Contact us at: sooddram@gmail.com

 

இந்தியாவால் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியுமா....?

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களின் தற்போதைய ஏக தலமை என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசின் அழைப்பை ஏற்று இந்தியா சென்று திரும்பிருக்கின்றது. இந்தியப் பிரதமர், எதிர் கட்சித் தலைவர் உட்பட பலரையும் சந்தித்து அளவளாவியிருக்கின்றது. வழமைபோல் இந்தியாவும் 'நாம் தமிழ் மக்களை கை வி;டப்போவதில்லை' என்று கூறியிருக்கின்றனர். கூடவே இந்திய எதிர்கட்சித் தலைவர்களும் 'இந்தியாவில் பல கட்சிகள் இருந்தாலும்இலங்கை தமிழர் விடையத்தில் நாம் எல்லோரும் ஓரணியில் நின்று ஒருமித்த கருத்தையே கொண்டிருக்கின்றோம்' என்று நம்பிக்கை தரும்படியாக பேசி இருக்கின்றார்கள். இப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட தமிழர் தரப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்திய அரசு, எதிர்க்ட்சித் தலைவர்களுடனான சந்திப்பு வெற்றியளித்துள்தாக அறிவித்திருக்கின்றது.

இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா தனது சூழுரையில் 'இலங்கைப் பிரச்சினையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு' என்று தங்களிடம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதே போல் இந்திய எதிர்கட்சித் தலைவர் 'இலங்கைத் தமிழ் மக்களை இந்தியா கைவிட மாட்டாது. இந்தியாவில் ஆட்சிகள் மாறலாம். ஆனால் நாம் ஒரே அணியாக நின்று இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண முயல்வோம்' என்று முழங்கியிருப்பதாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். இந்திய விஜயம் பற்றி பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்மந்தன் 'இந்திய விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் இலங்கை தமிழர்கள் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுய மரியாதையுடன் வாழ்வதற்கு இந்திய அரசு பெருமுயற்சி எடுக்குமென்று உறுதியளித்ததாகவும்' தெரிவித்திருக்கின்றார்.

மறு புறத்தில் இலங்கை அரசு தரப்பில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் சம்மந்தமாக கருத்து தெரிவிக்கையில் 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்கு சென்று பேசினாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு இறுதியில் தம்மிடமே வந்து ஆகவேண்டும் என்ற கோதாவில் பேசியுள்ளனர். இவ் வகையாhன பேச்சுக்கள் 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பின்னரான கால கட்டங்களில் இலங்கை அரசால் அதிகம் உபயோகிகப்படும் சொற்பதங்கள் ஆகும். சாராம்சத்தில் இதில் உண்மைகள் இருப்பதைப் போன்று தோன்றும். ஆனால் இலங்கை அரசின் வெளிநாடுகளின் அனுசரணை இனிமேல் இலங்கைத் தமிழர் பிரச்சனையை தீர்பதற்கு தேவையில்லை என்பது அகங்காரத்தின் அடிப்படையில் பேசப்படுவதாகவே உணரப்படுகின்றது. இதில் உண்மைகள் இல்லாமல் இல்லை. மேலும் யார் மூலமாவது சொல்லி தமிழ் தரப்பை பேச்சு வார்த்தை மேசைக்கு அழைத்து வரவேண்டிய நிலையில் தற்போது நாம் இல்லை என்ற மமதையான செயற்பாடுகளின் ஒரு அங்கமாகவே இலங்கை அரசின் இது போன்ற அறிக்கைகள் செய்தி சொல்லி நிற்கின்றன.

இலங்கை ஒரு காலத்தில் எதற்கும் (தமிழர் பிர்சனைக்கு மட்டும் அல்ல)இந்தியாவின் அனுசரணையை நம்பியிருக்கும் நிலையில் தனது வெளிநாட்டு உறவுகளை வைத்திருந்தது. ஏனைய நாடுகளும் இந்தியா ஊடாகவே அல்லது இந்தியாவை மீறி இலங்கைகுள் தமது செயற்பாடுகளை செயன்படுத்து முயலவில்லை, விரும்பவில்லை. ஆனால் போருக்கு பிந்தைய இலங்கையில், சீனாவின் இலங்கை மீதான உறவு நெருக்கம் இலங்கையை இந்தியா சீனா என்ற இரு இயந்திரத்தில் பறக்கும் விமான நிலைக்கு தள்ளியிருக்கின்றது. தள்ளியிருக்கின்றது என்பதைவிட இலங்கையின் இராஜதந்திர நகர்வு இதனை நிறுவி இருக்கின்றது என்பதே உண்மை. இந்த விமானத்தின் ஒரு இயந்திரத்தில் கோளாறு என்றாலும் மற்றய இயந்திரத்தின் உதவியுடன் பறந்து செல்லும் உறுதிப்பாட்டை இலங்கை தற்போது கொண்டுள்ளது. சீனா, இந்தியா என்ற இரு நாடுகளும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும், ஏன் உலகிலும் அடுத்த பொருளாதார வல்லரசுகளாக துடிக்கும் இரு முகாங்களாக வளர்ந்து வரும் நிலையில் இவ்விருநாடுகளையும் ஒருவருக்கு ஒருவரைக் காட்டி தன்னை தற்காத்து கொள்ளும் பொறி முறையை இலங்கை கற்றுக் கொண்டுள்ளது. இதன் வெளிப்பாடுகள் இலங்கை அரசின் இந்தியா மீதான பாராமுகமும், இனி தனக்கு யாரின் அனுசரணையும் தேவையில்லை என்பது போன்ற இலங்கை அரசின் அறிக்கைகள், செயற்பாடுகள் ஆகும். இதில் யார் என்பதில் பெரும்பாலும் இந்தியாவே தொக்கு நிற்கின்றது.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக இந்தியா எந்த வகையிலும் மூக்கு நுளைப்பதை இலங்கை அரசு விருப்பவில்லை என்பதையே தற்போதைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஒரு காலத்தில் பேச்சு வார்த்தை மேசைக்கு தமிழர் தரப்பை இழுத்து வருவதற்கு இந்தியாவின் உதவி பல வழிகளில் இலங்கைக்கு தேவையாக இருந்தது. இன்று அப்படி யாரையும் இழுத்தோ, அழைத்தோ வருவதற்குரிய நிலமைகளில் தமிழர் தரப்பு இல்லை என்பதை இலங்கை அரசு நம்புகின்றது. சர்வ தேசத்தின் அழுத்தங்களை சீனாவின் அனுசரணையுடன் சமாளிக்கலாம் என்று இலங்கை நம்புகின்றது. ஐ. நா வின் மனித உரிமை அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடலாம் என்பதில் இலங்கை தோற்றுப் போய்யிருக்கலாம், ஆனால் இதில் தமிழர் தரப்பு இராஜதந்திர ரீதியில் வெற்றி பெற்றுள்ளது என்ற சொல்ல முடியாது. இலங்கையில் யார் செல்வாக்கு செலுத்துவது என்ற தங்கள் நாடுகளின் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்காக இலங்கைக்கு எதிராக, ஆதரவாக உலக நாடுகள் செயற்படுகின்றன என்பதே உண்மை. மாறாக இலங்கையில் வாழும் சகல மக்களும் சமத்துவத்துடனும் சம உரிமையுடனும் வாழுவதை உறுதி செய்தல் என்பதற்காக செயற்படுகின்றன என்று யாரும் கனவு கண்டால் அது கனவாக மட்டுமே இருக்கும். இவற்றை நிஜமாக்கும் இராஜ தந்திரங்கள், செயற்பாடுகள் கடந்த 30 வருடங்களாக இலங்கையின் தமிழ் தலமைகளிடம் இருக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. இதுவே தொடர்வதற்கான சாத்தியக் கூறுகளும் தற்போது காணப்படுகின்றன.

சரி ஒரு பேச்சக்க சர்வதேச அரசுகள் இலங்கையில் உள்ள சகல இனங்களும் (சிறப்பாக தமிழ் மக்கள்) சம உரிமையுடன் வாழுவதற்கு உண்மையில் விரும்புகின்றன என்று வைத்துக் கொள்வோம். இதன் அடிப்படையில்தான் இலங்கை அரசின் போர்க்குற்றம் என்ற விடயத்தை கையில் எடுத்து செயற்படுகின்றன. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனருத்தாரணம் அரசியல் தீர்வு என்பனவற்றை மேற்கொள்ள முயல்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இப்படியான ஒரு சூழலில் இவற்றை இலங்கை அரசுக்கு ஊடாகவே சர்வதேசம் மேற்கொள்ள முயலும். இலங்கைப் பாராளுமன்றத்தினூடு ஓரு அரசியல் தீர்வுத்திட்டததை கொண்டு வந்து அமுல்படுத்தவே செய்யும். எனவே இவ் வகையில் தமிழர் தரப்பு இலங்கை அரசாங்கத்துடனேயே பேசவேண்டிய சூழ்நிலையே உருவாகும். இதுதே சர்வதேச சட்ட நடைமுறையும் ஒழுங்கும் ஆகும்.

இதனை விடுத்து சர்வதேச நாடுகள் தாமே ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை (இலங்கையைத் தவிர்த்து_ தீர்மானித்து அதனை ஒரு தலைப்பட்சமாக இலங்கையில் அமுல்படுத்த முயல்வர் என்று யாரும் முட்டாள் தனமாக நினைத்தால் உலக அரசியல் சூழலை சரியாக புரியாதவர்கள் என்ற வகையினருக்குள் தங்களை தாங்களாவே உள்படுத்தியவர்கள் ஆகிவிடுவர். இந்த வகையில் தமிழர் தரப்பு தன்னை தயார்படுத்தல் நிலையில்; வைத்திருத்தல் வேண்டும். இதற்கு முதலில் குறைந்தபட்சம் தாயகம், தேசியம், தனியாட்சி என்ற தேர்தல் கூப்பாடுகள் மட்டும் போதாது. மாறாக தமிழர் தரப்பு எதிர்பார்க்கும் ஒரு நியாயாதிக்கம் உள்ள அரசியல் தீர்வுத் திட்டத்திற்கான வரைபு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருத்தல் வேண்டும். இவ் வரைபு பற்றி பேசுவதற்குரிய புத்திசாதுர்சியம், திறமை, இராஜதந்திரம் இவர்களிடம் இருக்கவேண்டும். தற்போதுள்ள தமிழர் தலைமையிடம் இது இருக்கின்றனவா என்பது கேள்விக் குறியே.

உதாரணத்திற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய விஜயத்தை மேற் கொள்ளவதற்கு சில தினங்களுக்கு முன்பு 13 வது திருத்தச்சட்ட மூலம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையை பாருங்கள். 'இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தை தமிழர் இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும், ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறை சாத்தியமுள்ள ஒரு தீர்வையே தாம் நாடுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தெரிவிப்பதற்கு பதிலாக இந்திய அனுசரணையுடன் 'இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்ட மூலத்தை தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கான ஆரம்ப புள்ளியாக கருதுகின்றோம். 13ம் திருத்தச்சட்டமூலம் உருவாக்கப்பட்ட காலகட்டதில் இந்தியா எடுத்த நிலைப்பாடு அன்றைய நிலமைகளுக்கு அமைவாக எடுகப்பட்டது. ஆனால் இன்றைய நிலமைகளை வைத்துப ;பார்க்கும் போது இது மேலும் செழுமைப்படுதப்பட வேண்டும், முழுமைப்படுதப்பட வேண்டும். இதற்கு இந்தியாவின் அனுசரணை, உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.' இந்தியாவை முற்ற முழுதாக குறை கூறிவிட்டு, அடுத்த சில தினங்களிலேயே இந்தியாவிடமே பாத்திரத்தை ஏந்து சாணக்கியமற்ற செயற்பாட்டையே தமிழர் தரப்பு தற்போதும் செய்திருக்கின்றது. இது தான் தமிழருக்கு தலமை தாங்குகின்றோம் என்று ஏகபோகம் கொண்டாடிய யாபேரும் பொன்னம்பலத்து காலத்திலிருந்து இன்று வரை செய்கின்றனர். இதனை மீறி யாரும் சரியான தலைமை உருவாகமுற்பட்டால் அவர்களைத்; துரோகி என்று பட்டம் சூட்டி இல்லாமல் செய்து விடுவர் இந்த ஏகபோக சிந்தனையாளர்கள். எனவே தமிழ் மக்களுக்கான தீர்வு ஏற்படுவதில் பெரும் தடங்கல் எங்கள் பக்கத்திலேயும் இருக்கின்றது.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 வது திருதச்சட்ட மூலம் சம்மந்தமான அண்மைய கருத்தை வலியுறுத்துவது போல் '13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அல்லது காலசூழ்நிலைகளுக்கு அமைவாக திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்' என கோதபாய ராஜ பக்ஷ வலியுறுத்தியுள்ளார். எப்போதும் இப்படித்தான் நாங்கள் எடுத்துக் கொடுக்க அவர்கள் அதனை ஆமோதித்து,  ுடித்து வைக்கின்றார்கள். இணைந்த வடக்கு - கிழக்கு மாகாண சபையை பிரேமதாஸ, ஜேவிபி, தமிழீழ விடுதலைப் புலிகள் மூவரும் இணைந்து இல்லாமல் செய்தனர். இதற்கு கலைஞரின் ஆசீர்வாதமும் இருந்து. இதனை நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் ஜேவிபி துண்டு துண்டாக்கியது நீதி மன்றம் சென்று சட்டம்? இன் மூலம். ஆமாம் நாம் ஏடுத்துக் கொடுக்க அவர்கள் முடித்து வைத்தார்கள். இப்படியே போய் இன்று கிழக்கு மாகாண சபையில் ஒரு தமிழ் அமைச்சரும் இல்லாத நிலையில் நாம் வந்து நிற்கின்றோம். சரி வடக்கு கிடக்குதானே. நாம்தான் ஏக பிரதிநிதிகள் என்று வரிந்து கட்ட தமிழரசுக் கட்சி மட்டும் தயார், ஏனையவர்களை தூக்கி கடாசும்; அறிக்கைகள் தற்போது பத்திரிகைகளில் தூள் பறக்கின்றன.

இவ்வாறான நிலமைகளில் இந்தியாவால் இலங்கைத் தமிழர் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட கூடிய சூழல் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன என்ற முடிவுகளுக்கே சாமான்ய தமிழ் மகன் வருவதில் நியாயங்கள் இருக்கின்றன. என்ன 1977 களில் இருந்து சாதாரண பொது மக்களை 'ஆல் இந்தியா ரேடியோ' வின் புழகாங்கிதம் அடையச் செய்யும் செய்திகளில் இருந்து தமிழ் நாட்டுத் தலைவர்களின் தேர்தல் வீரவசனம் வரை, நாளை பிறக்கும் தமிழ் ஈழம் என்று சொந்தக் காலை சரியாக, உறுதியாக வைக்காமல் தொப்புள் கொடி உறவை சொல்லி நம்ப வைத்து ஏமாற வைக்கும் நிகழ்வுகளே தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. மறு புறத்தில் டிஎஸ் செனநாயக்காவில் இருந்து இன்றுவரை இலங்கையை ஆண்ட இலங்கை அரசுகள் தமிழ் மக்கள், சிங்கள் மக்கள் முஸ்லீம் மக்கள் போன்ற இலங்கை வாழ் சகல இன மக்களும் இலங்கையில் வாழும் பல்லின மக்கள் என்ற சகோதர உணர்வுகளுடன் வாழாதிருப்பதில் அளவுகளில் வித்தியாசப்பட்டாலும் ஒரேமாதிரி யாகவே செயற்பட்டு வருகின்றன.

(நன்றி: பூபாளம்)

(Oct 26, 2012)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com