Contact us at: sooddram@gmail.com

 

என் மனவலையிலிருந்து...........!

எனது அம்மாக்கள்.......!

(சாகரன்)
நவீன முதலாளித்துவத்தில் வியாபார நோக்கோடு செயற்கையாக உருவாக்கப்பட்ட தினங்களில் ஒரு தினமாகவே என்னால் அம்மா தினத்தையும் பார்க்க முடிகின்றது. விழாகள், கொண்டாட்டங்கள், சந்திப்புகள் இவற்றில் நல்ல ஈடுபாடும், விருப்பும், குதூகலிப்பும் உண்டு. நான் சடங்குகளையும் விருப்புடனேயே எதிர் கொள்கின்றேன். ஏனெனில் சடங்குகளில் உள்ள சந்திப்புக்கள் சந்தோஷப் பரிமாற்றங்கள் இவை ஏற்படுத்துவதினால். மாறாக சடங்குகளுக்கு பின்னால் உள் மூட நம்பிக்கைகள் சமய அனுஷ்ட்டானங்கள் போன்றவற்றில் எப்போதும் எனக்கு நம்பிக்கையும், உடன்பாடும் இருந்தது இல்லை.

என்னை தன் வயிற்றில் சுமந்து பெற்ற அன்னை எனக்கு முதன்மையானவர் என்பது எல்லேiரைப் போலவும் எனக்கும் இருப்பதில் வியப்பேதும் இல்லை. இதன் பின்பு படிப்பை நோக்கமாக கொண்டு வீட்டடை விட்டு வெளியேறி இருக்க வேண்டிய சூழலில் பல அம்மாக்களை நான் சந்தித்திருக்கின்றேன். இவர்கள் யாரும் தமது வயிற்றில் என்னை சுமந்த அம்மாவிற்கு சளைத்தவர்களாக எனக்கு தோன்றவில்லை. இன்னும் ஒரு படி மேலே போய் தன் மகன் என்ற அதிக 'உரிமை' என்ற ஒரு வகை எதிர்பார்புகளுக்கு அப்பால் இவர்கள் என் மனதில் உயர்ந்தே இருக்கின்றனர்.

பாலர் பாடசாலையில் கல்வி கற்பித்த செல்வரத்தினம் ஆசிரியர் உட்பட 6ம் வகுப்குவரை எனக்கு கல்வி கற்பித்த அம்மா ஆசிரியர்கள் பலரின் அரவணைப்பு இன்றும் என்னை மெய்சிலிர்க்க வைப்பதுண்டு. இதற்கு மேல் ஆண்கள் பாடசாலையில் படித்தத்தினால் எனக்கு பல்கலைக்கழகம் வரைக்கும் அம்மா ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கவில்லை. ஆனால் பல்கலைக் கழக வாழ்வில் எனது நண்பர்களின் வீடுகளுக்கு போகும் போது என்னையும் தமது சக பிள்ளைகளாக பாவித்து அன்பு செலுத்தி பரிமாறிய அம்மாக்கள் நிறைய உண்டு இவர்கள் எல்லோரையும் இங்கு வரிசைப்படுத்தினால் பக்கங் காணாமல் போய்விடும். எனவே மனதில் மட்டும் நிறுத்தி இங்கு பதிவதை தவிர்கின்றேன்.

ஆனாலும் எனது பல்கலைக்கழக படிப்பு முடியும் வரை எனக்கு வருத்தம் (அதுதான் காய்சல்) என்றால் வாடகைக் கார் பிடித்து (பஸ் இல் பயணம் செய்யாமல்) அம்மாவிடம் சென்றுவிடுவேன். எனக்கு அப்போது அம்மாவின் மடிவேண்டும். இதனை தனத அன்பால் அரவணைப்பால் பிரதியீடு செய்த என் குஞ்சியம்மை நான் இங்கு குறிபிட்டே ஆகவேண்டும். என்னை வருத்தம் வந்த போது வீடு செல்லாமல் தன்னுடன் வைத்துக் கவனித்த நின்ற அன்பு, பரிவு, கனிவு, கண்டிப்பு, பாசம், என்பனவற்றை எனனைப் பெற்றெடுத்த அன்னையிடமிருந்து பிரதியீடு செய்ததில் இவர் வெற்றியடைந்தார் என்றே சொல்ல வேண்டும். இவர் எனது அம்மா மட்டும் அல்ல ஆசான், நண்பி ஏன் எனது மற்றொரு பெண்ணின் மீதான காதலை பரிமாறி இதில் எனது ரம்மிய உணர்வுகளை சொல்லி மகிழ்ந்த நல்ல தோழியும் கூட. இவரை இன்றும் சந்திப்பது குறைவாகிலும் மனதில் பூஜிக்கும் நான் பெயர் குறிப்பிடால் இங்கு விட முடியவில்லை.

பொது வாழ்வில் ஈடுபடும் போது என்குலம் கோத்திரம், நான் யார் என்ற அறிதல் இல்லாமல் புரிதல் அடிப்படையில் எனக்கு ஊட்டி வளர்த்து, பாதுகாத்து வந்த ஆயிரம் ஆயிரம் அம்மாக்கள் இன்றுவரை என்னை முத்தமிட்டுக் கொண்டே இருக்கின்றனர் என்றே உணர்கின்றேன் இவர்களுக்கான கைமாறு எதனையும் நான் செய்யப் போவதில்லை. ஏன் எனில் அது இவர்களை இழிவுபடுத்துவதாக அமைந்துவிடும். கைமாறு எதிர்பாராமல் செய்த எனது போராட்ட வரலாற்று அம்மாக்களுக்கு என் தலை வணக்கங்கள்.

இறுதி எனது மனைவியின் அம்மா.....! இவர் எனக்கு மாமி அல்ல, அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா.....? என்று கேட்கும் அளவிற்கு இவர் அம்மாவாகவே என்னுடன் பழகினார். சற்றே கண்டிப்பான, கோபமான ஆனால் என்மீது அக்கறை, அளவு கடந்த மரியாதை, நம்பிக்கை வைத்திருந்த அம்மா. இன்றும் என்னுடன் நினைவுகளில் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார். எனது ஒரே தாய்வயிற்றில் பிறந்த சின்னக்கா இன்று எனக்கு தாயாக தோன்றுகின்றார். இது அவருக்கு புரியும் என்றே நம்புகின்றேன். இறுதியாக என்னை தகப்பன் என்ற ஸ்தானத்திற்கு உயர்த்திய என் வாழ்கைத் துணை என்றென்றும் எல்லோரையும் விட உயர்ந்த அம்மாவாக எனக்குத் தோன்றுகின்றாள். இவள் பெற்றெடுத்த என் சின்ன மகளும் எனக்கு தாயாக தெரிகின்றாள். புhல் வித்தியாசத்தால் தாயாக உணரும் எல்லா அம்மாக்களுக்கும் எனது வணக்கங்கள் வாழ்த்துக்கள்.
(மே 10, 2015) (Saakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com