Contact us at: sooddram@gmail.com

 

சாந்தி சச்சிதானந்தம் இன் இழப்பு…….

(தோழர் ஜேம்ஸ்)

சாந்தி மனோராஜசிங்கம் என்று எங்களால் அறியப்பட்ட சாந்தி பிற்காலத்தில் பலராலும் சாந்தி சச்சிதானந்தம் என்று அறியப்பட்டவர். 1984ஃ85 களில் யாழ்ப்பாணத்தின் செம்மண் பிரதேசங்களில் கூலி விவசாயிகள் மட்டத்தில் அரசியல் வேலைகள், அரசியல் கருத்தரரங்குகளில் எனக்கு மிகவும் பரீட்சயமானவர். எனது சக தோழியும் தற்போது என் வாழ்கைத் துணையாக பயணிக்கும் தோழர் அஞ்சலியுடன் இணைந்து கிராமத்துப் பெண்கள் மட்டத்தில் அரசியல் வேலை செய்தபோது நானும் இணைந்து செயலாற்றியது இன்றும், இன்னமும் பசுமையாக மனத்தில் இருக்கின்றது.

கிடைக்கும் எந்த வசதிகளிலும் தன்னை இயவாக்கம் அடைய வைத்து செயற்படும் இவரின் தன்மை என்னை இவர்பால் திரும்பிப் பார்க்க வைத்தது. தைரியமான பெண் மாத்திரம் அல்ல, திறமையான பெண்ணும் கூட.
ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு பொது கருத்திற்காக, பொதுத் தளத்தில் வேலை செய்வதில் எந்த சங்கோஜமும் இல்லாமல் செயற்படும் பண்புமிக்கவர். அதுவும் அன்றைய யாழ்ப்பாணச் சூழலில் இதனை நான் அனுபவரீதியாக உணர்ந்தவன். மனோ இராஜசிங்கம் ஈபிஆர்எல்எவ் இன் உறுப்பினராக செயற்பட்ட காரணத்தினால் ஈபிஆர்எல்எவ் உடனும் இதன் பெண்கள் அமைப்பான ஈழப் பெணகள் விடுதலை முன்னணியுடனும் நெருக்கமாக செயற்பட்டவர். ஏன் இதன் பெண்கள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவர் என்று எம்மால் பார்க்கப்பட்டவர்.

அன்னையர் முன்னணி போன்ற வெகுஜனத் தளங்களில் சிறப்பாக செயற்பட்டவர். புலிகளின் தன்னாதிக்க காலத்தில் மட்டக்களப்பை மையமாக வைத்து செயற்பட்ட இவரின் தன்னார்வ தொண்டு நிறுவனம் பற்றிய விமர்சனங்களும், புலிகளுடனான சமரசப் போக்கும் விமரசனங்களுக்குள் உள்ளானதும் இங்கு பதிவு செய்யப்பட்டே ஆக வேண்டும். மேலும் கிராமிய மட்டத்து பெண்களுடன் அரசியல் வேலைகள் செய்தாலும் தனது பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்காக ஒவ்வொரு தடவையும் இலண்டன் பயணமானதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மத்திய தர வர்க்கத்தில் பிறந்த புத்திஜீவிகளுக்குரிய ‘இயல்பான’ குணாம்சமாக இதனைப் பார்பது சரியானதோ என்பதை விவாதத்திற்கே விட்டுவிடுகின்றேன். வீட்டிற்கள் ஒடுங்கி இராமல் தொடர்ச்சியாக சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்து தொடர்ந்தும் மக்களுடன் நின்றவர் குரல் எழுப்பியர் என்றவகையில் இவரின் மரணம் இழப்புத்தான். புலிகள் மாற்றுக் கருத்தாளர்களை செயற்பட விடாமல் குரல் வளையை நெரித்த போது, வட பகுதிக்கான பயணங்கள் முற்றாக அறுபட்ட நிலையில் கொழும்பின் தனது வாழ்விடத்துடன் தொடர்பு படக் கூடிய மட்டக்களப்பை தனது பொது வேலைக்கான தளமாக தெரிவு செய்ததலிருந்து தொடர்சியாக மட்டக்களப்பில் மூவின மக்கள் மத்தியிலும் தன்னார்வுத் தொண்டர் நிறுவனங்கள் ஊடாக தனது சேவையை வழங்கியிருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.

 பொதுவாக தன்னார்வ நிறுவனங்கள் அமெரிக்க, மேற்கத்திய அரசுகளின் கை கூலிகள் என்ற விமர்சனங்கள் இவரை நோக்கி எழுந்ததும் இங்கு கவனிக்கத் தக்கது. கூடவே ஈழவிடுதலை அமைப்புக்களுடன் தொடர்பில் இருந்தவரகள் அல்லது ஈழவிடுதலைப் போராட்டம் நடைபெற்ற பிரதேசங்களில் இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை உடையவர்கள் காணாமல் போதல் அல்லது கைது செய்யப்படுதல், கொலை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகுதல், கொலை செய்யப்படுதல் என்பனவற்றைத் தாண்டி கொழும்பு வாழ்வையும், கொழும்பை மையமாகவும் வைத்து இவரின் செயற்பாடுகள் அமைந்தது என்பது மிகுந்த சவாலானதாகும். இதற்கு இவரின் சர்வதேசத் தொடர்புகள் இவரைக் காப்பாற்றியதற்கு முக்கிய காரணியாக அமைந்தன எனலாம்.

சாதாரண பாமர மக்களுக்கு கிடைக்காத விசேட நிலமைகள் இவர் போன்றவர்களுக்கு கிடைக்கப் பெற்றது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இலங்கைச் சூழலில் அதுவும் யாழ்பாணத்துச் தமிழ் சூழலில் பிறந்த ஒரு பெண்.   ஒரு தாய் தனது பெரும் பகுதியை சமூகச் செயற்பாடடிற்காக அர்பணித்த தைரியத்தை, முற்போக்குத் தன்மையை பாராட்டியே ஆகவேண்டும். இந்த வகையில் இவரின் மரணம் இவரின் குடும்பத்திற்கு அப்பால் யாவருக்கும் மனத்தின்பால் சஞ்சலத்தை ஏற்படுத்தியே இருக்கின்றது.
(தோழர் ஜேம்ஸ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com