Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறுவகையில்

மீள்குடியேற்றம் தமிழ்இ முஸ்லீம்இ சிங்களம் என மூவின மக்களுக்கும் பொதுவானதாக அமைய வேண்டும்.

(சாகரன்)

தமது பூர்வீக பிரதேசமான யாழ்ப்பாணத் தில் மீண்டும் குடியமர்த்தக் கோரி யாழ். ரயில்வே நிலையத்தில் தங்கியிருக்கும் 100 சிங்கள குடும்பத்தவர்களையும் சந்திப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ இன்று (18) யாழ்ப்பாணம் செல்கிறார். யாழ்ப்பாணம் அரச அதிபர் இமெல்டா சுகுமார்இ வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோருடன் அமைச்சர் மில்ரோய் இம்மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கான தீர்வைப்பெற்றுக் கொடுப்பாரெனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இவ்வாறு இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்பாணத்தை பூர்வீகமாக கொண்டுள்ள மக்கள் யாவரும் யாழ்பாணத்தில் மீண்டும் குடியமர்வதற்கு பூரண உரிமை உண்டு. அது தமிழருக்கும் பொருந்தும்இ முஸ்லீம் மக்களுக்கும் பொருந்தும்இ ஏன் சிங்கள மக்களுக்கும் பொருந்தும். இதே போல் அனுராதபுரம், கெக்கிராவை போன்ற இடங்களில் பாரம்பரியமாக இருந்து இனக்கலவரங்களால் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் தாம் விட்டு வந்த காணிகளை உரிமை கோருவதற்கும்இ உடமையாக்கி கொள்வதற்கும் அரசு ஆவன செய்து கொடுக்க வேண்டும்.

அனுராதபுரம் போன்ற கிராமங்களிலிருந்து பேரினவாதத்தினால் ஏற்பட்ட கலவரத்தால் தமிழ் மக்கள் அங்கிருந்த தமது நிலங்களை விட்டு ஓடி வந்தது எவ்வளவு உண்மையோ இதற்கு எந்த வகையிலும் குறைவில்லாமலே புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குறும்இ சிறுபான்மை தேசிய வெறியினால் யாழ்பாணம் போன்ற பிரதேசங்களில் இருந்து மிக சிறிய அளவிலாக இருந்தாலும் சிங்கள மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் குறியேற வேண்டியேற்பட்டது. இதில் இனச் சுத்திகரிப்பு நிகழ்வாக முஸ்லீம் மக்கள் புலிகளால் யாழ்பாணத்திலிருந்து விரட்டப்பட்டது ம் வரலாறு. இதனைக் கொடுப்புக்குள் சிரித்தவாறு அனுமதித்ததும் யாழ்பாண மேலாதிக்கவாதிகளின் கொடுமையான செயற்பாடுகளின் உச்சக்கட்டம்.

ஆனால் அரசு காணிகளில் புதிதாக யாரையாவது திட் டமிட்டு குடியேற்றும் நடவடிக்கையாக சிறப்பாக தமிழ் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்ற முயலுதல் என்ற செயற்பாடு இனங்களுக்கு இடையில் மேலும் ஐயப்பாடுகளையும் விரிசல்களையும் ஏற்படுத்தும். அது மாத்திரமல்ல இலங்கை அரசின் செயற்பாடுகள் பற்றி தமிழ் மக்கள் நம்பிக்கை வைப்பதற்கு குந்தகமாகவும் அமையும். இலங்கையில் உள்ள சகல இனங்களும் சமூகக் குழுக்களும் சமத்துவமாக வாழ்வதற்குரிய அரசியல் நிலமைகளை குறைந்த பட்டசமாவது சட்ட மூலமும்இ நடைமுறை மூலமும் ஏற்படுத்தாமல் இலங்கை அரசு வலிந்த குடியேற்றங்களை ஏற்படுத்துமாயின் மீண்டும் இளைஞர்கள் 1970 களில் கிராமங்களை நோக்கி வகுப்பு எடுக்க புறப்படும் நிகழ்வுகள் நடைபெறமாட்டாது என்பதை உறுதி செய்ய முடியாது. இது வரைகாலமும் ஆட்சி செய்து வந்த அரசுகள் விட்ட தவறுகளை தற்போதைய அரசு பாடங்களாகக் கொண்டும் செயற்படும் என்று நம்பவைக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு தற்போது உண்டு.

இந்த வகையில் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ இன் யாழ் விஜயமும் புகையிரத நிலையல்தில் தங்கியிருக்கும் சிங்கள் மக்களை அணுகும் நடைமுறையும் அமைய வேண்டிய நெருக்கடியான நிலையில் இலங்கை அரசு உள்ளது என்பதை சம்மந்தப்பட் தரப்பினர் கவனத்தில் கொள்ள வேண்டும். அமைச்சர் சிங்கள மக்களின் பிரதிநிதியாக மட்டும் செயற்படாமல் முழு இலங்கை மக்களின் பிரதிநிதியாக செயற்பட வேண்டிய கடப்பாட்டில் உள்ளார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மீள்குடியேற்றம் தமிழ்இ முஸ்லீம்இ சிங்களம் என மூவின மக்களுக்கும் பொதுவானதாக அமைய வேண்டும் . இதில் நாம் யாவரும் குறைந்த பட்ச புரிந்துணர்வுகளையும்இ பாடங்களையும் அதன் அடிப்படையிலான செயற்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும். இதே போல் போராளிகளுக்கு புனர்வாழ்வு என்று வரும் போதும் அது புலிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. 1985 களிலிருந்து இலங்கை அரசாலும்இ புலிகளாலும் பாதிக்கப்பட்ட அனைத்து ஏனைய அமைப்பு போராளிகளுக்கும் இது பொதுவானது. யுத்தம் என்ற நிகழ்வால் புலி அமைப்பினர் மட்டும் அல்ல ஏனைய விடுதலை அமைப்பினரும் பாதிக்கப்பட்டுள்னர். புலிகளால் பல ஆயிரம் மாற்றுக் கருத்துள்ள போராளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களின் நலன்களும் போராளிகளின் புனர்வாழ்வு என்ற வரையறைக்குள் இணைக்கப்பட்டு புனர்வாழ்வழிக்கப்பட வேண்டும். புலிகளால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் இந்தியாவில் உள்ள அகதி முகாங்களில் பெரியளவில் உள்ளனர் என்பது இங்கு கவனிக்கப்படத் தக்கது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்து தாம் வாழ்ந்த பூமியை உரிமைகோரும் தைரியம் தமிழ் மக்களுக்கு இல்லை. தமிழ் மக்களுக்கான தைரியத்தின் முதுகெலும்பை உடைக்க1985 களிலேயே இலங்கை அரசுக்கு புலிகள் அத்திவாரம் போட்டுக் கொடுத்து விட்டார்கள். புலிகளை விடுவோம் இதை இலங்கை அரசு அனுமதிக்குமா? அல்லது இலங்கையிலுள்ள இனவாத சக்திகள் அனுமதிக்குமா...? இப்படி ஏட்டிக்கு போட்டியாக செயற்படாமல்  மீள்குடியேற்றம் தமிழ்இ முஸ்லீம்இ சிங்களம் என மூவின மக்களுக்கும் பொதுவானதாக அமைய வேண்டும். இதனை இலங்கை முழுவதும் இலங்கை அரசு உறுதி செய்யுமா? இதே போலவே பாதிக்கப்பட்ட சகல இயக்க போராளிகளுக்கும்இ மூவின மக்களுக்கும் சமத்துவமாக செய்யுமா? என்பதே இவ்விடயங்கள் பற்றிய தற்போதைய கேள்விக்குறி.

(சாகரன்) (ஐப்பசி 18, 2010

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com