Contact us at: sooddram@gmail.com

 

யுத்தம் முடிவுற்று இந்த ஐந்து வருடங்களில் அப்படி என்னதான் நடந்திருக்கின்றது?

(சாகரன்)

இராணுவ முகாங்கள் அகற்றப்படவில்லை. பாதுகாப்பு வலையங்கள் பல நீக்கப்பட்டாலும் எஞ்சியிருக்கும் பாதுகாப்பு நிலையங்கள் இன்னும் பலமாக்கப்பட்டு வருகின்றன. சனத்தொகைக்கு மீறிய இராணுவத்தொகை வடக்கிலும், கிழக்கிலும் பிரசன்னமாக இருக்கின்றது. சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு அதிகமாக உள்ளது. செத்தவீடு, பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் போன்ற சதாரண சனங்கள் கூடும் எல்லா நிகழ்வுகளிலும் பிரதம? அதிதிகளாக இராணுவத் தலைகள் கலந்து கொள்கின்றனர். இவர்களின் 'அதிதி' பிரசன்னமே ஒரு வகையில் கூடல் நிகழ்வுகளை குழப்பம் இல்லாமல் நடாத்த அனுமதிபோல் இருந்து வருகின்றது. மக்களின் அன்றாட நிலமைகளில் கலந்து கொள்ள எங்கள் நாட்டு இராணுவம் ஒன்றும் மக்கள் விடுதலைப்படையல்ல. மாறாக இதுவும் உலகின் பல நாடுகளில் உள்ளதுபோல் ஒரு மரபு ரீதியான இராணுவமே. இராணுவத்தில் அதிதியாக கலந்து கொள்ளும் நல்லவர்கள் இல்லை என்பதல்ல. சனல் 4 இற்கும் ஏனைய ஊடகங்களுக்கும் யுத்தத்தின் போது இடம்பெற்ற அநியாயங்களை புகைப்படம் உட்பட தகவல்கள் மூலம் வழங்கி வருபவர்களும் இதே இராணுவத்திருந்துதான் வந்திருப்பவர்கள்தான்.

மக்கள் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை. போரினால் சிதலம் அடைந்த நாட்டில் அவசியக் கட்டுமானப்பணிகள் பாரியளவில் நிறைவு பெறவில்லை. ஆனால் மறுபுறத்தில் அபிவிருத்தி என்ற வகையில் நகரங்களை இணைக்கும் சாலைகளும், இன்னபிற வசதிகளும் செய்திருக்கப்பட்டிருக்கின்றது. இது சாமான்ய மக்களின் அடிப்பட  ாழ்வை உறுதிப்படுத்த போதுமானதாக இல்லை. கீழ்த்தட்டு மக்களின் வாழ்விற்கு எந்த வகையிலும் இது உடனடியாக உதவப்போவது இல்லை. இதன் அர்த்தம் இலங்கை அரசு ஏதும் செய்யவில்லை என்பதல்ல. இந்த உள் கட்டுமானப் பணிகள் ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு தேவையற்றவை என்பதுவுமல்ல.

கிராமங்களில் இருந்து நகரத்தை நோக்கிய பயணம் என்ற முறமையே இலங்கை, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வெற்றியளிக்கும் விடயமாக அமையும். காரணம் கிராமங்களை அதிகமாகவும், கிராமத்தின் ஆதாரத்தில் தங்யிருக்கும் நிலமைகளும் அதிகமாக இந்நாடுகளில் நிலவுகின்றன. இதனையே சரியான செயற்பாடு என்று நிறுவி நிற்கும் உதாரணமாக கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளின் அனுபவங்களும், தென் அமெரிக்க நாடுகளின் ஏற்பட்டுவரும் புரட்சிகர மாற்றங்களும் எடுத்தியம்பி நிற்கின்றன. ஆனால் இலங்கை அரசாங்கமோ சிங்கப்பூர் கனவில் நகரம் சார்ந்த அபிவிருத்தி என்று நகர்ந்து கொண்டிருக்கின்றது. உல்லாசத்துறையியை உச்சத்திற்கு கொண்டு வரமுயல்கின்றது. ஆனால் உள்ளுர் மக்கள் அன்றாட சாப்பாட்டிற்கு தட்டை வெளியே எடுக்க முடியாத அளவிற்கு தள்ளாடுகின்றது பெரும்பான்மை அடித்தட்டு மக்களின் பொருளாதாரம்.

சாமான்ய மக்களால் வாழ்க்கை நடத்த முடியாத அளவிற்கு விலைவாசி பனை மரம் அளவிற்கு உயர்ந்து விட்டது. உற்பத்தியில் ஈடுபடும் மக்களை உழைப்பில்; ஈடுபடுத்தும் முறமைகளை ஊக்கிவிக்கும் செயற்பாடுகளை தவிர்த்து இருந்த இடத்தில் இலட்சம் சம்பாதிக்கும் கனவுகளில் மிதக்கவிடும் மத்திய தர மேல்த்தட்டு வர்க்க சிந்தனை வளர்த்தெடுக்கப்படுகின்றது. இதுவே கலாச்சார சீரழிவுகளுக்கும் வழிகோல் அமைக்கின்றது. இது வருமானத்தை மீறிய வாழ்க்கை முறமைக்கு தள்ளும் சூழல் உருவாக்கமும் ஆகும். ஆடம்பர பண்டங்களின் கட்டுப்பாடற்ற இறக்குமதி, மக்களை மாயைக்குள் வீழ்த்தி சீரழிவுக்குள் தள்ளியுள்ளது. தேவைக்கு பொருட்கள் என்பதைவிட விரும்பத்திற்கு பண்டங்கள் என்ற சிந்தனை பலமாக வளர்க்கப்பட்டு வருமானத்தை மீறிய செலவினங்களை அன்றாட வாழ்வில் மக்கள் சந்திக்க பழக்கப்படுத்திக் கொள்ளப்படுகின்றார்கள். நடந்து கடக்கும் தூரங்களையும் நேரடிச் சந்திப்பு உரையாடல்களும் தவிர்க்கக் கூடிய கைத் தொலைபேசி, மோட்டார் சைக்கிள் என்பவற்றால் முறையே பிரதியீடு செய்யப்படும் மனநலை வளர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த சீரழிவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பக்குவப்பட்ட மன நிலையை அடையாத இளைஞர்கள்தான். மேற்குலக விளம்பரங்கள் இவர்களை போதை வாழ்விற்குள் தள்ளிய வண்ணம் உள்ளது. நாளாந்த வாழ்கையில் உடலை அசைத்து செய்யும் இயல்பான தேக அப்பியாசம் குறைந்து வருவதினால் நோய்கள் இலகுவில் உடலில் தொற்றியும் கொள்கின்றன. மதுபாவனப் பாவனை சாதாரண சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட? பழக்கவழக்கமாகி மாறி வருகின்றது.

இளைஞர்கள் ஒரு ஆரோக்கியமான பலமான சமூகத்தை கட்டியமைக்கும் சமூகப்பொறுப்பை உணராது சிற்றின்பங்களில் ஈடுபட முயல்கின்றனர். இவர்களுக்கான ஆலோசனை, நெறிப்படுத்தல்களை, ஒழுங்கமைப்புகளை முன்பெல்லாம் செய்து நின்ற சனசமூக நிலையங்கள், ஆலயச் சந்திப்புக்கள் எல்லாம் பலம் இழந்து செயல் அற்று வெறுமையாக இருக்கின்றன. சுமூக அக்கறையுடன் செயற்படும் பொது அமைப்புக்கள் பணம் பண்ணும் என்ஜிஓ களாக அல்லது அரசியல் கட்சிகளாக மாறிவிட்டன. பல்கலைக் கழகங்கள் விளக்கேத்தி தமது வீரத்தனத்தை காட்டுவதில் எடுக்கும் முன்முயற்சியில் ஒரு கடுகளவேனும் இந்த இளம் சமூகத்தின் ஒழுங்குபடுத்தப்பட்ட முன்னேற்றத்தை பற்றி சிந்தித்தால், கருத்தரங்குகள், செயற்பாடுகளை முன்னெடுத்தால் இந்த 5 வருடங்களில் தமிழ் பேசும் சமூகம் ஒரு பலமான சமூகமாக பயணிக்க தொடங்கியிருக்கும்.

தேர்தல் மூலம் மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள கட்சி என்றும் போல் மக்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்கும் தூரநோக்கு, ஏன் குறுங்கால பார்வை அற்றவர்களாக செயற்படுகின்றனர். ஒரு வகையில் தமிழ் பேசும் மக்கள் ஒரு பலமிக்க முற்போக்கு தலமையற்றவராக தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். புலிகள் விட்டுச்செல்லாத சொத்துக்களில் மிகப்பெரியது இதுதான். தாம் அழிய முன்பு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள தலமை சக்திகளை இல்லாமல் செய்வதிலேயே அதிகம் கவனம் செலுத்தினர் புலிகள். தம்முடன் சில தலையாட்டும் கோடரிக்காம்புகளை மட்டும் வைத்திருந்தனர். இவர்களில் பலர் மே 18 காலகட்ட சங்காரத்தில் மண்டியிட்டு சமாதி ஆக சிலர் நிலவிய நிலமைகளை சாதகமாக்கி மேலும் கோடரிக்காம்பாக செயற்பட்டுவருகின்றனர்.

ஓட்டு மொத்தத்தில் ஒரு பலவீனமான சமூகத்தை இந்த யுத்தம் விட்டுச் சென்றிருக்கின்றது. இதனை பலமாக்கும் முயற்சிகளை யாரும் செய்யவில்லை. செய்யவதில் பாரிய முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை. யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் ஓடியாகிவிட்டது, மிகுந்த நம்பிக்கையுடன் இலங்கை மக்கள் எதிர்பார்த்து இருந்த சமாதான சக வாழ்விற்கான பயணத்தில் நாம் கடந்து வந்த பாதைகளைப் பார்த்தால் அவ்வளவு ஆரோக்கியமானதாக காண முடியவில்லை. இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டம் பிழையான திசை வழியில் இழுத்துச் செல்லப்பட்டு பயங்கரவாத செயற்பாடுகளாக புலிகளினால் உருவாக்கிய நிலமையில் புலிகளை இலங்கையிலிருந்து அகற்றிவிட்டதாக இலங்கை அரசாங்கம் சந்தோஷப்படும் அதே வேளை தொடர்ந்தும் தமிழ் மக்கள் சம்மந்தமாக தான் சந்தேகப்படும் போக்கையே அது கொண்டிருப்பதாகவே காணக் கூடியதாக இருக்கின்றது.

மற்றய எந்த அரசிற்கும் கிடைக்காத வாய்பை தன்னகத்தே மகிந்த அரசு கொண்டிருந்தும் இதனை திறமையாக கையாளுவதில் விருப்பம் இன்மையுடனேயே செயற்பட்டு வருவதாக தெரிகின்றது. அறுதிப் பெரும்பான்மைக்கு அப்பால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை, பலவீனமாக அல்லது சட்ட மூலங்களை தோற்கடிக்க முடியாத அல்லது கண்டியாத்திரை செய்து சட்ட மூலத்தை கிளித்தெறிய முடியாத நிலமையை மகிந்த அரசு இற்கு கொடுத்திருக்கின்றது. புலிகளின் பிரசன்ன காலத்தில் புலிகளை(யுத்தத்தை)க் காரணம் காட்டி தவிர்த்து வந்த தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இலங்கை அரசு இன்று தெரிவுக்குழுவிற்குள் த.தே.கூட்டமைப்பு வருகுதில்லை என்று கூறிக்கொண்டு காலத்தை கடத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இது தமது அரசியலையும், மாகாண சபை மட்டத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட த.தே. கூட்டமைபின் அரசியலையும் தத்தமது எல்லைகளுக்குள் கதிரைகளை அவரவர் நிரப்பி கொண்டிருக்கவே வாய்ப்புகளை அழித்திருக்கின்றது.

இவை ஒருபுறம் இருக்க அண்மைய காலங்களில் நடைபெற்று வரும் 'மீள் இணைவு புலிகளைத் தேடுதல்கள்' அதனைத் தொடர்ந்த செயற்பாடுகளும் 1970 களின் நடுப்பகுதியில்; தமிழ் பிரதேசங்களில் இருந்த நிலமையை நினைவூட்டுகின்றன. ஒரு பாரிய வித்தியாசம் தமிழர் தரப்பில் அன்று தேசிய விடுதலைப் போராட்டம் புதுத் தளிராக புறப்பட்ட நிலமை நிலவியது. ஆனால் இன்று அழுகின பழத்தின் வித்திருந்து வெளிவரும் முளை போல தெரிகின்றது புலிகளுக்கான மீள் இணைவிற்கான செயற்பாடுகள். புலிகளின் எச்ச சொச்சஞ்கள் தற்போது புலம்பெயர் தேசங்களில் எல்லாம் தமது இருப்பை நிலைநிறுத்துவதற்கான பின்புலக் காரணங்களில் இருந்து மகிந்தாவை(ஒரு காலத்தில் சந்திரிகா, .....) பழிவாங்கல் என்ற வடிவில் இன்றும் இருந்து வருகின்றது. புலம் பெயர் தேசமெங்கும் பெரும்பான்மை தமிழ் பேசும் மக்கள் குடும்ப சமேதராக ஆயுள் காப்புறுதிகளையும் எடுத்துவைத்துக் கொண்டு தமிழ் பிரதேசத்தில் ஒரு குண்டையேனும் வெடிக்க வைத்து தமது வீரப்பிரதாப வியாபாரங்களை செய்யலாமா? என்று முயற்சிக்கின்றார்கள். உழைக்காமல் போராட்டத்தின் பேரால் குபேர வாழ்க்கையும், பிரமுகர் தனத்தையும் தமதாக்கி கொண்டிவர்கள் இலங்கையில் ஒரு வெடிப்பை எதிர்பார்த்து இருக்கின்றனர். இதற்கு இலங்கையின் தமிழ் பிரதேசத்தில் சிலரை பலிக்கடாவாக்க இவர்கள் முயன்று கொண்டு இருக்கின்றனர். வழமைபோல் பெரும்பகுதி மக்கள் பனி, வெயில், இரவு பகல் என்று பாராமல் இருவரின் வேலை நேரத்தை ஒருவரே செய்து வாழ்வை இழந்து? டாலருக்காக ஓடிக்கொண்டும்தான் இருக்கின்றனர். 

தமிழ் நாட்டு சீமான்களும், வைகோ களும் இதற்கு தனித்தனியாக காகத்தின் கூட்டிற்குள் இருந்து கொண்டு கூவிக்காட்டுகின்றனர். தமிழ் நாட்டின் இந்தப் போட்டி அரசியலில் அம்மாவும் வீழ்ந்து கிடப்பது சற்று ஏமாற்றம்தான். கருணாநிதி மீதான துயில் உரிந்த செயற்பாடு மீதனாக கோபம் திரவுபதை போல் என்றும் முழிப்பாக அம்மாவிடம் இருக்கின்றது. கருணாநிதியும் தனது சாணக்கிய அரசியலால் ஸ்ராலினை முதல்வர் ஆக்கி மகிழும் முனைவிற்காக இலங்கை தமிழர் பிரச்சனையை பயன்படுத்த முனைந்து கொண்டுதான் இருக்கின்றார். மற்றயடி சிவத்தம்பி போன்றவர்களின் சொல்லாடலை மட்டும் நம்பி தமிழ் நாட்டு பாரம்பரிய இடதுசாரிகள் சிலர் தளம்பலில் இருக்கின்றனர். அமைந்த புதிய பி.ஜே.பி என்றும் போல் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உதவிகரமாக இருக்கப் போவதில்லை.

புலம் பெயர் புலிகளின் பணத்தில் குண்டை வெடிக்க வைப்பதற்கான சூழல் இலங்கையில் இருந்து கொண்டே இருக்கும். ஏன் எனில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தியாகும் அணுகு முறையில் நம்பிக்கையான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்காது வரைக்கும் இதற்காக இருப்பை தவிர்க்க முடியாது போய்விடும் என்பதை இலங்கை அரசும், சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

பிரச்சனைகள் இருந்தால் தான் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையில் இலங்கை அரசு மாத்திரம் அல்ல தமிழ் மக்கள் மத்தியில் அதிக ஆதரவுத் தளத்தை கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எல்லோரும் விரும்புகின்றனர். பாராளுமன்ற அரசியலில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில விதிவிலக்கு இருந்தாலும் உலகம் முழுவதும் இதற்கான போக்கே மேலோங்கி நிற்கின்றது. இது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுவது யதார்த்தமான சாபக் கேடான நிலமையாகும். தமிழர் தரப்பில் எதிர்ப்பு அரசியல், பேரனவாதக் கட்சியின் அரசுடன் சரணாகதி என்ற இரு கோடுகளுக்கும் இடையில் முற்போக்கு அரசிலை முன்னெடுப்பவர்கள் எப்போதும் போல் ஏனோதானோ என்று பலவீனமாகவே இருக்கின்றனர். யுத்தத்தின் பின்னரான இந்த 5 வருடங்களில் இவரகளால் பாரிய அரசியல் கருத்துத்தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக குறும் தேசியவாதக் சகதிக்கள் வீழ்ந்துவிடும் தேர்தல் தந்திரோபாயங்களை? கையாளும் சபலத்திற்குள் இவரகளை தள்ளியிருக்கின்றது.

எப்படிப்பார்தாலும் யுத்தத்தின் பின்னரான 5 வருட நகர்வு அப்புகாமி. கந்தசாமி, அப்துல்லா போன்றவர்களை இலங்கையின் எப்பாகத்திற்கும் சாத வாகனங்களில் தயங்கம் இன்றி உலாவர அனுமதித்து இருக்கின்றது என்னமோ உண்மைதான். ஆனால் என்றும் எங்கும் சதா கண்காணிப்புடன் உலாவரும் இராணுவமும், உரிமைகள் மறுக்கப்பட்டு தமது பிரதேசத்திலேயே இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற இலங்கை அரசின் செயற்பாடுகளும் நாம் இலங்கையர் என்ற உணர்வலைகளை விட நாம் தமிழர் தனியாக வாழுவதற்கு தள்ளப்பட்டவர்கள் என்பதை இன்னமும் இருப்பிற்குள் தள்ளியபடியே இருக்கின்றது. 

13 வது திருத்தச்சட்டத்தினால் இலங்கையிற்கு கிடைக்கப் பெற்ற மாகாண சபை முறையிலான அதிகாரப் பரவலாக்கத்தை உருவாக்க நிர்பந்திக்கப்பட்ட ஜே.ஆர் ஜெயவரத்தன காலத்திருந்து இன்று வரை அதிகாரப்பரவலாக்கத்திற்கு பதிலாக அதிகாரங்களை கொடுக்க மறுக்கும் அல்லது பறித்தெடுக்கும் நிலமைகளே மேலோங்கி இருத்து வருகின்றது. இதனையே தற்போதைய அரசம் செய்ய விரும்புகின்றது. குறிப்பாக பிரேமதாஸ புலிகளுடனான தேனிலவுக் காலகட்டத்தில் பிரேமதாஸ அவசரம் அவசரமாக சட்டத் திருத்தங்களை ஏற்படுத்தி மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருந்த கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும் பறித்தெடுத்ததும், இதனை புலிகளும் அவர்களுடன் இணைந்து ஆட்டம் போட்டவர்களும் அங்கீகரித்து நின்றதே வரலாறு. இதனால் இன்று மகாணத்தில் முதல் அமைச்சர் இருந்தாலும் ஜனாதிபதின் நியமனப் பிரதிநிதி கவனரிம் எல்லா அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்றது. சாரம்சத்தில் இலங்கையில் மத்தியிலும் சர்வ அதிகாரமும் ஐனாதிபதி என்ற ஒரு தனிநபரிடமும் மகாணத்தில் கவனர் என்ற ஒரு தனிநபரிடமும் மட்டுமே குவிந்திருக்கின்றது. குறைந்த பட்சம  ஜனாதிபதியாவது மக்களால் தெரிவு செய்யப்படுகின்றார். கவனரை மக்களே தெரிவு செய்ய முடீவதில்லை. இது முற்றிலும் ஒரு தனிநபர் சர்வாதிகாரமாகவே இருக்கின்றது.

இதில் கவனராக முன்னாள் இராணுவ அதிகாரி இருந்தால் என்ன. சிவில் அதிகாரி இருந்தால் என்ன ஏன் ஒரு தமிழர் இருந்தால் என்ன ஒன்றேதான் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகளே விஞ்சிநிற்கும். கவனரை மாத்துவதற்கான போரட்டத்தை விட கவனரின் அதிகாரத்தை மாற்றியமைப்பதற்கான போராட்டமே சரியானதாக இருக்க முடியும்.

இவ்வளவு காலத்து தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த அதிக பட்ச சட்ட மூலமான தீர்வு என்றால் அது 13 வது திருத்தச்சட்ட மூலமான அதிகாரப் பரவலாக்கம் என்ற வரையறைக்குள் உள்ள மகாண சபையே. இதனை அர்த்தமுள்ள அதிகார சபையாக மாற்றுவதற்குரிய புத்தி சாதுர்சியமான சட்ட நடவடிக்கைகளையும், அதிகார மறுப்பு. அதிகாரம் போதாமை என்பதை சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வைப்பதற்கான இராஜதந்திரமான அணுகு முறையே இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தமது உரிமையை பெற்று வாழ வழிவகுக்கும். மாறாக மீண்டும் உணர்ச்சி ஊட்டும் வீரப் பேச்சுக்களும், சவால்விடுதல்களும் பாராளுமன்ற கதிரைகளை நிரப்ப வேயும் என்றால் உதவலாம். அதற்கு மேல் சிறிதேனும் தமிழர் தரப்பு நகரவாய்ப்புக்களை அழிக்காது. இதே வேளை பல்லின சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு நாடாக இலங்கையை பரிணாமம் அடையச் செய்ய செய்ய வேண்டி அணுகுமுறையை, பல்லினங்கள் இணைந்து வாழும் உலக நாடுகளின் அணுகுமுறையை நாடுகளிலிருந்து தமது பாடமாக கொண்டு இலங்கை அரசு செயற்படவேண்டும். அன்றேல் மீண்டும் இராணுவ முகாங்களை அதிகரிப்பதற்கு உரிய தேவையை இலங்கை அரசால் தவிர்க்க முடியாமல் போய்விடும்.

(Saakaran)(மே 29, 2014)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com