Contact us at: sooddram@gmail.com

 

இந்தியத் தேர்தல் 2014

இந்திய மக்களின் நல்லிணக்கம் வலுப்பெற உதவுமா....?

(சாகரன்)

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பொதுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையிலும், எதிர்காலத்தில் வல்லரசாக வரவேண்டும் என்ற கனவோடும் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் ஒரிரு நாட்களில் அல்லது ஒரு கிழமைக்குள் முழு நாட்டிற்குமான தேர்தலை நடத்த முடியவில்லை. இது இந்தியத் திருநாட்டில் மக்களிடையே பெருவாரியாக தொழில் நுட்ப வளர்ச்சிப் பயன்பாடு வளரவில்லை என்பதையே காட்டி நிற்கின்றது. நாடு பூராகவும் ஒரே நேர வலயத்தை கொண்டிருந்தும் இந்திய திருநாட்டால் ஒரு தினத்தில் தேர்தலை நடாத்த முடியவில்லை என்பதுவும் காரணம் கூற முடியாமலே இருக்க முக்கிய காரணியாக அமைகின்றது. ஆனாலும் வளர்ச்சியடைந்த நாடுகளை விட பாரியளவு அதிக வீதமான மக்கள் ஆர்வத்துடன் தேர்தலில் கலந்து கொள்கின்றனர் என்பது ஜனநாயகத்தின் மீதான வலுவான மக்களின் நம்பிக்கையையே எடுத்துக் காட்டுகின்றது.

இந்திய சுதத்திரத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் என்ற மாபெரும  ேசியக் கட்சி வரலாறு காணாத பெரு வெற்றிகளை ஈட்டி ஆட்சியை நடாத்தி வந்ததே வரலாறு. இந்திய சுதந்திரத்திற்கு பின்னரான சிறிய காலகட்டத்தின் பின்பு இந்திய மாநிலங்கள் தோறும் மொழிவாரி அடிப்படையிலான மாநிலக் கட்சிகள் உருவாகின. இவை மத ரீதியான தம்மை நிலைநிறுத்திக் கொள்வதில் வெற்றியீட்டின என்பதைவிட மொழிவாரியாக, கூடவே சிறியளவில் பிரதேச ரீதியாகவே தம்மை நிலைநிறுத்திக் கொண்டன என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றது. இதற்கு திராவிட நாடு என்ற ஆரம்பித்து தமிழ்நாடு என்று சுருங்கிக்கொண்ட உதாரணத்தை எடுத்துக்காட்ட முடியும். ஆனால் இந்தியா முழுவதற்குமான கட்சி என்ற வகையில் நாம் இந்தியர் என்ற மகாத்மா காந்தியின் தேசிய ஐக்கியத்திற்கான கோஷத்தை தாங்கி (இது சாராம்சத்தில் வெள்ளையனே வெளியேறு என்பதிலிருந்துதான் உருவானது) இன்று வரை கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடக்கம் காங்கிரஸ கட்சி வரை பல கட்சிகள் பலமாகத்தான் இன்றுவரை இருக்கின்றன.

ஆனால் இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற நாடு உருவானதும் அதனைத் தொடர்ந்த அரசியல் செயற்பாடுகளும் ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துவத்துவா அமைப்பு தன்னை வலுவாக காலூன்ற பயன்படுத்திக் கொண்டது. இதன் பின்னரே இந்தியாவில் மக்கள் மத ரீதியில் பிரிந்து நிற்கும் சில தூறல்கள் ஏற்படத் தொடங்கின எனலாம். இந்து மத வெறிக் கோஷங்களுக்கு வாய்பாக பாகிஸ்தானின் பிரிவும் இந்திய பாகிஸ்தான நாடுகளுக்கிடையே உருவான பதட்ட நிலையும் உந்துதலாக அமைந்துவிட்டன. இதற்கு மேலும் தீனிபோடுவதாக மேற்கு பாகிஸ்தானை மேற்கு கிழக்கு எனப் பிரித்துபங்களாதேஷை உருவாக்க இந்திய அரசின் ஆதரவு அமைந்துவிட்டது. இதனால்; இந்திய பாகிஸ்தான் என்ற இரு நாடுகளிடையே மேலும் விரிசல் ஏற்பட்டது. இவை இந்தியாவில் மிகவும் பலமாக நிலவி வந்த மத நல்லிணக்கத்தை இந்து, முஸ்லீம் என்று பிளவுபடுத்த வாய்பை ஏற்படுத்திவிட்டது. இதனை கன கச்சிதமாக பிடித்துக்கொண்டது. ஆர்.எஸ்.எஸ் என்ற இந்து மத வெறி அமைப்பு. இவ் அமைப்பு தான் நேரடியாக தேர்தல் பதவி என்று புறப்படாமல் பாரதிய ஜனதா என்ற அரசியல் கட்சியை முன்னிறுத்தி தனது செயற்பாட்டை தொடங்கி அதனை இன்றுவரை முன்னெடுத்து வருகின்றது.

இந்தியா சுதந்திரம் அடைந்து பலகாலமாக பாராளுமன்றத்தில் ஆசனம் எதனையும் பெற முடியாமல் இருந்த இந்த கட்சி காஷ்மீரின் பிரிவினைவாதச் செயற்பாடுகளும் இதற்கான பாகிஸ்தானின் ஆதரவும் இக்கட்சியின் வளர்ச்சிப் போக்கை படிப்படியாக ஊக்கிவித்து வந்தன எனலாம். இவற்றிற்கு சிகரம் வைத்தால் போல் அத்வானி தலைமையில் நடைபெற்ற ரத யாத்திரையும் இந்து வெறியர்களால் நடாத்தப்பட்ட கரசேவை என்ற பதத்துடன் ஆரம்பமான பாபர் மசூதி இடிப்பும் இதனை தந்திரேபாபாய ரீதியாகவேனும் தடுத்து நிறுத்த முடியாமல் போன நரசிம்மராவின் காங்கிரஸ் ஆட்சியும் இந்தியாவின் மிகப் பெரிய மத சிறுபான்மையினரான முஸ்லீம் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியானது. கூடவே இது இந்திய மக்களை மதங்களின் அடிப்படையில் பிளவு படுத்தவும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்து முஸ்லீம் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்ற செயற்பாட்டுடன் உருவான மதம் சீக்கிய மதம் என்ற கருத்தியல் ஒன்று உண்டு. இந்த சீக்கிய மதத்தை அனுசரித்து உருவான கட்சிகள் மூலம் சீக்கிய பிரிவினைவாதத்தை வளர்த்தும்விட்டு பின்பு அது தமது கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் போகின்றது என்பதை கருத்தியலாக கொண்டு சீக்கிய மத வழிபாட்டுத்தளத்திற்குள் புகுந்து இராணுவ செயற்பாட்டை செய்து சீக்கிய மக்களின் காலிஸ்தான் என்ற கனவை கலைத்து. இச்செயற்பாடு சீக்கிய மக்களை இனம் என்ற ரீதியில் இந்தியாவிடம் இருந்து தம்மை அந்நியப்படுத்தி பார்க்கும் செயற்பாட்டை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்களே இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டை கேள்விக்குறியாக்கியது எனலாம். இதேபோல் மணிப்பூர், அசாம், மேகலா, போன்ற பிராந்தியங்களிலும், காஷ்மீரில் ஏற்பட்ட பாரிய பிரவினவாதக் கோஷமும் ஆயுதப்போராட்டமும் இந்தியன் என்ற ஐக்கியத்தை கேள்விக்குறியாக்கியது எனலாம். இதனையெல்லாம் தேசியளவில் பாரியளவில் அறுவடைசெய்த கட்சி என்றால் அது பிஜேபி தான். இவர்களுடன் தேர்தல் போட்டியை சந்திக்க காங்கிரஸ் கட்சியும் இது போன்ற பிரதேச மத பிரிவினை வாதங்களையும் அவ்வப்போது தனதாக்கிக் கொண்டது. இது சாராம்சத்தில் குறைவானதாக இருந்தாலும் இது நடைபெற்றது என்பதே உண்மையாகும்.

இந்த முரண்பாடான சமூகங்களிடையேயான வளர்ச்சி இந்தியாவை இந்துக்கள் முஸ்லீம்கள், சீக்கியர்கள் என்று சற்றே பிளவுபடவைத்திருக்கின்றது என்பது உண்மையே. ஆனால் இவை நாட்டை பிளவுபடுத்தும் அளவிற்கு வளர்ச்சியடையவில்லை என்பதே யதார்த்தம். காரணம் இந்திய மக்களின் பெரும்பான்மையானவர்கள் அது முஸ்லீம்களாக இருக்கலாம் அல்லது சீக்கியர்களாக இருக்கலாம் ஏன் வேறு சமூப்பிரிவினராக இருக்கலாம் இந்திய நாட்டின் பலமான ஐக்கியத்தை விரும்புபவர்களாகவே இருக்கின்றனர்.

இவ்விடத்தில் இந்திய அரசியலில் விடுதலைப் போராட்டத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பை குறிப்பிடுவது முக்கியமாக அமைகின்றது. சுதந்திரப் போராட்டகாலத்தில் நிலவிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் செயற்பாடடில் இந்திய தேசியவாதிகளுடன் (சிறப்பாக தேசிய முதலாளித்து அமைப்புக்களுடன்) ஐக்கிய முன்னணி அமைத்து போரிட்டார்கள் இடதுசாரிகள். சுதந்திரத்திற்கு பின்பு இந்தியாவின் சோவியத்யூனியனுடான உறவு காரணமாக முற்போக்கு ஜனநாயக கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கெடுத்தது மட்டுமல்லாம் மூன்றிற்கும்; மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியை அமைத்து சிறந்த முறையில் செயற்பட்டும் காட்டினர். எப்போதும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் விடாப்பிடியாக இருந்து வருகின்றனர். இந்திய மக்களை சமாதான சகவாழ்வு வாழ்வதை நோக்கி பயணிக் கூடிய வகையில் தமது விடாப்பிடியான அரசியல் முன்னெடுப்புக்களை செய்து மக்களை பல்வேறு மட்டங்களிலும் அரசியல் அறிவூட்டி ஐக்கிய இந்தியாவின் இருப்பிற்கு பலம் சேர்த்து இருக்கின்றனர்.

சோசலிச முகாம் சீனா. சோவியத் யூனியன் என்று பிளவுபட்டு நின்றது. இதனைத் தொடர்ந்து சோவியத் யூனியனின் உள்ள நாடுகள் பல தனித்தனியாக பிரிந்து சோவியத் யூனியன் ரஷ்யா என்ற நிலைக்கு வந்து சேர்ந்தது. இதனால் ரஷ்ய ஆதரவுடன் செயற்பட்டு வந்த உலகின் பலநாடுகளில் உள்ள கம்யூனிச இயக்கங்கள் பலவீனப்பட்டதைப் போல் இந்தியாவிலும் பலவீனப்பட்டது. இந்திய கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட இந்த பலவீனமான நிலமையினால் காங்கிரஸ், பிஜேபி கட்சிகளின் ஆட்சிக்கு அப்பால் இரு தடவை உருவான மூன்றாவது அணியின் ஆட்சியமைப்பிற்கு தலமை தாங்கும் அளவிற்கு பலமாக இவர்களால் செயற்பட முடியவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும்.

இப்படியான இந்திய ஜனநாயகத்தின் வளர்ச்சிப் போக்கின் அடிப்படையிலேயே தற்போது தேர்தல் நடைபெற்று வருகின்றது. சுதந்திரத்துடன் தனிப்பெரும் கட்சியின் ஆட்சி என்று ஆரம்பித்த இந்திய ஜனநாயகம் பிராந்திய கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்கவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் வளர்ச்சிப் போக்கால் பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ், பிஜேபி தலைமையிலான கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தல் என்று பரிணாமம் பெற்றது இந்தியப் பொதுத் தேர்தல்கள். கொள்கை அடிப்படையில் இல்லாமல், வெல்லுதல் என்ற அடிப்படையில் தேர்தல் காலத்தில் அமைந்த கூட்டணியில்; ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட கசப்பான உணர்வலைகள் இந்த முறை தேர்தலில் பலமான பல கட்சிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலமையை எந்தக் கட்சியினாலும் ஏற்படுத்த முடியவில்லை.

ஆனால் 2014 தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்கவேண்டும் என்ற தவிர்க்க முடியாத சூழலே இன்று இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டு இருக்கின்றது. இது தேர்தலுக்கு பிறகு பாரிய பதவி அடிப்படையிலான பேரம் பேசல், கட்சிகளை, பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப் போகின்றது. இது இந்திய ஜனநாயகம் முகம் கொடுக்க வேண்டிவரும் பாரிய சவால் ஆகும். இந்தப் போக்கு மத்தியில் மாத்திரம் அல்ல மாநிலங்கள் மட்டத்திலும் விரிந்தே இருக்கின்றது. இதுவும் ஒரு வகை ஜனநாயகத்தின் வெற்றிதான். ஐக்கிய முன்னணித் தன்மை கொண்ட இது ஒரு ஜனநாயக செயற்பாட்டின் வெளிப்பாடாக இருந்தாலும் இந்த ஜனநாயகம்? த்தை கட்டியாள்வது பணநாயகம் என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. ஐக்கிய முன்னணி கொள்கையின் அடிப்டையில் மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தியே உருவாக்கப்படவேண்டும். எதிர்காலத்தில் இந்திய ஜனநாயகத்தின் இருப்பு இதில்தான் தங்கியிருக்கின்றது.

ஊழல் அற்ற ஆட்சி, வளர்ச்சியடைந்த மாநிலத்தை உருவாக்கியவர், பாகிஸ்தானுக்கு எதிராக குறிப்பாக முஸ்லீம் தீவிரவாதத்திற்கு எதிராக செயற்படும் இராமர்கள் என்ற பிம்பங்கள் பிஜேபியின் மோடிக்கு எற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனால் பிஜேபி அலை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி லால் காந்த் அத்வானியை பின்னுக்கு தள்ளி பிரதமந்திரி வேட்பாளாராக தேர்தலில் மோடியை முன்னிலைப் படுத்தியுள்ளனர் இந்துவத்துவா வெறியர்கள். மறுபுறத்தில் ஊழலில் ஈடுபட்ட மந்திரிகள், சோனியா காந்தி அந்நிய நாட்டவர், முஸ்லீம்களை அரவணைத்து போகும் இராமபிரானிற்கு எதிரானவர்கள் என்ற வலுவான பிரச்சாரங்களும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளியுள்ளது போல் தோற்றம் அளிக்கின்றது. இன்னொரு புறத்தில் பலமான மூன்றாம் அணியை இடதுசாரி முற்போக்கு சக்திகள் அமைக்க முடியவில்லை. மக்களின் காங்கிரஸ் ஆட்சி மீதான வெறுப்பை தமது அரசியல் ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்ட புயல் ஆம் ஆத்மி கட்சியை டெல்லியில் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சி அமைக்கும் வகையில் சிறிது காலத்தில் ஏற்படுத்தினாலும். பாரம்பரிய பெரும் தலைகளை தம்வசப்படுத்தி (இந்திரா)காங்கிரஸின் ஏமஜன்சி ஆட்சியினால் மக்களிடம் எற்பட்ட பயப்பிராந்தியை தமக்கு சாதகமாக்கி ஜனதாதளம் அமைத்து பிரமரான மொராஜி தேசாயின் கால கட்ட அரசியலை ஆத்மி கட்சியினால் செய்ய முடியவில்லை. குறைந்த பட்சம் இடதுசாரிகளுடனாவது ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த முடியவில்லை. பாரம்பரிய இடதுசாரிகளும் இதனை ஏற்படுத்த முயற்சிக்க? இல்லை. அல்லது பாரம்பரிய இடதுசாரிகளும் இதனை விரும்பவில்லை போலும். இவ்வகையான முக்கோண (நாற்கோணமா...?) தாக்குதலுடன் இந்திய பொதுத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் காமராஜர் காலத்து தனிப்பெரும் கட்சியின் ஆட்சி என்று ஆரம்பித்த சுதந்திரத்திற்கு பின்னரான ஆட்சி திராவிட இயக்கங்களின் வளர்ச்சியினால் திமுக, அதிமுக என்ற தமிழ்நாட்டுக் கட்சிகளின் தனிப்பெரும் ஆட்சிக்கு கைமாறியது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி திராவிடக் கட்சிகளுடன் மாறிமாறி கூட்டணி அமைத்து தேர்தலில் சந்தித்தாலும் தனி ஒரு கட்சியின் ஆட்சியே தமிழ் நாட்டில் நடைபெற்று வந்தன, வருகின்றன. ஆனால் விஜயகாந்தின் கட்சியின் உதயம், ராமதாஸ் கட்சியிற்கு சில பிரதேசங்களில் உள்ள செல்வாக்கு என்பன கூட்டணி அமைத்தால்தான் வெற்றி பெறமுடியும் என்ற நிலமைக்கு மேலும் திராவிடக் கட்சிகளை தள்ளியுள்ளது. இது மட்டும் அல்லாமல் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனையை தமது தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்த தொடங்கின தமிழ் நாட்டுக் கட்சிகள். இது உண்மையில் தமிழ் என்ற உணர்ச்சியேத்தலுக்கும், தமிழ் நாட்டில் தனிநாடு, தமிழ்மாநிலம் என்பதை கோர முடியாத நிலையில் ஈழத்தில் தனி நாடு என்று தமிழ் வெறியை ஏற்றி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஒரு உசுப்பேத்தும் மூன்றாம் தர அரசியல் செயற்பாடுதான். தமது நாட்டிற்குள் பிரிவினை என்ற கோஷம் சட்டப்பிரச்சனையை ஏற்படுத்தும் என்ற நிலையில் இலங்கை பிரச்சனையை இதற்கு ஒரு கருவியாக பாவிக்கும் செயற்பாட்டையே தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாநிலம் சார்ந்;த கட்சிகளும் பின்பற்றுகின்றன. ஆனால் இதுவரைக்கும் இதற்கு தேர்தல்களில் பாரிய ஆதரவு இலங்கை தமிழருக்காக குரல் கொடுத்தல் என்பதற்காக இக்கட்சிகளுக்கு கிடைக்கவில்லை ஆனால் தமிழ் வெறியர்களின் வாக்குகள் சிறிய அளவில் கிடைத்தன என்பது உண்மையே. இதுவும் இவர்கள் தொடர்ந்தும் இலங்கை தமிழர் பிரச்சனையை தூக்கிப்பிடிப்பதற்கு முக்கியமான காரணம் ஆகும். இந்த வகையில் இந்தத் தேர்தலிலும் இவர்கள் இதனைத் தூக்கி பிடிக்கின்றனர்.

இம்முறை தமிழ் நாட்டிலும் தேர்தல் கூட்டணி வழமை போல் அமைக்கப்படவில்லை. மும்முனைத் தாக்குதலுடன் தேர்தலை சந்திக்கின்றது தமிழ்நாடு. இம்முறை இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் என்ற பாரம்பரிய கட்சிகளுடன், விஜயகாந்தின் தேமுகவின் பாரதிய ஜனதா, ராமதாஸ் போன்றவர்களுடன் கூட்டணி அமைத்து நாலாவது அணியாக தேர்தலைச் சந்திக்கின்றன. ஆனாலும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி. இவர்களிடையேதான் வெற்றிகள் பகிரப்படப்போகின்றன. இதில் திமுக, அதிமுக விட அதிகம் சீட்டுக்களை வெல்லும் வாய்புகள் ஏற்படவே வாய்ப்புக்கள் அதிகம். காங்கிரஸ் இற்கு இருக்கும் அடிப்படையான ஆதரவுத்தளத்தால் வாக்குகளை கணிசமாக பெற்றாலும் இது வெற்றி பெறுவதற்கு போதுமான இருக்காது. மாறாக தேதிமுக வின் கூட்டமைப்பில் விஜயகாந்த், ராமதாஸ் போன்றவரகளுக்கு ஒரு இரு ஆசனங்கள் பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.

தேர்தலுக்கு பிறகு மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு திமுகவின் உறுதியான ஆதரவும், அதிமுகவின் உறுதியற்ற ஆதரவும் முறையே காங்கிரஸ் அணி, பிஜேபி போன்றவற்றிற்கு கிடைக்கலாம். ஏனைய மாநிலங்களில் மதச்சார்பற்ற? அணிகள் காங்கிரஸ் அணியிலும் மதச்சார்பான அணிகள் பிஜேபி இற்கு ஆதரவு வழங்கும். இதில் அகாலிதளம் நிச்சயம் பிஜேபி இற்கு ஆதரவு வழங்கும். மம்தா பானர்ஜி, மாயாவதி போன்வர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்று கூற முடியாவிட்டாலும் இவர்களின் ஆதரவு உறுதியான ஆட்சியமைக்க எப்போதும் உதவப்போவது இல்லை. எனவே இத்தேர்தலில் எந்த கட்சியும்(கூட்டணியும்....?) அறுதிப்பொரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை என்றே பார்க்கப்படவேண்டியுள்ளது. ஆனால் பிஜேபி சிறிது கூடுதலான ஆசனங்களைப் பெறக்கூடியவாய்ப்புக்கள் இருப்பதாகவே சூழல்கள் எடுத்தியம்பி நிற்கின்றன. ஆனால் ஆட்சி அமைக்க இத்தொகை தனித்தோ அல்லது இன்னொரு கட்சி(கட்சிகளுடன்) யுடன் கூட்டமைப்பு ஏற்படுத்தி ஆட்சியமைக்க பொதுமானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. தேர்தலில் பிஜேபி யை விட குறைவான தொகுதிகளை வென்று இதே நிலமை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டாலும் ஒப்பீட்டு ரீதியில் பிஜேபியை விட ஏனைய கட்சிகளுடன் கூட்டமைப்பு அமைத்து ஆட்சி அமைக்க மதவாதம் அற்ற? ஏனைய கட்சியினர் கூடுதலாக விரும்புவர் என்பது காங்கிரஸிற்கு சாதகமான அம்சம் ஆகும். இதனை ராஜீவ் காந்தி காலத்திலிருந்து காங்கிரஸில் காண முடியலாம்.

எவை எப்படி இருந்தாலும் இந்திய மக்களின் சமூக நல்லிணக்கத்திற்கும், இந்திய திருநாட்டில் ஜனநாயகம் நிலைத்து வலுப்பெறுவதற்கும் யார் வெல்லாவிட்டாலும் பரவாய் இல்லை பாரதிய ஜனதா கட்சி வெல்லவே கூடாது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியே அமைக்கக் கூடாது. அதுவும் மோடி பிரதமர் ஆகக் கூடாது. இதனை இந்திய மக்களும், இந்திய அரசியல் தலைவர்களும், கட்சிகளும் இத்தேர்தலில் செய்து காட்டவேண்டும்.

(மே 15, 2014)(Saakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com