Contact us at: sooddram@gmail.com

 

என் மனவலையிலிருந்து........

இடியம்பமும்..... நூடில்ஸும்

(சாகரன்)

பாரம்பரிய உணவுப் பழக்கம் மெத்த பத்தாம் பசலித்தனம் என்று மேற்கத்திய உணவுப் பழக்க முறையை நாகரிகமானது, இதுவே சமூக அந்தஸ்தை தரும் என்ற பிழையான விளம்பரங்களை, அறிவூட்டல்களை உள்வாங்கி நாசமாகி போய் கொண்டிருக்கும் சமூகமாக மாறி வருகின்றதா இந்தியா என்ற கேள்விகள் அண்மைக் காலத்தில் முன்பு எப்போதையும் விட தற்போது அதிகம் ஏற்பட்டிருக்கின்றது. சிறு தானியங்களை உணவுப் பழக்க முறையாக கொண்ட ஆதிப் (பொதுவுடமை) சமூதாயம் உபரி உற்பத்தியில் ஈடுபட்டு வியாபாரம் என்ற நிலைக்கு வளர்ச்சியடைந்து பின்பு பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய பெரும் தானிய உற்பத்திக்கு தாவியது. இது சிறுக சிறுக சிறுதானியங்களை தமது உணவு பழக்க வழக்க முறைகளிலிருந்து புறம் தள்ளி, தவிர்த்து வந்தது. அதிகம் நார் சத்து அடங்கிய சிறுதானிய உணவுப் பழக்க, வழக்க முறையிலிருந்து தமது வாழ்க்கை முறையை மாற்றியமைக்க புறப்பட்ட மனித குலம் கூடவே அறியாத நோய்களுக்குள்ளேயும் தள்ளப்பட்டது. இதற்கான மருத்துவத்தையும் இயற்கை மருத்துவ முறையை தவிர்த்து விஞ்ஞான வளர்ச்சியினால் கண்டு பிடிக்கப்பட்ட செயற்கை இரசாயன மருந்துவ முறையை பாவிக்க தொடங்கியது. இது அவசர சிகிச்சை என்ற வகையில் தீர்வுகளை? கொடுத்தாலும் வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தியே வந்தது. ஆனால் இந்த நவீன மருத்து முறைகளும் ஒன்றை நிராகரிக்க முடியவில்லை அதுதான் 'நார்ச் சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள்' என்ற விடயத்தை.

1970 களில் இந்தியாவின் சகல கடைகளிலும் பழங்களினால் செய்யப்பட்ட இயற்கைப் பானங்களே ஆக்கிரமிப்பு செய்திருந்த இந்திய 1980 களின் நடுப்பகுதியல் இருந்து மேற்கத்திய கொக்கோ கோலாக்களும் ஏனைய செற்கைச் சுவையூட்டும் பானங்களும் நாகரீகம் என்ற வகையில் புகுந்து நீரழிவு நோயை மத்தியதர வர்க்க மக்களிடம் விதை;து விட்டுச் சென்றன் தொடர்சியை இன்று புள்ளி விபரங்களுடன் இந்திய மருத்துவ உலகம் நிரூபித்து நிற்பது தெரிந்திருந்தும் இன்றும் இவற்றை செரிமானப் பானம் என்று பாரமர மக்களை ஏமாற்றும் வித்தையை இந்திய அரசு தடுத்து நிறுத்தாது பல் தேசியக் கம்பனிகளை திறந்து விட்டிருக்கின்றது.

அறுசுவைகளான இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என்பனவற்றை இயற்கையான உணவுப் பழக்க முறைகளில் பெறக் கூடிய சூழலில் இருந்து உலகம் மாறி வர தூண்டப்பட்டுள்ளது. தற்போதைய பல் தேசியக் கம்பனி வேக ஓட்ட வாழ்க்கை முறையில் செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கப்பட் உணவுப் பண்டங்களை மனிதர்களின் நாவை திருத்திப்படுத்தும் செயற்பாட்டில் வியாபார நோக்குடன் உருவாக்கப்படும் பாக்கட் உணவுகள் எம்மை அதிகம் ஆக்கிரமித்துள்ளன. இதில் முக்கியமானது அறு சுவையையும் விஞ்சும் மோனோசோடியம் குளுட்டோமேட் என்கின்ற MSG. உலக உணவு கட்டுப்பாட்டு சுகாதார நிறுவனங்கள் உணவுகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உட்பட்டு இந்த சுவை 'நஞ்சை' கலக்கலாம் என்ற விதிமுறையை விதித்துள்ளன. இப்படி இருக்க பல் தேசியக் கம்பனிகள் சுதேசிய உணவை இல்லாமல் செய்து அதிக இலாபத்தை குறுகிய காலத்தில் பெறுவதற்காக நியம அளவிற்கு மேற்பட்ட அளவில் பாக்கட் உணவில் குறிப்பாக நூடில்ஸ் என்ற பண்டத்துடன் கலந்து விற்பனையில் அமோகமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இடியம்பம் போய் நூடில்ஸ் வந்தது வாழ்வில் கூடவே செயற்கை சுவையூட்டி MSG யும் சேர்ந்தே வந்தது. உடல் பருமனும் அதிகரித்தது. செலவுகளும் அதிகரித்து.

ஆனால் இந்திய மாநில அரசுகள் விழித்துக் கொண்டு தற்போது தற்காலிக தடையை விதித்திருப்பது நல்ல சகுனம்தான். ஆனால் அம்மாவிற்கு நீதிபதி குன்ங்கா வழக்கிய தீர்ப்பை குமாரசாமி நீக்கியது போல் இந்த நூடில்ஸ் இற்கும் இன்னும் ஒரு குமாரசாமி கிடைக்காமலா போவார் என்று மகி நூடில்ஸ் பல் தேசியக் கம்பனி இந்தியாவில் தமது நலன்களைப் பேணும் தரகர் மூலம் தமது தேடலை ஆரம்பித்து இருப்பார்கள் என்பதை மறுக்க முடியவில்லை.

கேள்வரகு கஞ்சியும், தினை மா பிடியலும். ஒடியல் புட்டு உம், குரகன் ரொட்டியும் உம். வரகு அரிசி சோறும், எள்ளுப்பாவும் தரும் நார்ச்சத்தும், உடல் ஆரோக்கியமும் பசுமதி அரிசியும், கோதுமை மாவும் MSG கலந்த உணவுப்பண்டங்களும் பேகர், பீட்சா என்பன தருமா?..... இல்லை என்பதே நாம் கண்கூடு கண்டு வரும் உண்மைகள் ஆகும். மனிதனின் மரபு அணுக்கள்(DNA) ஆயிரம் ஆயிரம் வருடங்களாக எமது சுதேச உணவுகளை எவ்வாறு கையாளுதல் என்பதற்கேற்பவே பழக்கப்பட்டுள்ளன. அதாவது Program பண்ணப்பட்டுள்ளன. தீடீரென எமது மரபு அணுக்களால்(DNA) வாசித்தறிய முடியாத உணவுகளை உண்ணும் போது இவற்றை எவ்வாறு பிரித்தெடுத்து, எவற்றை உள்வாங்குவது, எவற்றை வெளியேற்றுவது; எவ்வளவை சேமித்து வைப்பது, எவ்வளவை தவிர்ப்பது என்ற குழப்பங்கள் உடல் உறுப்புககளுக்கு ஏற்படுகின்றது. இந்த குழப்ப நிலையே எமது உடலில் சீரிய வளர்ச்சி செயற்பாடுகள் இல்லாமல் எம்மை நோய்களுக்குள் தள்ளி விடுகின்றது. இதனை நாம் சரியாக புரிந்து கொண்டால் எமது மரபணுக்கள் புரிந்து கொண்ட பாரம்பரிய உணவு முறைகள் எமது ஆரோக்கியத்தை மற்றைய எவற்றையும் விட சிறப்பாக பேணும் என நாம் ஆய்ந்து அறிய முடியும்.

எனவே இன்னும் ஒரு குமாரசுவாமி வரும் வரை எமது பிள்ளைகளையும் இந்திய தேசத்தையும் MSG என்ற செயற்கை சுவையூட்டி என்ற நஞ்சிடம் இருந்து காப்பாற்றுவோம். இதற்கான விழிப்புணர்வுடன் செயற்படும் உழவர் சாப்பாட்டுக் கடைகளை ஊக்கிவிப்போம். உழவர் சாப்பாட்டுக் கடை என்ற பாரம்பரிய உணவு பழக்க முறைகளை மீண்டும் மக்களிடையே அதிகம் பழக்கப்படுத்தும் செயற்பாட்டில் சில சமூக அக்கறையுடையவர்களால் செயற்படுத்தப்பட்டு வரும் நல் முயற்சிகளை ஊக்கிவித்து வளர்த்தெடுப்போம். இக்டுரையை வரைய என்னைத் தூண்டிய இணைய வழிக் கவிதையை இங்கு இணைத்துள்ளேன்.

இடியாப்பத்தின்

வாழ்வு தன்னை

நூடுல்ஸ்

கவ்வும்

மீண்டும்....!

இடியாப்பமே

வெல்லும்....!

(சாகரன்) (ஆனி 06, 2015)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com