Contact us at: sooddram@gmail.com

 

என் மனவலையிலிருந்து.....

மே தினத்தில் உறுதி மொழி எடுப்போம்!

இன்று மே தினம் உலகெங்கும் உழைத்துவாழும் உழைப்பாளருக்காக குறியீட்டு ரீதியாக காணப்பட்ட தினமாக இது இன்று இருந்து வருகின்றது. 8 மணித்தியாலத்திற்கு அதிகமாக வேலை வாங்கப்பட்டு அடிமைகள் போல் நடாத்தப்பட்ட உழைப்பாளிகள் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஒன்று கூடி தமது நியாமான உரிமைகளை வேண்டி போராட ஆரம்பித்ததன் வெளிப்பாடக இத்தினம் உழைப்பாளிகள் தினமாக சர்தேசம் எங்கும் ஏற்றுக்கொள்ளபட்டு இன்று வரை செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 20; நூற்றாண்டில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுகளுக்கான போராட்டத்திற்கு கூடி போராடும் பலமான தினமாக பரிணாமம் பெற்று பல பாட்டாளி வர்க்க புரட்சிகளை பல்வேறு நாடுகளில் மாக்ஸ், ஏங்கல்ஸ், லெனின் காட்டிய வழிகளில் வெற்றியீட்டியதே வரலாறு.

இந்த உழைப்பாளிகளின் ஆட்சி அதிகாரத்தை விரும்பாத முதலாளித்துவம் இதனை இல்லாது ஒழிக்க லேபர் டே (Labour Day) என்று ஒரு மாற்றுத் தினத்தை உருவாக்கி தொழிலாளர்களிடையே பாரிய பிளவை ஏற்படுத்த முயன்று இதில் தற்காலிக வெற்றிகளையும் கண்டு வந்திருக்கின்றனர். கூடவே நவீன முதலாளித்துவத்தின் செயற்பாடுகளாக பல்தேசியக் கம்பனிகளை வேலை வாய்ப்பு என்று விஷத்தில் நஞ்சு பூசிய இனிப்பைக் காட்டி குறைந்த ஊதியம் வழங்கும் வறிய மூன்றாம் உலக தொழிலாளர் வழங்களை தமது நாடுகளுக்கு அகதிகள் என்ற முத்திரையில் இறக்குமதி செய்து வருகின்றது நவீன முதலாளித்துவம். மேலும் இன்னொரு வடிவமாக மூன்றாம் உலக நாடுகளில் தமது நிறுவனங்களை நேரடியாகவும், மறைமுகமாவும் (Virtual Office) நிறுவி குறைந்த ஊதியத்திற்கு உழைப்புக்களை சுரண்டி வருகின்றனர்.

இதற்கு இந்த மூன்றாம் உலக நாட்டு வேலையாட்கள் ஒரு நாளுக்கு நேரடியாக 12 மணி நேரத்திற்கு மேலாகவும் மறைமுகமாக மேலும் 4 மணக்கு அதிகமாகவும் வெறும் 8 மணி நேர ஊதியத்துடன் உழைக்க வேண்டியுள்ளது. இதற்கு மூன்றாம் உலக நாடுகளில் தலைவிரித்தாடும் வறுமைகளும். ஆட்சியில் இருக்கும் அரசுகளின் ஊழல் ஆட்சிகளும் சாதகமாக அமைகின்றது. உள்ளுரில் செயற்படும் இவர்களின் ஏஜன்டு குறுகிய காலத்தில் நவீன முதலாளித்துவம் பல் தேசியக் கம்பனிகள் மூலம் தமது சித்து வேலையை செய்து முடிப்பதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன. தொழிலாளர்களை மட்டும் அல்ல மனிதர்களையும் தனித்தனியாக இணையவிடாமல் செய்யப்படும் 'ஜனநாயகத்தை' இந்த நவீன முதலாளித்துவம் தனி மனித சுதந்திரம், தனித்துவம(Privacy) என பூச்சாண்டி காட்டி ஒரு குடுப்பத்தில் கணவன், மனைவி இடையேயே நிலவி வந்த கூட்டுக் குடும்ப முறமையை உடைத்தெறிந்து ஒரு குடும்பத்திற்குள்ளேயே ஒவ்வொருவரும் தனியானவர்கள் என்ற மாயை ஏற்படுத்த முயன்று வருகின்றது.

ஐக்கியம் என்பது முதலில் குடும்பத்திற்குள் கூட்டுக் குடும்பம் என்ற ஆதாரத்துடன் உருவாகி அது சமூகமாக உருவெடுத்து பின்பு பிரதேசங்களாகவும், தேசங்களாகவும், தேசியங்களாகவும், மனித் குலமாக ஐக்கியப்பட்டு, பலப்பட்டு உரிமைகளுக்காக ஒருமித்த குரலில் குரல் கொடுப்பதைத் தடுக்கும் செயற்பாடாக நவீன முதலாளித்துவம் இதனை செய்து வருகின்றது. இப்படி செய்து வருபவர்களே இன்று தமது வயதான காலத்தில் குடும்பங்கள் அன்புகள் இன்றி தனி மனிதர்காளாக பாரமரிப்பு இல்லங்களில் தனிமையில் வாடி உயிர் இழக்கும் அவல நிலயிற்கு தள்ளப்பட்டிருப்பதுதான் அந்தோ பரிதாபம். இலங்கையில் போருக்கு பின்னரான நிலமைகள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் விட்டுச் சென்ற சோம்பலான உழைக்கும் வலுவை உடல், உள ரீதியில் இழந்து நிற்கும் ஒரு உழைக்கும் மக்களை பெருவாரியாக விட்டு சென்றிருக்கின்றது. இந்த உழைக்கும் சக்திகள் இதிலிருந்து மீண்டு வருவதற்கான உடல், உள வளர்ச்சிக்கான ஆதாரங்களை, ஆலோசனைகளை தாயக மக்களுக்கு வழங்க வேண்டிய அவசியத்தில் இன்று நாம் இருக்கின்றோம்.

இதுவே போரினால் வலு இழந்த தாயக மக்களுக்கு நாம் இன்று ஆற்றவேண்டிய அவசியமானதும், அவசரமானதும் செயற்பாடுகள் ஆகும். ஒரு பலம் மிக்க சமூக அமைப்பை, இனக் குழுமத்தை, தேசிய இனத்தை மீள் கட்டமைக்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதன் மூலமே நாம் அடுத்த கட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்கள் நகர முடியும் மாறாக உசுப்பேத்தும் அரசியலும், வெருட்டி பணிய வைக்கும் செயற்பாடுகளும் எம்மை முன்னோக்கி நகர்த்தப் போவது இல்லை. ஒரு பலம் மிக்க சமூகத்தை கட்டியமைக்கும் முன்னெடுப்புகளில் நாம் ஈடுபடுவோம் என்று இந்த மே தினத்தில் நாம் உறுதி எடுப்போம். இதற்கான வலுவான செயற்பாட்டில் உள்நாட்டில் இலங்கைவாழ் அனைத்து சமூகங்களின் உழைப்பாளி மக்களுடனும் இணைந்து போராடுவோம். இதன் தொடர்சியாக உலக தொழிலாளர்களுடன் இணைந்து உரிமைகளுக்காக போராடுவோம்.

(சாகரன்) (மே 01, 2014)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com