Contact us at: sooddram@gmail.com

 

இந்திய தேர்தல் முடிவுகள் ஓர் ஆய்வு

(சாகரன்)

இந்தியத் மக்களவை 2009 தேர்தல் முடிவடைந்து முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஈழத்தமிழ் மக்களால் பெரிதும் எதிர்பார்கப்பட் தேர்தல் இது என்றால் மிகை இல்லை. புலிகளும் தமது தப்பித்தலுக்கான இறுதி நம்பிக்கையாக இருந்த ஒரு விடயமாகவும் பார்க்கலாம். முழு முடிவுகளும் வெளிவராத நிலையில் சற்று அவசரமாக? எழுதப்படும் ஆய்வு. ஆனால் அவசரம் கருதி எழுதப்படுகின்றது.

இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், மொத்தம் 40 தமிழ் நாட்டு தேர்தல் தொகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 28 தொகுதிகளில் வெற்றியடைந்துள்ளது. இதில் திமுக 17 இலும், காங்கிரஸ் 9 இலும், முஸ்லீம் வீக், விடுதலைச்சிறுத்தைகள் தலா 1 தொகுதிகளிலும் வென்றுள்ளன. கடந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் வென்ற திமுக கூட்டணி இம்முறை 12 தொகுதிகளை இழந்துள்ளது.

 அதிமுக - பாமக - மதிமுக - கம்யூனிஸ்ட் கூட்டணி 12 தொகுதிகளிலும் வெற்றியீட்டியுள்ளன. இதில் ராமதாஸ் இன் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோற்றுவிட்டனர். வைகோவின் மதிமுக 1 தொகுதியில், கம்யூனிஸ்ட்கள் தலா 1 தொகுதிகளிலும் வென்றுள்ளனர்.

இந்திய அளவில் மொத்தம் 540 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 198 இல் வெற்றியும், மேலும் 60 தொகுpகளில் முன்னணியிலும் உள்ளனர். பாஜக கூட்டணி 123 இல் வெற்றியும், மேலும் 40 தொகுதிகளில் முன்னணியிலும் உள்ளனர். இடதுசாரக் கூட்டணி 51 இல் வெற்றியும், மேலும் 14 தொகுதிகளில் முன்னணியிலும் உள்ளனர். ஏனையோர் 32 இல் வெற்றியும், மேலும் 25 தொகுதிகளில் முன்னணியிலும் உள்ளனர்.

இவர்களுடன் கூட்டணியில் இருந்த பாமக, கம்யூனிஸ்டுகள் இம்முறை அதிமுக கூட்டணியில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. திரையுலகத்தினர் பாரதிராஜா தலமையில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் இங்கு கவனிக்க தக்கது. இது சிறியளவில் காங்கிரஸ் இற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்னது தேர்தல் முடிவிகளில் அறிய முடிகின்றது. மற்றயபடி ஈழத்தமிழர் பிரச்சனை பெரியளவில் தேர்தலில் தாக்கத்ததை ஏற்படுத்தவில்லை என்னபதே உண்மை. அவ்வாறுதான் தமிழ் நாட்டு மக்கள் ஈழத்தமிழர் பிரச்சனை பிரச்சனைக்கு ஆதரவாகவும் புலிகளுக்கு எதிராகவும் உள்ளனர் என்பதை முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

பாரதிராஜ கோஷ்டிகளும், ராமதாஸ், வைகோ வகையறாக்களும் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் செயற்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது. புலிகள்ன் தீவிர ஆதரவாளர்களாக தம்மை காட்டிக்கொண்ட த. பாண்டியனின் தோல்வி அவருக்கு ஒரு சிறந்த நடைமுறைப்பாடத்தை கற்றுக் கொடுத்திரக்கும் உன நம்பலாம். புலிகள்ன் பயங்கரவாதத்தின் குரல் வைகோ இன் தோல்வி அவரின் அரசியல் வாழ்வின் அஸ்தமனத்தை புலிகளைப் போல் கோடிட்டு காட்டுகின்றது. இதேபொல் ராமதாஸின் பதவியை மட்டும் நோக்கமாக கொண்ட காய்நகர்த்தல்கள் அவரை இனி உசார் ஆக்கும். கருணாநிதி தயவால் திருமாவளவனுக்கு புதுவாழ்வு ஏற்பட்டுள்ளது. இனிமேல் இவர் தனது புலி ஆதரவு கோஷத்தில் சுருதியை குறைத்தே வாசிப்பார். ஜெயலலிதா புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் மேலும் தீவிரம் காட்டுவார.

மாறாக திமுக - காங்கிரஸ் ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும் புலிகளுக்கு எதிராகவும் தமது பிரசாரச் செயற்பாட்டை செய்தனர் என்பதும் கவனிக்கப் பட வேண்டும். ஜெயலலிதா எப்போதுமே புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர் அல்ல. இவ் தேர்தலில் வாக்குக்களை கருத்தில் கொண்டு தமிழ் ஈழம் வரை தீவிரம் காட்டி புலிகளுக்கு சாதகமான நிலமைகளை ஏற்படுத்தியவர் என்ற விமர்சனம் இருந்தாலும், இவர் ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் புலிகளுக்கு எதிராகவும் உள்ளவர். இதில் கருணாநிதியைவிட தெளிவாக உள்ளவர். தேர்தல் துpர்புகள் புலிகளுக்கும், புலி ஆதரவாளர்களுக்கும் சம்மட்டி அடிதான்.

வன்னியில் புலிகளுக்கு மரணசாதனத்தில் கையொப்பம் இட்டுக்கொண்டு இரக்கும் வேளையில், தமிழ் நாட்டு மக்கள் பிரிவினைக்கும் பயங்கரவாதத்திற்கும் மீண்டும் ஒருமுறை சம்மட்டியால் அடித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். தமிழ் நாட்டு மண்ணில் ராஜீவ் காந்தி, ஈழப் போராளிகள் பத்மநாபா போன்றோரை கொலை செய்து வன்முறையை விதைக்க முயன்ற புலி, புலி ஆதரவாளர்களுக்கு சரியான தீர்பை மீண்டும் வழங்கியுள்ளனர். ராஜீவ் காந்தி கொலையைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழ் நாட்டு சட்டசபை தேர்தலில் கருணாநிதியிற்கு (இக்கால கட்டத்தில் கருணாநிதி தலமையில் தமிழ் நாட்டில் ஆட்சி நடைபெற்றது) 1 தொகுதியை மட்டும் கொடுத்து, ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் இக் கொலைகளுக்கு எதிராக இருந்த எதிர் கட்சித்தலைவர் ஜெயலலிதாவை வெற்றியடையச் செய்தது இவ்விடத்தில் கவனத்தில் எடுக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

அகில இந்தியாவை பொறுத்தவரையில் மதச்சார்பின்மைக்கும், இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும் மேலும் நிலையான ஆட்சியை தருவதற்கு காங்கிரஸ் இனால் மாத்திரம்தான் முடியும் என்றும் மக்கள் தீர்ப்பு கூறியுள்ளனர். இலங்கை - இந்திய உறவுகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் கருதலாம். சிறப்பாக புலிகளை இல்லாது ஒளிக்க மக்கள் கொடுத்த ஆதரவாகவும் இது கருத இடமுண்டு.

இந்திய உபகண்டத்தில் ஜனநாயகத்தின் மீது மீண்டும் பிடி இறுகியுள்ளது என தேர்தல் முடிவுகள் கோடிட்டுக் காட்டுகின்றது. பயங்கரவாத்திற்கு எதிரா தீர்பாகவும் இது அமைகின்றது. உலக அரங்கில் இந்தியா மீண்டும் பாய்சலுடன் எகிறிப் பாயப் போகின்றது. என்ன ஏற்றத்தாழ்வு அற்ற சமூகக் குழுக்களை அமைப்பதில் அதிக கவனம் செலுத்தினால் எழுச்சி சீரானதாகவும், ஆரோக்கியமானதாகவும், ஏற்கக்கூடியதாகவும் அமையும். உலகத்தின் பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடிப்பதைவிட எல்லோருக்குமான வாழ்வுகள் உறுதிப்படுத்துவதில் புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுத்து செயல்படுதல் அவசியம்

மொத்தத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலையும், இடதுசாரிகளுக்கு பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியில் மதவாதம், வகுப்புவாதம் செத்துக்கொண்டு போனாலும் சில இடங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்பதையும் கோடிட்டு காட்டும் தேர்தல். எந்தக்கட்சி கூட்டணியும் அறுதிப் பெரும்பான்மை பெறாதவிடத்து, எதிர்வரும் கிழமைகளில் பேரம் பேசலுடன் கூடிய புதிய கூட்டணிகள் மீள் அமைக்கப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். என்ன மத்திரிசபை பெருத்து ஊதிவிடும். ஆனால் 5 வருட ஆட்சி நடக்கும். மீண்டும் 2014 இல் தான் தேர்தல்

சாகரன் (வைகாசி 16, 2009) (Saakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com