகளின் முஸ்லீம் மக்களை முழுமையாக வடக்கிலிருந்து இன சுத்திகரிப்பு செய்த சம்பவங்களும், ஏனைய கிழக்கு மாகாணத்தில் பள்ளிவாசல்களில் புகுந்து வெடடிச் சாய்த்ததில் இருந்த கொஞ்ச நஞ்ச உறவுகளையும் இல்லாமல் செய்து விட்டனர்.

பேராசியர் நூர்மான் தனது எழுத்துக்களின் முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாட்டை முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் ஈபிஆர்எல்எவ் என்று கூறி இருக்கின்றார். எந்த சம்பவத்தை வைத்து இதனைக் கூறுகின்றார் என்று அவர் குறிப்பிடவில்லை. அப்படி ஏதும் நடைபெற்றிருந்தால்; ஈபிஆர்எல்எவ் இனது கொள்கை அடிப்படையில், அமைப்புரீதியாக இந்த செயற்பாட்டை செய்திருக்கமாட்டார்கள் என்பதை இவர்களின் அரசியல் செயற்பாட்டை ஆழ்ந்து ஆய்து பார்த்வர்களுகு இது புரியும். நடைமுறைத் தவறுகளுக்கு ஊடாவே நடைபெற்றிருக்கலாம்…..? சில தனி நபர்கள் அமைப்பிற்கு தெரியாமல் செய்திருக்க வாய்ப்புக்கள் இருந்ததை மறுப்பற்கில்லை.

கூடவே இந்திய இராணுவம் மட்டக்களப்பிலிருந்து வெளியேறிய காலத்தில் புலிகள் இலங்கை அரசின் எஸ்ரிஎ.வ் உடன் இணைந்து மக்கள் பாதுகாப்பு படையிற்கு எதிராக செயற்பட்டனர். இப்படையே வடக்கு கிழக்கு மாகாண சபையை இலங்கை அரசிடம் இருந்து காப்பாற்ற உருவாக்கப்பட்ட படை. இதனை இல்லாமல் செய்வதில் பிரேமதாச புலிகள் இருவரும் இருகுழல் துப்பாக்கி போல் செயற்பட்டனர். இதில் சிவிஎவ் படையினர் கல்முனை எஸ்.ரி.எவ் முகாமை தாக்கிபோது இங்குதான் புலிகள் எஸ்.ரி.எவ் உடன் தங்கி இருந்து இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை இல்லாமல் செய்ய குழப்பங்களை எற்படுத்தினர். இந்த முகாம் தாக்குதலின் போது பல எஸ்.ரி.எவ் படையினர் கைதாகினர் இவர்களை கையாண்ட சிவிஎவ் இனர் எஸ்விஎவ் இல் இருந்த முஸ்லீம்களை தனியாக பிரித்து சுட்டுக்கொண்டு கொன்றனர் என்ற செய்தியொன்று இருக்கின்றது. இப்படியான செயற்பாட்டை உறுதிப்படுத்த இந்த தாக்குதலில் ஈடுபட்ட யாரும் தற்போது உயிருடன் அல்லது தொடர்பில் இல்லை.

இது ஒரு புறம் இருக்க இதில் கொல்லப்பட்டவர்களை இலங்கை இராணுவத்தின் எஸ.;ரி.எவ் எவ் இன் உறுப்பினர் என்றே பார்க்க வேண்டும். மாறாக அந்த சமூகத்திற்கு எதிராக நடவடிக்கையாக பார்க்கக் கூடாது என்பதே சரியானதாகும். இவை எல்லாம் ஒரு புறம் இருக்கு பொது மக்கள் என்ற வகையில் அது யாராக இருந்தாலும் ஏனைய இனங்களுக்கெதிரான ஆயுத நடவடிக்கைகள் எந்த வகையிலும் ஏற்புடையது அல்லது. இதில் சிங்களவர், தமிழர், முஸ்லீங்கள், மலையகத்தவர் என்று யாருக்கும் எதிரான நடவடிக்கை கண்டனத்திற்குரியது எற்புயைதும் அல்ல. எதிரியை எதிர் கொள்ளும் போது இனப்பாகுபடுத்தலுடனான அணுகு முறைகளும் எற்புடையது அல்ல. எம்மை மலையகத்திலும் திருகோணமலையிலும் பாதுகாப்பை வழங்கியர்கள் தமிழ் மக்களைத் தவிர்ந்த முஸ்லீம், சிங்கள், மலையக மக்களே என்பதை நன்றியுடன் பதிவு செய்ய விரும்புகின்றோம்.

இவ்விடத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவது சாலப் பொருத்தமானது என நம்புகின்றேன். தம்பலகாமத்தில் அரசியல் வேலைகளுக்காக சென்றிருந்த யாழ்த் தோழர்கள் இலங்கை இராணுவத்தின் சுற்றி வளைப்பு ஒன்றின் போது தப்பி ஓட முற்பட்டு அருகில் உள்ள சிங்கள் மக்கள் வாழும் கிரமத்தில் தஞ்சம் அடைந்தனர். அது சிங்களக் கிராமம் என்று தெரியாமல்தான். தஞ்சம் அடைந்தவரகள் பொது மக்கள் அல்ல ஈழ விடுதலை அமைப்பைச் சேர்ந்த தமிழர்கள் என்பதை அறிந்த சிங்கள கிராம மக்கள் போராளிகளை மரத்தில் கட்டி வைத்து விட்டு இலங்கை அரச படைகளுக்கு அறிவித்துவிட்டனர். இலங்கை இராணுவம் இவ்விடத்திற்கு வருவதற்கு எடுத்த நேர இடைவெளியில் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் தமக்கு தெரிந்த சிங்களத்தில், தமிழ் தெரிந்த சிங்களவர் ஒருவரின் உதவியுடன் தமது போராட்டதின் நோக்கம், நியாயங்கள், செயற்பாடுகளை. எமது போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கானது போன்றவற்றை எடுத்தியம்பி கிராம மக்களை தமது பக்கம் திருப்பி படையினரிடம் இருந்து அன்று மட்டும் அல்ல தொடர்ந்த நாட்களில் இந்தப் போராளிகளின் அரசியல் வேலைகளுக்கான பாதுகாப்பிற்கு இக்கிராம சிங்கள் மக்கள் உறுதி செய்தது இங்கு பதிவு செயய்ப்பட வேண்டியதாகும்.

இந்தப் போராளிகள் முரளி, குரு இருவர்களும் இன்று உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த அரசியல் வேலைகளின் முடிவில் இபொச பஸ் இல் ஆனையிறவு தடைபகுதியின் ஊடாக பயணித்த போது சகல பயணிகளையும் இறக்கி இராணுவம் முதுகில் விறகு கட்டையால் அடித்து பின்பு பஸ் இல் எறி பயணிக்க அனுமதித்தது. இதில் அடிவாங்கியவர்களில் குரு, முரளியும் அடக்கம். யாழ் வந்த குரு எழுதிய முதல் கவிதை பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய கவிதையாகும். இக் கவிதை முழமையாக கிடைக்கவில்லை கவிதையில் ஒரிரு வரிகள் மட்டும் ஞாபகத்தில் உள்ளது. ….. ஏய் இலங்கை இராணுவச் சிப்பாயே! காக்கி சட்டைக்குள் இருக்கும் உன் மெலிந்த உடல் உழைப்பிற்கு பின்னால் கல்யாணத்திற்கு காத்திருக்கும் உன் வறிய தங்கைகளையும் வயதுபோன நலிந்த தாய் தந்தையையும் நான் பார்கின்றேன். நீ உன் குடும்பத்திற்கு உழைப்பதற்காக காக்கிச் சட்டை போட்டதை என்னால் உணர முடிகின்றது நான் என் வரலாற்றுக் கடமையை செய்வதற்காக போராடும் போது உனக்கு எதிராக துப்பாக்கியை தூக்க வேண்டிய நிலமையை நீங்கள் புரிந்து கொள்ளவாய் என்பதை புரிந்து கொள்வாய் என நம்புகின்றேன்….. என்று போகின்றது கவிதை. (இந்தக் கவியை யாரிடமும் முழுமையாக இருந்தால் அனுப்பி வைக்கவும் பிரசுரிக்க விரும்புகின்றேன்.)

எமது உரிமைகளுக்கான போராட்டம் ஏனைய சிறுபான்மை மக்களுக்கும் இனங்களுக்கும், ஏன் பெரும்பான்மை இன மக்களுக்கும் எதிரானது அல்ல என்பதை அவரகளுக்கு நாம் நிறுவியே ஆக வேண்டும் இவரகளின் ஆதரவு இன்றி நாம் எனது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. ஈழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை போரளிகளில் பலரும் போராட்ட அமைப்புக்களில் சிலவும் இதற்கான தொடர்சியான போராட்டங்களை நடாத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் சாண் ஏற மைல் சறுக்கும் நலமைகளே ஏற்படுகின்றன். அண்மைய கல்முனைச் சம்பவமும் இதன் ஒரு வடிவம்தான். சுக இனத்தின் சமூகத்தின் உரிமையை அங்கீகரிக்காதவன் தனது உரிமையை முழயாக பெற்று வாழமுடியாது என்பதை யாவரும் புரிந்து கொண்டால் சரி.

(சாகரன்)(Aug 16, 2015)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com