Contact us at: sooddram@gmail.com

 

பத்மநாபாவின் தீர்க்கதரிசனம்

முன்பு எப்போதையையும் விட தற்போது அதிகம் பேசப்படுகின்றது

(தோழர் ஜேம்ஸ்)

இலங்கைத் அரசியலில் தற்போது அதிகம் புழக்கத்திலிருக்கும் சொல் 13 வது திருத்தச் சட்டம். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கட்டும் அல்லது இலங்கை அரசாக இருக்கட்டும் எதிர்க் கட்சி ஐதே கட்சியாக இருக்கட்டும் இலங்கை ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் பேரினவாதக் கட்சிகளின் பிரதிநிதிகள் சம்பிக, விமல் வீரவன்ச உட்பட அரசில் அங்கம் வகிக்காத பொது பல சேன போன்ற அமைப்புக்களாக இருக்கட்டும் எங்கும் யார் வாயிலும் இதே பேச்சுத்தான். அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக்கட்சிகளின் தலைவர்களும் இதே பேச்சில்தான் வீழ்ந்து கிடக்கின்றனர்.

இவர்களில் ஒரு பகுதியினர் 13 வது திருத்தச் சட்டம் மூலம் தமிழருக்கு அதிக உரிமை வழங்கப்பட்டு விட்டது. அது தனிநாடு வரை கொண்டு சென்றுவிடும் எனவே இதனை முற்று முழுதாக நீக்கவேண்டும் என்கின்றனர். இன்னொரு தரப்பினர் அதில் உள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்போ 13 வது திருதச்சட்டதை இல்லாது செய்யக் கூடாது. இது தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்ட உரிமைகளை இல்லாது ஒழிக்கும் செயற்பாடு என்று கோரிக்கை வைக்கின்றனர். (இதன் மூலம் தேர்தலில் தமது வாக்குவங்கிகளை காப்பாற்றுவதில் இவர்கள் வெற்றி பெற்றவர்களாக்கப்படுவர்.) கூடவே இந்தியாவிடம் முறைப்பாடும் செய்கின்றனர்.

மேலும் இந்தியாவும் தமது அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டதை இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டில் இலங்கை அரசு செயற்படவோ அல்லது இதனை ஊக்கிவிக்கும் செய்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று பகிரங்கமாவும். மறைமுகமாக 'இராஜதந்திர' ரீதியிலும் இலங்கை அரசை அணுகியுள்ளது. இலங்கையின் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அமெரிக்காவும் தனது பங்கிற்கு 13 வது திருத்தச்சட்டம் தொடரப்படவேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றது.

கால் நூற்றாண்டிற்கு முன்பு 1987ம் ஆண்டு தோழர் பத்தமநாபா தீர்க்க தரிசனத்துடன் இந்திய அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உருவாகப்பட்ட இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை ஏற்று முடிந்தளவில் சகல வடக்கு கிழக்கு ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் இணைத்து மூவின மக்களுக்குமான மாகாண சபை நிர்வாகத்தை உருவாக்கினார். இவ் மகாண சபை நிர்வாகத்தை திறம்பட செயற்படுத்த தகுதிகாண் நபராக வரதராஜப் பெருமாளையும் அமர்த்தினார். இந்த 13 வது திருத்தச்சட்ட மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறமையான இலங்கை தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக கொண்டு செயற்படுவதற்து எற்ப நாம் செயற்படவேண்டும். இது ஒரு முழமைபெற்ற அரசியல் தீர்வு அல்ல மாறாக இதனை ஒரு ஆரம்ப புள்ளியாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய சர்வதேசிய அரசியல் சூழலில் நாம் உள்ளோம். இதனை நாம் திறம்பட பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல வேண்டும் என்று நம்பினார். இதன் வழியில் செயற்படவும் விளைந்தார்.

இவ் மாகாண சபை தனது ஆயுள்காலத்தை ஒருவருடம் பூர்த்தி செய்யக் கூட அனுமதியாது பிரேமதாஸ புலிகளுடன் இணைந்து செயற்பட்டார். இதற்கு பலம் சேர்த்து இலங்கையில் ஜேவிபி. ஏன் எதிர் கட்சியாக இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்காவும் இதனை விரும்பினார். இதற்கான முழு அனுசரணையையும் இந்தி மத்திய அரசில் பிரதமராக இருந்த விபி. சிங் செய்தார். புலிகளின் விருப்பிற்கு ஏற்ப, தமிழ் நாட்டின் பலம் மிக்க தலைவர் மு. கருணாநிதி ஈபிஆர்எல்எவ் இன் தலமையிலிருந்த மாகாண சபையை இல்லாது செய்ய தனது முழுப்பலத்தையும் பிரயோகித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ நாட்டடில் வைத்து ராஜீவ் காந்தியும் இதன் பின்பு சில தினங்களில் தோழர் பத்தநாபாவும் அவருடன் உடன் இருந்த 13 தோழர்களும் புலிகளினால் கொல்லப்பட்டனர். நீதிமன்றதில் நிரூபணம் செய்ய முடியாவிட்டாலும் இவ்விரு கொலைகளிலும் திமுக அரசின் ஆசீர்வாதங்கள் இருந்தன என்பது உண்மையே. 13 வது திருத்தச் சட்டத்தின் தேவை, அவசியத்தையும் எதிர்காலத்தின் அரசியல் போக்குகளை கருத்தில் கொண்டே இதனை தோழர் பத்மநாபா தமது கட்சியன் சார்பில் ஏற்றுக் கொண்டு இணைந்த மாகாண சபையை ஒருவாக்கி கொண்டு நடத்த முற்பட்டார். அன்று அவர் எடுத்த முடிவு எவ்வளவு தீர்க்கதரிசனமான முடிவு என்று அன்று உணரப்படாவிட்டாலும் இன்றைய இலங்கை அரசியல் நகழ்வுகளைப் பார்க்கும் எல்லோராலும் உணரப்படக் கூடிய விடயமாக இருக்கின்றது. அன்று யாரும் இதனைப் புரிந்து கொள்ள முயலவில்லை அல்லது ஏற்றுக் கொள்ளும் மனபக்குவத்தை கொண்டிருக்கவில்லை. மனித உரிமைவாதிகளும் மகாணசபையை ஈபிஆர்எல்எவ் வேறு தமிழ் இயங்கங்களுடன் இணைந்து செய்படுத்தியபோது எற்பட்ட தவறுகளை 9தவறுகள் நடந்தது உண்மைதான்) மட்டும் சுட்டிக்காட்டி மாகாண சபையை இல்லாமல் செய்யும் புலிபிரேமதாஸ கூட்டமைப்பிற்கு தம்மையறியாமலே வழி வகுத்தனர் என்பது இலங்கைத் தமிழரின் வரலாற்று போக்காக அமைந்து விட்டது. விமர்சனங்கள் தவறுகளைத் திருத்தி இன்னும் பலமான நிலையில் முன்னோக்கி நகர்த்துவதற்கு பயன்படுத்தப்பட்டதை விட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையை இல்லாதொழித்து புலி என்ற பாசிச சக்தியை வளர்த்தெடுக்கவே உதவி செய்ததாக அமைந்து விட்டது.

துவக்குடன் காட்சி தரும் கவர்ச்சி நாயகனின் பிரபாகரன் தோற்றத்திறகு முன்னால் சாதாண தோற்றம் கொண்ட பத்தநாபா போன்ற திரு;க்க தரிசனம் மிக்க மக்கள் தலைவரை இனம் காட்டுவதில் பலரின் தூர நோக்கற்ற அரசியல் சிந்தனை அவர் தம் கண்களை குருடாக்கிவிட்டது. இன்று பலராலும் உணரப்படும் இவ்விடயப் கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்று ஆகிவிட்டது.

அந்த மகோhன்மயம் மிக்க தோழர் அன்று எடுத்த மிகச்சரியான முடிவை தொலைத்துவிட்டு இன்று கண்டாயத்திற்குள்ளால் அடுத்த வளவிற்குள் சென்ற பசுவை அதன் வாலில் பிடித்து இழுத்து மீண்டும் எங்கள் வளவிற்குள் கொண்டுவரும் கைகரியங்களையே நாம் எல்லோரும் செய்து கொண்டிருக்கின்றோம். இதில் நாம் வெற்றி பெறுவோமா என்பது தமிழ் மக்கள் இனிவரும் காலத்திலாவது தமது சரியான தலைமைகளை தெரிவு செய்வதிலேயே தங்கியுள்ளது. தமிழ் மக்கள் தமது சரியான தலைமையை முதன்மைப்படுத்தாமல் செயற்பட்டதன் பலாபலன்களே இன்று நாம் 13 வதை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்ற பிச்சை கேட்டும் நிலையிலான செயற்பாடுகள் ஆகும். தோழர் நாபாவின் 13 வது திரத்தச்சட்டம்பற்றிய தீர்க்தரிசனமான செயற்பாட்டில் புலிகள் இலங்கை அரசுடன் இணைந்து காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டடை செய்யாது இருந்திருந்தால் இன்று பிச்சை கேட்கும் நிலமை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது.

இன்றும் இதுவே தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. புலிகளின் வழித் தோன்றல்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் தலைமையாக காட்டப்படுவதினால் இன்றும் இது தொடர்கின்றது. இப்படியே சென்றால் இன்னும் ஒரு 25 வருடங்களுக்கு பின்பு இது போன்ற ஒரு கட்டுரையை வரைய ஒருவர் வராமலா போய்விடுவார் தமிழ் மக்களுக்கு. தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளை கடந்த 60 வருடங்களாக பார்க்கும் போது இதுவே வரலாறாக இருந்து வருவதை உணர முடிகின்றது.

இன்று நாம் பத்தமநாபா போன்ற தலைவர்களை இன்று இழந்து தவிக்கும் ஒரு வெற்றிடத்தை நாம் எல்லோரும் உணர்கின்றோம். இதற்கான தேடல் எமக்கு இன்று அவசியம் ஆகின்றது. இப்படியான ஒரு தேடலில் நாம் வெற்றி பெறமுடியுமா என்றால் வரலாற்றின் ஓட்டத்தில் முடியும் என்பதே பதில் ஆனால் நாம் வாழும் காலத்தில் எமக்கு கிடைத்த அதி உன்னத வாய்பை நாம் பத்தமநாபாவை கொன்றொழித்ததன் மூலம் தள்ளி போட்டுவிட்டோம். இறுதியில் முள்ளிவாய்க்கால் அவலத்தில் பல ஆயிரம் மக்களை பிரபாகரன் சிறைபிடித்து இலங்கை அரசால் கொல்லப்பட வேண்டிய சூழல் ஏற்படுவதற்கும் இது காரணியாக அமைந்து விட்டது. தோழர் நாபாவின் இழப்பு தவிர்க்கப்பட்டிருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் பல வேளைகளில் தவிர்க்கப்படடிருக்காலாம்.

அது மட்டுமா இன்று இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை ஆரம்பத்தில் இருந்தததைவிட மேலதிகமான அதிகாரங்களுடன் ஒரு சுயாதிபத்திய பிரதேச அரசுச் செயற்பாட்டை இன்று கொண்டிக்கும். இது இலங்கையின் ஏனைய சிங்களப் பிரதேச மாகாண சபைகளின் கூடாக சிங்கள மக்களும் தமது அதிகாரப் பரவாலாகலை பெற்று இலங்கையில் ஒரு மக்கள் ஆட்சி மலருவதற்கு வாய்ப்புக்கள் எற்படுத்தியிருக்கும்.

முன்பு எப்போதையும் விட இன்று இன்னும் பத்தமநாபாவின் 1987ம் ஆண்டு 13 வது திருத்தச்சட்டத்தை ஏற்று அதிகாரப் பரவலாக்கத்திற்கான ஆரம்ப புள்ளியை இடுதல் என்று எடுக்கப்பட்ட தீர்க்கதரிசனமான முடிவு என்பது பலராலும் பேசப்படும் ஒரு பொருளாக அமைந்துவிட்டது. மக்கள் தலைவனே நீ உண்மையில் தீர்க்க தரிசிதான். இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையையும் இல்தொழித்து, உன்னையும் கொன்றதினால் 13 வது திருத்தச்சட்டத்தை காப்பாற்ற முயன்று கொண்டிருக்கும் பரிதாப நிலைமையை தமிழ் மக்களுக்கு இன்று ஏற்படுத்திருக்கின்றது.   

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com