Contact us at: sooddram@gmail.com

 

கிழக்கு கற்றுத் தந்த பாடம்

(சாகரன்)

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுற்று தேர்தல் முடிவுகளும் வெளி வந்துவிட்டன. பல அரசியல் ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்கு ஏற்பவே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. தேர்தல் வெற்றிகளை தமதாக்கி கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிஸை{ம் இனவாதங்களை முன் நிறுத்தி தமது பிரச்சாரங்களை மேற்கொண்டன. கூடவே இலங்கை அரசின் செயற்பாட்டை விமர்சித்தும் தமது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் நம்பி தேர்தலில் இறங்கியதே அதற்கான காரணங்களில் ஒன்று. இதே போலவே முஸ்லீம் காங்கிரஸும் முஸ்லீம் மக்களின் வாக்குகளை மட்டும் நம்பி தேர்தலில் இறங்கியிருந்தமையினால் தனது இனவாத பிரச்சாரச் செயற்பாட்டை முடுகி விட்டிருந்தது. மறு புறத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணி மூவின மக்களின் வாக்குகளையும் குறி வைத்து தேர்தலில் குதித்தது. இதனால் இனவாதம் பேசுவதை தவிர்த்தே வந்தது. இதன் அர்த்தம் இலங்கை அரசு இலங்கையில் சகல இனங்களையும் சமமாக பாவித்து செயற்படும் பொறிமுறையைக் கொண்டிருக்கின்றது என்பதல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழ் முதல் அமைச்சரை பெறுவது என்று சூழுரைத்துக் கொண்டு களமாடியது. இதற்காக தன்னால் முடிந்தளவிற்கு வழமைபோல் குறும் தேசியவாதத்தை தமிழ் தேசியம் என்ற கவர்சிகரமான கோஷத்துடன் தமிழர் மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியது.

இப் பிரச்சாரத்தை இலகுவாக மேற் கொள்ளக் கூடிய சூழலை இலங்கை அரசும் வழி வகுத்துக் கொடுத்திருந்தது என்றே கூறலாம். யுத்தம் முடிவுற்று 3 வருடங்களுக்கு மேலாகியும் இலங்கையில் புரையோடிப் போய் இருக்கும் இனப் பிரிச்சனைக்கான அதிகாரப் பரவலுடன் கூடிய தீர்வினை உரிய முறையில் முன்னெடுக்வில்லை. கூடவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற சக்திகளின் பலம் தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கி இருப்பதை பார்த்துக் கொண்டது. தமிழ் மக்கள் மத்தியில் சரியான மாற்றுத் தலைமைக்கான ஊற்றுவாய்யை மறைமுகமாக அடைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வளர்த்துவிடும் இராஜதந்திரத்தை தமிழர் பிரச்சனையில் கையாண்டு வந்தது.

 மறுபுறத்தில் முஸ்லீம் காங்கிரஸ் முஸ்லீம் முதல் அமைச்சர் ஒருவரை பெறுவதற்காகதான் தாம் அரசின் பங்காளி கட்சியாக இருந்தும் தனித்து போட்டியிடுவதாக பிரகடனப்படுத்தி முஸ்லீம் மக்கள் மத்தியில் வாக்குகளை சேகரித்து வந்தது. இவர்களின் முஸ்லீம் மக்கள் மட்டும் என்ற இனவாத அணுகுமுறையை இலங்கை அரசு ஒரு வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஊக்கிவித்தது போல் செயற்பட்டு வந்தது. அண்மைக்காலமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளின் முஸ்லீம் மக்களின் மத ஸ்தலங்களை குறிவைத்து பௌத்த தீவிரவாதம் செயற்பட்டபோது அரசு இத் தீவிரவாதத்தை முளையில் கிள்ளாமல் ஒரு வகையில் மௌனம் காத்தது முஸ்லீம் காங்கிரஸ் அரசுக்கு எதிரான பிரச்சாரத்துடன் கூடிய முஸ்லீம் முதல் அமைசர் என்ற கோஷத்தை தூக்கிப் படிக்க கிழக்கில் ஏதுவாக அமைந்துவிட்டது.

எப்போதும் தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் என்ற இரு சிறுபான்மை தேசிய இனங்களும் தமக்கிடையேயான பொதுவான பிரச்சனைகளில் இணைந்து போராடாமல் இருப்பதற்கான சூழலை இலங்கை அரசுகள் ஏற்படுத்தி வந்ததைப் போல் இந்த அரசும் மேற்கொண்டு வருகின்றது. இலங்கை அரசின் விருப்புக்களை இவ்விரு கட்சிகளும் நிறைவேற்றியே வந்தன என்பதே உண்மை. தேர்தல் காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பிரதேசங்களில் புலிக் கொடியையும், பாராளுமன்றத்தில் சிங்கக் கொடியையும் எற்றி தமது கதிரை அரசியலை தொடருவர். மறு புறத்தில் முஸ்லீம் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிகளுடன் சமரசத்தில் ஈடுபட்டு இணக்க அரசியலை இலங்கை அரசுகளுடன் ஏற்படுத்தி தமது கதிரை அரசியலைத் தொடருவர். எப்படிப் பார்த்தாலும் தம்மை தமிழ். முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறும் இவர்கள் இலங்கை அரசுடன் முறையே இரகசியமாவும், பரகசியமாகவும் நல்ல உறவில் இருந்து கொண்டு தமது கதிரை அரசிலை நடத்துவர். இலங்கை அரசுகள் விரும்புவதும் இதுவே ஆகும்.

சேர். பொன் இராமநாதன் காலத்திருந்து பிரபாகரன் காலம் வரைக்கும், அதனைத் தொடர்ந்த இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரைக்கும் முஸ்லீம் மக்களையும், தமிழ் மக்களையும் இணையவிடாமல் பார்த்துக் கொண்டனர் தமிழ் மக்களின் தலைமைகள். 1917 களில் சிங்களப் பேரினவாதினால் முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்ட போது கைது செய்யப்பட்ட சிங்கள காடையர்களை விடுவிக்க பிரித்தானியாவரை பயணம் செய்து தன்னை பல்லக்கில் வைத்து சிங்களத் தலைவர்களால் காவ வைத்து மகிழ்தவர் இராமநாதன். இதேபோல் பிரபாகரன் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்களை இனச்சுத்திகரிப்பு செய்தும், கிழக்கில் இதே இனச் சுத்திகரிப்பிற்காக முஸ்லீம் மக்களை வகை தொகையில்லாமல் கொலை செய்து தம் பங்கிற்கு தமிழ் முஸ்லீம் மக்கள் இணையவிடமல் பார்த்துக் கொண்டார். அப்போது இதே சம்மந்தரின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்டாம்பி தமிழ் செல்வன் முன்னிலையில் இவற்றை கண்டிக்காமல் கை கட்டி நின்றனர்.

ஏப்படி ஐயா தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களும் தமக்கிடையேயான பொதுவான உரிமைப் பிரச்சனைக்காக இணைந்து அரசுக் கெதிராக போராட முடியும். இடையே வந்த போன ஏனைய விடுதலை அமைப்புகளும் சிறப்பாக ஈபிஆர்எல்எவ், ஈரோஸ், புளொட் போன்ற அமைப்புக்கள் தமிழ், முஸ்லீம் மக்களின் ஐக்கியத்திற்காக கொள்கை ரீதியில் ஏற்றுக் கொண்டு போராடினார்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் இவ் அமைப்புகளில் உள்ள சில தனி நபர்களின் முஸ்லீம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் எல்லா ஆயுதம் தாங்கிய ஈழவிடுதலை அமைப்புகளும் முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடாளர்கள் என்ற கருத்தியலை முஸ்லீம் மக்கள் எடுப்பதற்கு ஏதுவாக அமைந்து விட்டன என்பது கசப்பான வருத்தத்திற்குரிய விடயம்.

கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு முன்பே பொது ஜன ஐக்கிய முன்னணி கிழக்கின் முதல் அமைச்சர் பொறுப்பு அதிக விருப்பு வாக்கு பெறுபவருக்கு வழங்கப்படும் என்று கிழக்கின் மதல் அமைச்சர் தமிழர், முஸ்லீம், சிங்களவர் என்று இன அடையாளத்தை தந்திரோபாயமாக தவிர்த்திருந்து. இந்த தந்திரோபாய தவிர்ப்பு நல்ல பலனையே அதற்கு தேர்தல் முடிவில் கொடுத்திருக்கின்றது. ஆம் சிங்களவர், தமிழர், முஸ்லீம் என் முத்தரப்பினரிடமும் வாக்குளை இதனால் பொது ஜன ஐக்கிய முன்னணி பெற முடிந்தது. அரசுக்கும் தெரியும் அதிக விருப்ப வாக்கு ஒரு முஸ்லீம் மகனுக்கு வரவே வாய்ப்பு அதிகம் என்றும். கிழக்கில் தமிழ், முஸ்லீம்கள் ஜனத் தொகையில் சம அளவு விகிதாசாரத்தில்; இருக்கின்றனர். கடந்த தேர்தலில் தமிழர் ஒருவர் முதல் அமைச்சராக வருவதற்கு வாய்ப்பு அழித்தது போல் இந்த முறை ஒரு முஸ்லீமை முதலமைச்சராக ஆக்குவதே தந்தரோப ரீதியல் சரியானதே என்று இலங்கை அரசு விரும்புகின்றது. மேலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத சூழலில் தனது மத்திய அரசு பங்காளி கட்சியான முஸ்லீம் காங்கிரஸின் ஆட்சியமைக்கும் ஆதரவுக்கு நிபந்தனைகளில் ஒன்று நிச்சயம் முஸ்லீம் முதல் அமைச்சர் என்று இருக்கும் நிலையில் இதனையும் நிறைசேற்றலாம் என்ற ஒரு கல்லில் இரண்டு மாங்காய் செயற்பாட்டடை இலங்கை அரசு செய்யவே விரும்பம் கொண்டிருக்கின்றது. இதற்கான சூழல் தற்போது கனிந்து வந்துள்ளது.

தனியான அலகு, தனியாட்சி, தனிநாடு என்ற குறுகிய வட்டதிற்குள் தமிழரின் தாயகம் என்ற அரசியல் இனி கிழக்கில் மட்டும் அல்ல வடக்கு - கிழக்கிலும், ஏன் வடக்கிலும் சாத்தியம் இல்லை என்பதை உணரவேண்டும். இனியும் உணராவிட்டால் தமிழரை இலங்கையில் இல்லாமல் செய்ததில் இலங்கை பேரினவாதத்துடன் நீங்களும் இணைந்தவர்கள் ஆகிவிடுவீர்கள். கூடவே முஸ்லீம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பு அழைப்பு விடும் போது புலிகள் பாவித்த அதே 'துரோக' வார்த்தையை சம்மந்தரும் பாவிக்கின்றார் என்றார் இவர்களின் ஏகபோக சிந்தனையும் இராஜதந்திரம் அற்ற செயற்பாட்டை பார்த்துக் கொள்ளுங்களேன்.

கிழக்கு மாகாணத்தில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் அரிது. ஏனைய கட்சிகளின் சார்பில் (முன்னாள் விடுதலை அமைப்பு உறுப்பினர்கள்) போட்டியிட்டு வென்றவர்களே அதிகம். இதில் கிழக்கு மக்களும் பாரம்பரிய குறும் தேசியவாதம் பேசும் கட்சியை(இலங்கைத் தமிழரசுக் கட்சி) நிராகரிக்க தொடங்கியிருப்பதை அறிய முடிகின்றது. குறும் தேசியவாதம் பேசும் கட்சியுடன் தம்மை இனம் காட்டுவதன் மூலமே தேர்தலில் வெற்றிபெறலாம் எனத் தப்புக் கணக்கு போட்டவர்கள் இதிலிருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளவேண்டும். இனிவரும் காலங்களில் குறும் தேசியவாதிகளுடன் தம்மை இனம் காட்டாமல் ஏiனை ஜனநாயக, முற்போக்கு சக்திகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்து செயற்படுவதன் மூலம் தமிழ் மக்களுக்கான சரியான, பலமான மாற்றுத் தலைமத்துவத்தை கொடுக்க முடியும் என்று சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும். மேலும் இம் முறைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்த்து தேர்தலில் மக்களைச் சந்தித்து இருந்தால் மக்களுக்கான தலைமத்துவத்தில் சரியான நிலைப்பாட்டுடன் சில வெற்றிகளை நிலை நிறுத்திக் காட்டியிருக்க முடியும். தேவையற்ற தடுமாற்றஙகளை, பாவங்களை தவிர்த்திருக்க முடியும்.

இதேபோல் இலங்கை அரசின் மீதான திருப்தியின்மையை சந்திரகாந்தன் என்ற ஒரு தமிழ் உறுப்பினரை மட்டும் வெற்றி பெறச் செய்ததன் பேரில் தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கும் செய்தி சொல்லி அனுப்பியிருப்பதை இலங்கை அரசு புரிந்து கொண்டு செயற்படவேண்டும். தனது போனஸ் அசனத்தில் இன்னொரு தமிழ் பிரதிநிதித்துவத்தை உருவாக்கவுள்ளது நல்ல சமிக்கையாக பார்க்கலாம். இதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூடவே முன்னாள் கிழக்கு மாகாணசபை ஐ.தே. கட்சி உறுப்பினர் கிழக்கு மாகாணம் முழுவதிலும் அதிக விருப்பு வாக்குகள் பெற்றது அவரின் சிறந்த எதிர்கட்சித் தலைவரின் செயற்பாட்டிற்கு கட்சிக்கு அப்பால் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெற்ற அரசும் வெற்றி பெறவில்லை, இரண்டாம் இடத்தில் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பும் வெற்றி பெறவில்லை, மாறாக மூன்றாம் இடத்தில் ஆசனங்களைப் பெற்ற முஸ்லீம் காங்கிரசே வெற்றி பெற்றுள்ளது என்றால் மிகையானது அல்ல. (எண்ணிக்கையில் குறைவான வெற்றியைப் பெற்ற ஐதே கட்சி தோல்வி அடைந்துள்ளது.) கிழ்க்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கு மகாணத்திலும், மத்திய அரசிலும் பதவிகளைக் கொடுத்து அழைக்கும் அரசு ஒருபுறம் மறுபரறத்திலும், துரோகத்தை சுட்டிக் காட்டி வெருட்டி அழைப்புவிடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று மறு முனையிலும் 'கிங் மேக்கர்' ஆக முஸ்லீம் காங்கிரஸ் இருக்கின்றது.

இந்நிலையில் அரசியல் என்ற வியாபாரத்தில் மாகாணத்திலும் மந்திரிப் பதவி, மத்திய அரசிலும் மேலும் புதிய மந்திரிப் பதவி என்ற நிலைப்பாட்டையே முஸலீம் காங்கிரஸ் எடுக்கப்போகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன இன்றும் இணைய முடியாத நிலையில்; உறவு நிலையிலேயே முஸ்லீம் காங்கிரஸ் இருக்கின்றது. பிரச்சனைகள் இலங்கை அரசுடன் இருந்தாலும் எப்போதும் இணையும் வாய்ப்பில் இருக்கும் அரசுடன் இணைந்தே கிழக்கு மாகாணசபை அரசு அமையப் போகின்றது. இதற்கு பிரதி உபகாரமாக மத்தியிலும், மாகாண அளவிலும் முஸ்லீம் காங்கிரஸ் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு(தமிழரசுக் கட்சி) மீண்டும் பழைய குறுடி கதவைத் திறவடி என்று குறும் தேசியவாதத்தையும், முஸ்லீம்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்ற எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துக் கொள்வார்கள். மாறாக நல்ல எதிர்க் கட்சியாக (இரா. துரைரத்தினம் நீங்கலாக) செயற்படமாட்டார்கள்.

(Saakaran, Sep 15, 2012)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com