Contact us at: sooddram@gmail.com

 

தோழர் பத்மநாபா இன்
வரலாறு மறைப்பதும் இல்லை! மறுப்பதும் இல்லை!!
(தோழர் ஜேம்ஸ்)


தோழர் பத்மநாபாவின் பிறந்த தினம் இன்று. உலகில் பல மனிதர்கள் தோன்றுகின்றனர், வாழுகின்றனர், மறைந்து போகின்றனர், மறந்து போகப்படுகின்றனர். மிகச் சிலரே மறக்கப்படுவதும் இல்லை, மறைக்கப்படுவதும் இல்லை. இந்த வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டவர் தோழர் பத்மநாபா. தாம் வாழும் காலத்தில் இந்த மனித குலத்திற்காக என் செய்தார்கள் என்பதிலேயே இந்த மறத்தலும் மறுத்தலும் தங்கியிருக்கின்றது.


தனது இளமைக் காலத்திலேயே இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களில் ஒன்றான தமிழ் பேசும் மக்கள் சந்தித்த ஒடுக்குமுறைகளுக்கு தானும் முகம் கொடுத்து இதற்கான மூலகாரணங்கள் என்ன? இதற்கான போராட்ட வழிமுறைகள் என்ன? என்பதை அறிந்து தெளிந்த நிலையிலேயே தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டார் தோழர் நாபா. இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் சிங்கள மக்கள் எமது நேச சக்திகள் என்பதில் மிகவும் தெளிவாகவே இருந்தார். இலங்கையில் உள்ள தேசிய இனங்கள் சேர்ந்து வாழுதல் என்பது இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சி மூலமே சாத்தியம் என்பதை முழுமையாக உணர்ந்தவர்களில் இவரும் ஒருவர்.


இலங்கையில் வாழும் உழைக்கும் வர்க்கம் இணைந்து போராட முடியாத அளவிற்கு பேரினவாதம் மேலோங்கி தலைதூக்கி இருந்தமையினால் தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைகளின் அடிப்படையில் பிரிந்து செல்வதற்கான போராட்டங்களை முதலில் முன்னெடுப்பது என்ற முடிவிற்கு வந்த இவர் இதற்கான தலமை சக்தி தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருந்த உழைக்கும் வர்க்கமே என்று விடாப்பிடியாக நம்பினார். இதற்கான அணிதிரட்டல்களை செய்வதற்காக ஈபிஆர்எல்எவ் என்ற விடுதலை அமைப்பை உருவாக்கி இதன் தலமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.


கூட்டுத் தலமையில் என்றுமே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இவர் தனது விடுதலை அமைப்பிற்குள்ளும், வெளியேயும் கூட்டுத் தலமையிற்காக கடுமையாக உழைத்தார். இவர் எப்போதும் தலமைப் பதவியை நோக்கி ஓடியவர் அல்ல என்பது இவருடன் இணைந்து வேலை செய்தவர்களுக்கு அப்பால் பல்வேறு மட்டத் மக்களுக்கும் தெரியும். இவரின் செயற்பாடுகள், உழைப்புக்கள், அர்பணிப்புக்கள், தான் கொண்ட இலட்சியத்தில் விடாப்பிடியானதன்மை போன்றவையே இவரை தலமைப் பதவியை நோக்கி நகர்த்தியது என்றே கூறவேண்டும்.


எல்லோரையும் அணைத்து, இணைத்துச் செல்லும் மனித நேயமும் தலமைத்துவ கவர்ச்சியும் இவரிடம் இருந்தே வந்தது. இவரின் எதிரிகள் கூட இவரின் மனித நேயத்தை மதித்தே பேசினர். இவரின் எளிமையான நடைமுறை வேறு எந்த ஈழவிடுதலைத் தலைவர்களிடமும் காண முடியாது. விளம்பரங்கள். துதிபாடுதல், பந்தாவாக காட்டிக் கொள்ளுதல் என்பவற்றை சமரசம் இன்றி வெறுத்த இவர் மக்களில் மக்களாக இருக்கவே விரும்பினார். அப்படியே வாழ்ந்தும் காட்டினார் ஒரு சோடி உடுப்பும், படுந்துறங்க ஒரு சாறமும், முகம் துடைக் ஒரு துவாய் (இதுவே இரவு நேரத் தூக்கத்திற்கான தலையணையும் கூட) நேரம் பார்க்க ஒரு எளிமையான கை கடிகாரம் தனது காலத்தை கழித்தார். மாலையானது தனது உடைகளையும். காலையில் தோழர்கள் பாவிக்கும் கழிவறை, குளிப்பறைகளை நேரத்துடன் நித்திரியால் எழும்பி தப்பரவு செய்யும் பழங்கங்களும் இவரிடத்து காணப்பட்டது.

 

ஈழவிடுதலை அமைப்புக்களில் மனித நேயத்தின் விளைநிலமாக திகழ்ந்தவர் என்றால் அது பத்மநாபாதான். எமது மக்களின் எதிரியின் பலம் பலவீனம் என்பனவற்றை நன்கு அறிந்திருந்தார.; என்றுமே ஆயுதத்தில் மோகம் கொண்ட மன நோயாளியாக இவர் இருந்ததில்லை. எதிரிக்கு எதிராக தவிர்க்க முடியாமல் ஆயதம் ஏந்த வேண்டி நிலமையை தனக்குள் உள்வாங்கிக் கொண்டவர். ஆயுதங்கள் மீது மோகம் கொண்ட மனநோயாளியாக இவர் காட்சி தரவும் இல்லை செயற்படவும் இல்லை, தனது சகாக்களை வளரக்;கவும் இல்லை. இதனால்தான் இவர் வாழ்ந்த காலத்தில் எதிரியுடன் தேவை ஏற்படும் போது ஆயுதங்களால் பேசவும், ஏனைய நேரங்களில் பேச்சுவார்த்தைகள் மூலம் எதிரிகளை அம்பலப்படுத்தவும் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து நிலை நாட்டவும் தயாராக இருந்தார்.

இதன் வெற்றிகள்தான் திம்பு பேச்சுவார்தையில் இலங்கை அரசு அம்பலப்பட்டுப் போனதும், ஈழவிடுதலை அமைப்புக்களிடையேயான பலமான காலகட்டமான ஈழத் தேசிய விடுதலை முன்னணி அமைத்து முன்னோக்கி நகர்த்திச் சென்றதும். இறுதியில் இந்திய அரசின் அனுசரணையுடன் உருவான மகாண சபையும். இதன் இடைக்கால அரசு அமைந்து அது முழுமையாக புலிகளிடம் ஏகபோகமாக தாரை வார்க்கப்பட்டபோது பரவாய் இல்லை அவர்களே நடத்தட்டும் இடைக்கால அரசை நமக்கு எதிர்கட்சி பாராளுமன்ற அரசியலே நல்லது என்று ஒதுங்கி நின்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் அமைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் இடைக்கால நிர்வாகத்தை புலிகளே கொண்டு நடத்த அனுமதித்து என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இறுதியில் புலிகள் வழமைபோல் தமது நம்பிக்கைத் துரோகத்தை இந்திய அரசுக்கு கொடுத்து அவர்களுக்கு எதிராக போர் தொடுத்தார்கள். இந்நிலையில் வடக்கு கிழக்கு மகாண சபையை எந்த வழங்களும் அற்ற நிலையில் அமைத்து இதனை நிலைநிறுத்த முற்பட்டதும் இன்று மறைக்க முற்படும் வரலாறு ஆகும். ஆனால் இவரின் சீரிய பார்வை அன்று பிரேமதாஸ, தமிழீழ விடுதலைப் புலிகள், கருணாநிதி போன்றவர்களின் கூட்டு முயற்சியினால் குலைக்கப்பட்டு, கலைக்கப்பட்டது துர்பாக்கிய நிலையே ஆகும். இதனைத் தொடர்ந்து வடக்கும், கிழக்கும் பிரித்தெடுக்கப்பட்டு, மகாண சபையின் அதிகாரமும் பறித்தெடுக்கப்பட்டு அதிகாரம் குறைந்த ஒரு மகாணசபையே போதும் என் நிலைக்கு முள்ளிவாய்கால் போன்ற பாரிய மனிதப் படுகொலையின் இறுதியில் தமிழ் பேசும் சமூகம் வந்திருக்கின்றது.

இணைந்த வடக்கு கிழக்கு மகாணசபை கலைக்கப்பட்டமை தவிர்க்கப்பட்டிருந்தால், தோழர் நபாவின் மரணம் தவிர்க்கப்பட்டிருந்தால் இன்று ‘தேவையான’ அதிகாரங்கள் பெற்ற ஒரு பலமிக்க மாகாணசபை ஆட்சிப் பீடத்தில் இருந்திருக்க முடியும் என்பது உலகில் உள்ள பல நாடுகளின் வரலாறுகள் கூறும் செய்திகள். எவை எப்படி இருப்பினும் இன்று கிடைத்திருக்கும் மகாணசபையும் அதன் ஆட்சிப் பொறுப்பும் தோழர் பத்மநாபா போன்ற பல்லாயிரக் கணக்கான போராளிகளின் செங்குருதிலிருந்து பிறந்தைவையே. இது ஒன்றும் சும்மா தாம்பாளத்தில்; வைத்து பெறப்பட்டவை அல்ல.

தமிழ் பேசும் மக்களுக்கு அப்பால் மலையக மக்கள், முஸ்லீம் மக்கள், சிங்கள மக்கள் என்று தான் பிறந்த இலங்கை தேசத்திலிருக்கும் பல இனங்களின் விடுதலைப்பற்றி சிந்தித்து செயற்பட்ட தலைவர்களின் இவரும் ஒருவராக நிமிர்ந்து நிற்கின்றார். இதற்கு அப்பால் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பின்புலமாக அமைந்த இந்தியாவின் முற்போக்கு சக்திகளுடன் தனது உறவுகளை வளர்த்து இந்திய மக்களின் வர்க்க விடுதலைக்கான முன்னெடுப்புக்களுக்கு தனது ஆதரவை வழங்கியே வந்தார.; கூடவே பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கான தனது ஆதரவுக்கரங்களை வழங்கி இவர்களுடன் தோழமைப் பாலமும் அமைந்திருந்தார். நிக்கரகுவாவின் டானியல் ஒடேகாவின் புரட்சிகர அரசுடனும், ஏனைய தென் அமெரிக்க புரட்சிகர அமைப்புக்களுடனும் தமது உறவை வளர்த்து கொண்டார் ஈழவிடுலை அமைப்புக்களின் தலைவர்களிடையே நிலவிய தமிழ் தேசியம் என்ற குறுதேசியவாதத்திற்கு அப்பால் ஒரு சர்வதேசியவாதியாகவும் திகழ்ந்தார்.
இதனாலேயே அமெரிக்க ஏகாதிபத்தியமும் இதன் அடிவருடிகளும் ஈபிஆர்எல்எவ் என்ற அமைப்பை இல்லாமல் செய்ய புலிகள் என்ற தமது கூலிகள் மூலம் நிறுவி நிற்க இன்றுவரை ஆவன செய்து வருகின்றனர்.

47 வருடங்களின் பின்பும் தோழர் சேகுவாரா வின் மரணம் மறுக்கப்படவும் இல்லை, மறக்கவும் முடியவில்லை. அது போலவே தமிழ்நாட்டின் கோடம்பாக்கம் சூளைமேட்டில் புலிகளின் சதிவலையினால் கொல்லப்பட்ட பத்மநாபாவும் மறக்கப்படவும் இல்லை மறுக்கப்படவும் இல்லை. சேகுவாரா அன்றை அமெரிக்க அடிவருடி இராணுவத்தினால் கொல்லப்பட்டது போல் தோழர் பத்மநாபாவும் பொது எதிரியான அமெரிக்கா அல்லது இலங்கை இராணுவத்தினால் அல்லாது இவர்களின் கைகூலி தமிழ்ப் புலி இராணுவத்தினாலேயே கொலப்பட்டார்.

தோழர் சேகுவாரா போல் உங்களையும் வரலாறு விடுதலை செய்திருக்கின்றது. நீங்கள் மறுக்கப்பட்டவரும் இல்லை, மறக்கப்பட்டவரும் இல்லை.
(தோழர் ஜேம்ஸ்) (நவம்பர் 19, 2014)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com