Contact us at: sooddram@gmail.com

 

மத்தியிலும், மூன்றில் இரண்டு; (வட)ாகாணத்திலும், மூன்றில் இரண்டு

(சாகரன்)

(இக் கட்டுரை வட மாகாணசபையின் மந்திரிசபை தெரிவு செய்வதற்கு முன்பு எழுதப்பட்டது)

வடமாகாண சபைத் தேர்தல் முடிவுற்றுள்ளது. பலரின் பல்வேறுவிதமான எதிர்வு கூறல்களுக்கு மத்தியிலும் இத் தேர்தல் ஜனநாயக நிலமைகளை வடக்கிலும் நிறுவ முற்பட்டுள்ளது என்பதே உண்மை. மக்கள் பெரும் அளவில் தேர்தலில் கலந்து கொண்டு தமக்கு விருப்பமானவர்களைத் தெரிவு செய்துள்ளனர். தேர்தல் வன்முறைகள் என்று பெரிதாக எதனையும் பதிவு செய்ய முடியவில்லை. வழமைபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது குறும் தேசியவாதத்தை தனது மூலதனமாக தூக்கிப்பிடித்தது. மறு புறத்தில் இலங்கை அரசு அபிவிருத்தி, இயல்பு நிலை என்பதை தூக்கிக் காட்டியது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், இராணுவத்தை முற்றாக வாபஸ் பெறவேண்டும் என்ற உச்ச கோரிக்கைகளுக்கு மாற்றீடாக அபிவிருத்தி, இயல்பு நிலை என்பது எடுபடவில்லை. தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் வெற்றி இலங்கை அரசின் மீதான விருப்பின்மையினால் விழுந்த வாக்குகளால் ஏற்பட்டதாகும். மற்றயபடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை?களுக்கு விழுந்த வாக்குகள் அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாற்றுத் தலைமை தனித்துவமாக உருவாக்கப்படாத அல்லது காட்டப்படாத நிலையில் தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை.

1977 களின் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வெற்றியை ஞாபகப்படுத்தும் தேர்தல் முடிவுகள் இது. என்ன அன்று பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி, இன்று மாகாணசபைத் தேர்தலில் வெற்றி ஏற்பட்டிருக்கின்றது. அன்றும், இன்றும் தமிழ் மக்களிடம் கூட்டணிஃகூட்டமைப்பு ஆணையை கேட்டு இருந்தனர். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எதிர்பார்க்காத அளவிற்கு ஆதரவை தமிழ் மக்கள் வழங்கியிருக்கின்றனர். வடக்கு-கிழக்கு என்று இணைந்த தமிழ் பேசும் மக்களின(தமிழ்-முஸ்லீம் இணைந்த மக்கள்) ஆதரவில் அது நடைபெற்றது. ஆனால் இன்று வடமாகாண மகாண தமிழ் மக்களினால் மட்டும் இந்த வெற்றி ஏற்பட்டிருக்கின்றது. மறு புறத்தில் ஈபிடிபியின் கஷ்டப்பட்ட மக்கள் மத்தியிலான வாங்கு வங்கி அவர்களின் இருப்பை எடுத்துக்காட்டி இருக்கின்றது. இவர்கள் அரசைத் தவிர்த்து முஸ்லீம் காங்கிரஸ் போல் தேர்தலில் தனித்து நின்றிருந்தால் இன்னும் சற்று அதிகமான இடங்களை வென்றிருக்க முடியும். அரசுடன் இணைந்து தேர்தலில் செயற்பட்டதால் இலங்கை அரசுக்கெதிரான மக்களின் விருப்பின்மை, ஆத்திரம், நம்பிக்கையீனம் போன்றவற்றிற்கும் இவர்கள் மக்களுக்கு தடுமாற்றத்துடன் பதில் சொல்ல வேண்டிய இக்கட்டான நிலமைக்கு தள்ளப்பட்டனர். இது இவர்களை பெருவீச்சில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படமுடியாமல் கைகளை பின்னுக்கு கட்டியது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

மத்தியிலும் மூன்றில் இரண்டு வடக்கிலும் மூன்றில் இரண்டு. மத்தியில் வடமாகாணத்தில் தோற்றுப் போன மகிந்த அரசு மூன்றில் இரண்டு பலத்துடன் ஆட்சியில் உள்ளது. வட மாகாணத்தில் மகிந்த அரசை விரும்பாத? தமிழ் பேசும் மக்கள் மூன்றில் இரண்டு பலத்துடன் மாகாண அரசை அமைத்துள்ளனர். இரண்டு பலம்மிக்க அரசுகள் தமது அதிகார வரம்பிற்குள் என்ன சாதனைகளைப் புரியப் போகின்றார்கள் என்பதே இன்றைய கேள்வியாகும். மத்திய அரசு தமக்கு தேவையான அதிகாரங்களை வழங்கவில்லை என்று மாகாண அரசும், தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்விற்கு பாராளுமன்றத் தேர்வுக்குழவில் இணைந்து பேசவாருங்கள் என்று மத்திய அரசும் காரணங்களைக் காட்ட போகின்றன. மறுபுறத்தில் 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் என்று இந்தியா இலங்கையை வேண்டி நிற்கப் போகின்றது. இன்னொரு புறத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துங்கள் என்று மேற்குலக அரசுகளும் கூறி நிற்கும். பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குங்கள் அன்றேல் தமிழீழம் தான் முடிந்த முடிவு என்று புலம் பெயர் புலி ஆதரவாளர்கள், தமிழ் நாட்டு சீமான்களும் கூறி நிற்க இடியப்ப சிக்கலாக மாறியுள்ளது வட மாகாண ஆட்சி.

இந்த நிலமையில் முன்னாள் பிரதம நீதியரசர், இன்றைய முதல் அமைச்சர், சம்மந்தன் குழாம் எவ்வாறு காய்களை நகர்த்தப் போகின்றார்கள், வாய்ப்புக்களை பயன்படுத்தப் போகின்றார்கள் என்பது முக்கிய விடயம் ஆகின்றது. திறமையான முன்னாள் ஆட்சி அனுபவம் மிக்கவர்களை அணைத்துக்கொண்டு ஆட்சி அமைக்கும் அணுகு முறையை நல்ல சமிக்கைகளாக காட்டுவதாக ஆரம்ப நிலமை இல்லாவிட்டாலும், மத்திய மூன்றில் இரண்டு, மாகாணத்தின் மூன்றில் இரண்டைவிட பலம் வாய்ந்தது எனவே எதிர் அரசிலை நடத்தாமல் இணக்க அணுகுமுறை மூலம் நகர முற்படுவோம் என்ற சமிக்கைகளை விக்னேஸ்வரன், சம்மந்தர் காட்டியிருக்கின்றனர்.

இவர்களின் இந்த அணுகுமுறை கூட்டமைப்பிலிருக்கும் இவர்களைவிட இளமையானவர்களை சற்றே சினத்திற்குள் உள்ளாக்கி இருக்கின்றது. காரணங்களில் முக்கியமானது, மூத்தவர்கள் இருவருக்கும் இனிவரும் ஐந்தோ அதற்கு குறைந்த ஆட்சிக் காலமோதான் அரங்காடும் காலமாக இருக்கப் போகின்றது. இவர்களைவிட இளையவர்களுக்கு இன்னும் ஆகக் குறைந்தது இன்னும் ஒரு தடவையேனும் மக்களை சந்தித்து வாக்குகளைப்பெற்று நாட்காலிகளைப் பிடித்து குதியாட்டம் போடவேண்டிய ஆயுள் காலகட்டம் இருக்கின்றது. எனவே தேர்தலில் வெற்றி பெற மற்ற எதனையும் விட சுயாட்சி( தனிநாடு என்ற கோஷம் போட முடியாத நிலையில்) என்ற கோஷம் மக்களை உசுப்பேத்தும் உச்சக்கட்ட கோஷமாக இருப்பதனாலும் இதுவே இலகுவானதாகவும் இருப்பதினால் இதனைத் தூக்கிப்பிடிக்க முற்படுவர்.

1980 களில் இன்றைய இதே பிற்போக்கு தலமைகளை காட்டமாக விளாசி கட்டுரைகள் எழுதியவர்களில் முதன்மையானவர்கள் பலர் இந்த இரண்டாம் அணியில் உள்ளனர். இன்று இவர்கள் எல்லாவற்றையும் மறந்து நாற்காலிகளுக்காக, யாரை விமர்சித்தார்களோ அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு அதேபாணியில் தேர்தலில் நின்றிருக்கின்றார்கள்.

சரி தேர்தலில் வென்றாகி விட்டது. இனி என்ன மக்களுக்கு அள்ளிவீசிய வீரவசனங்களை கடாசிவிட்டாவது, நிறைவேற்றக் கூடிய விடயங்களை நிறைவேற்ற முயல வேண்டும். இதற்கு திறமையான அமைச்சரவை அமைக்கப்படவேண்டும்.  கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகள் ஒவ்வொருவரும் தமக்கு ஒரு அமைச்சர், அதுவும் பலம் மிக்க அமைச்சு என்ற பேரம் பேசல்களும் குத்து வெட்டுக்களும் நடைபெறும். சரி இதன் பின்னால் சம்மந்தனின் 'தமிழ்செல்வன்' பாணியிலான மிரட்டலுக்கு பயந்து அமைச்சர் அவை அமைந்தாலும் நிர்வாகங்களை நடத்திச் செல்ல திறமையானவர்கள் தேவையே. கட்சியையும் மாகாண அரசையும் பிரித்துப்பார்க்கும் புரிந்துணர்வும் மனப்பக்குவமும் இராஜ தந்திரமும் தேவை. மக்கள் தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்னைக்காக மாகாண அரசை அணுகும் போது இதனை திறம்பட நிர்வகிப்பவர்கள் தேவை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அர்பணிப்பு உணர்வுடனும் செயற்படும் திறமையானவர்கள் தேவை. மக்களிடன் அதிகாரத்தை கையளிக்கும் மனப் பக்குவம் உடையவர்கள் தேவை. தாம் எஜமானர்கள் என்பதைவிட மக்களே எஜமானர்கள் என்பதை ஏற்றுச் செயற்படுபவர்கள் தேவை. இது எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே. இவர்கள் கடந்து வந்த பாதைகள் கூறும் வரலாறு அவ்வாறனாதாகவே இருக்கின்றது. மந்திரிசபையும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மந்திரிசபை அமைப்பதற்கு முன்பு எழுதிய மேற்கூறிய வாசகங்கள் எமது நியாயமான சந்தேகங்களை நிறுவி நிற்கின்றது.

கூடவே 1977 தேர்தலின் பின்பு மாவட்ட சபையை ஏற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின செயற்பாடுகள் போன்று, எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட ஆரம்பித்தால். அவை இவர்கள் மீது மக்கள் வெறுப்புக் கொள்ள காரணமாக அமையும். மக்களின் இந்த வெறுப்புணர்வை திசை திருப்ப இவர்கள் மீண்டும் குறும் தேசிய வெறியை கையிலெடுக்க முற்பட்டால் இனிப் அது பிழைத்துப்போகும் என்பதே உண்மையாக அமையப் போகின்றது.

புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் மாவிலாற்றில் ஆரம்பித்து மன்னாரில் 6 மாதம் வரை தாமதிக்கப்பட்ட கால கட்டங்களில் யாரும் கிழக்கின் வீழ்ச்சி பற்றியோ அல்லது போர்நிறுத்தம் பற்றியோ பேசவில்லை. கிளிநொச்சி வீழ்ந்து விசுவமடுவில் இருதினங்களில் இலங்கை அரசபடைகள் கால்களைப் பதித்தபோதுதான் தமிழ் மக்களின் தாய்நிலம் பற்றியும் அதுவும் குறிப்பாக புதுக்குடியிருப்பு காப்பாற்றப்படவேண்டும் என்று குரல்கள் எழுப்ப தூண்டப்பட்டார்கள். அன்றே தமிழரின் தாயகம் என்பதில் கிழக்கு மாகாணம் அழிக்கப்பட்டு விட்டாலும், கிழக்கில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க முடியாமல் போனதும், இதற்கு முதன்மை வேட்பாளராக ஒரு அப்புக்காத்துவை தேடிப்பிடிக்காமல் தண்டபாணியைப் பிடித்தபோதே புரிந்து விட்டது எமது தாயகம் வடமாகாணத்தான் அதிலும் யாழ்ப்பாணம்தான் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் அடிவருடிகளும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று.

அது இன்று வடமாகாணசபைத் தேர்தலில் மூன்றில் இரண்டு, தமிழ் முதல் அமைச்சர், காணி, பொலிஸ் அதிகாரம் என்றும் யாழ்பாணத்தில் மாகாணசபை என்றதும் தமிழ் மக்களின் தாயக உணர்வு வடக்கிற்குள் மட்டும் குறுகிவிட்டது என்பது புலனாகின்றது. பருத்தித்துறையிலிருந்து அம்பாறை, சிலாபம் ஈறாக மலையகத்தையும் உள்ளடக்கி தனிநாடு என்று வரைபடம் வரைந்தாலும் வெகுகாலத்தின் முன்பேயே மலையக தமிழ் பேசும் மக்களும், வடமாகாணத்திலிருந்து விரட்டியதுடன் முஸ்லீம் சகோதரர்களும் தனிநாடு என்ற எல்லைக்கு அப்பால் விரட்டப்பட்டுவிட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள் வேண்டும். இன்று குங்குமம் பொட்டுடன் முதல் அமைச்சரின் பிரசன்னம் வடமாகாணத்தில் தமிழ் மக்கள் மட்டும்தான் தாயகப் பூமியின் மைந்தர்கள் என்பதை குறியீட்டுடன் பறைசாற்றி நிற்கின்றது. வடக்கு மட்டும் அதுவும் தமிழர்களின(மட்டும்) தாயக பூமி என்று எஞ்சியிருக்கையில்; வடக்கின் மூன்றில் இரண்டு மத்தியின் மூன்றில் இரண்டை சர்வதேச ஆதரவுடன் வென்று நிற்குமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

(Saakaran)(ஒக்ரோபர் 19, 2013)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com