Contact us at: sooddram@gmail.com

 

உண்மைகள் உறங்கும் சிலகாலம்.....?

பெருந்தொகை சுனாமி நிவாரண நிதியை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வீணடித்துவிட்டன

(சாகரன்)_

செய்திகள் கூறுகின்றன....

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி நிவாரண நிதியாக பெற்றுக் கொண்ட பெரும் தொகைப் பணத்தை வீணடித்து விட்டன என்று ஆர்எம்ஐரி என்ற ஆய்வு நிலையம் மற்றும் மெல்போர்ன் மொனாஷ் பல்கலைக்கழகங்கள், இலங்கையிலுள்ள கொழும்பு பல்கலைக்கழகம், இந்தியாவிலுள்ள சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்டு ஒஸ்எயிட் எனும் அவுஸ்திரேலிய அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்ககப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் மட்டும் 500 க்கும் அதிகமான தன்னார்வ நிறுவனங்கள் செயல்பட்டன எனற போதிலும் 14 நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேரை பலிகொண்ட சுனாமிப் பேரழிவு போன்ற பாரிய அழிவுகளின் போது மீட்புப் பணியை மேற்கொள்ளக் கூடிய அனுபவம் பல நிறுவனங்களுக்கு இருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிர்மாணிக்கப்பட்ட சில புகலிடங்களில் நான்கு வருடங்கள் வரை குடும்பங்கள் வாழ்ந்து வந்ததால் தற்காலிக வீடுகளை கட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருத்தல் வேண்டும் என்று இந்த 385 பக்க அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பத்திரிகை தெரிவித்துள்ளது.

அரசாங்கங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சுனாமியிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை முழுமையாக கிரகித்து வைத்திருக்காவிட்டால் மீண்டும் அதே தவறை புரிந்து ஏராளமான உலக உதவிப் பணத்தை வீணடித்து விடும் என்று ஆர்எம்ஐரியின் உலகளாவிய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் மார்ட்டின் முலிகனும் அறிக்கையின் இணை ஆசிரியை யசோ நடராஜாவும் தமதுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச தன்னõவ நிறுவனங்களின் உதவித் தொகைகள் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூர் சமுதாயக் குழுக்களுடன் உறுதியாக இணைந்து செயல்பட்டதையும் இவர்கள் சுட்டிக் காட்டியுள்ளõர்கள். ஆனால் பல உதவி நிறுவனங்கள் அவசர அவசரமாகவும் ஒன்றோடொன்று போட்டியாகவும் செயல்பட்டதால் பெரும் தொகையான சுனாமி உதவிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். தரம்
குறைந்த நிர்மாணப் பணிகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் பல நிறுவனங்கள் அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்தன என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

நாம் கூறுகின்றோம்....

இலங்கையில் 2004 ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டவுடன் புலம்பெயர் நாடுகளில் பெருமளவு நிவாரண நிதிகள் சேகரிக்கப்பட்டன. புலம்பெயர் நாடுகளில் உள்ள வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் தமது வழமையான ஒலி, ஒளிபரப்புகளை இடைநிறுத்தி விசேட ஒலி, ஒளிபரப்புக்களை சுனாமி நிதியைச் சேகரிக்கும் முகமாக கிழமைக் கணக்கில் மேற்கொண்டன. மக்களும் தமது உறவுகள் பாதிக்கப்பட்டு விட்டனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நியாயமான ஆர்வக் கோளாறு காரணமாக தொலைபேசியில் அழைத்து பணக்குவியலை வழங்கினர். அன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் சகல தமிழ் ஒலி ஒளிபரப்பு ஊடகங்களும் புலிகளின் கட்டுப்பாட்டில் அல்லது (சொ)ல்வாக்கில் இருந்தன. சுனாமியினால் பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.

புலம் பெயர் நாடுகளில் சேகரிக்கப்பட்ட பல மில்லியன் டாலர்கள் புலிகள் அமைப்பிடமே கொடுக்கப்பட்டது, (புலிகளின் பினாமி அமைப்பு என்று அழைப்பதை விட புலி அமைப்புக்கள் என்று அழைப்பதுவே சாலப் பொருத்தமானது). இவ் நிதிகள் வடக்கு கிழக்கு இற்கு புலிகளுக்கே அனுப்பப்பட்டன. (வடக்கு கிழக்கில் பொது அமைப்புக்கள் என்று காட்டப்பட்டாலும் அன்றைய கால கட்டத்தில் இவை புலி அமைப்புக்களாகவே செயற்பட்டன. இதில் ரிஆர்ஓ முக்கியமானது. சில சர்வதேச தன்னார்வு அமைப்புககள் செயற்பாட்டாலும் இதன் ஊழியர்கள் வடக்கு கிழக்கு தமிழர்களே பெரிதும் வேலை செய்தனர். இவர்கள் நிச்சயமாக புலிகளின் ஆட்களாகவே செயற்பட்டிருக்க முடியும். அன்றேல் அன்றே மண்ணோடு மண்ணாக போய் இருப்பார்கள். ஒட்டு மொத்தமாக பார்த்தால் புலிகளால் பொது மக்களின் உண்மையான உணர்வுகள் ஏமாற்றப்பட்டு கொள்ளளையடிக்கப்பட்ட பணம் புலிகளிடமே ஒப்படைக்கப்பட்டு வீணடிகப்பட்டதே இலங்கையில் தமிழ் பகுதி சுனாமி நிதிக்கு நடைபெற்றது.

இவை எல்லாவற்றையும் விட சர்சதேச, ஏன் உள்ளுர் தன்னார்வ நிறுவனங்களின் இயக்குனர்கள் மிகச்சில ஊழியர்கள் தவிர்ந்த ஏனையோர் இவற்றில் இணைந்து வேலை செய்வதே உதவித் தொகையை கொள்ளையடிப்பதற்காகவே. கூடவே தமது மேலத்தேய எசமானர்களுக்கு தகவல் வழங்குவதற்காகவும். இதற்காக இடையிடையே நிவாரணம் என்ற பெயரில் கிள்ளித் தெளிப்பார்கள் மக்களுக்கு. இதில் ஏமாறுவது உதவி வழங்கும் பல ஆயிரம் பொது மக்களும் உதவியை எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுமும் ஆவர். புலிகளின் யுத்தத்திற்கு பல மில்லியன் டாலர்கள் பொது மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்டது இவ் வழிகளிலும் ஆகும். பொது மக்களே சிந்தியுங்கள் இனிமேலாவது. நிவாரணங்கள், நிவாரணம் தேவையான மக்களை சென்றடையக் கூடிய முறமைகளை சற்று நிதானித்து சிந்தித்து கண்டு பிடித்து முறையான ஊடகத்தினூடு மக்களை சென்றடையச் செய்யுங்கள். நீங்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.

அதே வேளை இலங்கை உட்பட அவ் அவ் நாடுகளில் ஆளும் வர்க்கமும் தனது கை வரிசையை இவ் நிவாரண நிதியில் காட்டியே வந்திருக்கின்றன. என்ன இலங்கையில் தமிழர்கள் சிங்கள் அரசு செய்தார்கள் என்று சற்று ஆர்வத்துடன் குற்றம் சாட்டுவார்கள். மற்றபடி வீட்டுக்கு விடு வாசல்படிதான்.

இவ்விடத்தில் இன்னொற்றையும் குறிபிட்டாக வேண்டும். கிழக்கில் சுனாமியால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டதும் கிழக்கின் எல்லைக் கிராமங்களில் வசித்து வந்த சிங்கள் மக்கள் கடகங்களில் நிவாரணப் பொருட்களை நிறைத்து கிழக்கில் உள்ள பல தமிழ் கிராமங்களுக்கு கால் நடையாக சுமந்து வந்து நிவாணப்பணிகளில் ஈடபட்டதை சகோரத்துவத்துடன் நினைவும் கூறியே ஆக வேண்டும். நாம் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்கள கிராமத்திற்கு கடகங்கள் காவிய வரலாற்றை தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும்?

(சாகரன்)(((ஆடி 13, 2010)ஆடி 13, 2010)ஆடி 13, 2010)_(ஆடி 13, 2010)(ஆடி 13, 2010)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com