Contact us at: sooddram@gmail.com

 

அழிக்கப்பட்ட ஆற்றல்களும்! மனித நேயங்களும்!!

ஜனநாயகம், மனித நேயத்தின் குறியீடு தோழர் பத்மநாபா

(தோழர் ஜேம்ஸ்)

தோழர் பத்மநாபா கொலை செய்யப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. மனிதநேயம் மிக்க ஒரு ஆளுமை மிக்க தலைமை எம்மைவிட்டுப் பிரிக்கப்பட்டு கால் நு10ற்றாண்டு ஓடிவிட்டது. ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதம் தூக்கிய போராட்டமாக பரிணாமம் அடைவதற்கு முன்னேயே தமிழ் மக்கள் மத்தியிலிருந்த ஆதிக்க வர்க்கம் சாதியம் என்பதை தூக்கிப்பிடித்து தனது கொலை சன்னதங்களை பல இடங்கள் ஆடி பலியெடுத்திருந்தாலும், ஈழவிடுதலை அமைப்புகளினால் பலி எடுகப்பட்ட உயிர்களே பலராலும் அறியப்பட்டதாகவும், பேசப்பட்டதாகவும் இருந்து வருகின்றது. 1970 களின் பிற்பகுதி. 1980 களின் ஆரம்ப பகுதிகளில்; தமது 'கொள்கை' களுக்கு முரணாக செயற்பட்டார் என்று இரகசியமாக தொடங்கப்பட்ட பலி எடுப்புக்கள் 1983 களின் பிறபகுதியில் மாற்று அமைப்புக்களின் உறுப்பினர்களை பலி எடுத்தல் இதற்கு நியாயங்களை கற்பித்தில் என்ற பரிணாம வளர்ச்சியில் வந்து நின்றது. அது சுந்தரத்தின் படுகொலையாக இருக்கலாம் இன்பம், செல்வத்தின் படுகொலையாக இருக்கலாம் இவை இந்த வகை கொலைகளின் வடிவங்களே. இவை தம்மோடு ஒருகாலத்தில் ஒன்றாக இருந்து மாற்று வழியில் தமது போராட்ட பாதையை புதிய அமைப்பு ஊடாக முன்னெடுத்த வகைக்குள் அடங்கின.

 இதன்போது ஒரு பகுதி மக்கள் மௌனம் காத்தனர், இன்னொரு பகுதியினர் கொலைகளை நியாப்படுத்தினர் அல்லது நியாயப்படுத்த வற்புறுத்தப்பட்டனர். இதன் தொடரச்சியாக மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட அமைப்புக்களின் ஆளுமை மிக்க செயற்பாடளர்கள் அழித்தொழிக்கம்பட்டனர்.  இந்த வகையில் தோழர் றேகன், தோழர் அமீன் போன்றவர்கள்; உள்ளடக்கப்பட்டார்கள். இவ் அழித்தொழிப்பிற்கு கொலை செய்தவர்களால் கூறப்பட்ட காரணங்கள் எதிரி என்று நினைத்து சுட்டுக் கொலை செய்து விட்டோம் என்பதே. இதனை முன்னின்று செயற்படுத்தியவரகள் புலித் தலைவர பிரபாகரனின் சீடர்கள் கிட்டு. மாத்;தையா. சுந்தோழம். கருணா போன்றவரகள். இதேவேளை, சமகாலத்தில் ஒரு பகுதி மக்களின் அழுந்தங்களால் விடுதலை இயக்கங்களிடையே ஐக்கியம் என்ற செயற்பாடுகளும் முன்னெடுகப்பட்டே வந்தன. இதனால் கொலைகளை கொலைகளால் சந்திக்காமல் சகோதர யுத்தத்தை தவிர்த்தே வந்தனர் பல விடுதலை அமைப்புக்கள். இதனை தனக்கு சாதகமா பயன்படுத்தி தொடரந்தும் தனது மேலாதிக்க சிந்தனையில் உருவான கொலைகளை அரங்கேற்றுவதில் தமிழீழ விடுதலைப் புலிகள் முனைப்புடன் செயற்பட்டனர்.

இந்த கொலைகளுக்கு எதிரான மக்கள் மத்தியிலிருந்து எழும்பிய முணுமுணுப்பை தமது துப்பாக்கிகளைக் கொண்டே பயமுறுத்தி அல்லது சமகாலத்தில் 'வெற்றிகரமான' இராணுவத் தாக்குதல் மூலம் திசை திருப்பி வந்ததில் இவர்களின் தந்திரோபாயம் வெற்றி பெற்றதுபோல் தோற்றம் கண்டது என்னமோ உண்மைதான். பயத்தின் காரணமாகவும் சுடுபவர்கள்தான் வெல்லுவார்கள், அவர்களை அண்டிப் பிழைத்தால் தமக்கு சலுகைகள் கிடைக்கும் என்ற காரணங்களினால் மௌமாகவும், சோடா உடைத்துக் கொடுத்தும் உற்சாகப்படுத்தியும் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை படுகுழியில் முள்ளிவாய்கால் வரை கொண்டு வந்து தள்ளியதில் இந்த மௌனங்களும், சோடா உடைப்புக்களும் பெரும் பங்காற்றிவிட்டன என்பதை இந்த போராட்டம் சார்ந்த மக்கள் இன்று கூட உணர்ந்திருக்கின்றார்களா என்றால் இல்லை என்பதே தற்போதைய துர்ப்பாக்கிய நிலையாகும். இதற்கான கணிசமாக காரணங்களை தமிழ் பேசும் மக்களுக்கெதிராக செயற்பட்ட பேரினவாதமும் செய்தே வந்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களிடையே உள்ள மாற்றுக் கருத்தாளர்களை முதன்மை எதிரியாகவும், இலங்கை அரசின் பேரினவாதத்தை இரண்டாம் பட்சமாகவும் கருத்தில் கொண்டே செயற்பட்டு வந்தனர். இந்தக் கொலைகளினூடு கொலைகளை, மரணங்களை கொண்டாடும் ஒரு சமூகப்பிரிவை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவாக்குவதில் புலிகள் வெற்றியும் கண்டு வந்தனர். இதில் பத்மநாபாவின் மனித நேயம் அடிபட்டு போய்விட்டது. பல ஆளுமை மிக்க போராளிகளின் போராட்டங்கள், அர்பணிப்புக்கள் மண்ணோடு மண்ணாக சாய்க்கப்பட்டுவிட்டது. மாற்று அமைப்புக்களின் போராளிகளை நபர்களாக கொல்லுதல் என்ற நிலையில் இருந்த புலிகளின் செயற்பாடு, விடுதலை அமைப்புக்களை தடைசெய்தல் அதன் உறுப்பினர்களை வகை தொகை இல்லாமல் கொல்லுதல், உயிருடன் கொழுத்துதல் என்ற வகைக்குள் புகுந்த போது இது பிழை என்று தெரிந்த மக்கள் உண்மையில் ஒன்றும் செய்ய முடியாது 'விறைத்தே' போய்விட்டனர்.

இதன் பின்னர் எல்லாம் உண்பதற்கு மட்டும் வாயைத் திறக்கும் மக்கள் கூட்டம் மட்டுமே பெருகி வந்தது. இதுதான் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பாசிச செயற்பாட்டு புலிகள் எதிர்பார்த்ததும் கூட. அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் இவர்களுக்கு பயிற்சி அளித்த இஸ்ரேல் விரும்பியதும். மாற்றுக் கருத்தாளர்களின் கம்யூனிச வார்த்தைகள் முதலாளித்துவத்தின் எஜமானர்களால் கொன்ற குவிக்கப்பட்டது. அல்லது குரல்வளை நெரிக்கப்பட்டது. இதனை இன்றுவரை புலிகள் காலத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும், இன்னைய தமிழத் தேசியக் கூட்டமைப்பும் உறுதுணையாக செயற்படுதல் மூலம் செய்தே வருகின்றது. இதில் புலிகளுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் பத்மநாபாவின் பாசறையில் வளர்ந்த சுரேஸ் அணியினர் பிந்தி? இணைந்த கொலைகாரர்கள். தமது கொலைக் கரங்களை பத்மநாபாவுடன் இருந்த கடைசிக்காலங்களில் இவர்கள் அரங்கேற்ற தவறவில்லை. களங்கத்தை ஏற்படுத்துவதில் இவர்களின் இரு குழல் துப்பாக்கியிற்கு பத்மநாபாவும் தனது மரணத்தின் முன்பும், மரணத்தின்போதும் பலியாகிவிட்டார் என்பதே இவர்களின் எஜமானர்களுக்கு கிடைத்த வெற்றி.

ஆனால் வரலாறு பத்மநாபாவையும், அவர் வழியில் உண்மையாக செயற்பட்ட, செயற்படுகின்ற தோழர்களையும் விடுதலை செய்து விட்டது. இன்று பத்மநாபாவை கொலை செய்தவர்களும், அவர்களின் தோழர்கள் பலரை தொடர்ந்த காலங்களில் கொலை செய்தவர்கள் தமது எஜமானரகள் முள்ளிவாய்காலில் முழம்தாள் இட்டு சயனைட் தவிர்த்து சரணடைந்து கொலை செய்யப்பட்ட பின்பு நாபாவின் நாமம் சொல்லி பிழைப்புக்களை அது சொத்தாக இருக்கலாம் இல்லது அரசியல் இலாபங்களாக இருக்கலாம் செய்யப் புறப்பட்ட வேஷங்கள் கலைய அதிகம் நாட்கள் எடுக்காது. தோழர்கள் ஐயா, குமார், சிவா நிதி. வேல், கணேஸ், கபூர், முகுந்தன், சாமி, செண்பகன், கமலன், கிருபா. சங்கரி, அன்பரசன், பெஞ்சமின் என அடுக்கிக் கொணடே போகும் அளவிற்கு புலிகளால் பலி எடுக்கப்பட்ட தோழர்களின் அர்பணிப்புக்களும், ஆளுமைகளும் புலிகளால் பலி எடுக்கப்பட்டதை கூடவே சேர்ந்திருந்து தகவல் வழங்கி விசுவாசம் தெரிவித்த சுரேஸ் அணியினரும், பாலகுமாரன்களும் தமது விடுதலை அரிசுவட்டில் ஒன்றாக பாடம் பயின்ற இந்தப் போரளிகளின் மரணங்களுக்கு புலிகள் அளவிற்கு பங்கும், பதிலும் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

இன்று எஞ்சியிருக்கும் தோழர் நாபாவின் வழியில் செயற்படும் தோழர்களின் கேள்விகள் ஒன்றுதான் உங்களை குற்றவாளிக் கூட்டில் நிறுத்த தகுதியானது. உங்கள் குற்றங்களிருந்து வரலாறு உங்களை ஒரு போதும் ஹிட்லரைப் போல் விடுதலையே செய்யாது. ஆற்றல் மிக்க தோழர்களே! மக்களை நேசித்த தோழர்களே!! மனித நேயம் மிக்க சகாககளே!!! நாம் நீங்கள் விட்டுச் சென்ற மனித் குலத்தின் விடுதலைக்கான கடமையை தொடர்ந்தும் உங்கள் நாமங்களை உரக்க கூறிய வண்ணம் தொடர்ந்தும் செய்தே வருவோம். இறுதி வெற்றி மக்களுக்கே என்பதை இந்த வரலாறு நிறுவி நிற்க நாம் உங்கள் இலட்சியங்களை எங்கள் கரங்களில் தூக்கிப்பிடித்து பயணிப்போம். இணைந்திருப்போம்.

(தோழர் ஜேம்ஸ்) (ஜுன் 19. 2015)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com