Contact us at: sooddram@gmail.com

 

மழலையின் மரணம் சொல்லும் செய்தி

இனி சிரியாவின் யுத்தம் மெல்லச் சாகும்?....... சாக வேண்டும்!!

(சாகரன்)

சோவியத் யூனியன் காலத்திலிருந்து அமெரிக்காவைத் தவிர்த்து ரஷ்யாவுடன் நல்ல உறவில் இருந்து கொண்டு இருப்பதுதான் சிரியா செய்த ஒரே குற்றம். மேலும் உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய விடுதலை அமைப்புக்களுக்கு தனது தார்மீக ஆதரவை வழங்கியதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டமைப்பு நாடுகளும் கொடுத்த தண்டனை இது. தற்போதைய சிரிய அதிபர் பசீர் இன் தந்தை அசாத் காலத்திலிருந்து மனிதாபிமான அடிப்படையில் போரினால் பாதிக்கப்படும் அகதிகளுக்கு சிரியாவில் முகாங்கள் அமைத்து தமது வாழ்வைத் தொடர அனுமதித்தது தான் இவர் செய்த குற்றம். சிறப்பாக பாலஸ்தீன மக்களுக்கு இவர் செய்த, செய்து வரும் அளப்பரிய மனித நேயச் செயற்பாட்டிற்கு இஸ்ரேலும், இஸ்ரேலை தமது செல்லப் பிள்ளையாக கொண்டிருக்கும் நாடுகளும் இணைந்து கொடுக்கும் பரிசுகள் இவை.

உள்நாட்டுக் கலவரம் ஒன்றை வலிந்து எற்படுத்துவதன் மூலமே சிரிய அரசை வீழ்த்தலாம், நாசப்படுத்தலாம் என்ற இவர்களின் செயற்பாடு இன்று ஐ.எஸ் வரை தமது கட்டுக்குள் அடங்காத மதத்தை முன்னிறுத்தி தீவிரவாதத்தில் ஈடுபடும் செயற்பாடுகள் வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இன்று முடியும் நாளை முடியும் என்று காத்திருந்த சிரிய மக்கள் தாங்க முடியாத சூழலில் யுத்தம் அற்ற ஆனால் யுத்த்தை நடாத்திக் கொண்டிருக்கும் ஐரோபிய யூனியனின் நாடுகளுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர் தற்போது. போர் குறுகிய காலத்தில் முடிந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் அமெரிக்க சார்பு அற்ற அயல் நாடுகளுக்கு அகதிகளாக முதலில் இடம் பெயரந்தனர் சிரிய மக்கள். இதில் சிரியாவுடன் தரைத் தொடர்புடைய அமெரிக் சார்பு மத்தி கிழக்கு நாடுகள் சிரிய அகதிகள் யாரையும் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கவனத்தில் எடுக்க வேண்டிய ஒன்றாகும்.

தரை மார்க்க இடம் பெயர்வுகள் நீண்டகால அகதி வாழ்வுக்கு ஒத்துவரவில்லை என்ற சூழலில் கடல் மார்க்க இடம் பெயர்வுகளுக்கு தம்மை ஆள்படுத்திக் கொண்டனர் இந்த அப்பாவி மக்கள். குடல் மார்க்கமாக ஒப்பீட்டளவில் அருகில் உள்ள கறீஸ் நாடடை அடைந்து பின்பு தரை மார்க்கமாக ஹங்கேரியூடாக ஜேர்மன் போன்ற வசதி படைத்த நாடுகளில் தஞ்சம் புகுதல் என்பதே இந்த சிரிய அகதிகளின் நோக்கமாக இருந்தது. கூடவே ஒரு பகுதியனர் சற்றுத் தொலைவில் இருக்கும் இத்தாலியிற்கு கடல் மார்க்கமாக செல்லவும் முயன்றனர்.
யுத்தம் நடைபெறும் துருக்கியூடாக செல்வதைத் தவிர்த்து கடல் மார்க்கமாக கிறீஸ் ஐ அடைந்து இதனூடாக ஏனைய ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செல்லுதல் என்பதே இந்த சிரிய அகதிகளின் நோக்கமாக இருக்கின்றது.

இவர்களை ஏற்றுக் கொள்ள அனேக ஐரோப்பிய யூனியன் மனிதாபிமானிகள் தயார் இல்லை.
தற்போது ஒன்றில் போரை நிறுத்தியே ஆகவேண்டும் அன்றேல் அகதிகளை நிறுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இழப்பதற்கு உயிரைத் தவிர ஏதும் அற்ற நிலையில் இடம் பெயரும் மக்களை தமது நாடுகளில் உயிரை இழக்காமல் வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்தும் எல்லை நிலையை நோக்கி ஐரோப்பிய யூனியன் தன்னை தள்ளிக் கொண்டு வந்து விட்டது. இந்த பச்சிளம் குழந்தையின் புகைப்படச் செய்தி உலகம் எங்கும் ஏற்படுதப் போகும் அதிர்வலைகள் இதனை ஏறப்படுத்திவிடுமானால் மனித குலம் இந்த குழந்தையின் மரணத்தை கொணடாடியே தீர வேண்டும்.

ஆனால் இந்த அகதிச் சிக்கலில் அமெரிக்கா தற்போது இல்லை. எனவே இந்த யுத்தங்களை(இதற்கு ஆகாயப் பிரச்சாரம் என்று பெயர் வேறு) தலமை தாங்கும் அமெரிக்கா தனக்கு இந்த அகதிகள் பிரச்சனை நேரடியாக இல்லாதவரைக்கும் தொடர்ந்து யுத்தங்களை நடாத்திக் கொண்டே இருக்கும். ஆனால் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் நிலை அவ்வாறு இல்லை எனவே யுத்தத்தை நிறுத்தும் ஒரு பொறி முறையை இவர்கள் கண்டாகவேண்டி சூழலுக்கு இன்று தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த நிலமை மேலும் மேலும் வளர்ந்து வருகையில் ஐரோப்பி யூனியன் நர்டுகள் வேறு வழியின்றி யுத்தத்தை நிறுத்தும் ஒரு செயற்பாட்டில் இறங்கியே ஆகவேண்டியே வரும்.

வியட்நாம் போரின் போதும். சோமாலியா மீதான ஆக்கிரமிப்பின் போதும் அமெரிக்காவிற்கு அமெரிக்க மக்களாலேயே எற்பட்ட அழுத்தங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்தது போல் இன்றைய நிலையிலும் ஏற்பட்டால் ஒழிய சிரியாவில் மையம் கொண்ட மத்திய கிழக்கு யுத்தங்களை நிறுத்துதல் என்பது கடினமானதாகும். இதற்கான சூழல் ஒன்று உருவாகியுள்ளது போல் தோன்றுகின்றது. இதற்கு அமெரிக்க மக்களின் மனிதாபிமானப் பங்களிபு மிகவும் அவசியமானதாகும்

யுத்தங்கள் நிறுதப்படும் நிலை ஏற்படும் போது யுத்தங்களால் எற்பட்ட மன வடுக்களும், ரணங்களும், பௌதீக அழிவுகளும் தொடர்ந்து தாக்கங்களை ஏற்படுத்தியே வரும். வியட்நாம் போன்ற புரட்சிக்குத் தலமை தாங்கிய முற்போக்கு கட்சிகளின் ஒழுங்குபடுத்தல்கள் இந்த எண்ணை உலக நாடுகளில் பலமான நிலையில் இல்லாததினால் தொடரும் அவலங்களுக்கு மீண்டும் அந்தந்த நாடுகளின் அரசை மீண்டும் இந்த அமெரிக்காவும் இதன் அடிவருடிகளும் குறை கூற வாய்ப்புக்கள் எற்படுத்திவிடும். முழுமையாக இல்லாவிட்டாலும் யுத்தம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், ஈராக், லிபிய, எகித்து, துனீசியா போன்ற நாடுகளில் நடைபெறுவது இதுதான். இதற்கு மாறாக வறுமையான தென் அமெரிக்க நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியக் கூட்டைமைப்பின் வலிந்த யுத்தங்கள், உள்ளுர் கலவரங்களில் இருந்து மீண்டு இதன் பின்பு முன்னொக்கி இன்று நடைபோடுவதற்கு அங்கிருந்த பலமான முற்போக்கு தலமைகளே காரணம் இதனை கியூபா, நிகரகுவா, உருகுவே. போலிவியா, வெனிசுலா போன்ற நாடுகளில் காண முடியும் இது போன்றதொரு நிலை இந்த மத்திய தரைக் கடல் நாடுகளில் எற்பட வேண்டும்.

இன்று ஏற்பட்டிருக்கும் தரையால் இணைக்கப்பட்ட இந்த நாடுகளுக்கு இடையே கடல் மார்க்கமாக நடைபெறும் மனித நகர்வு இந்த பிஞ்சு குழந்தையை தாயின் மடியில் உறங்குவதற்கு பதிலாக தண்ணீரின் மேல் நிரந்தரமாக உறங்கச் செய்த செயல் இந்த யுத்தத்தை நடாத்தும் அமெரிக்க கூட்டுப்படை கொடுத்த தண்டனையாகவே பார்க்க முடியும். ஒருபுறம் சிரியா அரசுக்கு எதிராக போராடும் ஆயுதக் குழுகள், இன்னொரு புறம் ஐஎஸ் எற்ற மதத்தை முன்னிறுத்தும் தீவிரவாதக் குழுகள். தமது மக்களை காப்பாற்ற முயலும் பசீர் அரசின் செயற்பாடுகள், இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த போரை தொடங்கி வைத்து இன்று கூட்டுப்படை செயற்பாடு என்று ஆகாய மார்க்கத் தாக்குதலை நேரடியாகச் செய்யும் அமெரிக்க கூட்டமைப்பு இராணுவங்கள் என்ற பல்முனைத் தாக்குதலுக்கு பலியானதே இந்த பச்சிளம் குழந்தை.

இவற்றிற்கு அப்பால் பாலஸ்தீனத்தின் நிரந்தர அகதிகளை சிரியாவில் குறிவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் எல்லாம் சேர்ந்து கடல் பரப்பில் மிதக்க விட்டிருக்கின்றது இந்த மூன்று வயது குழந்தையை. இந்த போரை நடாத்திக் கொண்டிருக்கும் யாவரும் இந்த குழந்தையின் கொலைக்கு கூட்டுப் பொறுப்பை ஏற்றேயாகவேண்டும்.
கடல் வாழ் மீன்களுக்கு இரக்கம் இருந்திருக்க வேண்டும். இப்பிரதேசத்தில் கடலில் அமிழ்ந்து காணாமல் போன ஆயிரம் ஆயிரம் உயிர்களுக்கு மத்தியில் இந்த சிறிய குழந்தையை கரை ஒதுங்க வைத்ததற்காக. ஒரு குழந்தை ஜீவனை சர்வதேச மனித குலத்தின் முன்வைத்து இந்தப் பிரச்சனைகளை இத்தோடு நிறுத்திக் கொள்வதற்கு முன்னெடுப்பாக இது அமைய வைக்கலாம் என்ற சிந்தித்து செயற்பட்டிருப்பார்களோ? இந்த மீன் இனங்கள் என்று எண்ணத் தோன்றும் மனதைப் பிழிய வைக்கு நிகழ்வு இது.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி குரங்கில் இருந்துதான் ஏற்பட்டது என்றும் ஒருசாரரரும், இன்னொரு சாரர் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி மீன்களில் இருந்து ஆரம்பித்தது என்றும் விஞ்ஞான பூர்வமாக சொல்லி வருகின்றனர். தனது பரிணாம வளர்சியினால் உருவான மனித இனத்தின் குழந்தையின் உடலத்தை இந்த மீன்கள் காப்பாற்றி இருக்குமோ? என்று எண்ணத் தோன்றும் பேதை நிலமைக்கு என்னை தள்ளியுள்ளது. இது விஞ்ஞானபூர்வமான எனது நம்பிக்கைக்கு முரணானது என்ற போதிலும் இந்தக் கொடூரங்கள் நிறுப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே இவ்வாறு என்னை எழுதத் தூண்டியிருக்கின்றது. இந்தக் குழந்தையின் புகைப்படத்தையும் எங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களையும் பார்த்த பின்பாவது இந்த யுத்தங்களை நடத்தும் கொடூரர்கள் தம்மை மாற்றியமைத்துக் கொள்ளமாட்டார்களா? என்ற ஆதங்கம் ஏற்படுவது இயல்பானதுதானே.

இன்றைய அவசரமாக செயற்பாடுகள் அகதிகளை ஏற்றுக் கொள்ளல் என்பதற்குள் மட்டுப்படுத்தி தப்பிக்கொள்ள மனிதகுலம் முயற்சி செய்யுமாயின் இன்னும் ஆயிரம் குழந்தைகள் இந்த கடல் பரப்பின் தம்மை இழந்து தரையில் முத்தமிடும் அவலத்தை ஏற்படுத்தியே தீரும். அப்போது நாம் வெட்கித் தலைகுனிந்து நிற்கவேண்டிவரும். அகதிகள் இல்லா நிலமை ஏற்படுத்தும் யுத்தம் அற்ற சூழலை உருவாக்குவதே உடனடித் தீர்வு ஆகும். எனவே யுத்தத்தை நிறுத்தி யுத்தத்தை தவிர்க்கும் முயற்சியில் நாம் எல்லோரும் இணைந்தே செயற்படுவோம். இதுவே இந்த மழலையை நேசிக்கும் யாவரும் செய்யக் கூடிய சரியான விடயம் ஆகும்
(Saakaran)(Sep 04, 2015)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com