Contact us at: sooddram@gmail.com

 

தொடரும் அப்புக்காத்து அரசியல்

தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டுத்தருமா....?

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

சேர். பொன். இராமநாதன் காலம் தொடக்கம் சம்மந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலம் வரை பெரும்பான்மையான தமிழர்கள் அப்புக்காத்துகளிடம் தங்களின் தலைமையை ஒப்படைத்துவிட்டு தமக்கு விடிவு வருமா? என்று காத்திருக்கும் வரலாறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தமது பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்புவதற்காக தமிழ் மக்களிடம் 'ஆணை' கேட்டுக் கொண்டு தேர்தலில் குதிப்பது இனவாத தமிழ்த் தலைமைகளின் வழமையாகிவிட்டது. தமிழ் மக்களும் தமது பெரும்பான்மையான வாக்குகளை இவர்களுக்கே அளித்து ஆணையை வழங்குவர். இவர்கள் 'ஆணையைப் பெற்றுக் கொண்டு சென்று (ஐக்கிய தேசியக் கட்சி) ஆனையிடம்' சரணடைந்தமையே வரலாறு. அரசியற் தீர்வுகள்தான் கிடைத்தபாடில்லை. 'ஆனை'யும் 'தமிழ் மக்களின் நண்பேன்டா' என்று கூறிக் கொண்டே தன்பாட்டிற்கு அவ்வப்போது கலவரங்களை நடத்தி முடித்ததுதான் கடந்த காலங்களில் நடந்தவை. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக 'ஆனை' தனது சவாரியை செய்ய முடியாவிட்டாலும் அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய குழாத்தின் அபிலாசைகளுக்கு தரகு ஏஜண்டுகளாக தமது கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இராணியின் நம்பிக்கைகுரிய அப்புக்காத்து இராமநாதன் கரங்களில் இருந்து இராணி அப்புக்காத்து பொன்னம்பலத்தார் கரத்திற்கு தமிழ்த் தலைமை மாறியது. பின்பு பொன்னம்பலத்தார் துரோகியாக்கப்பட்டு அப்புக்காத்து செல்வநாயகம் கரத்திற்கு மாறியது தமிழ் மக்களின் தலைவிதி. இந்த மூன்று தலைமை அப்புக்காத்துக்களும் தமிழ் மக்களின் உரிமைகளை கூட்டுச்சேர்ந்து காட்டிக்கொடுத்தனர். இதனால் தமிழ் மக்களிடம் அம்பலப்பட்ட பெரும் புள்ளிகள் பலர் 1970 களில் பாராளுமன்றத் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். இப்படியே போனால் எங்கள் யாபேரையும் மக்கள் காலி பண்ணிவிடுவார்கள் என்று அஞ்சிய இவர்கள் கூடிச்சேர்ந்து 'தனி நாடு' என்று மக்களிடம் ஆணையைக் கேட்டு தேர்தலில் நின்றனர். அப்புக்காத்து அமிர்தலிங்கங்களும் அமோக வெற்றியை ஈட்டினர்.

வழமை போல் 'ஆணை'யை மறந்து 'ஆனை'யிடம் மண்டியிட்டு மாவட்ட சபையை ஏற்றனர். இவர்களின் வேகம் காணாது என்று இவர்களால் உசுப்பேத்தப்பட்ட இளைஞர்களும் ஆயுதத்தை தூக்கி இவர்களுக்கு துரோகிகள் பட்டத்தைச் சூட்டினர்;. தொடர்ந்து மக்களை நம்பி மக்களை அணி திரட்டிய போராளிகள் பிரபாகரன் என்ற 'மேதகு'வினால்; துரோகிகளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து 'தேசியத் தலைவர்' என்று தனக்கு தானே பட்டத்தைச் சூட்டி தமிழ் மக்களை ஏதேச்சாதிகாரமாக சிறைப்பிடித்து போர் முனையின் முன்னரங்கத்தில் பலியிட்டார். எஞ்சியவர்கள்; முள்ளிவாய்கால் வரை சாய்த்துச் செல்லப்பட்டு பலிகொடுக்கப்பட்டு தானும் உடுக்க உடையின்றி அழிந்து போனார் 'மேதகு' பிரபாகரன். அழிவுடன் அது முடிவுற மீண்டும் எழுந்தது சம்மந்தன், சுமந்திரன் என்ற அப்புக்காத்து அரசியல்.

இறுதியாக வடபகுதியின் மணம் கூடத் தெரியாத கொழும்பு கறுவாக் காட்டு அப்புக்காத்து தரகரை தேடிப்பிடித்துக்கொண்டு வந்து முதல் அமைச்சருக்கான வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். அதற்குக் கூறுகிற காரணம் அவர் 'பென்னம் பெரிய' நீதவானாக இருந்தவராம். ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனோடு பேசுமளவுக்கு ஆங்கிலம் தெரிந்தவராம். மாகாணசபையின் முதலமைச்சருக்கு அப்படியான படிப்புத் தகுதியும், ஆங்கிலப் புலமையும் உள்ளவர்தான் சரியென்றால் இந்தத் தீவிரத்தை இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது ஏன் காட்டவில்லை என்பதை இங்கு நாம் கவனத்திற் கொள்ளல் வேண்டும். கிழக்கு மாகாண மக்களின் சபைக்கு வெறும் ஒரு வாத்தியார் அறிவு மட்டும் போதும் என்று கணக்குப் போட்டார்களா?.

இதேவேளை தமிழர்கள் மத்தியில் நிலவும் போலி வேடதாரித்தனங்களையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கேட்டு பக்கத்தில் வந்து 'நல்லாத்தான் இருக்குது சரியாகத்தான் சொல்கிறீர்கள்' என்று இரகசியமாகச் சொன்னாலும் பிறகு தேர்தல் என்று வந்தவுடன் நித்திரையால் எழும்பினாலும் விளிக்காமலே போய் பாழ் கிணற்றில் விழுபவனைப் போல 'போடு புள்ளடியை வீட்டுக்கு நேரே' என்று தமது தேசியக் கடமையை நிறைவேற்றி மீண்டுமொரு ஆணையை கூட்டமைப்புக்கு வழங்கவே செய்வர். இப்படித்தான் கண்மூடித்தனமாகப் போய் முள்ளிவாய்க்காலில் அவலப்பட வேண்டியேற்பட்டது என்பதைப் புலம்பினாலும் அந்த அனுபவங்களை விரைவாகவே மறந்து மீண்டும் ஒரு முள்ளிவாய்காலை நோக்கி அழைத்துச் செல்லும் கூட்டமைப்புக்காரர்களுக்கு நிபந்தனையற்ற ரீதியில் ஆதரவு வழங்கத் தயாராகவே உள்ளனர்.

தமிழர்களின் ஏமாளித்தனங்களை நன்கு புரிந்து கொண்டுள்ள கூட்டமைப்புக்காரர்களுக்கு பாராளுமன்றக் கதிரைகள் பரம்பரரைச் சொத்தாக ஆகிவிட்டது. வாரிசு அரசியலையும் தொடருகின்றனர். தமது பெண்டிர், பிள்ளைகளை பணக்கார வெளிநாடுகளிலும், கறுவாக்காட்டிலும் சுகமாக வாழவைத்துக் கொள்கின்றனர். அதற்குத் தேவையான உதவிகளையும், சலுகைகளையும் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பின்கதவால் சென்று சந்தித்து எந்த வெட்கமுமில்லாமல் பெற்றுக் கொள்கின்றனர்.  வடக்கில் தமிழ் மக்கள் மத்தியில் மாவீரர்களாக அரசுக்கு எதிரான சவால்களை விட்டு புலிக் கொடி ஏந்துவதிலும், தெற்கின் கொல்லைப் புறங்களில் தமது சுயநல தேவைகளுக்காக சிங்கக் கொடி பிடிப்பதலும் இவர்கள் மகாவல்லவர்.

இதேவேளை கூட்டமைப்பை தமிழ் மக்கள் மத்தியில் விரட்டும் வல்லமை கொண்ட முற்போக்கான மாற்றுக் கருத்தாளர்களின் அணியையோ, அரசியல் இயக்கத்தையோ காணமுடியவில்லை. தமக்கிடையே ஜனநாயக அடிப்படையில் ஒரு பரந்துபட்ட மக்கள் இயக்கமொன்றைக் கட்டியமைப்பதில் அக்கறை கொண்ட செயற்பாட்டாளர்கள் தமிழ் மக்கள் மத்தியில் அரிதாகவே உள்ளனர். ஆங்காங்கே சபைகள் கிடைக்கையில் முற்போக்கான, மாற்றுக் கருத்துக்களை முழங்கும் பல தமிழர்கள் உள்ளனர். இவர்களும் தேர்தல் பந்தயத்தில் வெல்லும் குதிரையில் காசு கட்டத் தயாராக உள்ளவர்களாகவே இருக்கின்றனர். தாமும் களத்தில் இறங்கி சரியான குதிரைகளை வலுவாக ஓட வைக்கும் கடமைக்குத் தயாராக இல்லை. அதற்கு நொண்டிச் சாட்டாக சேறுபடியாத புரட்சிக் குதிரைகளைத் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். இதனாற்தான் தமிழர்கள் மத்தியில் கடந்த 80 வருடகால தேர்தல் அரசியலானது உயர்சாதி வெள்ளாள அப்புக்காத்துகளின் தலைமைகளைக் கொண்டதாகவே சுழற்சியில் நடைபெற்றுவருகிறது. 1980க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தப் போக்கை மாற்றி ஒரு முற்போக்கான அரசியல் வளர்வதற்கான அத்திவாரததை இடும் நோக்கில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது வெற்றியளிக்காமற் போனதே உண்மை.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்

முப்பது வருடகாலத்து ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களை அரசியல் வியாபாரம் ஆக்கும் கூட்டமைப்பை இன்று நிறைத்து நிற்பவர்கள் எந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் நலன்களுக்காக ஒரு சிறு கல்லைக்கூட நகர்த்தாத அல்லது தம்மை எந்தவகையிலும் அந்தப் போராட்டக் களங்களில் அடையாளப்படுத்திக் கொள்ளாத அப்புக்காத்துக்களுக்கெல்லாம் அப்புக்காத்தான விக்னேஸ்வரனை தற்போது எமது புதிய 'தேசியத் தலைவராக' தமிழ் மக்கள் மத்தியில் நிறுத்தியுள்ளனர். இலங்கை அரச துறையில் உயர்பதவி வகித்த இவர் தனது பதவிக்காலத்தில் தமிழ் மக்களுக்கான நீதி எதனையும் வழங்க முயற்சிக்காது, ஏன் இலங்கை மக்களுக்கு பொதுவாக என்று கூட நீதித்துறையில் எதனையும் சாதிக்காத இவர் மற்றொரு அப்புக்காத்துக்கெல்லாம் அப்புக்காத்தாக இருந்த சிவா பசுபதி இளைப்பாறிய பின் தமிழீழம் பேசியது போலவே இன்று தமிழ் மக்களின் தலைவராக மாறியுள்ளார். அந்த சிவா பசுபதியானவர் இப்போது அவுஸ்திரேலியாவில் தமது கடைசிக் காலத்தைக் கழித்துக் கொண்டு தமிழீழத்துக்கான சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறார். சிலவேளை அவர் தற்போதும் கொழும்பில் வாழ்க்கையை தொடர்ந்திருப்பாரேயானால் அவருக்கே இந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கும். யாராயிருந்தாலும் இப்படியான அரை முதுகெலும்பு கொண்ட அப்புக்காத்துகளின் தலைமைகளினால் தமிழ் மக்களுக்கு எந்த பிரயோசனமும் ஏற்படப்போவது இல்லை. இவ்வாறானவர்களின் சட்ட அறிவும், ஆங்கிலப் புலமையும், சிங்களப் பாண்டித்தியமும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்குப் பயன்படப் போவதில்லை. அதிலும் இவர்கள் பதவியில் ஒட்டியிருந்தவரை இலங்கையை ஆண்ட பேரினவாத அரசுகளுக்கு விசுவாசமாக வால் பிடித்து வாழ்ந்துவிட்டு இப்போது மக்களின் மீட்போனாக தம்மைக் காட்டிக்கொண்டு புறப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் தலைமைப் பொறுப்பை இப்படிப்பட்டவர்கள் தமது ஓய்வுகால பொழுதுகளைப் போக்குவதற்கான களியாட்ட விடயமாக்க அனுமதிக்கக்கூடாது. அது இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தை இன்னுமொரு நூறு வருடகாலத்துக்கு பின்தள்ளிவிடும்.

(இக்கட்டுரை கனடாவில் வெளிவரும் பூபாளம் என்ற பத்திரிகையில் செப்ரம்பர் மாதம் 15ம் திகதி இதழில் வெளியானது.) நன்றி: பூபாளம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com