Contact us at: sooddram@gmail.com

 

என் மனவலையிலிருந்து........!
முள்ளிவாய்கால் மரணங்கள் விட்டுச் சென்றிருக்கும் பாடங்கள்
(சாகரன்)


தமிழனை, சிங்களவன் அதிகாரம் பண்ணுவதா? அல்லது தமிழனை தமிழன் அதிகாரம் பண்ணுவதா? என்று இரு அதிகார வர்க்கங்களுகிடையில் நடைபெற்ற யுத்தம் 2009 ம் ஆண்டு மே மாதம் 18 ம் நாள் தற்காலிக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது 6 வருடங்கள் உருண்டோடிவிட்டன. தமிழ் அதிகார வர்க்கத்திற்கா, அல்லது சிங்கள அதிகாரவர்கத்திற்கா, தமது ஆதரவை வழங்குவதன் மூலம் இந்து சமுத்திரத்தில் அமைந்த கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அழகிய தீவை தமது செல்வாக்கிற்குள் கொண்டுவரலாம் என்பதில் மேற்குலக அமெரிக்க கூட்டணியும், இந்து சமூத்திரத்தில் வல்லரசாகும் கனவுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தியாவிற்கும். இவற்றிற்கு அப்பால் யுத்தங்களில் நேரடியாக? பங்களிப்பை பொதுவாக தவிர்த்து வரும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியுடன் யுத்தத்திற்கு பின்னரான இந்த 6 ஆண்டுகளும் கடந்து ஓடி விட்டன. ஓடிவிட்ட இந்த ஆண்டுகளில் தனது ஆட்சிக்காலத்தில் தானே இந்த அதிகார போட்டியில் வெற்றியாளன், 'தாய் நாட்டை காப்பாற்றிவன்' என்ற அரசியல் கோஷத்துடன் மகிந்தா தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வெற்றி நடைபோட முற்பட்டார். மேலும் மேற்குல, இந்திய அதிகார வர்கங்களின் இலங்கை மீதான் செல்வாக்கு செலுத்தலை சீனா என்ற பொருளாதார வல்லரசுக் ஊடாக கடிவாளம் போட்டு கட்டுக்குள் வைத்திருந்தவர் என்ற பெயரையும் சம்பாதித்துக்கொண்டவர்.

ஆனால் உள்ளுரில் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் அல்ல, சிங்கள் மக்கள் மத்தியிலும் தனது அதிகாரப் பலங்களைப் பரீட்சித்து பார்க்க முற்பட்டு 5 வருடங்களின் முடிவில் யாரும் என்னை அசைக்க முடியாது இன்னமும் பத்து வருடங்கள் என்பதை தற்போது இழந்து மகிந்த நிற்கின்றார். தேர்தல்கள் மூலம் பதவிக்கு வரமுடியாமல் தவித்த ரணில் அதிகார வர்க்கத்தை ஆட்சியில் அமர்த்தினால் இலங்கையில் தமது செல்வாக்கைச் செலுத்த முடியும் என்ற கனவு மைதிரியை முன்னிறுத்தி மேற்குலக அதிகார வர்க்கம் சாதித்துக் கொண்டதாக சந்தோஷம் அடைந்திருக்கின்றது. ஆனாலும் மேற்குலக அதிகார வர்க்கம் தான் நினைத்தளவிற்கு இதில் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ளுமா? என்பது கேள்விக்குறியே?

சீனாவின் பிரசன்னத்தை இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் உருவான புதிய ஆளும் வர்க்கம் மட்டுப்படுத்தாமல் மேற்குலகத்தையும் புதிய பங்காளியாக புகுத்திய கதையே இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. மேற்குலகம், இந்தியா, சீனா என்ற பங்காளிகளின் சட்டையில் யார் வெல்லப்போகின்றார்கள் என்பதே தற்போதைய பிரதான கேள்விக்குறி ஆகும். இதற்கு இன்னமும் இவர்கள் யாவரும் எடுத்துக் கொண்ட துரும்புச் சீட்டு தமிழ் மக்களின் பிரச்சனைத்தான். ஒட்டு மொத்த இலங்கை மக்களின் வாழ்கைத்தரமும், இனங்களுக்கிடையேயான ஐக்கியம், சமாதான, சகவாழ்வு இன்னமும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. நடைபெறும் அதிகாரப்போட்டியில் என்னமோ தமிழ் மக்கள் மட்டும் அல்ல, சிங்கள மக்களும் சுபீட்சமான அரசியல் தீர்வுகளை நோக்கி நகர்த்தப்படப்போவதில்லை.

அதிகாரத்தை கைப்பற்றும் இந்த இறுதி யுத்தத்தில் ஒரு புறமும் தமிழ் இராணுவம், மறுபுறம் சிங்களம் இராணுவம் என்றிருந்த நிலையில் இடையில் மாட்டுப்பட்டு சின்னபின்னமாகிப்போனவர்கள் என்னமோ அப்பாவி தமிழ் மக்கள் தான். இந்த அப்பாவி மக்களின் கொலைகள், எந்தவகையிலும் மன்னிக்கப்படக்கூடியன அல்ல. இதற்காக நீதிகள் நிலை நாட்டப்பட வேண்டும். இந்த இழப்புக்களும் சாதாரணமானவை அல்ல. மிகப் பாரியது. மிகவும் வலியுடையது. உறவுகளை இழந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அல்லாது இந்த மக்கள் சார்ந்திருக்கும் தமிழ்ச் சமூகமும் பாரியளவில் மன உழைச்சல், வலிகள், தோற்றுப் போய்விட்டோமோ? மீள எழவே முடியாதா? என்ற பயப்பிராந்துக்கும் உள்ளாக்கியே இருக்கின்றது. இவற்றை தமது அரசியல் லாபங்களுக்காக பாவிப்பதிலேயே இலங்கை தமிழ் கட்சிகளும், தமிழ் நாட்டுக் கட்சிகளும் முன்னின்று செயற்படுகின்றன. இந்த பாதிப்பிற்குள் உள்ளான மக்களின் இயல்புவாழ்வு, இழப்புக்களுக்கான நீதி நெறிமுறைகள், அரசியல் தீர்வு பற்றி யாரும் தூர நோக்குப் பார்வையோ அல்லது உண்மையான அரசியல் செயற்பாடுகளோ இவர்களிடம் யாரிடமும் இல்லை என்பது ஜீரணத்துக் கொள்ள வேண்டிய யதார்த்தம் ஆகும். வெறும் நாற்காலிக் கனவுகளுடன் தமது மூதாதை அரசியல் வழித்தோன்றல் வழியில் மட்டும் இவர்கள் தமது செயற்பாடுகளை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

தமிழ் மக்களின் வழித்தோன்றல் மிதவாதக் கட்சிகள் எப்போதும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர்கள் அல்ல. இது இப்பவும், எப்பவும் பொருந்தும். மாவிட்டபுரம் கோவில் வழிபாட்டிற்கு யாவருக்கும் திறந்து விடப்படவேண்டும் என்ற போரட்டங்கள் முதல் தேனீர் கடைகளில் யாவருக்கும் ஒரே பாத்திரத்தில் பரிமாறவேண்டும் என்ற போராட்டங்களுக்கு எதிரணியில் நின்று அடங்காத் தழிழனாகவும் போராடியதே இவர்களின் வரலாறு. சோவியத், மாவோவின் கம்யூனிச சித்தாந்தங்களில் அடிப்படையில் ஈடுபட்ட சில பகுதி மக்கள் அவர்கள் சார்ந்த அமைப்புக்களின் இழப்பதற்கு ஏதும் அற்ற போராட்டங்களே களப்பலிகளை சங்கானையிலும், அச்சுவேலியிலும், ஏன் மலையகத்திலும் ஏற்படுத்தியே இன்று சகல தேனீர் கடைகளிலும் தகர மூக்கு பேணி காணாமல் போனதிற்கான உரிமைகள் நிலை நாட்டப்பட்டிருக்கின்றன. இதில் உரிமை மறுக்கும் அணியிலேயே இறுதிவரை தமிழ் காங்கிரஸில் இருந்து தமிழரசுக் கட்சியூடாக இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரைக்கும் பயணங்கள் நடைபெற்று வந்தது, நடைபெறுவதே வரலாற்று உண்மையாகும்.

இதில் ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்ட காலங்களும் விதிவிலக்காகப்படவில்லை. இதன் வெளிப்பாடே ஈழ விடுதலையில் இடதுசாரிச் சிந்தனையின் அடிப்படையில் தமது போராட்ட பொறிமுறைகளை ஆரம்பித்த அமைப்புக்(கள்) சாதியத்தின் பெயரால் குறிப்பிடப்பட்ட அமைப்பாக பிரசாரப்படுத்தப்பட்டதும், அடையாளப்படுத்தப்பட்டதும், அந்நியப்படுத்த முற்பட்டதுமான நிகழ்வுகள் ஆகும்.

1970 களில் கல்வியல் தரப்படுத்தலை எதிர்தல் என்ற யாழ் மையவாத கோரிக்கையை (ஆனாலும் இங்கு ஒரு உரிமைப் போராடம் இருந்ததும் உண்மைதான்) முதன்மைப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 35 வருடங்கள் கடந்து இன்று தரப்படுத்தலா? அது என்ன? என்று கேட்கும் பரிணாம வளர்சியிலேயே வந்து நிற்கின்றது. இதே போல் சிங்கள 'ஸ்ரீ' இல் உச்ச ஸ்தானத்திற்கு உசுப்பேத்தபபட்ட போராட்டம் இன்று இலங்கையில் எந்த வாகனத்திலும் 'ஸ்ரீ' அற்ற நிலையில் காணாமல் போய்விட்டது. 1972 களில் தமிழ் பிரதேசத்தில் அமையப்போகும் யாழ் பல்கலைக் கழகத்தை வன்மையாக எதிர்த்த தமிழ் ஆளும் வர்க்கம் இன்று வடக்கு-கிழக்குத் தமிழ் பிரதேசங்கள் எங்கும் 5 இற்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்களை, சகல துறைசார் கற்கை நெறிகளையும் தன்னத்தே கொண்டு ஒரு அறிவுசார் சமூகத்திற்கு சேவை செய்யும் நிலைக்கு மாற்றம் அடைந்திருப்பதன் யாதார்தங்களை நாம் ஏற்றுக்கொணடே ஆக வேண்டும். யாழ் பல்கலைக்கழக உருவாக்கத்திற்கு விடாப்பிடியான ஆதரவு வழங்கிய பெருமை தமிழ் பேசும் சமூகத்தில் இருந்த இடதுசாரிகளையே சாரும். ஆனால் அன்றும், இன்றும் உரிமை மறுக்கப்பட்வர்களுக்கான போராட்டங்களுக்கான தேவைகள் இனம் என்ற அடையாளத்தை மீறி மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. உலகத்தின் வழங்களை கூறுபோட்டுக் கொள்ளையிடுவதில் தொடர்ந்தும் ஆளும் வர்கங்கள் யுத்தங்களைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.

ஒரு தரப்பினர் விடுதலை, உரிமை என்று கோஷங்களை முன்வைக்க, மறுதரப்பு பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்தம் மனித உரிமைகளை நிலைநாட்டும் யுத்தம் என்று பிரகடனப்படுத்திக்கொண்டு யுத்தத்தை தொடர்வதும் இதனால் அப்பாவிப் பொது மக்களே அதிகம் பாதிகப்படுவதும் முள்ளிவாக்காலிலும் விதிவிலக்காக அமையவில்லை. உரிமை மறுக்கப்பட்ட மக்கள் என்னமோ பெரும்பான்மையாக உரிமைப் போராட்டத்திற்காக தமது உயிரையும் அர்ப்பணிக்க, இந்த யுத்தங்களை முன்னிற்று நடத்தியவர்கள்; யார் அதிகாரத்தை இந்த மக்கள் மேல் செலுத்துவது என்பதில் மட்டும் குறியாக இருந்தனர். அதுதான் 'ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பில் தவறு இல்லையே' என்ற தனி அரசுக் கோரிக்கையாகும். அப்பிராணி பொது மகனுக்கு தனது உரிமை சார்ந்த உச்சக்கட்டக் கோரிகையாக இது தோற்றம் அளித்ததினால் விட்டில் பூச்சிகள் போல் யுத்தத்தில் முன்னரங்கில் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் இவர்களே அதிகம். விடயம் விளங்கி வெளியே வந்தால், கேள்வி கேட்டால் இங்கும் முன்னரங்கத்திலே முதுகில் சுடப்பட்டு மாவீரர் ஆக்கப்படதே எமது முள்ளிவாய்காலின் வரலாறு.

மரணங்கள் எந்த வகையிலும் யாரால் நிகழ்த்தப்பட்டாலும் மரணித்தவர்களுக்கான வணங்கங்களும், மரியாதைகளும், நினைவு கூரல்களும் நிகழ்தப்படுவதில் மனித குலத்தின் மனித நேயங்கள் பின்நிற்கக் கூடாது. இவற்றிற்கான குறைந்த பட்ட அங்கீகாரங்கள் அனுமதிகள் வழங்கப்பட்டே ஆகவேண்டும். அன்றே இவற்றை தாமாகவே எடுத்துக்கொள்ளும் நலமைகள் ஏற்படும் என்பது வரலாறு எமக்கு கற்று தந்த பாடம்;. இதில் பிரபாகரனின் மரணமும் உள்ளடக்கப்படவே வேண்டும். இதற்கு முன்பு நிகழ்த்தப்பட்ட சகல போராட்ட அமைப்புக்களின் தலைவர்கள், போராளிகளும் உள்ளடக்கப்படவேண்டும். ஏன் சகல இன மக்களும், அது தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீங்கள் என்ற வேறுபாடுகள் இன்றி உள்ளடக்கப்படவேண்டும். இதற்கான பங்குவத்தை நாம் அடையாவிட்டால் முள்ளிவாய்கால் மரணம் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் யுத்தத்தில் வெற்றி கொள்ளப்பட்ட மரணங்களாகவே அதிகார வர்க்கங்களால் பூஜிக்கப்படும். முதலில்.....இதற்கு நாங்கள் தயாரா......?

(இக்கட்டுரை ஆக்கத்திற்கு இன்றைய தினம் நண்பர் ஒருவருடன் அளவளாவியதில் ஏற்பட்ட கருத்தியல் தாக்கமும் காரணமாக அமைந்தது)
(Saakaran)) (May 18, 2015)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com