Contact us at: sooddram@gmail.com

 

மீண்டும் ஒரு தேர்தல்

தமிழ் கட்சிகள் தமிழ் மக்களின் தேவைகளை, விருப்புக்களை நிறைவேற்றுவார்களா...?

(இக்கட்டுரைக்கான தேவை சில வாரங்களுக்கு முன்பு அதிகமாக இருந்தது. நேரமின்மையால் வெளிக் கொணர முடியவில்லை. இன்றும் இதற்கான தேவைகள் இருப்பதினால் வெளியிடுகின்றோம். – ஆர்)

(சாகரன்)

மீண்டும் ஒரு தேர்தல் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் தமிழ் கட்சிகள் செயற்படுமா? என்பதே இன்றைய பிரதான கேள்வி? ஐக்கியப்பட்டு செயற்படுவதன் மூலம் நலிந்து, பலவீனமான நிலையில் இருக்கும் தமிழ் மக்களையும், தமிழ் கட்சிகளையும் பலம் பெறும் வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் விரும்பு, எதிர்பார்ப்பு. மாறக கடந்த காலங்களைப் போல் (திம்பு பேச்சு வார்த்தை தவிர்ந்த ஏனைய காலகட்டங்களைப் போல்) பிரிந்தும,; தனித்தும், தமக்குள் குத்துப்பட்டும் கொண்டும் நின்று மீண்டும், மீண்டும் பலவீனப்பட்டுப் போவார்களா? என்பதே எம்முன்னே எழுந்துள்ள கேள்வியாகும்.

தொகுதிகளுக்கான பங்கீடு, சிலரைத் தவிர்த்து வைத்தல், சிலருடன் மட்டும் இணைதல் என்ற புத்தி சாதுர்சியம் அற்ற வேலைகளில் இறங்குதலைத் தவிர்தல் வேண்டும் 2ம் உலகப் போரில் சோவியத் யூனியன் அன்றைய காலகட்டத்தில் ஜேர்மனியின் கிடலரின் பாசிசதிலிருந்து உலக மக்களை காப்பாற்றுவதற்காக தனது வர்க எதிரிகளான அமெரிக்கா, பிரிட்டனுடன் ஐக்கிய முன்னணி அமைக்கவில்லையா? இதன் மூலம் கிடலரின் பாசிசத்தை வெல்ல முடியவில்லையா? அன்று சோவித் யூனியனுக்கு இருந்த புத்திசாதுர்சியமும், விட்டுக் கொடுப்புகளும் அதன் தொடர்சியான இராஜதந்திர செயற்பாடுகளும் தமிழ் கட்சிகளுக்கு ஏற்பட வேண்டும். இது போன்ற நல்ல வரலாற்றுப் பாடங்களை தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கட்சிகள் தம்மிடையே கொண்டிருக்க வேண்டும்.

தமிழ் கட்சிகள் ஒவ்வொருவரும் உங்கள் தனித் தன்மையை இழக்காமல் தமிழ் மக்களின் விருப்பை, தேவையை முன்னிறுத்தி உங்களுக்குள் விட்டுக் கொடுப்புகளைச் செய்து ஓரணியில் நின்று தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதே சராசரி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு விருப்பங்கள். இதனை விடுத்து நீங்கள் கடந்து வந்த 30 வருட அரசியல் செயற்பாடுகளில் ஏற்பட்ட கசப்பான உணர்வுகளை மட்டும் முன்னிறுத்தி சிதறி நிற்பதில் முனைப்பு காட்டக் கூடாது என்பதே தமிழ் மக்களின் விருப்பாகும்.

முதலாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற இரண்டு பிரதான அரசியல் அணிகளும் அண்மைக் காலங்களில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமக்கிடையே பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு தமக்கிடையேயான 'இறுக்கமான' மன உணர்வுகளை தளர்த்தி ஒரு நெகிழ்வான அணுகுமுறையில் பயணிப்தை தேர்தலிலும் தொடரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பாகும். இதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு ஐக்கிப்பட்டு உள்ளுராட்சித் தேர்தலில் செயற்பட்டால் நிச்சயம் ஒருபலமான செய்தியை அரசுக்கு சொல்லி நிற்கலாம். இதன் தொடர்ச்சியாக அரசுடன் அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு பலமான நிலையிலிருந்து இணக்கமான பேச்சுவார்த்தைகளை தொடர நிறையவே வாய்ப்புகள் ஏற்படும். இதன் தொடர்சியாக அரசியல் தீர்வில் ஒரு காத்திரமான, நியாயாதிக்கம் நிறைந்த தீர்வை எட்டுவதற்கு நிறையவே சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.

இரண்டாவதாக ஈபிடிபி, பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டமைப்பு போன்ற அரசியல் அமைப்புகள் தமது அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையில் மகிந்த தலமையில் ஐக்கிய முன்னணி அமைத்து செயற்படவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படின் குறைந்த பட்சமாகவேனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் கட்சிகளின் அரகத்திலிருக்கும் ஏனைய தமிழ் அமைப்புகளும் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அடுத்த கட்ட எதிர்பார்ப்பாகும். இதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. இதில் சில தனி நபர்கள் தமது விருப்பு வெறுப்புகளை அல்லது குரோதங்களை? தமிழ் மக்களின் பெயரால் தள்ளி வைத்து செயற்பட்டால் இது சாத்தியமே. முயற்சி செய்வார்களா? இதனை செயற்படுத்தி காட்டுவார்களா...? இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பலரும், தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் யாபேரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிலமைகள் அங்குள்ளதாக செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. ஆனால் இதனைச் சாதிக்குத் தலமைகள் கூட்டமைப்பில் பலமாக உள்ளனவா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

மூன்றாவது சாத்தியப்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தும,; தமிழ் கட்சிகளின் அரங்கம் தனித்தும், ஈபிடிபி, பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டமைப்பு அரசுடனும் இணைந்து போட்டியிடுதல் என்ற ஒரு தவிர்க்க முடியாத நிலையாகும். இந்நிலமை ஏற்படமாட்டாது என்று எந்த உத்தவாதமும் இல்லை. இந்த நிலமையையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்க வேண்டும்.

நான்காவதாக இதற்கு மேலேயும் மேலும் சிதறி நிற்றலும் சாத்தியமாகலாம். எப்படி ஏற்பட்டாலும் நிலமைகளைப் புரிந்து கொண்டு எவ்வாறு செயற்படுதல் என்பதனை பார்ப்போம்.

தேர்தலுக்காக அதுவும் உள்ளுராட்சித் தேர்தலுக்காக இவ்வாறு பிரிந்து சிதறி நின்று வெற்றிகளை குவிப்பதற்காக தமக்குள் மீண்டும் குத்து வெட்டு என்ற அடிப்படையிலான செயற்பாடுகளை தேர்தல் பிரச்சாரத்திலும், அதனையொட்டிய செயற்பாடுகளிலும் தமிழ் கட்சிகள் முதலில் தவிர்க்க வேண்டும். ஆனால் தேர்தலில் வெற்றியை நோக்காக கொண்டு செயற்படும்போது இது போன்ற செயற்பாடுகளை தவிர்க்க முடியுமா? என்பது அதுவும் இலங்கை போன்ற நாடுகளில் நிலவும் அரசியல் நாகரீகம்? இதற்கு இடம் கொடுக்குமா என்பது கேள்விக்குறியே? ஆனால் கடந்து வந்த அரசியல் பாதைகளில் கிடைத்த வலிகளும், வேதனைகளும், இழப்புகளும் அனுவங்களும் எமக்கு இந்தப் பக்குவத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயங்கள் நிறையவே இருக்கின்றன என நாம் நம்புகின்றோம்.

தமிழ் கட்சிகளின் அரங்கம் தேர்தலை நோக்கமாக கொண்டு அமைக்கப்படவில்லை. இதன் வளர்ச்சிப் போக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ஐக்கியப்படுத்திக் கொண்டு செயற்படுதல் என்ற முயற்சியில் விடாப்பிடியாக செயற்பட்டே வந்தது. அரங்கத்தின் இந்தப் பிடிவாதம்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரங்கம் இடையேயான சந்திப்புக்களும், அரசியல் தீர்வுத் திட்ட வரைதலுக்கான குழு அமைப்புகளும், இதையொட்டிய சந்திப்புக்களும், அளவளாவல்களும், விருந்தோம்பல்களும். இதில் முன்னணியில் காட்டப்படாவிட்டாலும் பலரின் காத்திரமான விடாப்பிடியான உழைப்பும் விட்டுக் கொடுப்புக்களையும் எமது மூத்த தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஐயா அறிவார். இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் இந்த விட்டுக் கொடுப்புகளின் உண்மைகள் உறங்காமல் வெளிவரும், வெளிவர வேண்டும்.

தேர்தலுக்கு அப்பால் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம்., புனருத்தாரணம், புனர்வாழ்வு என்ற உடனடிப் பிரச்சனைகளும், அரசியல் தீர்வு என்ற பிரதான பிரச்சனைகளும் அரங்கம், கூட்டமைப்பிடையே சேர்ந்து பயணிக்க வேண்டிய கட்டாயம் நிர்பந்தம் தேவைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும், விருப்பும் ஆகும். எனவே தேர்தல் என்ற 'ஆட்டம்' இற்காக 'சிதறி' நினறாலும், தேர்தல் முடிந்த கையோடு தமிழ் மக்களின் உடனடிப் பிரச்னை, பிரதான பிரச்சனைகளை கையாளுவதற்கான செயற்பாட்டில் அரங்கமும், கூட்டமைப்பும் சேர்ந்து பயணிக்க கூடிய நாகரீக தேர்தல் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் செயற்பாட்டைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அவா. செய்வார்களா என்று நாம் கேட்காமல் அவ்வாறு செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த நிலமைகளை புரிந்து கொள்ளும் பக்குவம் அரங்கம், கூட்டமைப்பிலுள்ள பலருக்கு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இது ஒரு மிக மிக ஆரோக்கியமான நிலமைகளே. எனவே தேர்தலுக்காக ஏற்படும் சிதறல்கள் என்ற தற்காலிக நிலமைகளால் சலனப்படாமல் உறுதியாக நின்று செயற்படுங்கள். உங்கள் நிச்சயம் வரலாறு இனம் கண்டு நிலைநிறுத்திக் கொள்ளும். பதிவு செய்து கொள்ளும்.

இவ்விடத்தில் வரலாற்றில் நடைபெற்ற ஒரு நிகழ்வை ஞாபகப்படுத்துதல் நலம் என்று நினைக்கின்றோம். அணு ஆயுதப் போட்டி, அண்டத்தில் போர் போட்டி என்று Cold War  ிலவிய றீகன், கோப்பசேவ் காலத்தில் சோவியத் யூனியனின் தலைவர் தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவிற்கு சொன்னார்; 'வாழ்ந்தால் நாம் சேர்ந்தே வாழ்வோம்' என்று. இதேபோலவே தமிழ் கட்சிகள் வென்றால் சேர்ந்தே வெல்வோம் இதன் மூலம் மக்களை வாழ வைப்போம். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் நாம் எல்லோருக்கும் வாழ்வுண்டு. புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.

(சாகரன்) (தை 24, 2011)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com