Contact us at: sooddram@gmail.com

 

என் மனவலையிலிருந்து.......

மரணம் வலிக்கவே செய்கின்றது.........!

தோழர் சிறில் இன் மரணத்தின் வலியிலிருந்து……?

(சாகரன்)

1980 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத நடவடிக்கைகள் கூர்மை அடைந்திருந்த வேளை. தேசிய விடுதலைப் போராட்டம், வர்க்கப் போராட்டதிற்கான அகப், புறச் சூழல்களை பின்னுக்கு தள்ளியிருந்த கால கட்டம். ஈழத்தில் ஐந்திற்கு மேற்பட்ட பலமான ஈழவிடுதலை அமைப்புக்கள் தமது தேசிய விடுதலைப் போராட்டதிற்கு ஆட்களைத் அணி திரட்டிக் கொண்டிருந்த கால கட்டம். இலங்கையில் பேரினவாதம் தனது ஒடுக்குமுறைக்கான நியாயங்களை சதாரண சிங்கள மக்களிடம் இலகுவில் வெறியாட்டம் ஆடுவதற்காக பரந்துபட்ட அளவில் விஸ்தரிப்புக்களை முன்னெடுத்த கால கட்டம். இலங்கையில் நடைபெறுவது தேசிய அனப் பிரச்சனை அல்ல மாறக சிங்கள, தமிழர் என்ற இரு இனங்களுக்கு இடையேயான முரண்பாட்டுப் பிரச்சனை என்பது போன்ற தோற்றப்பாட்டை பேரினவாதமும், தமிழ் குறுந்தேசியவாதமும் தூக்கிபிடித்து கரகாட்டம் ஆட முற்பட்ட கால கட்டம்.

அன்றைய கால கட்டத்தில் சிங்கள மக்கள் மத்தியிலும் இருந்து ஈழவிடுதலைப் போராட்டத்திற்கும், இதன் தொடர்சியான வர்க்க விடுதலைப் போராடத்திற்கும் ஆதரவு தெரிவித்து தென் இலங்கையில் செயற்பட்டு வந்த அமைப்புத்தான் 'விகல்ப கண்டாயம' (කල්ප පක්ෂය) அதாவது ‘Alternative Party’ என்ற புரட்சிகர அமைப்பாகும். அப்போதெல்லாம் தென் இலங்கையில் புலிகளின் பாணியில் மாற்றுக் கருத்தாளர்களை துப்பாக்கியினால் ஜே.வி.பி வேட்டையாடி வந்த காலகட்டம். இப்படியான ஒரு இக்கட்டான காலகட்டத்தில் சிறுபான்மை மக்களின் கூர்மையடைந்திருந்த தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து செயற்பட்டவர்தான் தோழர் சிறில் இவர் எமது சகோதர இனத்தைச் சேர்ந்த, சகோதர மொழி பேசும் ஒரு தோழர். தபால் ஊழியராக கடைமையாற்றிய இவரை ஜே.வி.பி இவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முற்பட்ட போது அதிலிருந்து தப்பி தலைமறைவாக வாழ்ந்தவர். தொடர்ந்தும் அங்கு தலைமறைவாக வாழ முடியாத சூழலில் பாதுகாப்பு தேடி எம்மிடம் ஈழத்துக்கு இடம் பெயர்ந்து வந்த எமது சகோதர அமைப்பைச் சேர்ந்தவர். தொடர்ந்து தமது அமைப்புச் செயற்பாடுகளை விஷ்தரிக்கும் நோக்குடன் இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர்.

இவருடன் தோழர்கள் பியால், கமல் (சித்தன் டி சில்லா), ஜோ செனிவரத்ன என்று பல தோழர்களும் எமது பாதுகாப்பு வலயத்திற்குள் தமது அமைப்பிற்கான செயற்பாட்டை முன்னெடுத்தவர்கள். இவர்களுடன் மலையகத்து தோழர் முத்துவும் இணைந்தே இருந்தார். தமிழ் பேசும் பாட்டாளி வர்க்கமும், சிங்களம் பேசும் பாட்டாளி வர்க்கமும் இணைந்து வர்க்கப் போராட்டை நடத்த முடியாத அளவிற்கு பேரினவாதம் தலைவிரித்தாடியதினால் தவிர்க்க முடியாமல் தேசிய விடுதலைப் போராட்டம் என்பதே முதன்மையான விடயம் என்ற வகையில் ஈழம் என்ற தனிநாட்டுப் போராட்டத்தை அங்கீகரித்து ஈழத்தின் விடுதலைக்கு பின்னராக ஒட்டு மொத்த வர்க்க விடுதலைக்காக போராடவேண்டிய அகப். புறச் சூழல்களைக் கருத்தில் கொண்டு நாமும், தோழர் சிறில் சாரந்திருந்த அமைப்பும் எமது போராட்ட தந்திரோபாயங்களை வகுத்து செயற்பட்டு வந்தன. இதில் தோழர் டயான் ஜயத்தில, குமாரி ஜெயவர்த்தன இன்றும் மேர்ஜ் இல் செயற்பட்ட பல சிங்களத் தோழர்களும், புத்திஜீவிகள் என்ற மட்டத்தில் செயற்பட்டு வந்தனர். ஆனால் சிறில், கமல் போன்றவர்கள் மிகவும் அடிமட்ட வேலைகளுக்குள் தம்மை இணைத்து செயற்பட்டு வந்தனர்.

இப் போராட்டப் பயணத்தில் இவர்களுடன் சேர்ந்து செயற்பட்ட பகல், இரவுகள் ஏராளம். அன்று என் காதலி அஞ்சலி இவர்களின் அன்புக்குரிய ஏஞ்சலாக காணப்பட்ட வறுமையிலும் சந்தோஷங்களை காவித்திரிந்த கனாக்காலங்கள் அவை. வாழ்வதற்காக போராடுகின்றோம் என்பதை எமக்கு ஆளப் பதியவைத்த எமது சகோதர இனத் தோழர்கள் தனது தொழில் சார் அறிவியலை எமது விடுதலை அமைப்பின் தொடர்பு பிரிவிற்கு அறிவூட்டியதில் தோழர் சிறில் இன் பங்கு மகத்தானது. இதே காலகட்டத்தில்தான் றோகண விஜவீராவின் மனைவின் சகோதரர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவருமான ஏச்.என்; பெனார்ண்டோ இதே மாதிரியான பாதுகாப்பு காரணங்களுக்காக யாழ்ப்பாணத்திற்கு பாதுகாப்பு தேடிவந்து யாழ்ப்பாணத்தவராக மாறியிருந்த கால கட்டம். அன்றைய கால கட்டத்தில் தினமும் இவரை யாழ்பல்கலைக் கழக நூலகத்திலும், சிற்றுச்சாலையிலும், ஏன் மாணவர்கள் தங்கிருந்து அளவாளவும் மரங்களுக்கு கீழ் இருந்தும் தனது அன்றாட வாழ்வில் கலந்ததை அவதானிக்க முடியும். இவருடன் சதா பிற்காலத்தில் புலிகள்ன் முக்கிய உறுப்பினர் திருநாவுக்கரசு ஐ யும் காண முடியும்.

தோழர் பத்தமநாபா தன்னைத் தேடிவரும் மாற்று அமைப்பாளர்களை அவர்களது சுயம் அங்கீகரித்து செயற்பட அனுமதித்தே தன்னாலான உதவிகளை செய்து வந்தார். இது தோழர் சிறல் சார்ந்த அமைபிற்கும் பொருந்தியே இருந்தது. கூடவே விசுவானந்ததேவன் தலைமையிலான என்.எல்.எவ்.ரி இற்கும் பொருந்தியது. ரெலோவிலிருந்து பிரிந்து வந்த மனோ மாஸ்ரருக்கும் பொருந்தியது. புலிகள் எம்மை ஆயுத ரீதியாக ஒடுக்க முற்பட்ட காலங்களுக்கு பின்னரான நாட்களில் 'முரண்பாடு காரணமாக புலிகளிலிருந்து தாம் வெறியேறி இருக்கின்றோம் என்று நாபாவை சந்திக்க வந்த புலி உறுப்பினர்களாக(அனெகமாக இக்குழவின் தலைவர் கருணாவாவாகத்தான் இருக்க வேண்டும் என்று என் அனுபவம் கூறுகின்றது உறுதிப்படுத்த முடியவில்லை. இது நபாவை கொலை செய்ய பிரபாகரனால் ஏற்பாடு செய்யப்பட்ட சதித்திட்டம்; என்பது எம்மால் எச்சரிக்கையுடன் அணுகியதால் நபாவின் உயிர் அன்று தப்பியது) இருக்கட்டும் யாவருக்கும் பொருந்தியே இருந்தது. இதனால்தான் தோழர் சிறில் போன்றவர்கள் தமது மரணம் வரை தாம் நம்பிய கோட்பாடுகளுடன் சுயம் இழக்காமல் செயற்பட முடிந்தது. வாழவும் முடிந்தது.

ஒரு இரவு நாபா சற்றே அசந்து தூங்கிய(நித்திரை) வேளையில் நாபாவிற்கான பாதுகாப்பிற்கு இந்த சிங்களத் தோழர்கள் மட்டும் விளித்திருந்து காவல் செய்தது இன்றும் என் மனக் கண்ணில் நிழலாடுகின்றது. இதனை மிகவும் நகைச்சுவையாக தனக்கு தெரிந்த அழகு தமிழில் சிந்தன் டி சில்வா அடிக்கடி கூறி மகிழ்வது எம்மில் பலருக்கு தெரியும். இந்த சகோதரைய குழுமத்திலிருந்து ஒரு இதழ் உதிர்ந்துவிட்டது என்பது எனக்கு ரொம்பவே வலிகத்தான் செய்கின்றது. அடுத்த தடவை இலங்கை செல்லும் போது சில தினங்கள் இந்த சிங்களத் தோழர்களுடன் எனது நாட்களை செலவிட வேண்டும் என்று அசை போட்டவண்ணம் இருந்தது, ஜோ செனிவரத்ன என்ற வட்டத்திற்குள் என்னை சுருங்கச் செய்த தோழர் சிறில் இன் மரணம் எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் வலிக்கவே செய்கின்றது. தோழரே சென்று வாருங்கள் உங்கள் குரல்களை நாங்கள் களனி கங்கையிற்கும், மகாவலி கங்கையிற்கும் கேட்கும் வண்ணம் உரத்து கூறியவண்ணம் சிறில்..... சிறில்.... என்று பாட்டிசைத்து வருவோம்;. அந்த நடுத்தர உயர சீன, ஸ்பானிஸ்களின் தோற்றம் கொண்ட அமைதியான தோழனின் அர்பணிப்புக்களை மக்கள் மீதான நேசங்களை எங்கள் சகோதர இன மக்களிடம் எடுத்துச் செல்வோம். எமது பயணம் மலையகத்தை நோக்கியதாவே அமையும். ஆங்கு முத்துவும் எம்முடன் இணைவார் என்ற நம்பிக்கை நாம் எப்போதும் போல் இப்பவும் இழக்கவில்லை.

(Saakaran) (ஜுன் 16, 2015)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com