Contact us at: sooddram@gmail.com

 

என் மனவலையிலிருந்து…..
மாவீரர்களும் மாற்றுப் போராளிகளின் தியாகங்களும்

(சாகரன்)
நேற்றைய தினம் இலங்கைத் தமிழர் வாழும் பல நாடுகளிலும் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாடப்படும் ஒரு தினமாகவே இது பெரும்பாலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. புலிகளின் ஆயதக் குழுவில் இணைந்து மரணத்தை தழுவியவர்கள் மட்டும்தான் கொண்டாடப்பட வேண்டியவர்கள் மற்றவர்கள் யாரும் மதிக்கப்பட வேண்டும் கணக்கில் எடுகப்பட வேண்டும் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினர் புலிகள். இன்று மகாணசபை என்ற வகையிலாவது வந்து நிற்கும் இலங்கைத் தமிழர் பிரச்னையின் அறுவடைகளை பெறுவதற்கு பல்வேறு விடுதலை அமைப்புக்களும் செய்த உயிர்த் தியாகங்களும் போராட்டங்களும் காரணமாகவும் இருந்தன என்பதை இவரகள் சீர்தூக்கிப்பார்கத் தயார் இல்லை.

தமிழீழ விடுலைப் புலிகள் விடுதலைப் போராட்டத்தை வலிந்து குத்தகைக்கு எடுத்து பிழையான வழியில் போராட்டதை கொண்டு சென்று மக்களையும் பலிகொடுத்து தோல்வியடைந்தது இந்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாம் பார்க்கவேண்டிய ஒன்றாகும். ஒரு காலத்தில் புலிகளின் இந்த குருட்டுத்தனமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து படு தோல்வியில் முடிந்த இந்த ஆயுதப் போராட்டத்தை போர் முடியுற்று 5 வருடங்கள் கழிந்தும் இன்றும் மீள்பார்வை செய்ய தயார் இல்லை என்பது சோகமே. இதில் ஒரு விடயம் தொக்கு நிற்பதை மக்கள் உணரவேண்டும். புலிகளுடன் இணைந்து புலம் பெயர் தேசங்களில் செயற்பட்டவர்களில் பலர் இதில் விளையாடிய பெருந்தொகையான பணத்தை குறிவைத்து இதனால் சுகபோக வாழ்வை அனுபவித்தவர்கள், இன்றும்; அனுபவிப்பவர்கள். இவர்களில் யாரும் தமது உறவுகளை குறிப்பாக பிள்ளைகளை இந்த போராட்டத்திற்காக அர்பணித்தவர்கள் அல்லர்.

போராட்டத்தில் தமது பிள்ளைகளை, உறவுகளைப் பலிகொடுத்த சாதாரண பொது மக்களின் உணர்வுகளை தமக்கு சாதகமாக்கி இதில் விளைந்த பெருந்தொகையான சொத்துக்களை கொள்ளையடித்த கொள்ளைக்காரர்களை இவர்கள் இனம் கண்டு பாகுபடுத்தாதது இந்த 5 வருடத்தில் கிடத்த தோல்வி என்றே கூறவேண்டும். மறுபுறத்தில் இலங்கை அரசும் புலிகளின் இருப்பை தொடர்ந்தும் காட்டியே இலங்கையில் தமது ஆட்சியை தக்கவைக்கும் பேரினவாத செயற்பாட்டையே கொண்டிருப்பதும் புலிகளை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பையும் உறுதி செய்கின்றது. ஆக மொத்தம் ஒவ்வொரு தரப்பிலும் பிழைப்புவாதிகளின் இருப்பை உறுதிப்படுத்து எழுதப்படாத ஒப்பந்தங்களில் இவர்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றார்கள்.

அப்படியானால் தமிழ் பேசும் மக்களுக்கு பிரச்சனை இல்லையா. புலிகளுடன் விரும்பியும், விரும்பாமலும் இணைந்து தம்முயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு வலிகள்; இல்லையா. புலிகள் தவிர்ந்த ஏனைய விடுதலை அமைப்புக்களின் போராளிகளின் இழப்பு அவரவர் குடும்பங்களுக்கு துன்பததை தரவில்லையா? புலிகளால் கொல்லப்பட்ட மாற்றுக்கருத்தாளர்களின் துன்பங்கள் வருத்தங்கள் இவை எல்லாவற்றையும்; விட மேலானது. சமூகத்திலும் இவர்களை துரோகிகள் என்று புலிகளால் காட்டப்பட்டதினால் இவர்களின் மரணங்களை கொண்டாடும் ஒரு மனநோயாளர் கூட்டத்தை தமிழ் மக்களிடையே புலிகள் உருவாக்கிச் சென்றிருப்பது ஈழவிடுதலைப் போராட்டம் விட்டுச் சென்ற மிகப் பெரிய துன்பியல் வடுக்கள் ஆகும்.

மரணத்தைக் கொண்டாடும் ஒரு சமூகமாக எமது சமூகத்தை கொண்டு நிறுத்தியதில் இன்று நாம் வெட்கித் தலைகுனியும் நிலையில் உள்ளோம். ஏதிரியை…. அதானுங்க இலங்கை பேரினவாதத்தை வெல்லுவதில் நாம் இழைத்த தந்திரோபாய தோல்விகள் முழு சிங்கள இனத்தையும் எமது எதிரிகளாக பார்த்ததிலிருந்து ஆரம்பித்து முஸ்லீம் மக்களையும் இவர்களுடன் இணைந்த வரலாற்றுத் துரோகத்தை செய்தே நிற்கின்றது. கூடவே இவற்றிற்கு எதிரான மாற்றுக்கருத்தாளர்களை துரோகிகளாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் பார்த்து சிறையில் அடைத்தும், கொலையும் செய்து, நாட்டைவிட்டுத் துரத்திய இவர்களின் மரணங்களை நாம் கொண்டாத்தான் வேண்டும் என்று நான் வாதிடவில்லை. ஏனெனில் மரணத்தை கொண்டாடும் மனநோயாளிகளாக நாம் இருக்கவும் இல்லை இருக்கப்போவதும் இல்லை. மாறாக மனித நேயத்தை வளர்ப்போம் இந்த மரணத்தை கொண்டாடும் மனநேயாளிகளை மேலும் இந்த மனநோய்களுக்கு சிக்கிவிடாமல் தவிர்க்கும் முன்னெடுப்புக்களைச் செய்வோம்.

எந்த வகையிலும் பார்த்தால் இது புலிகளின் மாவீரர் தினமே ஒழிய மாற்றுக் கருத்தாளர்களின் அரணங்களை நினைவு கூரும் தினமும் அல்ல. இந்த விடுதலைக்காக உண்மையில் போராடிய போராளிகளின் தினமும் அல்ல. மாறாக மரணித்த உறவுகளின் மன உணர்வுகளை வியாபாரம் ஆக்கும் சிலரின் கொண்டாட்டம்தான் இவைகள் எல்லாம். இதில் எல்லாம் பிரபாகரனின் பிரசன்னத்துடன் இல்லாமல் போன ஒற்றுமை இன்று 5 இற்கு மேற்பட்ட குழுக்களாக பிரிந்து தனித்தனி கலெக்சன்களுக்கு கூட்டம் கூடும் செயற்பாடுகளே இவை. இதனை புலம் பெயர் தேசம் எங்கும் காணமுடீயம் ஆனால் என்ன திருமாவழவன் வந்தால் என்ன சீமான் வந்தால் என்ன வெறும் நாயன்மார்களின் தொகைகளை தாண்டாத கூட்டமே தற்போதெல்லாம் கூடுகின்றது.

தேசியத் தலைவர் என்ற பெயர் அது தானாக உருவாக வேண்டும், மாறாக சூட்டிக்கொள்வதும் இல்லை இணைத்துக்கொள்வதும் இல்லை. இடி அமீன் தனக்குத்தானே இராணுவ உடையில் பதங்கங்களையும் ரூபாய் நோட்டுக்களையும் அடித்தது போனறதே பிரபாகரனின் பட்டங்களும் தழிழீழ தேசிய வங்கி செயற்பாடுகளும். இந்த வகையில்
தேசியத் தலைவர், மாவீரர். நாட்டுப்பற்றாளர் என்பது எல்லாம் தமிழ் சினிமா நடிகர் ஒருவருக்கு கிடைக்கும் பட்டங்கள் போலவே அமைகின்றன. மகாத்மா காந்தியிற்கு கிடைத்த பட்டங்களும், இன்னும் மக்களால் மதிக்கப்பட்ட தலைவர்களுக்கு கிடைத்த பட்டங்களும் அவர்களின் பொது வாழ்க்கையின் செயற்பாட்டிற்கு மக்கள் தாமாக வழங்கிய மகோத்மமான பட்டங்கள் ஆகும். மாறாக மகிந்த சிந்;தனைகளும், பிரபாகரனின் தேசியத்தலைவர் பட்டங்களும் ஒரே வகையானவையே. இதில் ஒன்றும் மக்கள் தலைவர்களின் மரியாதைக்குரிய பதாகைகளை காணமுடியவில்லை.

ஒருவகையில் துப்பாக்கிச் சூடுகளுக்கு விசிலடிச்சான் குஞ்சுகள் வழங்கிய பட்டாசுகள் இவை. இதனால்தான் போரில் வெற்றியென்று தம்பட்டம் அடித்துக்கொண்ட மகிந்தாவும், போரில் தோல்வியிலிருந்த பிரபாகரனையும் காப்பாற்ற மக்கள் வீதியில் இறங்கிப் போராடவில்லை. அன்று புலம் பெயர் தேசத்திலும், அம்பாந்தோட்டையிலும் கூத்தாடியது எல்லாம் இதில் கணக்கில் அடங்கதாதவையே. போரின் பொறிக்குள் மாட்டுப்பட்ட தமது உறவுகளும், பிள்ளைகளும் இதில் கொல்லப்படப் போகின்றார்கள் என்ற ஆதங்கமே புலம் பெயர் தேசத்தில் வீதியில் இறங்கிய மக்கள் பலரின் உண்மையான மக்கள் தார்பரியம் ஆகும். போரின் முடிவு தினமும் அறிவிக்காமல் நடைபெற்ற இராணுவச் சிப்பாய் மரணங்களை நிறுதியது என்பதற்காகவுமே மகிந்தவிற்கான தேர்தலவாக்குகள் ஆகும்.

ஈழவிடுதலைப்போராடத்தில் தமிழ் பேசும் தரப்பு பலமாக இருந்த கால கட்டம் என்றால் அது திம்பு பேச்சுவார்தை நிகழ்ந்த கால கட்டம்தான் இத்தனைக்கும் ஒரு இராணுவ முகாமைதாக்கி அழிக்கவல்ல ஆயுதப்பலம் இல்லாத காலகட்டம் அது. ஆனால் பேச்சுவார்த்தை மேசையில் இராஜதந்திர அணுகுமுறையில் இலங்கையை அப்பலப்படுத்தியது மட்டும் அல்லாமல் இந்தியா எம்மீது தமது நலன்களின் அடிப்படையில் ஒரு தீர்வை திணிக்கமுடியாமல் இருந்த வகையில் செயற்பட வைத்த காலகட்டம். இப் பேச்சுவார்தைக்கு முன்னர் போர்நிறுத்தம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தையை இலங்கை அரசு ஒரு தலைப்பட்சமாக முறிந்ததும் இராணுவ முகாங்களுக்குள் முடங்கி இருந்த இராணுவம் மெல்ல வெளியே தலை காட்ட முற்பட்டன. இதனை முதலில் தடுத்து நிறுத்த முற்பட்டது ஈபிஆர்எல்எவ் என்ற அமைப்பின் மோட்டார்கள்தான்(இந்த மோட்டார் தாக்குதலிலும் ஒரு சுவாரிசம் இருந்தது அதனைப் பிறதொரு சந்தர்ப்பத்தில் கூறுகின்றேன்.)

இதனைத் தொடர்ந்து எழுதப்படாத ஒப்பந்தங்களின் அடிப்படையில் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் யாழ் கோட்டையைச் சூழ்ந்து தமது காவல் அரண்களை அமைத்து தடுப்பு வேலையில் ஈடுபட்டு கோட்டை இராணுவத்தை முடக்கியது நடைபெற்றது. இதில் ஈடுபட்ட போராளிகள் எல்லாம் போராளிகள் இல்லையா? தியாகங்கள் செய்யவில்லையா?. இவர்களில் பலர் இன்று எம்மிடம் இல்லை. சிலர் இலங்கை இராணுவத்தினாலும், பலர் புலிகளாலும் கொல்லப்பட்டனர். சிலர் இயற்கை எய்திவிட்டனர் இன்னும் சிலர் வாழ்ந்து கொண்டும் சிலர் வாங்கப்பட்டும் விட்டனர். இவற்றைத் தொடர்ந்த காலத்தில் ஏற்பட்ட ஈழவிடுதலை அமைப்புக்களிடையேயான ஐக்கிய முன்னணி தோன்றியது. முதலில் ஈபிஆர்எல்எவ், ஈரோஸ், ரெலோ என்பன இணைந்து அமைக்கப்பட்ட ஈஎன்எல்எவ் இல் கால ஓட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இணைந்தனர். இணைந்ததும் ஆரம்பித்தனர் இந்த ஐக்கிய முன்னணியைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை. சகோதரப் படுகொலைகளை இந்த ஐக்கிய விடுதலை முன்னணிக்குள் ஆரம்பித்து இறுதியில் எல்லா அமைப்புக்களையும் தடை செய்கின்றோம் என்று கூறிக்கொண்டு மாற்று அமைப்பாளர்களைக் கொன்று குவித்தனர் இப்போது எல்லாம் இலங்கை இராணுவம் விடுதலைப் போராளிகளுக்கு எதிராக செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் கச்சிதமாக முடித்துவைத்தனர் தமிழீழ விடுதலைப் புலியினர். இதில் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தமிழ் இளைஞர்கள் இல்லையா? யாரும் பெற்ற பிள்ளைகள் இல்லையா? போராளிகள் இல்லையா? இவர்கள் தியாகம் எல்லாம் மதிகப்பட வேண்டியவை அல்லவா?

இதன் தொடர்ச்சிகள் 2009 மே மாதம் வரைக்கும் தொடர்ந்தன என்பதை வரலாற்றுப் பக்கங்களை புரட்டி புள்ளி விபரங்களைப் பார்தால் அறிய முடியும். இப்படி பேசினால் எழுதினால் சிலர் கூறுவார்கள் அதுதானே புலிகள் இல்லை என்று ஆகிவிட்டது. பிறகேன் திரும்ப திரும்ப அறுவைச சிகிச்சை செய்கின்றீர்கள் என்று. ஏன் எனில் மீண்டும் இவ்வாறான தவறுகள் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் இவை. புலிகள்தான் ஆளணியில் தற்போது அழிந்திருத்தாலும் புலிகளின் குணாம்சம் இன்றும், இன்னமும் வேறு வடிவில் எம் சமூகத்திற்குள் இருக்கின்றது. மரணங்களைக் கொண்டாடும் மனநோயாளிகள் இன்றும் உள்ளனர். உசுப்பேத்தி பிழைப்பு நடாத்தும் கூட்டம் மறுவடிவங்களில் செயற்பட்டவண்ணமே உள்ளன.

போர்கள் நடைபெற்று இதன் அனுபவங்களைப் பாடங்களாக கொண்டு போரே வேண்டாம் என்று சமாதான, சக வாழ்விற்குள் புகுந்து வெற்றி நடைபோடும் பல சமூகங்கள், நாடுகள் உருவாகி இருக்கின்ற வரலாற்றுப் பக்கங்களில் எங்கள் தமிழ் பேசும் சமூகம் மட்டும் இன்றும் அதே பச்சை மட்டையடி வீரத்தை மட்டும் புகழும் மன நோயாளராக இருப்பது ஒவ்வொரு வருடமும் நடைபெறும் மாவீரர் தினம் என்ற கொண்டாட்டத்தில் தெரிகின்றது. அது எழுதிக்கொடுத்த பிரபாகரனின் பேச்சாக இருக்கலாம், இதற்கு பாலசிங்கம் கொடுத்து தூசண வார்த்தை விளக்கங்களாக இருக்கலாம், அல்லது இன்றுவரை 2009 மே இற்கு பின்பு இவர்களின் வழித் தோன்றல்களின் செயற்பாடுகளாக இருக்கலாம் ராதிகா. லோகன் போனறவர்களின் நடவடிக்கையாக இருக்கலாம் சீமான் வைகோ போன்றவர்களில் செயற்பாடுகளாக இருக்கலாம் எல்லாம் புலிகள் தவிர்ந்த யாவரும் கொல்லப்படல் மாவீரம் என்றே புகழப்படுகையில் எவ்வகையில் மாவீரர் தினம் தமிழ் தேசிய தினம் என்று பொதுமைப்படுத்த முடியும்.

இது ஒருவகையில் நவீன 21 நூற்றாண்டின் புலியிசம் என்ற பாசிசத்தின் கொண்டாட்டங்கள். இதற்கும் நாஜிகள் கொண்டாடும் ஹிட்லர், அவரது படைகளின் மரணத்தின் நினைவு கூர்தலுக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. இது ஒருவகை 'தமிழ் நாஜிகள் தினம்' தான். எனவேதான் கூறுகின்றோம் மாவீரர் தினம் ஒரு மரணத்தை நினைவு கூரும் தினம் அல்ல, மாறாக மரணித்தவர்களின் அன்பு உள்ளங்களின் உணர்வுகளை வியாபாரமாக்கும் ஒரு கோர விளையாட்டும், அதன் கொண்டாட்டங்களும் மட்டுமே

அப்படியாயின் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கும், இதில் மரணத்தை தழுவிக்கொண்ட மக்களுக்குமான நினைவு கூரல் தேவையற்றவையா? தேவையானதுதான் ஆனால் இது கொண்டாடும் தருணம் அல்ல. மாறாக மரியாதைக்குரிய நினைவு கூரப்படவேண்டிய நாள். இதற்கான ஒரு பொது தினத்தை நாம் கண்டாக வேண்டும். மாறாக ஏற்கனவே கொண்டாடி வந்த மாவீரர் தினத்தை தமிழ் மக்களின் எழுச்சி தினம் என்று மாற்றியமைத்து கொண்டாடினால் அது எல்லோராலும் எற்கப்படும் நியாயமான தினமாக அமையமாட்டாது. இந்துக்களின் ஆடி அமாவாசை எல்லோருக்குமான இறந்தவர்களை நினைவு கூரும் பொதுத் தினமாக இருப்பதுவும், திவசம் தனிப்பட்டவர்களின் நினைவு தினமாகவும் இருப்பது போல், டிசம்பர் 26 ஒருவகையில் புலிகளின் திவசம்தான் மாறாக ஆடி அமாவாசை அல்ல.

மரணத்தை கொண்டாடுவது போல் மரணத்தை ஏற்றுக்கொள்ளாத மனநிலையும் இங்கு ஒருவகையில் மனநோய்களின் வெளிப்பாடுதான்.

(Saakaran)(நவம்பர் 29, 2014)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com