Contact us at: sooddram@gmail.com

 

என்மனவலையிலிருந்து…..
கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்…

(சாகரன்)
பேர்லின் சுவர் இடிக்கப்பட்டு 25 வருடக் கொண்டாட்டத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைவர் கோர்பச்சேவ் இன் பேச்சு என்னை இக் கட்டுரையை எழுதத் தூண்டியது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அவர் ‘உலகம் மீண்டும் ஒரு புதிய பனிப் போரின் ஆரம்பத்தை அண்மிக்கின்றது’ என்று குறிப்பிட்டு இருந்தார். என்னைப் பொறுத்தவரையில் பனிப்போர் எப்போதும் நிறுத்தப்பட்டதாக நான் நம்பவில்லை. பல வேளைகளில் சோவியத் ஒன்றியத்தின் சிறல்களுக்கு பின்னால் ரஷ்யாவினால் ஒரு தலைப்பட்டசமாக தற்காலிகமாக அமத்தி வாசிக்கப்பட்டது என்பதே உண்மை. இவரின் பேச்சில் சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்கு வருத்தம் அளிப்பதாக நேரடியாக கூறாவிட்டாலும் மறைமுகமாக இது தொக்கு நிற்பதை என்னால் உணரப்படுகின்றது. அதுதான் இவர் தனது பேச்சின் நடுவில் ‘ரஷ்ய நலன்களை பாதுகாக்கும் ஒரு மனிதராக ஜனாதிபதி புட்டினுக்கு ஆதரவு’ என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
 

லெனின் தலமையில் நடைபெற்ற பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமும், மாவோ சேதுங்கின் தலமையில் சீனாவில் ஏற்பட்ட தொழிலாளர் புரட்சியும் உலக மக்களுக்கு நம்பிக்கையளிப்பாகவே இருந்தது. மாவோ, லெனின் மறைவிற்கு பின்னரான சீனா, சோவித் ஒன்றியம் கம்யூனிசத்தை அடையும் சோசலிச பாதையின் பயணத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகள் சீனாவை அன்று சோவியத் யூனியனின் தத்துவார்த்த எதிரியான அமெரிக்க முதலாளித்துவத்துடன் நெருங்கிச் செயற்படவைத்த துர்ப்பாக்கித்தை மனித குலம் சந்தித்தது. இது அமெரிக்காவிற்கு பெரிய வாய்ப்பாக அமைந்து விட்டது என்பதுவும் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். சோசலிச முகாங்களுக்குள் எற்பட்ட பிளவுகள் பல நாடுகளில் இருந்த சோசலிஸ்ட் இடையில் ஒரு குழப்பகரமான நிலமைகளை ஏற்படுத்தியது எனலாம். இவையெல்லாம் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற வகையிலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஊக்க மருந்தாக அமைந்துவிட்டது.
ஆனாலும் சோவியத் யூனியனின், அமெரிக்க ஏகாதிபத்தித்துடனான சமபலம் உலகை இரு முகாங்களாக அணிவகுத்து அமெரிக்கா தான் நினைத்தபடி உலகத்தின் பொலிஸ்காரனாக செயற்பட முடியாமல் தடுத்து நிறுத்தியது. இதற்குதான் பனிப்போர் என்று அரசியல் ஆய்வாளர்கள் பெயர் சூட்டியும் இருந்தனர்.
 

கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் தாராளவாதம் என்பது படு பிற்போக்கான செயற்பாடு என்று விஞ்ஞானபூர்வமாக அறியத் தரப்பட்டிருக்கின்றது. இதனையே (முதலாளித்துவ)ஜனநாயகம் என்றும், சோவியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் தாம் விரும்பினால் பிரிந்து செல்லாம் என்றும் ஒரு இளகு நிலைக்கு ஊக்கம் கொடுத்தார் கோர்பச்சேவ். இதனையே அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்தியம் அன்று எதிர்பார்த்திருந்தன. சோசலிச் கொள்கையில் ஆரம்ப தடம் பதித்து கம்யூனிச நாடுகளாக மிளிர்வதற்குரிய நெடும்பாதையை சிதைக்க தமக்கு ஒரு வாய்பாக அமெரிக்கா பாவித்துக் கொண்டது.
 

முதலில் பிரிக்கக்கூடிய தேசங்களை எல்லாம் பிரித்து துண்டு துண்டாக்கியது. இதன் பின்பு இந் நாடுகளுக்கிடையே முரண்பாடுகளை வளர்த்து தமக்குள் அடித்துக்கொள்ள தூண்டப்பட்டன. இதற்கு பொருள் உதவி, தளபாட உதவி என்று ஆரம்பித்து தமது பொம்மை அரசுகளை நிறுவியது. இந்தப் பொறிக்குள் வீழ்ந்து விடாமல் இன்றுவரை உறுதியுடன் எதிர்த்து நிற்கும் நாடு சோவியத் ஒன்றியத்தின் மிகப்பெரிய நாடான ரஷ்யா ஒன்றுதான். ரஷ்யாவில் இன்று கம்யூனிஸஷ்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பலமாக இருக்கின்றனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
 

கோர்பச்சேவ் இன் அன்றைய தாராளவாதம் சோவியத் ஒன்றியத்தை இல்லாமல் செய்து அமெரிக்காவை எகிற வைத்து சமபல சூத்திரத்ததை இல்லாமல் செய்துவிட்டது. அன்று இது ஏற்படாமல் தவிர்திருந்தால் இன்று அமெரிக்கா தனது உலக பொலிஸ்காரன் செயற்பாட்டை தொடர்ந்திருக்க முடியாது. அப்போது ஈராக் யுத்தமும் இல்லை, ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பும் இல்லை, மேற்கு ஆபிரிக்க நாடுகளில் உள்நாட்டுக் கவிழ்ப்புகளும் இல்லை, லிபியாவின் கொலைகளமும் இல்லை, சிரியா மீதான திட்டமிட்ட உள்நாட்டுக்கலவரமும் இல்லை, தொடர்ந்த பாலஸ்தீன அகதி வாழ்க்கையும் இல்லை என்றிருக்கும்.
சரி அப்படி ஏதும் கிளர்ச்சிகள் நடைபெற்றாலும் இவை ஒருவகையில் புரட்சிகர மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளாக கியூபா, வியட்நாம், நிக்கரகுவா போன்ற நாடுகளில் ஏற்பட்டது போன்றே நடந்திருக்கும், அன்று அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனின் சூது வலை வட்டத்தில் தாராளவாதம் என்ற பிற்போக்கு செயற்பாட்டில் சோவியத் யூனியனை சின்னாபின்னமாக்கியது மட்டும் அல்லாமல் ஐரோப்பாவையும் (யூகோவிலாவிக்கியா, போலந்து. ஜேர்மனி) போன்ற நாடுகளில் பாரிய சோசலிச கட்டுமானத்திற்கான ஆரம்பங்களை தகர்த்தெறிந்த வரலாற்றுத் தவறை அன்று கோர்பச்சேவ் செய்து விட்டார் என்ற முடிவிற்கே நாம் வரவேண்டியுள்ளது.
 

இந்த வகையாக சோவியத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்த கோர்பச்சேவ் இன் தாராளவாதக் கொள்கை அமெரிக்க எதிர்பார்த்த எல்லாக் கதவுகளையும் திறந்து விட சோவியத் ஒன்றியம் பல நாடுகளாக பிரிந்து பலவீனமடைந்தது. பேலின் சுவரும் இடிபட கிழக்கு ஜேர்மன் மக்கள் மேற்கு ஜேர்மன் முதலாளித்துவத்திற்குள் அடிமைகளாக மௌனிக்கப்பட்டனர். மார்ஷல் டிட்டோவினால் செதுக்கப்பட்ட யூகோசிலோவிக்கியாவும், சோவியத் ஒன்றியங்கள் போல் சிதறின. இதற்குள் மதவாதம், இனவாதம் மேலோங்க மனித உரிமைகள் அமைப்புக்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் என்ற முகத்திரையுடன் உள்புகுந்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஆனாலும் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் மீறி மூன்றாம் உலக நாடுகளான வியட்டநாம், கியூபா. தென் அமெரிக்க நாடுகள் மெதுவாக எழுந்து வருகின்றன.
 

இதில் தனிமனிதனின் தவறு என்பது ஒரு குடும்பம் சமூகம் நாடு தேசம் என்பனவற்றைத் தாண்டி முழு உலகத்திற்கும் பாதகமாக அமைந்து விட்டது, இந்த பாரிய தவற்றை விட்ட கோர்பச்சேவ் செயற்பாடுகளுக்கு தற்போதைய வருத்தம் தெரிவிப்பு ‘கண்ட கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்’ உடன் ஒப்பிடுவதைத் தவிர வேறு எவ்வாறு சொல்ல முடியும்.
ஆனலும் இன்னமும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தில் நம்பிக்கை வைக்கும் எம்மைப் போன்ற பல கோடி மக்கள் ஒரு கம்யூனிச உலகிற்கான வேள்வியல் இணைத்து எம்வாழ் நாளில் போராட போர்கொடியை உயர்த்திக் கொண்டுதான் இருப்போம். வரலாறு எப்போதும் பின்நோக்கி நகருவதில்லை. மாற்றும் ஒன்றே மறுக்க முடியாததும் ஆகும்.
 

(Saakaran) (நவம்பர் 15, 2014)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com