Contact us at: sooddram@gmail.com

 

என் மன்வலையிருந்து.......

சிறுபான்மை இனங்களின் ஐக்கியத்தை பலப்படுத்த

கிழக்கு மாகாண முதல் அமைச்சராக மூஸ்லீம் ஒருவரையே முடி சூட்ட வேண்டும்

(சாகரன்)

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் அசைக்க முடியாது என்றிருந்த மகிந்தாவை தோற்கடித்து மைத்திரி ஜனாதிபதியானார். இந்த மாற்றத்திற்கான பாய்ச்சலில் பெரும்பாலும் தொண்டமானின் மலையக காங்கிரஸ் கட்சி டக்ளஸ் இன் வடக்கு ஈபிடிபி தவிர்ந்த ஏனைய சிறுபான்மை கட்சிகள் யாவும் மைதிரியை ஆதரிப்பதற்காக ஓரணியில் திரண்டன. சிறப்பாக முஸ்லீம் கட்சிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரு அணியில் இணைந்து மைதிரியின் வெற்றிகாக உழைத்தன. இந்த இயைவு மகிந்தாவை தோற்கடிக்கும் ஒரு மாற்றத்திற்கான இணைவுகளே அன்றி வேறு எந்தவகையான புரிந்துணர்வு, கொள்கைகளின் அடிப்படையிலான இணைவுகள் அல்ல என்பது யாவுரம் அறிந்ததே. 30 வருடப் போரினால் இலங்கையின் சிறுபான்மையினங்கள் மேலும் நலிவடைந்த நிலையில் நசுங்கி இருப்பது என்பது யதார்த்மான விடயம். இலங்கை அரசுடன் மல்லுகட்டியவர்களும், இணைந்திருந்தவர்களும் சிறுபான்மையினரின் பலத்தை கட்டியெழுப்ப முடியவில்லை. இதற்கான இடைவெளிகளை பேரினவாத அரசுகளும் வைத்திருக்கவில்லை.

இந்நிலையில் போருக்கு பின்னரான தேர்தல் முறையிலான அரசியல் பயணத்தில் சிறுபான்மை இனங்கள் தமக்கிடையே முன்பு எப்போதையும் விட அதிகமாக இணைந்திருத்தல் என்பது தமது சமூகம் சார்ந்த நலன்களைப் பாதுகாத்தல் என்பதற்கு அப்பால் தமது இருப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்கான அடிப்படையான தேவையாக இருந்து வருகின்றது. ஆனால் குறிப்பாக தமிழ், முஸ்லீம் மக்களிடையே இவ்வாறான இணைப்பு, பிணைப்புக்களை ஏற்படுத்த இரு தரப்பிலும் உள்ள செல்வாக்கு பெற்ற கட்சிகள் கடந்த காலங்களில் தவறிவிட்டன, தொடர்ந்தும் தவறியே வருகின்றன. இது ஒரு ஆபத்தான போக்காகும் வடக்கிலிருந்து புலிகளால் கலைக்கப்பட்ட முஸ்லீம் மக்களை யுத்தம் முடிவுற்ற இந்த ஐந்து வருடங்களில் மகிந்தாவுடன் மல்லுக்கட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது மகிந்தாவுடன் நல் உறவில் இருந்த ஈபிடிபியோ முஸ்லீம் மக்களுக்கு புலிகளால் ஏற்பட்ட காயங்களை ஓத்தடம் கொடுக்கும் அளவிற்காகவது ஏதம் செய்யவில்லை என்றே பார்க்ப்படவேண்டியுள்ளது. இவர்களின் பிரநிதித்துவத்தை கருத்தில் கொண்டு தேர்தல் அரசியலில் பதவிப் பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்பதே உண்மை நிலையாகும்.

இந்நிலமை இன்று தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்று ஒருகாலத்தில் பறைசாற்றிக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் பாரிய சவாலாக முளைத்திருக்கின்றது. ஏறக்குறைய மூவின மக்களையும் சமமாக தன்னகத்தே கொண்டுள்ள மாகாண ஆட்சியில் சகோதரத்துவத்தின் அடிப்படையில் தமிழ், முஸ்லீம் கட்சிகள் இணைந்து செயற்படும் ஆரொக்கியமான நிலமைகள் இல்லாது இருப்பதையே அவதானிக்க முடிகின்றது. கிழக்கு மாகாணத்தின் முதல் ஆட்சிக்காலத்தில் ஆட்சிக்காலம் முழுவதும் தமிழ் முதல் அமைச்சர் ஆட்சியில் இருந்தது இங்கு கவனத்தில் எடுத்துப்பார்கப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே இந்த இரண்டாவது ஆட்சிக்காலத்தில் ஒரு முஸ்லீம் சமூகத்தவரே முதல் அமைச்சராக இருக்க அனுமதிக்கப்படவேண்டும் என்பதில் இருக்கும் தர்க்க நியாயங்களை தமிழ் தரப்பு சிறப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இவ்வாறு தமிழ் தரப்பு செயற்படுவது என்பது நிச்சயம் முஸ்லீம், தமிழ் மக்களுக்கிடையே உறவுகள், சகோதரத்துவம் மேம்பட நிச்சயம் உதவும். வுடக்கு கிழக்கு இணைந்த மாணசபை ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்த மூவின மக்களுக்குமான பிரதிநிதித்துவத்தை மந்திரி சபையில் பேணியது என்பது பாரிய நமிபிக்கைகளை ஏற்படுத்தியது என்பது வரலாற்று உண்மைகள். கூடவே அன்று மாகாணசபையின் எதிர் கடசியாக இருந்த முஸ்லீம் காங்கிஸுடன் நல்ல புரிந்துணர்வுடன் ஆளம் கட்சி செய்றபட்டதை முஸ்லீம் காங்கிரஸ் இன்றும் ஏற்றுக்கொள்ளும். இந்த மாகாண சபையின் இறுதிக்காலத்தில் இலங்கை அரசின் புலிகள் இணைந்திருந்த கல்முனை அதிரடிப்படை மக்கள் பாதுகாப்பு படையிடையே ஏற்பட்ட மோதலில் பல இலங்கை அரசின் அதிரடிப்படையினரும், புலிகளும் கொல்லப்பட்டனர். இதில் சிறை பிடிக்கப்பட்ட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர் இதில் அனேகர் முஸ்லீகளாக இருந்தனர். அதிரடிப்படைக்கு எதிரான இந்த நிகழ்வை முற்று முழுதான முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான செயற்பாட்டாக திரிக்க முயலுவது கண்டனத்திற்குரியது. இந்த மகாண சபை ஆட்சிக்காலத்தில் நடைமுறைத் தவறுகள் நடைபெற்றதாகவும் இதற்கான சுயவிமர்சனங்களை பல தளங்களில் பல்வேறு பொறுப்பு வாய்தவர்களும் ஏற்றுக் கொண்ட பின்பும் வசைபாடும் நோக்கோடு மீண்டும் மீண்டும் கிளறுவது கெட்ட அரசியல் நோக்கத்துக்கானது என்பது வெளிப்படை. இதிலும் குறிபாக தவறுகள் எல்லாவற்றையும் வரதராஜப்பெருமாளே செய்தார் என்ற பொருள்பட எழுதுவது தனிப்பட்ட முறையில் ஒருவர் மீதான காழ்ப்புணர்சியின் வெளிப்பாடுகளே ஆகும். இது ஒரு ஆரொக்கியமான செயற்பாடும் அல்ல. இந்த ஆடசிக்காலத்தில் நடைபெற்ற சிறப்புகளுக்கும் தவறுகளுக்கும் ஒரு கூட்டுப்பொறுப்பே பொறுப் பேற்க வேண்டும் இதுதான் அரசியல் தர்மம். நெறிமுறையும் ஆகும் மாறாக தனிபட்ட ஒருவர் அல்ல என்பதை பொதுவாழ்வில் அறிந்திருப்பார்கள் என நம்புகின்றோம்

தத்துவார்த்த ரீதியான, அரசியல் வேலைத்திட்டங்கள், செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்களை ஆரொக்கியமான தளங்களில் நேர்மையாக முன்வைக்கும் செயற்பாடுகள் தவறுகளை களைந்து முன்னேற்றப்பாதையில் செல்ல வழிவகிக்கும். மாறாக மூன்றாம்தர பொய்மைகளை கொண்டு வசையாடும் செயற்பாடுகள் சமூகங்களின் இணக்கத்திற்கும், ஐக்கியத்திற்கும், சேர்ந்து செயற்படுவதற்கும் உதவப் போவதில்லை. சிறுபான்மை இனங்களிடையே ஐக்கித்தை வலுப்படுத்த நம்பிக்கை தரும் குறியீடாக ஐனாதிபதி மாற்றத்தினால் ஏற்பட்ட கிழக்குமாகாணசபை ஆட்சி மாற்றதில் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஒருவரை எல்லோரும் இணைந்து மூடிசூட்டுவதே ஆரொக்கியமான நகர்வாக அமையும் இதனை சம்மந்தப்பட்ட அனைவரும் உணர்ந்து செயற்படுவார்கள் என்று நம்புகின்றோம். வடக்கில் போரின் பின்னரான கடந்த 5 வருடங்களில் பல்வேறு தளங்களில் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிட்ட தமிழ்தரப்பு கிழக்கில் இதனை நிவர்த்தி செய்யவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு ஆகும்.
(சாகரன்)
(மாசி 06, 2015)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com