Contact us at: sooddram@gmail.com

 

ஐக்கிய முன்னணியின் பிதாமகன் மக்கள் போராளி பத்மநாபா

(தோழர் ஜேம்ஸ்)

தோழர் பத்மநாபாவின் 59 வது பிறந்த தினம் இன்று ஆகும்.  சோதனைகளுடன் நிறைந்த சாதனையாளராக வாழ்ந்ததே அவரின் வாழ்க்கை முறை. மத்திய தர குடும்பத்தில் சகோதரிகளுடன் தனி ஒரு ஆண்மகனாக பிறந்தவரே பத்மநாபா தனது இளம்பிராயத்திலேயே மனித குலத்தின் விடுதலைக்கான சிந்தனையின் பால் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். தமிழ் இளைஞர் பேரவையில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் இனைஞர் பேரவையை தனது இளைஞர் அணியாக பாவித்து தமது பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்ப மட்டும் பாவிக்கும் நிலமையும், தமிழ் மக்களின் பிரச்சனைகளை தேர்தல் வெற்றிக்கான கோஷமாக மட்டும் பாவிக்கும் சுய நலப் போக்கை கண்டித்து தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து பலர் வெளியேறி டாக்ரர் தர்மலிங்கம் தலைமையில் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தை அமைத்தபோது தோழர் பத்தமநாபாவும் அவ்வழியில் தனது அரசியல் பயணத்தை மேற் கொண்டிருந்தார். இரகசிய அரசியல் வேலைத்திட்டத்திற்கு அமைய செயற்பட்டபோது இலங்கை இராணுவத்தினால் தேடப்படும் நிலமை ஏற்பட்டபோது பாதுகாப்பு நிமிர்த்;தம் அவர் தம் குடும்ப உறவுகளால் மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஆனால் அவரால் தொடர்ந்தும் வெளிநாட்டில் தங்கியிருந்து படிப்பை தொடர மனம் படிப்பில் லயிக்கவில்லை. வெளிநாட்டில் தங்கியிருந்த காலகட்டத்தில் ஈழப்புரட்சி அமைப்பு என்ற இடது சாரி அமைப்பை ஸ்தாபிப்பதில் முன்னிற்று உழைத்தவர். சர்வதேச விடுதலைப் போராட்டத்தின் ஒர் அங்கமாகவே ஈழவிடுதலைப் போராட்டமும் அமையவேண்டம் என்ற சிந்தனை தெளிவு அவரிடம் எப்போதும் காணப்பட்டது. இதன் தொடர்சியாக சர்வ தேச விடுதலை அமைப்பொன்றின் பயற்சிப்பாசறையில் ஆயுதப்பயிற்சி முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். இதன் தொடர்சியாக விடுதலை அமைப்பின் அரசியல் செயற்பாட்டிற்காக மீண்டும் இலங்கைக்கு திரும்பினார் ஈழப்புரட்சி அமைப்பின் வெகுஜன அமைப்பாக அன்று எல்லோராலும் அறியப்பட்ட ஈழமாணவர் பொது மன்னறம் ஊடாக வெகுஜனவேலைகளை முன்னெடுத்தார். தனது பாதுகாப்பின் நிமித்தம் மலையகத்தில் தலைமறைவாக தங்கியிருந்து மலையக மக்கள் மத்தியில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

ஈழப்புரட்சிமைப்புக்குள் ஏற்பட்ட கொள்கை முரண்பாட்டினால் பலர் அதிலிருந்து வெளியேறினர். அவ்குழுவிற்கு தலைமை தாங்கிய பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணி என்ற அமைப்பை அமைத்து தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். யாழ்பாணப் பிரதேசத்தில் செம்மண் கூலித் தொழிலாளர் மத்தியில் தனது அரசியல் வேலைகளை முன்னெடுத்தார். கூடவே கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியிருந்து அரசியல் வேலைகளை மக்கள் மத்தியில் செய்தார்.

1970, 1980 களில் இலங்கையில் பேரினவாத சக்திகளாலும் தமிழ் இனவாத சக்திகளாலும் வளர்தெடுக்கப்பட்ட இனங்களுக்கிடையிலான ஐக்கியமின்மை காரணமாக சுயநிர்ணய அடிப்படையிலான பிரிந்து வாழ்வதற்கான போராட்டத்தை முதலில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற யதார்த்த நிலமைகளை உள்வாங்கிய பத்மநாபா தேசிய விடுதலைப் போராட்டத்தை முதன்மையாக கருதி போராட்டத்தை முன்னெடுத்தார். ஆனால் பிரிந்து செல்வது என்பது சேர்ந்து வாழ்வதற்கான முதல் கட்டம் என்ற அடிப்படையில் ஈழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கையின் அடிப்படையில் செயற்பட்டார். சாராம்சத்தில் இவர் ஒரு பிரிவினவாதியல்ல. இலங்கையில் தமிழ் பேசும் தொழிலாளவர்க்கமும் சிங்களம் பேசும் தொழிலாள வர்க்கமும் இணைந்து சமூக விடுதலைக்காக போராடக்கூடிய நிலமைகள் இலங்கையில் இல்லாமல் இனவாதம் மேலோங்கி நின்ற சூழலில் சுயநிரணயத்துடன் கூடிய பிரிந்து செல்லும் போராட்த்திற்கு தமிழ பேசும் மக்கள் ; தம்மை இழுத்துச் சென்றார்கள் என்பதே உண்மை நிலமை. ஆனாலும் ஒரு சோசலிஷ அமைப்பை உருவாக்கும் அடித்தளத்தை அமைப்பதற்கு சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பாவிக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் தோழர் பத்மநாபா போன்றோர் செயல்பட்டு வந்தனர்.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் தலமை சக்தி உழைக்கும் வர்க்கமே எனவும் ஆனால் வர்க்க விடுதலைக்கு முன்பு தேசியவிடுதலைப் போராட்டத்தில் மத்தியதரவர்கமும் மாணவர்களும் நிச்சயமாக ஒரு போராட்ட சக்திகள். இவர்கள் ஒரு முற்போக்கான பாத்திரத்தை தேசிய விடுதலைப் போராட்டத்தில் வகிக்க முடியம் என்பதை கருத்தில் கொண்டு அவர்களையும் அணிதிரட்டுவதில் செயற்பட்டார். தேசியவிடுதலைப் போராட்டமும் வர்க்க விடுதலைப் போரரட்டத்தின் வெற்றியும் பெண்களின் விடுதலை இல்லாமல் இல்லை என்பதில் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்த தோழர் நாபா ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் இணைத்து பெண்விடுதலைக்கான அத்திவாரத்தையும் இட்டுச் சென்றார்.

மலையக மக்கள் தான் தமிழ் மக்களின்(இலங்கை மக்களினதும்) வர்க்க விடுதலைப் போராட்டத்தில் தலைமை சக்தி என்பதை வர்க்க குணாம்ச அடிப்படையில் உறுதியாக நம்பிய அவர் மலையக மக்கள் மத்தியில் தனது அரசியல் வேலைகளை முன்னெடுத்து அங்கிருந்து ஈழவிடுதலைக்கான ஒரு பலமான தலமை உருவாகுவதற்கு பலமாக உழைத்தார். இதேபோல் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான ஜனநாக இடதுசாரிசக்திகளை சிங்கள் மக்கள் மத்தியில் இனம் கண்டு அவர்களையும் எமது போராட்டத்திற்கு ஆதரவான செயற்பாட்டிற்கு கொண்டுவந்தார். ஈபிஆர்எல்எவ் இன் ஆரம்பகால பாசறைகள் பலவற்றில் முற்போக்கு சிங்கள அறிவு ஜீவிகள் கலந்து கொண்டு வகுப்புக்கள் எடுத்ததையும் இங்கு நினைவு கூறுவது சாலப் பொருந்தும். இவற்றிற்கான அடித்தளங்களை இட்டவர் தோழர் பத்மநாபா. இதேயளவு வேலைத்திட்டஙகளை முஸ்லீம் மக்கள் மத்தியிலும் முன்னெடுத்தார் முஸ்லீம் மக்கள் ஒரு வளர்ந்து வருகின்ற தேசிய இனம். அவர்களுக்கு என தனியான கலாச்சாரம் அடையாளங்கள் உள்ளன. எனவே அமையவிருக்கும் ஈழத்தில் அவர்கள் தம்மை தாமே ஆளும் வகையிலான ஒரு நிர்வாக அலகு அமைக்கப்படவேண்டும் அதனை அவர்களே நிர்வகிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

சர்வ தேச சோசலிச நாடுகளையும் ஜனநாக நாடுகளையும் தமிழ் பேசும் மக்களின் நட்பு சக்திகளாக மாற்றுவதில் தனது அதிக உழைப்புக்களை செலுத்தினார். இலங்கைக்கு அயலில் உள்ள இந்தியாவை நட்பு சக்தியாக கருதினார். சிறப்பாக இந்திய மக்களையும், இந்தியாவில் உள்ள இடது சாரிகளுடன் நெருக்கமான உறவுகளை பேணிவந்தார். இந்து சமுத்திரப் பிராந்தியம் ஒரு சாமாதான பிராந்தியமா இருக்கவேண்டும். ஏகாதிபத்தியங்களில் மேலாதிகத்தை தவிர்க்கும் இந்திய தேசியவாதத்தை ஆதரிக்க வேண்டும். இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் ஏகாதிபத்திய எதிர்பு நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருக்கும்வரை அது எங்கள் நட்பு சக்தி. ஆதனை நாம் வலுப்படுடத்த வேண்டும். அதனுடன் நட்புடன் உறவுகளைப் பேணவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தமையினால் இந்தியாவில் உள்ள ஆளும் வர்கத்திற்கும் தொழிலாள வர்கத்திற்கும் இடையேயான தனது நட்பு பாலத்தை பிசிறில்லாமல் கொண்டு சென்ற இராஜ தந்திரி பத்மநாபா.

நாம் வாழ்வதற்காக போராடுகின்றோம். அந்த போராட்டத்தில் சில வேளைகளில் நாம் மரணித்து போகலாம். ஆனால் மரணத்தை குறிக்கோளாக கொண்டு போராடவில்லை என்ற வாழவேண்டும் என்ற வாழ்கை மீதான உயிர்கள் மீதான பற்றதலின் அடிப்படையில் போராடினார். நாம் மக்களுக்காவே போராடுகின்றோம் மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை. போராட்டம் என்பது எமது வரலாற்றுக் கடமை அது மக்கள் எம்மீது சுமத்திய சுமை மாறாக மக்கள் எமக்கு தந்த அதிகாரம் அல்ல. மக்களிடம் பாடம் கற்று அவற்றை செழுமைப்படுத்தி மீண்டும் மக்களுக்கு அறிவூட்டுதற்காக அவற்றை பயன்படுத்தவேண்டும். மக்கள்தான் எமது ஆசான்கள் என்று மக்கள் சார்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக திகழ்ந்தார் தோழர் நாபா.

மக்களே எங்களை பாதுகாக்கும் அரண்கள். மக்களோடு மக்களாக இணைந்து செயற்படுவதன் மூலம் அவர்கள் இயல்பாகவே எதிரியிடம் இருந்து எமக்கான பாதுகாப்பை வழங்குவர் என்பதை நடைமுறையின் ஊடு கற்றத்தந்த ஆசான். இலங்கை அரச படைகளாலும் புலிகளாலும் போராளிகள் வேட்டையாடப்பட்ட போது மக்கள்தான் போராளிகளுக்கான பாதுகாப்பை வழங்கினர் என்பது நாம் எம் அனுபவத்தில் கண்ட உண்மை. இதனை பத்தமநாபா தனது செயற்பாடடின் மூலம் உணர்த்திவந்தார். மலையகம், கிழக்கு மாகாணம், யாழ்பாணம்., வன்னி என பல இடங்களிலும் பாதுகாப்பு அச்சறுத்தல்களுக்கு மத்தியில் வேலை செய்யம் போது மக்களே எமக்கான பாதுகாப்பை விரும்பி வழங்கினர். மக்களை நாம் எப்போதும் கேடயங்களாக பாவித்தது இல்லை. மாறாக மக்களக்கான பாதுகாப்பை இருக்கும் வழங்களின் அடிப்படையில் நாம் வழங்கிவந்ததே உண்மை நிலை. வெறும் ஆயதங்களை மட்டும் நம்பிய மன நோளிகள் அல்ல நாங்கள்.

ஈழத்தமிழர் மத்தியில் ஐக்கியம் என்று பேச்சு வந்தால் அதில் தோழர் நாபாவின் பெயர் நிச்சயமாக இல்லாமல் இருக்க முடியாது நான் அறிந்தவரையில் ஐக்கிய முன்னிணிக்காக தன்னுயிர் நீத்த தலைவர் என்றால் அது தோழர் நாபாதான். ஐக்கிய மன்னணியை அமைப்பதில் குழம்பியிருக்கும் இன்றைய நிலையில் நாபாவின் தேவை எம்மால் இன்று அதிகம் உணரப்படுகின்றது. இன்று அவர் இருந்திருந்தால் ஐக்கிய முன்னணியின் திசை வழிப்பாதையயை சரியாக செப்பனிட்டு பலமான ஓர் ஐக்கிய முன்னணியை அமைத்திருப்பார். அவரின் ஐக்கிய முன்னணி வெற்றிகளை வடக்கு கிழக்கு மாகாண சபை காலகட்டத்திலும் அதற்கு முந்திய ஈழத் தேசிய விடுதலை முன்னணி காலகட்டத்திலும். திம்ப பேச்சு வார்த்தை கால கட்டத்திலும் எம்மால் பகுப்பாய்வு செய்து அறிய முடியும். விடுதலை அமைப்புக்களுக்கடையே மாத்திரம் அல்லாமல் இனங்களுக்கிடையான ஐக்கியத்தை கட்டியமைப்பதில் வெற்றி கண்டே வந்தார் இதன் முன் உதாரணமாக அமையப்பெற்ற வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசில் தமிழ்ஈ முஸ்லீம், சிங்களவர் என இனங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்ப அமைச்சர் அவையை அமைத்து செயற்பட்டதில் இருந்து அறியமுடியும்.  

ஈழவிடுலைப் போராட்டம் பலமான நிலமையில் நடைபெற்ற 1985 ம் ஆண்டு காலகட்டத்தில் அமைக்கப்பட்ட ஈழத் தேசிய விடுதலை முன்னிணியின் உருவாக்த்திற்கும் அதன் பலத்திற்கும் முதன்மையான ஆள் பத்மநாபாதான். இதனை இல்லாமல் செய்தலின் முதன்மையானவர் பிரபாகரன். பின்னவர் முன்வரை கொன்று பின்பு தானும் அளிந்து போனது தான் ஈழவிடுலைப் போராட்டத்தின் துன்பியல் பக்கங்கள். சரியளுக்குள் பிழையை தேடியலையும் நபர் பத்மநாபா என்றால் பிழைகளுக்குள் சரியைதேடும் நபர் பிரபாகரன். மனிதநேயத்தின் விளைநிலம் பத்மநாபா என்றால் கொலைகளின் நாயகன் பிரபாகரன். மனித குலத்தில் மதிக்கப்பட வேண்டியவர் பத்மநாபா என்றால் மனித குலமே வெட்கித்தலைகுனியும் சாபக் கேடு பிரபாகரன்.

பிரபாகரனின் கொலைகளின் அதி உச்சம் என்னவென்று கேட்டால் அது பத்தமநாபாவின் கொலைதான். பத்மநாபாவின் மரணம் நிகழ்ந்திராவிட்டால் பிரபாகரனின் மரணமும் நிகழ்ந்திருக்க மாட்டாது? என்பதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்கின்றனரோ தெரியாது. ஆனால் அது நிதர்சனமான உண்மை. சற்றே வரலாற்றை திரும்பிப்பார்த்தால் புரியம். தமிழ் நாட்டில் புலிகளால் மேற் கொள்ளப்பட்ட பத்மநாபாவின் கொலையில் கிடைத்த 'வெற்றி'தான் ராஜீவ் காந்தியின் கொலையின் 'வெற்றி'யை புலிகளுக்கு பெற்றக் கொடுத்தது.....? மிகுதி ஆய்வை உங்களுடன் விட்டுவிடுகின்றேன் ....... ஆனால் பிரபாகரனின் பாதை தற்கொலைப் பாதை. புpரபாகரனின் தற்கொலையை தவிர்த்திருக்கலாமா? என்பது கேள்விக்குறியே

இந்தியாவால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசை புலிகள் காலி போட்டு மிதித்த போது அதனைத் தாங்கிப்பிடித்தது ஈபிஆர்எல்எவ். இந்திய அரசின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட நடைமுறைச்சாத்தியமான முதல் அரசியல் தீர்வை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் எனறால் அது பத்தமநாபாவே. வரதராஜப்பெருமாள் தலமையில் வடக்கு – கிழக்கு மாகாண அரசை நிறுவி அதனை வெற்றிகரமான திசைவழியில் கொண்டு செல்ல போராடிணவர்கள் ஈபிஆர்எல்எவ் இனர்.  பிரேமதாசா – பிரபாகரன் கூட்டுச்சதியினால் இல்லாமல் செய்யப்பட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை அரசின் அருமையை நாம் எல்லோரும் இன்று உணரும் வகையில் மிகமோசமான அரசியல் பின்னடைவிற்கு தமிழ் மக்களை கொண்டுவருவதில் புலிகளின் செயற்பாடுகள் முடிவை ஏற்படுத்தும் என்பதை அன்றே தீர்க்க தரிசனத்துடன் உணர்ந்த பத்மநாபா வடக்கு கிழக்கு மாகாணசபையை கலைப்பதை தவிர்த்து அதனை புலிகளே விரும்பினால் தொடர்ந்து கொண்டு செல்லுமாறு கலைஞர் கருணாநிதியூடாக அணுகிய செயற்பாடுகள் எல்லாம் புலிகளால் வீணடிக்கப்பட்டன என்பதே வரலாறு. இது கருணாநிதிக்கும் தெரியும்.

நம்பிக்கையின் பிறப்பிடம் பத்மநாபா. மனித நேயத்தின் விளைநிலம் பத்மநாபா. சகோதரப்படுகொலையை தவிர்த்த போராளி. எமது துப்பாக்கி எதிரிக்கு எதிராகத்தான் தூக்கப்படுமே ஒளிய சகோதர போராளிகளுக்கு எதிராக உயர்தப்படமாட்டாது என்பதில் உறுதியாக இருந்தார். மனித நேயமும், நம்பிக்கையும் உன்னிடம் சேர உன்னை கொல்ல வந்தவனுக்கு நீங்கள் ஊனும் உறக்கமும் தவர்த்து அவனக்கு அவற்றை வழங்கினாய், கூடவே கற்ற கற்கை நெறியும் அமைத்துக் கொடுத்தாய். உன் நம்பிக்கைக்கும் மனித நேயத்திற்கும் பரிசாக அவர்கள் உனக்கு துப்பாக்கி குண்டுகளை பரிசாக தந்தனர். மனித குலமே வெட்கித் தலைகுனியும் துரோகத்தை உனக்கு செய்தனர்.

ஏதும் இல்லாத நிலமையிலும் இருப்பதைக் கொண்டு சாதிக்கலாம் என்பதில் நம்பிக்கை உள்ளவர். வியட்நாம் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த இருப்பதைக் கொண்டு போராடுதல் என்ற வளமற்ற நிலையிலும் வலுவாக போராடுதல் என்ற நம்பிக்கைகளின் பிறப்பிடம் என்றால் அது பத்மநாபாதான். அவர் ஈழவிடுதலையில் எதிரிக்கு எதிரான போராட்டத்தில் உருவாக்கிய மனோதத்துவ போர் முறை அதுதான். அதனால்தான் புலிகளினால் ஆயுத முனையில் ஒடுகப்பட்டு வழங்களும் வாய்ப்புக்களும். பதவிகளும் அற்ற நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் மத்தியிலும் அவர் வழி வந்த தோழர்கள் பலர் இன்றும் இன்னம் ஈழத்தில் மக்கள் மத்தியில் அரசியல் வேலைகளுக்கூடாக மக்களோடு மக்களாக நிற்கின்றனர். எமது திசை வழிப் பாதை சரியாக அமையின் இன்று இல்லாவிட்டாலும் இன்னொரு நாள் மக்கள் எம்மோடு அதிகம் இணைவர். அதற்கான திசை வழிப் பாதையை சரியாக திட்டமிட்டு சரியான சக்திகளுடன் ஐக்கியப்பட்டு மக்கள் வேலைகளை முன்னெடுப்போம். எதிரி யார்? நண்பன் யார்? என்பதில் தெளிவாக இருப்போம். மக்களுக்கான ஐக்கிய முன்னணியை அமைப்போம். கட்சிகளுக்கான ஐக்கிய முன்னணியை தவிர்ப்போம். கடந்து வந்த பாதை சரியாக இருப்பின் இனிக் கடக்கப் போகும் பாதையும் சரியாக அமையும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு.

முயல்வோம்! வெல்வோம்!! உளம் சோரோம்!!!

(தோழர் ஜேம்ஸ்) (கார்த்திகை 19, 2009)(Comrade Jamesh)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com