Contact us at: sooddram@gmail.com

 

ஈ. பி. டி. பி பிரமுகரை சுட மறுத்த புலிப் பொறுப்பாளர்!

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உதயத்தை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இடம்பெற்ற சுவாரஷிய சம்பவங்கள் பலவும் தற்போது வெளியில் வந்த வண்ணம் உள்ளன. 2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்த காலம். ஆயினும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களை புலிகள் படுகொலை செய்து கொண்டிருந்தனர். யாழ்ப்பாண நடவடிக்கை அணியின் பொறுப்பாளர்களில் ஒருவராக மலரவன் என்பவர் விளங்கினார். இவர் ஒரு புலனாய்வுப் போராளியும் ஆவார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை படுகொலை செய்கின்ற கடமை இவருக்கு வழங்கப்பட்டது. இப்பிரமுகர் குறித்த தகவல்களை சேகரித்தார் மலரவன். பின்பு ஒரு நாள் இப்பிரமுகரின் வீட்டுக்கும் நேரில் சென்றார். முதலில் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இப்பிரமுகருடன் நீண்ட நேரம் உரையாடினார். உரையாடல் நிறைவு பெறுகின்ற பட்சத்தில் அடையாளத்தை வெளிப்படுத்திய மலரவன் வரவின் நோக்கத்தையும் வெளிப்படையாகவே சொன்னார்.
ஆயினும் இப்பிரமுகரின் சுய நலம் அற்ற மக்கள் சேவை, நேர்மை, விடா முயற்சி, அர்ப்பணிப்பு, அரசியல் வேலை ஆகியவற்றால் கவரப்பட்டு விட்டார் என்று தெரிவித்த மலரவன் புலிகள் இயக்கத்தில் இணையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆயினும் இப்பிரமுகர் மறுத்து விட்டார்.

யோசித்து சொல்லுங்கள்.. என்று விடை பெற்றுச் சென்ற மலரவன் இதற்கு பின்பும் ஓரிரு சந்தர்ப்பங்களில் இப்பிரமுகரை சந்திக்க நேர்ந்தது. இயக்கத்தில் சேருங்கள் என்று அப்போதெல்லாம் மலரவன் கோரினாரே ஒழிய துப்பாக்கியை இயக்கவே இல்லை.
இப்பிரமுகரின் பெயர் பசுபதி சீவரத்தினம் என்பதாகும். ஆயினும் கி. பி என்று மக்களால் அன்பாக அழைக்கப்படுகின்றார். கிராமத்து பிள்ளை என்பதே கி. பி என்பதன் விரிவாக்கம் ஆகும். இவர் கிராமங்கள் தோறும் சென்று மக்கள் நலன் சார்ந்த வேலைகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றமையால் மக்கள் இவருக்கு வழங்கிய பட்டமே இது. இவர் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றார்.
இவரின் ஒரு கண்ணாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபாவையும், மற்றைய கண்ணாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவையும் கொண்டிருக்கின்றார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளராக விளங்கினார். இப்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளராக விளங்குகின்றார். இவர் முதலாவது வடக்கு – கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருந்தவர்.

பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்திகள் முயற்சிகள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா விளங்கியபோது பசுபதி சீவரத்தினத்தை பனை அபிவிருத்தி சபைத் தலைவராக நியமித்தார். பனை அபிவிருத்திச் சபை வரலாற்றிலேயே பசுபதி சீவரத்தினம் தலைவராக பதவி வகித்த காலம் பொற்காலம் என்று அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக இவர் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

(எனக்கு மிகவும் நெருக்கமாக கி.பியைத் தெரியும். நாங்கள் பல கிராமங்களில் இணைந்தே வேலைகள் செய்தும் இருக்கின்றோம். இன்று வரை மக்கள் சேவையில் நான் நம்பிக்கை வைக்கும் போராளிகளில் முதன்மையானவர். நான் அறிந்த வரை கி.பி என்பது 'கி'ருஷ்ண'பி'ள்ளை என்ற பெயரின் சுருக்கமாவே இருந்ததாக அறிகின்றேன். இந்தப்பெயர் தலைமறைவு இயக்கச் செயற்பாட்டிற்காக இடப்பட்ட பெயர் ஆகும். ஆனாலும் கிராமத்துப் பிள்ளை என்பதற்கும் மிகவும் பொருத்தமானவர். இன்று 'வாழ்வியலை' நோக்கி டக்ளஸ் உடன் சேர்ந்து செயற்படுகின்றார். மற்றபடி இவர் டக்ளஸ் ஐ அதிகம் நேசிப்பவரா என்பது அவரிடமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்வேன்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்க வேண்டியவர் விருப்பு வாக்கு என்ற முறையில் உள்ள குத்து வெட்டுக்களினால் சொற்ப வாக்குகளில் தோற்றுப் போனவர். இம்முறையும் இதே விருப்பு வாக்கு முறை இவரைப் பலிக்கடா ஆக்குமா என்பதே இன்றைய கேள்வி. பாராளுமன்றக் கதிரைகளின் சுகங்கள் ஒரு கட்சிக்குள்ளேயே பரஸ்பரம் காலைவாரும் செயற்பாடுகளைத் தூண்டும் செயற்பாடுகளை ஊக்குவிக்கும். இதில் கொள்கை என்ன? கோடபாடுகள் என்ன? எல்லாம் நாற்காலியைப் பிடிக்கும் ஓட்டங்களே நடைபெறும். இதில் கிபி போன்ற மக்கள் சேவையை அதிகம் நேசிக்கும் போராளிகளுக்கு வாய்ப்புக்கள் இல்லாது போவது துர்அதிஷ்டமே!

கிபி தனது கொள்ளைகளில் விலைபோகாதவர் மக்களை நேசிப்பவர் எல்லாம் சரி. ஆனால் புலிகளின் மலரவன் கொல்லாமல் விடும் அளவிற்கு நல்லவன் அல்ல, வேணும் என்றல் குருநகர், பாசையூர் மக்களை கேட்டுப்பாருங்கள். பாதிரியிடம் சரணடைந்த பொதுமகனை பாதிரி மீண்டும் புலிகளிடம் ஒப்படைக்க இஸ்திரிகைப் பெட்டியினால் அந்த பொது மகனின் உடம்பெல்லாம் சூடுபோட்டு சித்திரை செய்து கொலைகள் செய்தவன். இந்த நிகழ்வு ஒன்றே போதும் மலரவனின் செயற்பாடுகள் பற்றி எடுத்தியம்ப. மலரவன் போராளியா...? இல்லவே...இல்லை... கொலையாளி...... பாசிஷவாதி..... - சாகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com