Contact us at: sooddram@gmail.com

 

யாழ்பாணத்தில்

கேவலப்பட்டு, கேலியாக்கப்படும் கூட்டமைப்பின் மே தினம்

(சாகரன்)

தொழிலாள வர்க்கம் தமது உரிமைகளை நிலை நாட்டுவதற்காக 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எட்டு மணி நேர வேலை என ஆரம்பித்த போராட நிகழ்வு நாள் மேதினம் ஆகும். இது நாளடைவில் ஸ்தாபன மயப்படுத்தப்பட்டு உலம் பூராகவும் இன்று தொழிலாளர்களின் எழுச்சி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தொழிலாள வர்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தில் விளைவாக 2ம் உலகப் போராட்ட காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வர்க்கப் புரட்சிகள் ஏற்பட்டு அந்நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கி நகர முற்பட்டதும் வரலாறுகள். இதன் தொடர்ச்சியாக 1950 களில் கியூபா, வியட்னாம் போன்ற நாடுகளில் தொழிலாள வர்க்கத்த தலைமையில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான தேச விடுதலைப் போராட்டங்கள் முன்னெடுகப்பட்டு வெறற்றி கொண்டதும் வரலாறு.

இவ் வெற்றிகளை இன்றுவரை முதலாளித்து ஏகாதிபத்தியங்களால் இன்றுவரை தோற்கடிக்க முடியவில்லை என்பதுவும் வரலாறு. இதன் தொடர்சியாக 1970 இல் ஆரம்பித்து இன்றுவரை தென் அமெரிக்க நாடுகளில் நடைபெற்றுவரும் தொழிலாளி வர்கங்கத் தலைமையில் நடைபெறும் போராட்டங்களும் இதனால் விளைந்த முற்போக்கு அரசுகளும் வெனிசுலா, நிக்கரகுவா, ஆஜன்ரீனா, பிரேசில் போன்ற நாடுகளில் தொழிவாள வரக்;கம சார்ந்த அரசுகள் அமைக்கப்பட்டன. இவை தமது முதலாளித்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியபடியே தமது உழைக்கும் வர்க்கம் சார்பான அரசுகளை வெற்றிகரமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் மே 1 இல் உருவாக்கப்பட்ட தொழிலாளர் எழுச்சி நாள் என்ற விதையில் விளைந்த தோப்புக்கள்; என்றால் மிகையாகாது.

அதேவேளை கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மேற்கு ஆபிரிக்க, அரேபிய நாடுகளில் நடைபெற்றுவரும் மக்களின் கிளர்ச்சிகள் தொழிலாள வர்கத் தலைமையில் நடைபெறமலும் பொதுவாக தலைமை ஏதும் இல்லாமலும் நடைபெறுகின்றன என்று கூறுவதே சரியானது. நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் டாலர்களின் கையரியங்களினால் பிழையான வழிகளில் திசை திருப்பப்பட்டு மீண்டு ஒரு ஏகாதிபத்திய ஆதரவு அரசுகளை அங்கு நிறுவுவதற்குரிய முஸ்தீபுக்களே நடைபெற்று வருகின்றன. இது தொழில் உரிமை மறுக்கப்பட்டு தற்கொலையொன்றினால் பற்றிக் கொண்ட மக்கள் போராட்ட துனீசியாவுக்கும் பொருந்தும் எகிப்திற்கும் பொருந்தும், 1985 மேற்குலகின் முதலீடுகளுக்கு திறந்து விடப்பட்டதனால் உள்புகுந்த கறையான்களால் அரித்தெடுக்கப்பட்ட கேணல் கடாபியின் லிபியாவிற்கும் பொருந்தும், ஏன் மியன்மாருக்கும் பொருந்தும். இவற்றில் இருந்து விடுபட்டு மக்கள் நலன்சார்ந்த அரசுகள் அமைக்கப்பட வேண்டின் இங்கு நடைபெற்ற நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மக்களி; எழுச்சிகள் தொழிலாள வர்கத்தின் தலைமையில் நடை பெற்றிருக்க வேண்டும், நடைபெற வேண்டும் இப்படியான தொழிலாள வர்க்கத் தலைமைகளுக்க வித்திட்டது மேதின எழுச்சி என்று கூறினால் மிகையாகாது.

இதே போலவே இன்று அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் 'கைப்பற்றுவோம்' போராட்டங்களுகு தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் நடைபெற வேண்டும். இதன் அர்த்தம் மக்களின் இயல்பான எழுச்சி பிழையானது என்பது அல்ல. மாறாக ஸ்தான மயப்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் இப்போராட்டங்கள் நடைபெற்றால் மாத்திரமே இப் போராட்டங்கள் மக்கள் நலன் சார்ந்து வெற்றி பெற வாய்புக்கள் அதிகம். அன்றேல் மீண்டும் முதலாளித்துவத்தினால் இப் போராட்டங்கள,; போராட்டங்களுக்கு ஆதரவு என்ற தளத்திலிருந்து முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களினால் விலைக்கு வாங்கப்பட்டு மீண்டும் அதே குட்டைகுள் வீழ்ந்துவிடும் அபாயம் உண்டு.

சோவியத் யூனியனின் உடைவுக்கு பின்னராக முன்பை போல் உழைக்கு மக்களின் எழுச்சி மிக்க மேதின நிகழ்வுகள் நடைபெறுவது குறைந்து வருகின்றன. இதனை ஐரோப்பிய வளர்முக நாடுகளில் மட்டும் அல்ல மூன்றாம் உலக நாடுகளில் கூட காணலாம். திறந்த பொருளாதாரக் கொள்க(ள), தாராளமயமாக்கல் போன்ற ஏகாதிபத்தியங்களின் பசப்பு வார்த்தைகள் உழைக்கும் வர்க்கத்தை ஐக்கியப்பட்டு விடாமல் தடுத்து நிறுத்துகின்றன. முதலாளித்துவத்தின் தொழிலாளிகளின் நலன்களை தனித்தனியாக கையாளுதல் என்ற நரி வேலையினால் தொழிலாளர்கள் ஐக்கப்பட்டுவிடாமல் தடுத்து நிறுத்தும் வேலைகளை அரசு யந்திரங்கள் தொழிலாளர் நலன் சட்டங்கள் மூலம் செய்கின்றன.

பல்லன மக்கள் வாழும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மக்களிடையே இனவெறி மத வெறிகளை ஊட்டி உழைக்கும் மக்களை ஐக்கிப்பட விடாமல் செய்கின்றன. இதனையே இலங்கையில் நாம் இன்று காணுகின்றோம். மலைக மக்களை அணிதிரட்டி அவர்களுடன் இணைந்து போராடாத வரைக்கும் இலங்கையில் நடைபெறும் எந்தப் போராட்டமும் வெற்றி பெறப்போவது இல்லை. இது இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கிடையான தேசிய இனப்பிரச்சனையாக இருந்தாலும் பொருந்தும், அல்லது இலங்கை முழுவதிற்கான ஜனநாயக சோசலிச புரட்சிக்கும் பொருந்தும்.

இம் மக்களை அணிதிரட்டி போராடுவதை யாரும் கடந்த 60 வருட காலப் போராட்டத்தில் பெரிய அளவில் செய்யவில்லை என்பது கசப்பான உண்மை. பாரம் பரிய இடதுசாரிகளும், ஈழவிடுதலை அமைப்புக்களில் சிலவும் இதற்கான சில முன்னெடுப்புக்களை முன்னெடுத்கனர் என்பதுவும் இங்கு நினைவு கூரத்தக்கது. ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டத்தில் மலையக தொழிலாளர்கள் சங்கங்கள், கட்சிகளைத் தவிர்ந்த வடக்கு கிழக்கு சிறுபான்மையினரின் கட்சிகள் இயக்கங்கள் இணைந்து செயற்படவில்லை என்பது வேதனைக்குரியது.

இன்று யாழ்பாணத்தில் நடைபெறும் மேதிக் கூட்டத்தில் தொழிலாள விரோத ஐதே கட்சியுடன் கை கோர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது. 1977 இல் இலங்கையில் பலமிக்கதாக இருந்து தொழிற்சங்க இயக்கத்தின் வேலை நிறுத்தத்தை, வேலையை பறித்து பட்டினிச்சாவால் தொழிலாளர்களை கொலை செய்த ஐதேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களின் அழிவுகளுக்கு பெரும் பங்காற்றிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்காக தலையால் நடந்து பிரசாரம் செய்து தமது எகாதிப்பத்திய விசுவாசங்களை காட்டி நின்ற சுரேஸ் பிரேமசந்திரன், சம்மந்தன், மாவை சேனாதிராஜ, சுமந்தின் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு 'துரோணர்கள்' அதன் பரிசாக அமெரிக்க அரசின் விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதையும் யாவரும் அறிவோம்.

மீண்டும் சிங்களப் பிரதேசங்களில் குறிப்பாக கொழும்பிலும் கூட்டத்தை கூட்ட முடியாது என அறிந்த யாழ்பாணத்ததை 1981 களில் எரித்த ஐதே கட்சி யாழ்பாணத்தில் மேதினத்தை கூட்டத்தில் இணைந்து செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் குறும் தேசியத்தின் பெயரால் தாம் விபச்சாரத்தில் ஈடுபட மக்களைப் பலிக்கடாவாக்கியிருக்கின்றது.

உண்மையில் தமிழ் மக்களின் நலன்களில் ஐ.தே. கட்சிக்கு அக்கறை இருந்திருக்குமானால் மேதின நிகழ்வுகளை சிங்கள மக்கள. அதிகம் வாழும் பிரதேசம் ஒன்றில் நடாத்தி அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் கலந்து கொள்ளச் செய்திருக்க வேண்டும். இவ் மேதினக் கூட்டத்தில் தமிழ் மக்களின் தேசி இனப் பிரச்னைக்கான தமது ஆதரவுகளையும், நியாயத் தன்மையையும், தீர்வுத் திட்டத்தையும(அப்படியொன்று இவர்களிடமோ அல்லது ஜேவிபியிடமோ தமிழ் தேசியக் கூட்டமைப்படமோ இருப்பதாக அறிய முடியவில்லை) வைத்திருக்க வேண்டும். இதில் சிங்களம் நன்றாக பேசத் தெரிந்த வக்கீல் சுமந்திரனை போன்றவர்களை தமிழ் மக்கள் சார்பில் பேச வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் சிங்கள மக்களுக்கு, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்திற்கான ஆதரவுத் தளத்தை உருவாக்க முயலவேண்டும்.

இதனை விடுத்து இலங்கையின் பெரும் தேசிய வாதம் தமிழ் மக்களிடம் உள்ள குறும் தேசியவாத்த்துடன் குளிர் காய நினைத்து மீண்டும் தாம் தமிழ் மக்களின் நண்பன் என்பதற்கான சான்றிதள்களை ஐதே கட்சி பெற்றுக் கொள்ள முயலும் முயற்சியே யாழ்ப்பாணத்து கூட்டமைப்பு மேதினம் ஆகும்.

1977 , 1983 போன்ற தமிழ் மக்களுக்கெதிரான இனக்கலவரங்களையும் நடாத்தி, யாழ்ப்பாண நூலகத்தை எரித்தும் வெலிக்கடை படு கொலைகளையும் செய்த கண்டியாத்திரை செய்த மன்னன் ஐதே கட்சியுடன் மே தினக் கூட்டாம். சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த நல் அரசியல் தீர்வுத் திட்டத்தை ஐதே கட்சியுடன் சேர்ந்து தீயிட்டுக் கொழுத்திய சம்மந்தனின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் செல்வநாயகம் காலத்திருந்து தமது ஏகாதிப்பத்திய நலன் சார்ந்த ஐதே கட்சியுடனான நட்பை, உறவை தமிழ் மக்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்ட முயலும் செயற்பாடாவே யாழ்பாணத்தில் ஐதே கட்சியுடன் இணைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின களியாட்ட விழாவை பார்க்க முடியும்.

மே 18 2009 இற்கு பின்னர் ஏற்பட்டுள்ள யுத்தமற்ற ஜனநாயக? இடைவெளிகளை எமக்கு சாதமாக பயன்படுத்தி இலங்கையில் சிறப்பாக தமிழ் பிரதேசங்கள் எங்கும் முற்போக்கு. ஜனநாயக, சமாதான சக்திகளுடன் இணைந்து மக்களை அணிதிரட்டி அவர்களின் அன்றாட பிரச்னைகளுடாக போராட்டங்களை நடாத்தி பலமடைய வேண்டும். மாறாக யாராவது குறும்தேசியவாதத்தை கையில் எடுத்து பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்ப முயன்றால் பொன்னம்பலத்தின் இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்து பிரிந்து 'முற்போக்கான' கோஷங்களுடன்  ஆரம்பிக்கப்பட்ட செல்வநாயகத்தின் இலங்கை தமிழரசுக் கட்சியின் படு பிற்போக்குத்தனமான குறும் தேசியவாத்திற்குள் விழுந்து மீண்டும் பாராளுமன்ற நாற்காலிகளுக்காக ஒரு வட்டுக் கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி ஆயுதம் தாங்கிய குழுக்களிடம் தம்மை பறி கொடுத்து முள்ளிவாய்காலில் ஒரு மிருகத்தினால் சிறை பிடிகப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு இன்னொரு மிருகத்தினால் கொல்லப்பட்ட முள்ளிவாய்கால் நிகழ்வுகளுக்கு துணைபோனவர்கள் ஆவீர்கள் என்பதை வரலாற்றால் மீண்டும் மாற்ற முடியாமல் போய்விடும்.

1977 இலங்கையில் எழுதுவினைஞர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், தபால் தந்தி ஊழியர்சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கம் போன்ற நாடுதழுவிய தொழில் சங்கங்களை இல்லாமல் செய்ய ஜேஆர் கை கொண்ட வேலை பறிப்பு செயற்பாட்டுடன் கூடிய ஐதே கட்சியின் தொழிற் சங்(சிங்கள மக்களுக்கானதாக மட்டும திட்டமிட்டு உருவாக்கப்பட்ட) அங்குரார்பண செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மகாசிவம் தலைமையிலான தமிழ் ஆசிரியர் சங்கம் அமைக்கப்பட்டதை நாம் இங்கு நினைவு கூர்வது சாலச் சிறந்தது. இவ்விடத்தில் பேரினவாதமும், குறும் தமிழ் தேசியவாதம் பல்லின உழைக்கும் மக்களை இணைய வாய்ப்புக்களை அறவே மூடிய செயற்பாட்டில் கைகோர்த்து செயற்பட்டதையே பார்க்க முடிகின்றது.

இன்றும் தொழிலாள விரோத செயற்பாடாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜதே சட்சியின் இணைந்த யாழ் மேதின களியாட்டம் இவற்றைவே அறுவடை செய் காத்து நிற்கின்றது. இவற்றையெல்லாம் இலங்கை வாழ் மக்கள் சிறப்பாக தமிழ் பேசும் மக்கள் முறியடித்து சரியான திசை வழியில் பயணிப்பதற்கு சகல ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் ஜக்கியப்பட்டு செயற்பட்டு இலங்கையில் சகல மக்களும் சமாதான சம, சகவாழ்வு வாழ்வதற்கு இந்த மேதினத்தில் திடசங்கற்பம் பூணுவோம். வரலாறு பின்னோக்கி நகர்வதில்லை என்பது நிக்கரகுவா புரட்சித்தலைவர் டானியல் ஒடேக்காவின் வாழும் தலைமை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

(சாகரன்) (மே 01இ 2012)

(Saakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com