Contact us at: sooddram@gmail.com

 

என் மனவலையிலிருந்து………
மக்கள் தடுத்து நிறுத்தாவிட்டால் இந்த இனம் அழிந்தேதான் போகும்…..?

(சாகரன்)

போர் முடிந்து விட்டது. ஆயுதங்கள் களையப்பட்டுவிட்டன. தேர்தல் நடத்தபட்டது. தேர்தலில் மக்கள் தமது தீர்பையும் வழங்கிவிட்டனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் பெற்றாகிவிட்டது மத்தியிலும், மகாணத்திலும். அதிகாரங்கள் மறுக்கப்படுகின்றன. இராணுவம் இன்னமும் இருக்கின்றது. பணம் தருகின்றார்கள் இல்லை. இணக்க அரசியல் மூலமே அதிகாரங்களை சிறுக சிறு பெறமுடியும். கிடைத்த அதிகாரங்களை சரியாக பயன்படுத்துகின்றார்கள் இல்லை. ஒதுக்கப்பட்ட நிதியினை முழுமையாக பயன்படுத்தாமையினால் மீண்டும் திறைசேரிக்கு திரும்பி செல்கின்றது ஒதுக்கப்பட்ட பணம். மக்களிடம் பொய் வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் வென்றிருக்கின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான போராட்டங்களை, இராஜதந்திர அணுகுமுறைகளை கையாளுகின்றனர் இல்லை. சொகுசு வாகனங்களை மட்டும் தமக்கு மத்திய அரசிடம் இருந்து பெற இணக்க அரசியல், உறவுகள் செய்கின்றனர். ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர் என்று இரு தரப்பும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.

இவற்றில் உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவர்கள், ஆயுதங்களை களைந்து ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய இவர்களின் செயற்பாடுகளில் வன்முறையும், காழ்ப்புணர்ச்சியும் மேலோங்கி இருக்கினறன. மக்கள் இவற்றைத் தவிர்த்த பக்குவப்பட்ட பிரதிநிதிகளை இனம் கண்டு தெரிவதில் தோற்றுப் போய்விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது. சாமி வேடம் போடும் முதல் அமைச்சராலோ அல்லது மக்கள் சேவை செய்கின்றேன் என்று கூறும் தேவானந்தாவாலோ தனது அமைப்பினரை, கட்சியினரை, அமைச்சர்களை, பாராளுமன்ற, மகாணசபை உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதிர்? துரப்பினரை கையாளத் தெரியவில்லை.

இவர்கள் எல்லோருக்கும் வயது இரண்டு கழுதை வயதைத் தாண்டி விட்டது. ஆனாலும் யாருக்கும் இந்த வயதிற்குரிய மனப்பக்குவம் இருப்பதாக தெரியவில்லை. நான் முன்னாள் புலிகளின் உறுப்பினர், அல்லது அதன் தீவிர ஆதரவாளன். நான் முன்னாள் புலிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய ஈபிடிபி உறுப்பினர் என்பதற்கு அப்பால் சிந்திக்க இவர்களால் முடியவில்லை, செயற்பட முடியவில்லை. மக்கள் இவர்களை தமது பிரநிதிகள் என்று தெரிந்து விட்டு சும்மா பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். மத்திய அரசோ அடிபடும் அளவிற்கு அடிபடுங்கள், அப்போதுதான் நாம் எமது அரசிலை ஆட்சியை அதிகாரத்தை உங்கள் மீது திணிக்கலாம் என்று ஆளும் கட்சி வேட்பாளரும், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரும் கொடுப்புக்கள் சிரித்த வண்ணம் உள்ளனர்.

மந்திரி சபையில் உள்ள அனேகரும் பொருள் ஈட்டும் அல்லது தற்புகழ் ஈட்டும் காரியவாதிகளாக மட்டுமே செற்படுகின்றனர். மக்களின் நலன்களை முன்னிட்டு பொது வாழ்விற்குள் புகுந்தவர்கள் அல்ல என்பது போன்ற செயற்பாட்டையே கொண்டிருப்பதை இவர்களின் செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன. இவர்களில் பலர் என்னுடனும் போராட்ட களத்தில் நின்ற உறுப்பினர்கள் அல்லது என் மாணவர்கள் அல்லது என் சகாகக்கள், பாடசாலை நண்பர்கள். இவர்களின் சாயம் அன்றும் தெரியும், இன்று வெளுத்த பின்பும் தெரியும். எனவே இந்த யுத்தத்தை தமிழ் மக்களே நிறுத்த முடியும், நிறுத்த வேண்டும் இதற்கான தார்மீகப் பொறுப்பு மட்டும் அல்ல வரலாற்று கடமையும் இவர்களுக்கே உள்ளது.

மக்கள் சேவையை முன்னிறுத்தும் உறுப்பினர்களை இனம் காணுங்கள். இனிமேலாவது அவர்களை உங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யுங்கள். இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அனுபவத்தில் நாம் இந்தக் குடும்பிப்பிடிச் சண்டையைக் காணவில்லை. உடனே வலுக்கட்டாயமாக படையில் சேர்த்ததை மிகைப்படுத்தி கூறுவீர்கள். இதில் அணுகு முறைத் தவறு உண்டு. இதற்கான வருத்தத்துடன் கூடிய சுயவிமர்சனங்களை ஏற்றுள்ளனர் சம்மந்தபட்டவர்கள். கூடவே இந்தப் படை எமது மக்களை காப்பாற்றுவதற்காக  உருவாக இருந்த மக்கள் பாதுகாப்பு படை. ஆனால் பிரேமதாசாவும், பிரபாகரனும் தங்களின் இருப்புக்காக இதனைத் திரித்து வாசித்ததே உண்மை.

மக்களும் இந்தப் படையில் இணைந்தால் தமது பிள்ளைகளை புலிகள் கொன்றுவிடுவார்கள் என்று பயந்தே இதனை விரும்பவில்லை. புலிகளின் முழுப்பிரசன்ன காலத்தில் இப்படையில் இணைந்தவர்களுக்கு புலிகள் வழங்கிய தண்டனையை யாவரும் அறிவர். இதன் சாட்சியங்கள்தான் துணுக்காய் வதை முகாமும், புலிகளின் முதல் வகை தொகையில்லா தடையங்கள் இல்லாத கொலைகளும். இனிமேலும் இவை வேண்டாம், பதவிகளை தக்கவைக்க மக்களை பணயம் வைக்கும் இந்த வேததாரிகளை மக்கள் நிராகரிக்காவிட்டால் இந்த தமிழ் இனம் செத்தேதான் போகும்? வேறு என்ன சொல்ல……?

(டிசம்பர் 16, 2014 யாழ்பாணத்தில் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் இறுதியில் கைகலப்பாக மாறியது. இதனால் தொடர்ந்து கூட்டத்தை நடத்த முடியாமல் நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் என்னை இக்கட்டுரையை வரையத் தூண்டியது)
(சாகரன்)(Dec 17, 2014)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com